மேலும் அறிய

கொரோனா தடுப்பூசி செலுத்த சட்ட ரீதியான அழுத்தம் இல்லை: உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்

கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள சட்டப்பூர்வமான அழுத்தம் ஏதுமில்லை என்று மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள சட்டப்பூர்வமான அழுத்தம் ஏதுமில்லை என்று மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில், தடுப்பூசி போன்ற மருந்துகளை எடுத்துக் கொள்வதில் பயனரிடம் முன் கூட்டியே தெரிவித்து அனுமதி பெற வேண்டியதில்லை. இந்திய அரசாங்கம், கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள தகுதியானவர்கள் அனைவருமே செலுத்திக் கொள்ளுங்கள் என்று பொது நலன் கருதி பிரச்சாரம் செய்யும் போது அதற்கான சட்டப்பூர்வ அழுத்தத்திற்கான தேவை எங்கிருந்து வருகிறது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டதால் உயிரிழந்த இரு சிறுமிகளின் பெற்றோர்கள் தொடர்ந்த வழக்கில் தான் மத்திய அரசு இந்த பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்துள்ளது.
ஒரு நபர் தடுப்பூசி காரணமாக உயிரிழந்தால், அவருக்கு சட்டப்பூர்வமாக என்ன நஷ்டயீடு வந்து சேர வேண்டுமோ அதற்கு அவர் தகுதியானவர். ஆனால் இது போன்ற நிவாரணங்கள் ஒவ்வொரு வழக்கிலும் மாறுபடும். அவர்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு, இழப்பு அடிப்படையில் நிர்ணயிக்கப்படும். ஆகையால் தடுப்பூசியால் இறப்புகள் ஏற்படும் போது அதற்காக மாநில அரசை எந்த அளவுக்கு அதற்கு பொறுப்பாக்க முடியும் என்பது கேள்விக்குறியாகிறது. 

கொரோனா தடுப்பூசியை அரசு இலவசமாக செலுத்தி வருகிறது. தாமாக விருப்பப்பட்டு வருபவர்களுக்கு செலுத்துகிறதே தவிர யாரையும் வலுக்கட்டாயம் செய்வதில்லை. கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள விளம்பரங்கள் பிரச்சாரங்கள் வாயிலாக ஊக்குவிக்கப்படுகின்றனர். அவ்வளவே. எல்லா மருந்துகளைப் போல் தடுப்பூசிகளுக்கும் சில நேரங்களில் சில பக்க விளைவு இருக்கலாம். அதனால் தான் பயனருக்கு அதை செலுத்திக் கொள்வதற்கான முடிவை எடுக்கும் முழு உரிமையும் வழங்கப்படுகிறது என்றும் அரசு தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி 2021-ம் ஆண்டு ஜனவரி 16-ம் தேதி தொடங்கப்பட்டது. தொடக்கத்தில், மருத்துவத்துறைப் பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் போன்ற ஒருசில பிரிவினருக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தப்பட்டுவந்தது. ஆரம்பத்தில் தடுப்பூசி செலுத்தும் பணி மிக மந்தமாகவே நடைபெற்றுவந்தது. ஆனால் இப்போது 200 கோடி டோஸ் தாண்டி தடுப்பூசி செலுத்தப்பட்டுவிட்டது. பூஸ்டர் டோஸ்களும் செலுத்தப்பட்டு வருகின்றன.

12 - 17 வயது உடையவர்கள் தனியார் மருத்துவமனைகளில் "கோவோவேக்ஸ்' தடுப்பூசியை செலுத்திக் கொள்ளலாம்.
12 - 17 வயது உடையவர்கள், கோர்பிவேக்ஸ் தடுப்பூசியை செலுத்த விரும்பினால், அரசு அல்லது தனியார் மருத்துவமனைகளில் செலுத்திக் கொள்ளலாம்.
15 - 17 வயது உடையவர்களுக்கு கோவேக்ஸின் தடுப்பூசி செலுத்த வேண்டுமானால், அரசு அல்லது தனியார் மருத்துவமனைகளில் செலுத்திக் கொள்ளலாம்.
18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கோவேக்ஸின் அல்லது கோவிஷீல்ட் தடுப்பூசியும், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் பூஸ்டர் தடுப்பூசியும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் செலுத்திக் கொள்ளலாம்.
ஸ்புட்னிக்வி தடுப்பூசியை 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் தனியார் மருத்துவமனைகளில் செலுத்திக் கொள்ளலாம்.
 18 - 59 வயதுக்குட்பட்டவர்களுக்கான பூஸ்டர் தடுப்பூசி அரசு மருத்துவமனைகளில் இலவசமாக செலுத்தப்படாது. ஆனால், தனியார் மருத்துவமனைகளில் 18 - 59 வயதுக்குட்பட்டவர்கள் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Jana Nayagan Vijay: போடு வெடிய; ஜனநாயகன் படத்துக்கு யுஏ சான்று- நீதிமன்றம் அதிரடி உத்தரவு- எப்போது வெளியீடு?
Jana Nayagan Vijay: போடு வெடிய; ஜனநாயகன் படத்துக்கு யுஏ சான்று- நீதிமன்றம் அதிரடி உத்தரவு- எப்போது வெளியீடு?
Unga kanava sollunga: வீடு தேடி வராங்க... உங்க கனவ சொல்லுங்க- தமிழக மக்களுக்கு சூப்பரான திட்டம்- அசத்தும் அரசு
வீடு தேடி வராங்க... உங்க கனவ சொல்லுங்க- தமிழக மக்களுக்கு சூப்பரான திட்டம்- அசத்தும் அரசு
DMDK: யாருடன் கூட்டணி.. இன்று அறிவிக்கிறார் பிரேமலதா.. எதிர்பார்ப்பில் தேமுதிக தொண்டர்கள்!
DMDK: யாருடன் கூட்டணி.. இன்று அறிவிக்கிறார் பிரேமலதா.. எதிர்பார்ப்பில் தேமுதிக தொண்டர்கள்!
Gold, Silver Rate Jan.9th: அட போங்கப்பா.! விலை உயர்ந்த தங்கம், குறைந்த வெள்ளி; இன்றைய விலை நிலவரம் என்ன.?
அட போங்கப்பா.! விலை உயர்ந்த தங்கம், குறைந்த வெள்ளி; இன்றைய விலை நிலவரம் என்ன.?
ABP Premium

வீடியோ

Blinkit Delivery boy saves Girl |BLINKIT ORDER-ல் எலிமருந்து! ஹீரோவாக மாறிய DELIVERY BOY
Saaniya Chandhok | அர்ஜுன் டெண்டுல்கருக்கு டும்..டும்..!BUSINESS MAGNATE-ன் பேத்தியார் இந்த சானியா?
ஜனநாயகன் புது ரிலீஸ் தேதி அதிரடி காட்டும் விஜய் ரசிகர்களுக்கு GOOD NEWS | Jana Nayagan New Release Date
Girish Chodankar On DMK Alliance | பிரவீன் விஜய்யுடன் சந்திப்புராகுல் கொடுத்த ஐடியாவா?
Congress Aslam Basha | மிரட்டல்.. கட்டப்பஞ்சாயத்து..காங்கிரஸ் நிர்வாகி வீடியோ வைரல்!அலறவிடும் பாஷா!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Jana Nayagan Vijay: போடு வெடிய; ஜனநாயகன் படத்துக்கு யுஏ சான்று- நீதிமன்றம் அதிரடி உத்தரவு- எப்போது வெளியீடு?
Jana Nayagan Vijay: போடு வெடிய; ஜனநாயகன் படத்துக்கு யுஏ சான்று- நீதிமன்றம் அதிரடி உத்தரவு- எப்போது வெளியீடு?
Unga kanava sollunga: வீடு தேடி வராங்க... உங்க கனவ சொல்லுங்க- தமிழக மக்களுக்கு சூப்பரான திட்டம்- அசத்தும் அரசு
வீடு தேடி வராங்க... உங்க கனவ சொல்லுங்க- தமிழக மக்களுக்கு சூப்பரான திட்டம்- அசத்தும் அரசு
DMDK: யாருடன் கூட்டணி.. இன்று அறிவிக்கிறார் பிரேமலதா.. எதிர்பார்ப்பில் தேமுதிக தொண்டர்கள்!
DMDK: யாருடன் கூட்டணி.. இன்று அறிவிக்கிறார் பிரேமலதா.. எதிர்பார்ப்பில் தேமுதிக தொண்டர்கள்!
Gold, Silver Rate Jan.9th: அட போங்கப்பா.! விலை உயர்ந்த தங்கம், குறைந்த வெள்ளி; இன்றைய விலை நிலவரம் என்ன.?
அட போங்கப்பா.! விலை உயர்ந்த தங்கம், குறைந்த வெள்ளி; இன்றைய விலை நிலவரம் என்ன.?
Heavy Rain Alert: தமிழகத்தை சுற்றி வளைக்கும் ராட்சசன்.! நெருங்கியது புயல்.? அதீத கனமழை- வெதர்மேன் எச்சரிக்கை
தமிழகத்தை சுற்றி வளைக்கும் ராட்சசன்.! நெருங்கியது புயல்.? அதீத கனமழை எந்த மாவட்டங்களில்.? வெதர்மேன் எச்சரிக்கை
Jana Nayagan: ஜனநாயகனுக்கு பாஜக நெருக்கடி.. உண்மையை போட்டுடைத்த ஹெச்.ராஜா!
Jana Nayagan: ஜனநாயகனுக்கு பாஜக நெருக்கடி.. உண்மையை போட்டுடைத்த ஹெச்.ராஜா!
Denmark Warns America: ''முதல்ல சுடுவோம், அப்புறம் தான் பேசுவோம்''; க்ரீன்லாந்து விவகாரம்; US-க்கு டென்மார்க் வார்னிங்
''முதல்ல சுடுவோம், அப்புறம் தான் பேசுவோம்''; க்ரீன்லாந்து விவகாரம்; US-க்கு டென்மார்க் வார்னிங்
US Venezuela China: சீனாவிற்கு ஆப்பு; அமெரிக்காவின் கையில் வெனிசுலா கச்சா எண்ணெய் ஏற்றுமதி; ட்ரம்ப்பை வெளுத்த டெல்சி
சீனாவிற்கு ஆப்பு; அமெரிக்காவின் கையில் வெனிசுலா கச்சா எண்ணெய் ஏற்றுமதி; ட்ரம்ப்பை வெளுத்த டெல்சி
Embed widget