மேலும் அறிய

NSE case Yogi : சித்ரா ராமகிருஷ்ணனின் இமயமலை யோகி யார் தெரியுமா? கண்டுபிடித்த சி.பி.ஐ

என்.எஸ்.இ. முறைகேடு வழக்கில் யார் அந்த இமயமலை யோகி என்ற விவாதம் இன்று நீதிமன்றத்தில் பரபரப்பாக நடைபெற்றது.

தேசிய பங்குச்சந்தை பரிமாற்ற நிறுவன முன்னாள் சி.இ.ஓ.வான சித்ரா சுப்ரமணியனம், முன்னாள் குழு இயக்க அதிகாரியும், சித்ரா சுப்பிரமணியத்தின் ஆலோசகருமான ஆனந்த் சுப்ரமணியமும் முறைகேடு வழக்கு தொடர்பாக கடந்த சில தினங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டனர்.

இந்த நிலையில், ஆனந்த் சுப்ரமணியம் ஜாமீன் கோரிய வழக்கு நீதிமன்றத்தின் முன்பு விசாரணைக்கு வந்தது. சிறப்பு நீதிபதி சஞ்சீவ் அகர்வால் இந்த வழக்கை விசாரித்தார். அப்போது, சி.பி.ஐ. தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ஆனந்த் சுப்பிரமணியன் வெளிநாடு தப்பிச்செல்லும் அபாயம் உள்ளது. அதனால், அவருக்கு ஜாமீன் வழங்கக்கூடாது என்று வாதிட்டார்.

அப்போது, 2018ம் ஆண்டு முதல் இந்த வழக்கு நடைபெற்று வருவதை காட்டி பேசிய நீதிபதி, கடந்த நான்கு ஆண்டுகளில் அவர் பறந்துபோகவில்லை என்றார். பின்னர், மீண்டும் பேசிய சி.பி.ஐ. வழக்கறிஞர், ஆனந்த் சுப்பிரமணியன்தான் அந்த இமயமலை யோகியாக இருக்க முடியும். அவர்தான் அனைத்து மின்னஞ்சல்களையும் இயக்கியிருக்க வேண்டும் என்று வாதிட்டார்.

அப்போது, வாதிட்ட ஆனந்த் சுப்பிரமணியனின் வழக்கறிஞர் அர்ஷ்தீப் 2010 மற்றும் 2014க்கு இடையிலே மோசடி நடந்ததாகவும், குற்றம் சாட்டப்பட்டவர் 2013லே இந்த வழக்கில் இணைந்ததாகவும் கூறினார். மேலும்,. இந்த வழக்கில் அவருக்கு எதிராக இரண்டு செபியின் உள் விசாரணைகளிலும் எதுவுமே கண்டறியப்படவில்லை என்றும் அவர் நீதிமன்றத்தில் வாதிட்டார்.


NSE case Yogi : சித்ரா ராமகிருஷ்ணனின் இமயமலை யோகி யார் தெரியுமா? கண்டுபிடித்த சி.பி.ஐ

அப்போது பேசிய நீதிபதி ஆனந்த் சுப்பிரமணியன் வழக்கறிஞரிடம், “ நீங்கள்தான் இமயமலை யோகி. தெய்வீக சக்திகளுடன் இமயமலையில் உயரமான பகுதிகளில் வாழ்கிறீர். சி.பி.ஐ. நான்கு ஆண்டுகளாக உறக்க நிலையில் இருந்தது. அவர்கள் திடீரென்று இப்போது எழுந்தார்கள். ஏன் என்று தெரியவில்லை? “ இவ்வாறு நீதிபதி கூறினார்.

அப்போது, நீதிபதிக்கு பதிலளித்த ஆனந்த் சுப்பிரமணியனின் வழக்கறிஞர் நான் இமயமலை யோகி இல்லை என்றார்.. அதேசமயம் சி.பி.ஐ. வழக்கறிஞர் ஆனந்த் சுப்பிரமணியனுக்கு ஜாமீன் வழங்க கடும் ஆட்சேபணை தெரிவித்தார். இதுவரை 832 ஜி.பி. தரவுகள் மீட்கப்பட்டுள்ளதாகவும், சில டேட்டாக்கள் அழிந்துள்ளதாகவும் கூறினர்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஆனந்த் சுப்பிரமணியனுக்கு ஜாமீன் வழங்கும் இந்த வழக்கை மார்ச் 24-ந் தேதிக்கு ஒத்தி வைப்பதாக உத்தரவிட்டார்.

 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூடிபில் வீடியோக்களை காண

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

பொழப்ப பாப்போம்.. சென்னைக்கு ரிட்டர்ன் ஆகும் வெளியூர்வாசிகள்! திணறும் சாலைகள்!
பொழப்ப பாப்போம்.. சென்னைக்கு ரிட்டர்ன் ஆகும் வெளியூர்வாசிகள்! திணறும் சாலைகள்!
தமிழகத்தில் வானிலை மாற்றம் !! அடுத்த 48 மணி நேரத்தில் என்ன நடக்கும் ? வானிலை மையம் எச்சரிக்கை
தமிழகத்தில் வானிலை மாற்றம் !! அடுத்த 48 மணி நேரத்தில் என்ன நடக்கும் ? வானிலை மையம் எச்சரிக்கை
33 ஆண்டுகள் நிலுவை.. இந்திய அரசியலையே உலுக்கும் ஒற்றை மசோதா - அப்படி என்ன இருக்கு?
33 ஆண்டுகள் நிலுவை.. இந்திய அரசியலையே உலுக்கும் ஒற்றை மசோதா - அப்படி என்ன இருக்கு?
ஆழத்தில் மறைந்திருக்கும் அதிசயம்! எவரெஸ்ட் சிகரமே மூழ்கும்! மரியானா அகழியின் சுவாரஸ்யம்
ஆழத்தில் மறைந்திருக்கும் அதிசயம்! எவரெஸ்ட் சிகரமே மூழ்கும்! மரியானா அகழியின் சுவாரஸ்யம்
ABP Premium

வீடியோ

AR Rahman controversy | எதிர்த்து நிற்கும் பாலிவுட்!
Rahul gandhi meeting | ”எல்லாரும் டெல்லி வாங்க”ராகுலுடன் முக்கிய மீட்டிங்!படையெடுத்த தமிழக காங்கிரஸ்
Alanganallur Jallikattu TVK flag | ஜல்லிக்கட்டில் தவெக கொடி! ”பரிசு கிடையாது வெளிய போ” கண்டித்த கமிட்டி
Soori vs Vijay | ”தவெகவை மீறி படம் ஓடுமா” வம்பிழுத்த நெட்டிசன்! சூரி தரமான பதிலடி!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பொழப்ப பாப்போம்.. சென்னைக்கு ரிட்டர்ன் ஆகும் வெளியூர்வாசிகள்! திணறும் சாலைகள்!
பொழப்ப பாப்போம்.. சென்னைக்கு ரிட்டர்ன் ஆகும் வெளியூர்வாசிகள்! திணறும் சாலைகள்!
தமிழகத்தில் வானிலை மாற்றம் !! அடுத்த 48 மணி நேரத்தில் என்ன நடக்கும் ? வானிலை மையம் எச்சரிக்கை
தமிழகத்தில் வானிலை மாற்றம் !! அடுத்த 48 மணி நேரத்தில் என்ன நடக்கும் ? வானிலை மையம் எச்சரிக்கை
33 ஆண்டுகள் நிலுவை.. இந்திய அரசியலையே உலுக்கும் ஒற்றை மசோதா - அப்படி என்ன இருக்கு?
33 ஆண்டுகள் நிலுவை.. இந்திய அரசியலையே உலுக்கும் ஒற்றை மசோதா - அப்படி என்ன இருக்கு?
ஆழத்தில் மறைந்திருக்கும் அதிசயம்! எவரெஸ்ட் சிகரமே மூழ்கும்! மரியானா அகழியின் சுவாரஸ்யம்
ஆழத்தில் மறைந்திருக்கும் அதிசயம்! எவரெஸ்ட் சிகரமே மூழ்கும்! மரியானா அகழியின் சுவாரஸ்யம்
Study Tips: தேர்வு பயம் இனி வேண்டாம்! 140 ஆண்டு ஜெர்மன் உத்தி: மறதியை விரட்டும் சூப்பர் டிப்ஸ்! மாணவர்கள் கவனத்திற்கு!
Study Tips: தேர்வு பயம் இனி வேண்டாம்! 140 ஆண்டு ஜெர்மன் உத்தி: மறதியை விரட்டும் சூப்பர் டிப்ஸ்! மாணவர்கள் கவனத்திற்கு!
Sastra University: சாஸ்த்ரா பல்கலை. விவகாரம்: ஏழைகளுக்கு ஒரு நீதி, கல்வி வியாபாரிகளுக்கு வேறு நீதியா? மார்க்சிஸ்ட் கேள்வி!
Sastra University: சாஸ்த்ரா பல்கலை. விவகாரம்: ஏழைகளுக்கு ஒரு நீதி, கல்வி வியாபாரிகளுக்கு வேறு நீதியா? மார்க்சிஸ்ட் கேள்வி!
சிங்கிள் சார்ஜில் 146 கி.மீட்டர் மைலேஜ்.. OLA S1 Z இ ஸ்கூட்டரின் விலை, தரம் இதுதான்!
சிங்கிள் சார்ஜில் 146 கி.மீட்டர் மைலேஜ்.. OLA S1 Z இ ஸ்கூட்டரின் விலை, தரம் இதுதான்!
மதுரை டூ சென்னை 4 ஆயிரம்.. தனியார் பேருந்துகள் நடத்தும் கட்டண கொள்ளை - தடுக்கப்போவது யார்?
மதுரை டூ சென்னை 4 ஆயிரம்.. தனியார் பேருந்துகள் நடத்தும் கட்டண கொள்ளை - தடுக்கப்போவது யார்?
Embed widget