மேலும் அறிய

Nitish Kumar - Mamta Banerjee : பாஜக-வை ஹீரோவில் இருந்து ஜீரோ ஆக்கவேண்டும்.. நிதிஷ்குமாரை சந்திப்புக்கு பின் பேசிய மம்தா பானர்ஜி

மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியை பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் மற்றும் துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ் ஆகியோர் நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினர்.

பாஜக-வை ஹீரோவில் இருந்து ஜீரோ ஆக்க வேண்டும் என்று மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். 

பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் மற்றும் துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ் ஆகியோர் 2024 நாடாளுமன்ற கூட்டணி தொடர்பாக மம்தா பானர்ஜியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். பின் பேசிய மம்தா பானர்ஜி, பாஜகவிற்கு எதிரான அரசியல் கட்சிகள் ஒண்றிணைந்து கூட்டணி அமைப்பது தொடர்பாக எந்த ஈகோவும் இல்லை என தெரிவித்தார். மேலும் பாஜக ஊடகங்களின் உதவியுடன் பெரிய ஹீரோவாக வந்துவிட்டதாகவும் அவர் தெரிவித்தார். 

மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியுடன் பீகார் முதல்வர் நிதிஷ் குமார் துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ் சந்தித்து பேசினர். 2024 தேர்தலுக்கு எதிர்கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியாக இந்த சந்திப்பு நடைபெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது. நிதிஷ்குமார் இன்று மாலை சமாஜ்வாதி கட்சித்தலைவர் அகிலேஷ் யாதவையும் சந்தித்து பேச உள்ளதாகவும் கூறப்படுகிறது.  ஏற்கனவே காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே , ராகுல் காந்தி ஆகியோரை, நிதிஷ்குமார் மற்றும் தேஜஸ்வி ஆகியோர் சந்தித்து பேசியது குறிப்பிடத்தக்கது.  

2024 நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பாஜகவுக்கு எதிராக இருக்கும் மாநில கட்சிகள், காங்கிரஸ், இடதுசாரிகளை சேர்த்து கூட்டணி அமைத்து போட்டியிட்டு பாஜகவை வீழ்த்த வேண்டும் என பல்வேறு எதிர்கட்சியினர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.  அதேநேரம் கர்நாடக தேர்தல் முடிந்த பிறகு இந்த பேச்சுவார்த்தை தொடங்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. கர்நாடகாவில் காங்கிரஸுக்கு சாதகமாக முடிவுகள் வரலாம் என்று கணிப்புகள் தெரிவிக்கின்றன. எதிர்க்கட்சி கூட்டணிக்கு தலைமை தாங்க சில கட்சிகள் போட்டிபோடும் நிலையில், கர்நாடக தேர்தல் கணிப்புகள் உண்மையானால் காங்கிரஸுக்கு அது சாதகமாக அமைய வாய்ப்புண்டு. 

இந்நிலையில், பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் மற்றும் அம்மாநில துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ் ஆகியோரை கார்கே மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் சந்தித்தனர்.  அதற்கு அடுத்த நாள் காங்கிரஸ் தலைவர் சரத் பவாரையும் சந்தித்து பேசினர். காங்கிரஸ் பொதுச்செயலாளர் கேசி வேணுகோபால் மும்பையில் சிவசேனா உத்தவ் பிரிவு தலைவர் உத்தவ் தாக்கரேவை சந்தித்தார்.

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூனா கார்கே இந்த சந்திப்புகளின் பிண்னனியில் இருப்பதாக கூறப்படுகிறது. இந்தமுறை எப்படியாவது பாஜகவை வீழ்த்த வேண்டும் என உறுதி பூண்டுள்ள அவர் கூட்டணி கட்சிகள் கேட்கும் இடங்கள் மற்றும் கூடுதல் சீட்டுகளை விட்டுத் தர முன்வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதே நிலைபாட்டில் நிதிஷ்குமார், மு.க. ஸ்டாலின் ஆகியோரும் உறுதியாக உள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக திரிணாமுல், ஆம் ஆத்மி, பிஆர்எஸ் கட்சிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தும் பொறுப்பு நிதீஷ்குமாரிடம் வழங்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி அவரும் தொடர் சந்திப்புகளை நடத்தி வருகிறார். 

 

தலைப்பு செய்திகள்

Tatkal Ticket Rule Change: தட்கல் டிக்கெட் எடுக்கப் போறீங்களா?.. ஆகஸ்ட் 1 முதல் புது ரூல்ஸ்.. முழு விபரம் இதோ!
Tatkal Ticket Rule Change: தட்கல் டிக்கெட் எடுக்கப் போறீங்களா?.. ஆகஸ்ட் 1 முதல் புது ரூல்ஸ்.. முழு விபரம் இதோ!
இதை பார்த்தா அப்புறம் இந்த உணவ சாப்பிட மாட்டீங்க! அருவருப்பின் உச்சம்! வைரல் வீடியோவால் அதிர்ச்சி!
இதை பார்த்தா அப்புறம் இந்த உணவ சாப்பிட மாட்டீங்க! அருவருப்பின் உச்சம்! வைரல் வீடியோவால் அதிர்ச்சி!
Kangana Ranaut: CJP நீட் போராட்டம்.. வாந்தி வருது.. இவங்கெல்லாம் நல்ல பெண்களா?.. கேவலமாக பேசிய கங்கனா!
Kangana Ranaut: CJP நீட் போராட்டம்.. வாந்தி வருது.. இவங்கெல்லாம் நல்ல பெண்களா?.. கேவலமாக பேசிய கங்கனா!
Mekedatu Dam: மேகதாது விவகாரம்.. தமிழ்நாட்டிற்கு அதிகாரமில்லை.. மத்திய அமைச்சரின் பதிலால் சர்ச்சை!
Mekedatu Dam: மேகதாது விவகாரம்.. தமிழ்நாட்டிற்கு அதிகாரமில்லை.. மத்திய அமைச்சரின் பதிலால் சர்ச்சை!

வீடியோ

இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?
SHIFT ஆகும் CM விஜய் அலுவலகம்.. BEACH VIEW உடன் புதிய OFFICE
கரூர் கூட்ட நெரிசல் அரசுப் பணி கொடுத்த விஜய்..ரத்து செய்த மதுரை நீதிமன்றம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Palani Land Scam: காலையிலேயே அதிரடி - பழனி நில மோசடி விவகாரம் - தலைமறைவாக இருந்த 4 பேர் கைது
காலையிலேயே அதிரடி - பழனி நில மோசடி விவகாரம் - தலைமறைவாக இருந்த 4 பேர் கைது
RB Udhayakumar: ”விஜய் கதை முடிஞ்சதுனு நினைச்சேன்..ஒரு ரீல்ஸ், நெஞ்சு வலியே வந்துடுச்சு” புலம்பிய உதயகுமார்
”விஜய் கதை முடிஞ்சதுனு நினைச்சேன்..ஒரு ரீல்ஸ், நெஞ்சு வலியே வந்துடுச்சு” புலம்பிய உதயகுமார்
Dhanush: தனுஷ் அரசியலுக்கு வந்தால் திமுக, அதிமுக காலி.. விஜயின் ஆஸ்தான ஜோதிடர் கணிப்பு!
Dhanush: தனுஷ் அரசியலுக்கு வந்தால் திமுக, அதிமுக காலி.. விஜயின் ஆஸ்தான ஜோதிடர் கணிப்பு!
TN Weather News: சுட்டெரிக்கப்போகும் வெயில் - எந்தெந்த மாவட்டங்களில் மழை? சென்னை? - தமிழக வானிலை அறிக்கை
சுட்டெரிக்கப்போகும் வெயில் - எந்தெந்த மாவட்டங்களில் மழை? சென்னை? - தமிழக வானிலை அறிக்கை
Tamil Thai Vazhthu: தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3-ம் இடமா? தவெக அரசின் நிலைப்பாடு என்ன? மார்க்சிஸ்ட் கேள்வி
Tamil Thai Vazhthu: தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3-ம் இடமா? தவெக அரசின் நிலைப்பாடு என்ன? மார்க்சிஸ்ட் கேள்வி
தவெக அரசுக்கு பட்டதாரி ஆசிரியர்களின் 18 கோரிக்கைகள்: பழைய ஓய்வூதியம், ஊக்க ஊதியம் எப்போது?
தவெக அரசுக்கு பட்டதாரி ஆசிரியர்களின் 18 கோரிக்கைகள்: பழைய ஓய்வூதியம், ஊக்க ஊதியம் எப்போது?
Rasi Palan Today (29-07-2026): ஆடி மாத பௌர்ணமி.. இன்று கவனமாக இருக்க வேண்டிய ராசிகள்!
Rasi Palan Today (29-07-2026): ஆடி மாத பௌர்ணமி.. இன்று கவனமாக இருக்க வேண்டிய ராசிகள்!
EPS Condemn Central Minister: மத்திய நீர்வளத்துறை இணை அமைச்சரின் பதிலால் காவிரி நதி நீர் பாயும் மாநில மக்கள் பதற்றம் - இபிஎஸ் அறிக்கை
மத்திய நீர்வளத்துறை இணை அமைச்சரின் பதிலால் காவிரி நதி நீர் பாயும் மாநில மக்கள் பதற்றம் - இபிஎஸ் அறிக்கை
Embed widget