மேலும் அறிய

Watch Video: எஃகு ஆலைக்கு எதிரான போராட்டம் - கிராம மக்கள் மீது தடியடி நடத்திய ஒடிசா காவல்துறை

இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால், தங்களுக்கு லாபம் தரும் வெற்றிலை, திராட்சைத் தோட்டங்கள் போன்ற தொழில்கள் நசுங்கி விடும் என்றும் எச்சரிக்கின்றனர். 

ஓடிசா மாநிலத்தில் புதிதாக அமையவிருக்கும் எஃகு ஆலைக்கு எதிர்ப்புத் தெரிவித்து போராடிய கிராம மக்கள் மீது காவல்துறையினர் வன்முறையைக் கையாண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

 

 

ஒடிசா மாநிலம் ஜகத்சிம்மபூரில், ஆண்டுக்கு 13.2 மில்லியன் டன் எஃகு தயாரிக்கும் நிறுவனத்தை அமைக்க  ஜேஎஸ்டபிள்யூ முயற்சி மேற்கொண்டு வருகிறது. இந்த திட்டத்துக்கு ரூ.53,700 கோடி முதலீடு செய்ய இந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது. முன்னதாக, ஓடிசா முதல்வர் நவீன் பட்நாயக் மற்றும்  ஜேஎஸ்டபிள்யூ எஃகு நிறுவனத்தின் தலைவர் சாஜன் ஜிந்தால் முன்னிலையில் இந்த திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.  

ஓடிசா மாவட்டத்தில் அமைய உள்ள ஜேஎஸ்டபிள்யூ எஃகு ஆலைக்கு, எதிர்ப்பு தெரிவித்து தின்கியா கிராம மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால், தங்களுக்கு லாபம் தரும் வெற்றிலை, திராட்சைத் தோட்டங்கள் போன்ற தொழில்கள் நசுங்கி விடும் என்றும் எச்சரிகின்றனர். 

சனாயாக ரீதியில், போராட்டம் நடத்திவரும் கிராம மக்கள் மீது ஒடிசா அரசு கடுமையான அடக்குமுறையை செலுத்திவருகிறது. கடந்தாண்டு, டிசம்பர் மாதம் போராட்த்தை அடக்கும் விதமாக உள்ளூர்மட்ட தலைவர்களை காவல்துறை கைது செய்தனர். இந்நிலையில், கடந்த 14ம் தேதி அரசின் தொடர் அடக்குமுறையை எதிர்த்து, 500க்கும் மேற்பட்ட தின்கியா கிராம மக்கள் ஒன்றுகூடி போராட்டம் நடத்தினர். அப்போது, கிராம மக்களை சுற்றி வளைத்த காவல்துறையினர், பொதுமக்கள் மீது கடுமையான தடியடியை நடத்தியுள்ளனர். பேரணியில் பங்கேற்றவர்களில் பெரும்பாலானோர் பெண்கள் என்பதையும் பொருட்படுத்தாமல், அவர்களின் அடிப்படை மாண்பைக் கெடுக்கும் வகையில் அமைந்துள்ள காவல்துறையின் நடவடிக்கையை பலரும் கண்டித்து வருகின்றனர்.  ஒவ்வொரு மனிதனும் தன் உரிமைகளை பெறுவதற்கு முழு உரிமையுண்டு என்று சொல்லப்படும் ஒரு நாட்டில், தடியடி போன்ற வன்முறை செயல்கள் தவிர்க்கப்பட வேண்டும் என்றும் கூறுகின்றனர்.      

போஸ்கோ திட்டம்:       

முன்னதாக, கடந்த  2005ம் ஆண்டு, இதேதிட்டத்துக்கு தென்கொரியாவைச் சேர்ந்த இரும்பு  உற்பத்தி  நிறுவனமான போஸ்கோ நிறுவனத்துக்கு ஒடிசா அரசு ஒப்புதல் அளித்தது. இந்த திட்டம், இந்தியாவின் மிகப்பெரிய அந்நிய முதலீடு கொண்டதாக பார்க்கப்பட்டது. 

மேலும், முன்மொழியப்பட்ட இந்த திட்டத்திற்காக, 4004 பரப்பளவு கொண்ட நிலத்தை  கையகப்படுத்த ஓடிசா அரசு ஒப்புதல் அளித்தது. அரசின் இந்த நடவடிக்கையால், எட்டு கிராமங்களில் உள்ள  சிறு விவசாயிகளும், மீனவர்களும் தங்கள்  வாழ்வாதரங்களை  இழக்க வேண்டிய சூழல் உருவானது. இதன், காரணமாக தொடர் போராட்டங்களை அப்பகுதி மக்கள் முன்னெடுத்தனர்.

குறிப்பாக, தின்கியா கிராமத்து மக்கள் இந்த போராட்டத்தின் மையப் புள்ளியாக விளங்கினர். இந்நிலையில், சுற்றுச்சூழல் விதிமுறைகளை மீறியதாக கூறி முன்மொழியப்பட்ட திட்டத்தை நிறுத்தி வைப்பதாக தேசிய பசுமை தீர்பாணையம் தெரிவித்தது. இதனையடுத்து, போஸ்கோ திட்டத்தை முன்னெடுத்து செல்லவும் தயக்கம் காட்டியது. தற்போது, இந்த திட்டத்தை  ஜேஎஸ்டபிள்யூ நிறுவனத்துக்கு வழங்க அம்மாநில அரசு தீவிரம் காட்டி வருகிறது.          

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Gas Cylinder Price: அட்ரா சக்க..! காலையிலேயே நல்ல சேதி, வணிக சிலிண்டரின் விலை குறைப்பு - வியாபாரிகள் மகிழ்ச்சி
Gas Cylinder Price: அட்ரா சக்க..! காலையிலேயே நல்ல சேதி, வணிக சிலிண்டரின் விலை குறைப்பு - வியாபாரிகள் மகிழ்ச்சி
Ra Sambandhan: தமிழர்களுக்கு அதிர்ச்சி..! இலங்கை எம்.பி., இரா. சம்பந்தன் காலமானார்
Ra Sambandhan: தமிழர்களுக்கு அதிர்ச்சி..! இலங்கை எம்.பி., இரா. சம்பந்தன் காலமானார்
New Criminal Laws: நாடு முழுவதும் நள்ளிரவு முதல் அமலுக்கு வந்த புதிய குற்றவியல் சட்டங்கள் - கடும் தண்டனைகள் என்ன?
New Criminal Laws: நாடு முழுவதும் நள்ளிரவு முதல் அமலுக்கு வந்த புதிய குற்றவியல் சட்டங்கள் - கடும் தண்டனைகள் என்ன?
Breaking News LIVE: அமலுக்கு வந்த புதிய குற்றவியல் சட்டங்கள் - குறைந்த வணிக சிலிண்டரின் விலை
Breaking News LIVE: அமலுக்கு வந்த புதிய குற்றவியல் சட்டங்கள் - குறைந்த வணிக சிலிண்டரின் விலை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Dhoni wish to indian Team | தட்டி தூக்கிய இந்தியா தோனி கொடுத்த SURPRISE Virat & Rohit Retirement |இடியை இறக்கிய KING - HITMAN.. உச்சக்கட்ட சோகத்தில் ரசிகர்கள்Hardik Pandya | ZERO TO HERO அவசரப்பட்டு திட்டிட்டோம் கொண்டாடிய ஹர்திக் FANSDog Attack Boy | மகனை சுத்துப்போட்ட நாய்கள் நொடியில் காப்பாற்றிய  தந்தை பதற வைக்கும் வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Gas Cylinder Price: அட்ரா சக்க..! காலையிலேயே நல்ல சேதி, வணிக சிலிண்டரின் விலை குறைப்பு - வியாபாரிகள் மகிழ்ச்சி
Gas Cylinder Price: அட்ரா சக்க..! காலையிலேயே நல்ல சேதி, வணிக சிலிண்டரின் விலை குறைப்பு - வியாபாரிகள் மகிழ்ச்சி
Ra Sambandhan: தமிழர்களுக்கு அதிர்ச்சி..! இலங்கை எம்.பி., இரா. சம்பந்தன் காலமானார்
Ra Sambandhan: தமிழர்களுக்கு அதிர்ச்சி..! இலங்கை எம்.பி., இரா. சம்பந்தன் காலமானார்
New Criminal Laws: நாடு முழுவதும் நள்ளிரவு முதல் அமலுக்கு வந்த புதிய குற்றவியல் சட்டங்கள் - கடும் தண்டனைகள் என்ன?
New Criminal Laws: நாடு முழுவதும் நள்ளிரவு முதல் அமலுக்கு வந்த புதிய குற்றவியல் சட்டங்கள் - கடும் தண்டனைகள் என்ன?
Breaking News LIVE: அமலுக்கு வந்த புதிய குற்றவியல் சட்டங்கள் - குறைந்த வணிக சிலிண்டரின் விலை
Breaking News LIVE: அமலுக்கு வந்த புதிய குற்றவியல் சட்டங்கள் - குறைந்த வணிக சிலிண்டரின் விலை
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
Embed widget