மேலும் அறிய

Nitish Kumar: 8ஆவது முறை பீகார் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற நிதீஷ் குமார்

Nitish Kumar sworn in as CM: கடந்த 22 ஆண்டுகளில் பீகார் முதலமைச்சராக நிதிஷ் குமார் 8ஆவது முறையாகப் பதவியேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

பீகார் மாநில முதலமைச்சராக நிதிஷ் குமார் (Nihish Kumar) 8ஆவது முறையாக பதவியேற்றுள்ளார். அவருக்கு பீகார் மாநில ஆளுநர் பகு சவுகான் பதவிப் பிரமாணம் செய்து வைத்துள்ளார்.

கடந்த 22 ஆண்டுகளில் பீகார் முதலமைச்சராக நிதிஷ் குமார் 8ஆவது முறையாகப் பதவியேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இவருடன் பீகார் மாநில துணை முதலமைச்சராக தேஜஸ்வி யாதவ் பதவியேற்றுள்ளார். பாஜகவுடன் இருந்த 17 ஆண்டுகால கூட்டணியை  முறித்துவிட்டு ராஷ்ட்ரிய ஜனதா தளத்துடன் இணைந்து ஆட்சியமைத்துள்ளார் நிதிஷ் குமார். 

 

ஐக்கிய ஜனதா தளம் - ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சிகளின் கூட்டணியான மகாதத் பந்தன் கூட்டணியின் முதலமைச்சராக நிதிஷ்குமார் பதவியேற்றுள்ளார்.

முன்னதாக தான் முதலமைச்சராக பதவியேற்பது குறித்துப் பேசிய நிதீஷ் குமார், “எங்களுக்கு ஏழு கட்சிகளின் ஆதரவு உள்ளது. ஆதரவு கடிதத்தில் அனைவரும் கையெழுத்திட்டுள்ளனர். மொத்தம் இரண்டு சுயேச்சைகள் உட்பட 164 எம்.எல்.ஏ.க்கள் புதிய அரசுக்கு ஆதரவளிக்க உள்ளனர்” எனத் தெரிவித்திருந்தார்.

243 உறுப்பினர்களைக் கொண்ட பீகார் மாநில சட்டப்பேரவையில், ஆர்ஜேடி தற்போது 79 எம்எல்ஏக்களுடன் தனிப் பெரிய கட்சியாக உள்ளது. JD(U) 45 சட்டப்பேரவை உறுப்பினர்களையும், காங்கிரஸ் 19 மற்றும் CPI(ML) தலைமையிலான இடது முன்னணி 17 சட்டப்பேரவை உறுப்பினர்களையும் கொண்டுள்ளது.

முன்னதாக புதிய முதலமைச்சராக பதவியேற்கவுள்ள நிதீஷ் குமார் தனது கட்சி எம்.எல்.ஏக்களின் கூட்டத்தை கூட்டிய சில மணி நேரங்களிலேயே பீகார் அரசியலில் திருப்பம் ஏற்பட்டது. “ பாஜகவுடனான கூட்டணி முடிந்து விட்டது. காவி கூட்டணி மரியாதை கொடுக்கவில்லை, சதி செய்கிறது” என அவர் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. 

ராஜ் பவனுக்கு வெளியே நிதிஷ் குமார் செய்தியாளர்களிடம் கூறுகையில், ”பிஜேபி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து வெளியேற ஜேடி(யு) கட்சியின் அனைத்து எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் ஒருமித்த கருத்துடன் உள்ளனர் என்றும் தெரிவித்தனர். 

நேற்று முந்தினம், தனக்கு உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாகக் கூறி, நிதி ஆயோக் கூட்டத்தில் நிதிஷ் கலந்து கொள்ளவில்லை. ஆனால் பாட்னாவில் இரண்டு அரசு நிகழ்ச்சிகளில் அவர் கலந்து கொண்டார்.

இந்த அரசியல் நெருக்கடியில் முக்கிய பங்கு வகிக்கும் ஆர்.சி.பி. சிங், சனிக்கிழமை மாலை நிதிஷ் குமாரின் கட்சியை விட்டு வெளியேறினார். மாநிலங்களவை உறுப்பினராகவும் மத்திய அமைச்சராகவும் அவர் பொறுப்பு வகித்து வந்தார். ஆனால், அவரை அமித் ஷாவின் பினாமியாகவே நிதிஷ் குமார் பார்த்து வந்தார். 

ஊழல் செய்ததாக சிங் மீது அவரது சொந்த கட்சியே விமர்சனம் மேற்கொண்டிருந்தது. சமீபத்தில்தான், அவருக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவியை மீண்டும் வழங்க ஐக்கிய ஜனதா தளம் மறுத்திருந்தது. இதன் காரணமாக, மத்திய அமைச்சர் பதவியை அவர் ராஜினாமா செய்ய வேண்டியிருந்தது.

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"இருக்குற இடம் தெரியாம போய்டுவீங்க.." அமைச்சர் ரகுபதிக்கு அண்ணாமலை பகிரங்க எச்சரிக்கை!
Illegal Indian Immigrants: இந்தியா வந்தடைந்த 250 சட்டவிரோத குடியேறிகள்! டிரம்ப்புக்கு இந்தியா சொல்வது என்ன?
Illegal Indian Immigrants: இந்தியா வந்தடைந்த 250 சட்டவிரோத குடியேறிகள்! டிரம்ப்புக்கு இந்தியா சொல்வது என்ன?
பெட்ரோல் டேங்க்ல பாண்டிச்சேரி சரக்கு; ஸ்கெட்ச் போட்டு தூக்கு.. எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க
பெட்ரோல் டேங்க்ல பாண்டிச்சேரி சரக்கு; ஸ்கெட்ச் போட்டு தூக்கு.. எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க
Govt Job: ஹேப்பி நியூஸ்.. இந்த ஆண்டு எவ்வளவு அரசு காலி இடங்கள் நிரப்பப்படும்?- டிஎன்பிஎஸ்சி தலைவர் பதில்!
Govt Job: ஹேப்பி நியூஸ்.. இந்த ஆண்டு எவ்வளவு அரசு காலி இடங்கள் நிரப்பப்படும்?- டிஎன்பிஎஸ்சி தலைவர் பதில்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Rahul gandhi apology: ”என்னை மன்னிச்சிடுங்க” THUGLIFE செய்த ராகுல்! மோடி கொடுத்த ரியாக்‌ஷன்Rahul Gandhi Parliament | அல்வாவை வைத்து நக்கல்! நிர்மலாவை சீண்டிய ராகுல்! SILENT MODE-ல் மோடிChennai MTC Bus : “BAD..BAD..BAD..BOY...Modi visit US: வரியை உயர்த்திய ட்ரம்ப்! அலறும் உலக நாடுகள்! அமெரிக்கா புறப்படும் மோடி!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"இருக்குற இடம் தெரியாம போய்டுவீங்க.." அமைச்சர் ரகுபதிக்கு அண்ணாமலை பகிரங்க எச்சரிக்கை!
Illegal Indian Immigrants: இந்தியா வந்தடைந்த 250 சட்டவிரோத குடியேறிகள்! டிரம்ப்புக்கு இந்தியா சொல்வது என்ன?
Illegal Indian Immigrants: இந்தியா வந்தடைந்த 250 சட்டவிரோத குடியேறிகள்! டிரம்ப்புக்கு இந்தியா சொல்வது என்ன?
பெட்ரோல் டேங்க்ல பாண்டிச்சேரி சரக்கு; ஸ்கெட்ச் போட்டு தூக்கு.. எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க
பெட்ரோல் டேங்க்ல பாண்டிச்சேரி சரக்கு; ஸ்கெட்ச் போட்டு தூக்கு.. எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க
Govt Job: ஹேப்பி நியூஸ்.. இந்த ஆண்டு எவ்வளவு அரசு காலி இடங்கள் நிரப்பப்படும்?- டிஎன்பிஎஸ்சி தலைவர் பதில்!
Govt Job: ஹேப்பி நியூஸ்.. இந்த ஆண்டு எவ்வளவு அரசு காலி இடங்கள் நிரப்பப்படும்?- டிஎன்பிஎஸ்சி தலைவர் பதில்!
Delhi Assembly Election 2025:டெல்லி சட்டமன்ற தேர்தல்; ராகுல், கெஜ்ரிவால், குடியரசுத் தலைவர் வாக்களிப்பு!
Delhi Assembly Election 2025:டெல்லி சட்டமன்ற தேர்தல்; ராகுல், கெஜ்ரிவால், குடியரசுத் தலைவர் வாக்களிப்பு!
E way Bill: இ - வே பில்லை ரத்து செய்யனுமா? அப்போ இந்த 6 விஷயம் கட்டாயம்!
E way Bill: இ - வே பில்லை ரத்து செய்யனுமா? அப்போ இந்த 6 விஷயம் கட்டாயம்!
PM Modi at Maha Kumbh: திரிவேணி சங்கமத்தில் புனித நீராடிய பிரதமர் நரேந்திர மோடி!
PM Modi at Maha Kumbh: திரிவேணி சங்கமத்தில் புனித நீராடிய பிரதமர் நரேந்திர மோடி!
Bank Job: 1000 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு; மாதம் ரூ. 85,920 சம்பளம்... முழுவிவரம் இதோ !
Bank Job: 1000 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு; மாதம் ரூ. 85,920 சம்பளம்... முழுவிவரம் இதோ !
Embed widget