மேலும் அறிய

மணிப்பூரில் மீண்டும் பதற்றம்! 2 மாணவர்கள் மாயமான விவகாரத்தில் பந்த் - இயல்பு வாழ்க்கை பாதிப்பு

இரண்டு மாணவர்கள் காணாமல் போன விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதை தொடர்ந்து, ஜாயின்ட் ஆக்சன் கமிட்டி 33 மணி நேரத்திற்கு பந்த் அறிவித்தது.

மணிப்பூரில் கடந்த 6 மாதங்களாக நடந்து வரும் இனக்கலவரம் இந்தியா முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி வருகிறது. பெரும்பான்மையான மெய்தி சமூக மக்களுக்கும் பழங்குடி குக்கி சமூக மக்களுக்கும் இடையே நடந்த இனக்கலவரம் இந்திய வரலாற்றின் மோசமான நிகழ்வாக பார்க்கப்படுகிறது.

இந்த இனக்கலவரத்தின் காரணமாக இதுவரை 180 பேர் உயிரிழந்துள்ளனர். ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வீடுகளை விட்டு வெளியேறி, வெளி இடங்களில் தஞ்சம் புகுந்துள்ளன. தங்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கக் கோரி மெய்தி சமூக மக்கள் கோரிக்கை விடுத்து வந்த நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கடந்த மே மாதம் பழங்குடியினர் பேரணி நடத்தினர். இந்த பேரணியில் வன்முறை வெடிக்க, மணிப்பூர் முழுவதும் கலவரம் பற்றி கொண்டது.

தேசத்தை உலுக்கிய மணிப்பூர் கலவரம்:

மணிப்பூரில் இயல்பு நிலை திரும்பிவிட்டதாக மாநில அரசு தொடர்ந்து தெரிவித்து வருகிறது. ஆனால், பெண்களை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்குவது, மாணவர்களை கடத்தி கொடூரமாக கொலை செய்வது என தினந்தோறும் வன்முறை சம்பவங்கள் அறங்கேறிய வண்ணம் இருக்கிறது.

இந்த நிலையில், இரண்டு மாணவர்கள் காணாமல் போன விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதை தொடர்ந்து, ஜாயின்ட் ஆக்சன் கமிட்டி 33 மணி நேரத்திற்கு பந்த் அறிவித்தது. இதனால், மக்களின் இயல்புவாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. இம்பால் மேற்கில் உள்ள அகம் அவாங் லைகாய் பகுதியில் இரண்டு மாணவர்கள் காணாமல் போனதை தொடர்ந்து ஜாயின்ட் ஆக்சன் கமிட்டி தொடங்கப்பட்டது.

முதலில், பந்த் வெள்ளிக்கிழமை அதிகாலை 4 மணிக்கு தொடங்கி மதியம் 1 மணிக்கு முடிவடையும் என்று திட்டமிடப்பட்டது. இருப்பினும், இந்த வழக்கில் தொடர்புடைய இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்ட போதிலும், காணாமல் போன இரண்டு மாணவர்களின் இருப்பிடத்தைக் கண்டறிய காவல்துறை தவறியதால், பந்த் நேற்று பிற்பகல் 1 மணி வரை நீட்டிக்கப்பட்டது.

கடத்தப்பட்டார்களா மாணவர்கள்?

பந்த் முடிவதற்குள் காணாமல் போன இரு மாணவர்கள், எங்கே இருக்கிறார்கள் என்பதை காவல்துறை கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், போராட்டத்தை தீவிரப்படுத்துவோம் என ஆக்சன் கமிட்டி எச்சரித்திருந்தது. ஆக்சன் கமிட்டிக்கு சிவில் சமூக அமைப்புகள், மாணவர் அமைப்புகள் மற்றும் பொது மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

பந்த் காரணமாக, கல்வி நிறுவனங்கள், தனியார் அலுவலகங்கள், வங்கிகள், பெட்ரோல் நிலையங்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது. முதல் நாளான நேற்று முன்தினம், ஒரு சில வாகனங்கள் மட்டும் அவசர தேவைக்காக இயக்கப்பட்டது. ஆனால், சாலைகள் பெரும்பாலும் வெறிச்சோடி காணப்பட்டன.

மாணவர்கள் காணாமல் போன விவகாரத்தில் இதுவரை மணிப்பூர் போலீசார் இரண்டு சந்தேக நபர்களை கைது செய்து அவர்களது மொபைல் போன்களை பறிமுதல் செய்துள்ளனர். ஆனால், அவர்கள் இருக்கும் இடம் குறித்து எந்த ஒரு தகவலையும் வழங்க அரசாங்கம் தவறிவிட்டது. இருப்பினும், மணிப்பூரின் மலை மாவட்டங்களில் பந்த், எந்த வித பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை.

 

About the author சுதர்சன்

Rookie Journalist. Writes on National, International, Politics, Human rights and Judiciary. Covered 2019 General Election, Apex Court Ayodhya judgement, 2021 Five state election, Pegasus etc.  
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

PMK ADMK alliance: அன்புமணி பாமகவிற்கு எத்தனை தொகுதி.? இபிஎஸ் போட்ட லிஸ்ட்.! ராமதாஸ் எடுத்த திடீர் முடிவு
அன்புமணி பாமகவிற்கு எத்தனை தொகுதி.? இபிஎஸ் போட்ட லிஸ்ட்.! ராமதாஸ் எடுத்த திடீர் முடிவு
அரசு உதவிப் பேராசிரியர் தேர்வு.. ஜன.13 கடைசி! செக் வைத்த டிஆர்பி- தவறுகளை சரிசெய்யலாம்!
அரசு உதவிப் பேராசிரியர் தேர்வு.. ஜன.13 கடைசி! செக் வைத்த டிஆர்பி- தவறுகளை சரிசெய்யலாம்!
’DMK FILES’ - முக்கிய ஆதாரத்தோடு டெல்லிக்கு புறப்படும் எடப்பாடி பழனிசாமி - அதிமுகவின் செம பிளான்
’DMK FILES’ - முக்கிய ஆதாரத்தோடு டெல்லிக்கு புறப்படும் எடப்பாடி பழனிசாமி - அதிமுகவின் செம பிளான்
ஆசிரியர்களின் CPS தொகை ரூ.1 கோடி அரசு வசம்! எதிர்க்கும் சங்கங்கள்- வெடிக்கும் போராட்டம்?
ஆசிரியர்களின் CPS தொகை ரூ.1 கோடி அரசு வசம்! எதிர்க்கும் சங்கங்கள்- வெடிக்கும் போராட்டம்?
ABP Premium

வீடியோ

வெனிசுலாவில் நிலவும் நெருக்கடிமோசமான சிறையில் மதுரோ போரை தொடங்குகிறாரா ட்ரம்ப்? | America Trump Vs Venezuela
America Vs Venezuela
2026-ல் CM ஆவாரா விஜய்? பிரபல ஜோதிடரே சொல்லிட்டாரு இவர் கணிச்சா தப்பாது! | Astrologer Prashanth Kini On Vijay
தங்கத்தை ஓரம் கட்டிய வெள்ளி இனிமே லட்சத்தில் லாபம் பின்னணியில் CHINA, ENGLAND | Silver Price Hike Reason
Viluppuram Mobile Theft CCTV |நள்ளிரவில் கைவரிசை!COOL ஆக திருடிய திருடன்அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PMK ADMK alliance: அன்புமணி பாமகவிற்கு எத்தனை தொகுதி.? இபிஎஸ் போட்ட லிஸ்ட்.! ராமதாஸ் எடுத்த திடீர் முடிவு
அன்புமணி பாமகவிற்கு எத்தனை தொகுதி.? இபிஎஸ் போட்ட லிஸ்ட்.! ராமதாஸ் எடுத்த திடீர் முடிவு
அரசு உதவிப் பேராசிரியர் தேர்வு.. ஜன.13 கடைசி! செக் வைத்த டிஆர்பி- தவறுகளை சரிசெய்யலாம்!
அரசு உதவிப் பேராசிரியர் தேர்வு.. ஜன.13 கடைசி! செக் வைத்த டிஆர்பி- தவறுகளை சரிசெய்யலாம்!
’DMK FILES’ - முக்கிய ஆதாரத்தோடு டெல்லிக்கு புறப்படும் எடப்பாடி பழனிசாமி - அதிமுகவின் செம பிளான்
’DMK FILES’ - முக்கிய ஆதாரத்தோடு டெல்லிக்கு புறப்படும் எடப்பாடி பழனிசாமி - அதிமுகவின் செம பிளான்
ஆசிரியர்களின் CPS தொகை ரூ.1 கோடி அரசு வசம்! எதிர்க்கும் சங்கங்கள்- வெடிக்கும் போராட்டம்?
ஆசிரியர்களின் CPS தொகை ரூ.1 கோடி அரசு வசம்! எதிர்க்கும் சங்கங்கள்- வெடிக்கும் போராட்டம்?
Top Brands Budget Cars: டாப் 5 ப்ராண்ட்களின்.. கம்மி விலை கார்கள்.. பட்ஜெட் மாடல்கள், மைலேஜில் எப்படி? - முழு விவரம்
Top Brands Budget Cars: டாப் 5 ப்ராண்ட்களின்.. கம்மி விலை கார்கள்.. பட்ஜெட் மாடல்கள், மைலேஜில் எப்படி? - முழு விவரம்
’’அரசு ஊழியர்களே முழிச்சுக்கோங்க; 3ஆம் நாளிலேயே பல்லிளித்த தமிழ்நாடு ஓய்வூதியத் திட்டம்’’- அன்புமணி எச்சரிக்கை
’’அரசு ஊழியர்களே முழிச்சுக்கோங்க; 3ஆம் நாளிலேயே பல்லிளித்த தமிழ்நாடு ஓய்வூதியத் திட்டம்’’- அன்புமணி எச்சரிக்கை
Top 10 News Headlines: திண்டுக்கல்லில் ஸ்டாலின், நில்லாமல் ஏறும் தங்கம் விலை, மீண்டும் ISL- 11 மணி வரை இன்று
Top 10 News Headlines: திண்டுக்கல்லில் ஸ்டாலின், நில்லாமல் ஏறும் தங்கம் விலை, மீண்டும் ISL- 11 மணி வரை இன்று
ICC BCB: ”இந்தியாவில் விளையாடுங்க, இல்லைன்னா கிளம்புங்க” - வங்கதேசத்திற்கு ஷாக் தந்த ஐசிசி - ரிப்போர்ட்
ICC BCB: ”இந்தியாவில் விளையாடுங்க, இல்லைன்னா கிளம்புங்க” - வங்கதேசத்திற்கு ஷாக் தந்த ஐசிசி - ரிப்போர்ட்
Embed widget