மேலும் அறிய

20 லட்சம் பேர் வேலை.. 3 கோடி பேர் வருமானத்தை பறிக்கப்போகும் ஏஐ - நிதி ஆயோக்கில் ஷாக்!

ஏஐ தொழில்நுட்பம் காரணமாக 20 லட்சம் பேரின் வேலைகள் பறிபோகும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக நிதி ஆயோக் தெரிவித்திருப்பது பலருக்கும் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.

2000 காலகட்டத்திற்கு பிறகு உலகத்தில் தொழில்நுட்ப வளர்ச்சி அதீதி வளர்ச்சி அடைந்துள்ளது. அதன் உச்சகட்ட வளர்ச்சியாக ஏஐ தொழில்நுட்பம் பார்க்கப்படுகிறது. செயற்கை நுண்ணறிவு எனப்படும் ஏஐ தொழில்நுட்ப வளர்ச்சியால்  பல்வேறு நன்மைகள் இருந்தாலும் பலரின் வேலைவாய்ப்பு பறிபோகும் அபாயமும் உண்டாகியுள்ளது. 

ஏஐ தொழில்நுட்பம்:

பல துறைகளில் இந்த ஏஐ தொழில்நுட்பத்தால் வேலைவாய்ப்பு உருவாகும் சூழலில், பலரின் வேலைகளும் பறிபோகும் அபாயமும் உண்டாகியுள்ளது. இதுதொடர்பாக நிதி ஆயோக் ஆய்வறிக்கையில் எச்சரிக்கப்பட்டுள்ளது.

20 லட்சம் பேர் வேலை:

நிதி ஆயோக் அமைப்பின் தலைமைச் செயல் அதிகாரி சுப்ரமணியம் இதுதொடர்பாக கூறியதாவது, இந்தியாவில் ஐடி துறையில் தற்போது சுமார் 80 லட்சம் பேர் வேலை செய்து வருகின்றனர். செயற்கை நுண்ணறிவு தாக்கத்தால் இந்தியாவில் 20 லட்சம் வேலைகள் பறிபோகும் அபாயம் உருவாகியுள்ளது. 


20 லட்சம் பேர் வேலை.. 3 கோடி பேர் வருமானத்தை பறிக்கப்போகும் ஏஐ - நிதி ஆயோக்கில் ஷாக்!

3 கோடி பேர் வருமானம்:

அதேசமயம், ஏஐ மூலமாக அடுத்த 5 ஆண்டுகளில் 40 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாகும். அதற்கு ஏஐ தொடர்பான படிப்புகளை கற்றுக்கொள்ள வேண்டும். ஏஐ குறித்த பயிற்சி எதுவும் மேற்கொள்ளாமல் இருப்பவர்களே வேலையை இழக்க நேரிடும்.  20 லட்சம் பேரின் வேலைவாய்ப்பு இழப்பு என்பது 20 லட்சம் பேரின் வேலைவாய்ப்பாக மட்டுமின்றி 2 முதல் 3 கோடி பேரின் வருமானத்துடன் தொடர்பு உடையது ஆகும். 

இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

2 முதல் 3 கோடி பேரின் வருமானம் இதனால் பறிபோக உள்ளதாக அவர் கூறியிருப்பது பலருக்கும் அதிர்ச்சியையும், வேதனையையும் உண்டாக்கியுள்ளது. அதேசமயம், சுப்ரமணியம் இதை எப்படி எதிர்கொள்ளலாம்? என்றும் அறிவுறுத்தியுள்ளார். அவர் கூறியிருப்பதாவது, தனி மனிதர்கள் செயற்கை நுண்ணறிவு தொடர்பான பயிற்சியில் இணைந்து சூழலுக்கு ஏற்ப தங்கள் திறமைகளை தகவமைத்துக் கொள்ள வேண்டியது அவசியம். 


20 லட்சம் பேர் வேலை.. 3 கோடி பேர் வருமானத்தை பறிக்கப்போகும் ஏஐ - நிதி ஆயோக்கில் ஷாக்!

நாட்டிற்கு மக்கள்தான் உண்மையான பலம். அதிக எண்ணிக்கையிலான இளம் டிஜிட்டல் திறமையாளர்கள் உலகிலேயே இந்தியாவில்தான் உள்ளனர். ஏஐ காரணமாக வரப்போகும் மாற்றங்களை  சாதகமாக மாற்றிக்கொள்ள ஏதுவாக, தேசிய ஏஐ திறமை இயக்கம் என்ற பெயரில் நாடு தழுவிய கூட்டு முயற்சியை தாெடங்க வேண்டும். உலகிலேயே அதிக ஏஐ நிபுணர்கள் கொண்ட நாடாக இந்தியாவை உருவாக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

அச்சத்தில் பணியாளர்கள்:

இந்தியா பொருளாதாரத்தில் 21ம் நூற்றாண்டில் மிகப்பெரிய பங்கு வகித்து வரும் ஐடி துறையில் கடந்த சில ஆண்டுகளாகவே பணிநீக்கம் என்பது தொடர்ந்து அரங்கேறி வருகிறது. அதற்கு ஏஐ தொழில்நுட்பமும் முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. முன்னணி நிறுவனமான டிசிஎஸ் தனது 6 லட்சம் பணியாளர்களில் 12 ஆயிரம் பேரை பணியில் இருந்து நீக்க உள்ளதாக ஏற்கனவே அறிவித்துள்ளது. 

நடுத்தர மற்றும் வளர்ந்து வரும் ஐடி நிறுவனங்கள் சத்தமே இன்றி தனது பணியாளர்களை பணியில் இருந்து நீக்கி வருகிறது. இனி வரும் ஆண்டுகளில் ஐடி உள்ளிட்ட பல துறைகளில் வேலையிழப்பு அபாயமும் மேலும் அதிகரிக்கும் என்றும அஞ்சப்படுகிறது. இதனால், பல துறையிலும் பணியாளர்கள் அச்சத்தில் உள்ளனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

IndW vs SAW:  இந்திய அணிக்கு காத்திருக்கும் ஜாக்பாட்! கோப்பை வென்றால் பரிசு மழை!எவ்வளவு தெரியுமா?
IndW vs SAW: இந்திய அணிக்கு காத்திருக்கும் ஜாக்பாட்! கோப்பை வென்றால் பரிசு மழை!எவ்வளவு தெரியுமா?
செங்கோட்டையன் மன்னிப்பு கேட்டாலும் அதிமுகவில் இடமில்லை! திண்டுக்கல் சீனிவாசன் அதிரடி!
செங்கோட்டையன் மன்னிப்பு கேட்டாலும் அதிமுகவில் இடமில்லை! திண்டுக்கல் சீனிவாசன் அதிரடி!
Andhra Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 9 பேர் உயிரிழப்பு.. சாமி கும்பிட போன இடத்தில் பரிதாபம் - ஆந்திராவில் சோகம்
Andhra Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 9 பேர் உயிரிழப்பு.. சாமி கும்பிட போன இடத்தில் பரிதாபம் - ஆந்திராவில் சோகம்
Chennai Crime ; ரயிலில் செல்போனில் ரீல்ஸ் பார்த்த பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
Chennai Crime ; ரயிலில் செல்போனில் ரீல்ஸ் பார்த்த பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

கோயிலுக்கு வந்த பக்தர்கள் 9 பேர் நெரிசலில் உயிரிழப்பு நெஞ்சை உருக்கும் காட்சி | Andhra Temple Stampade
OPERATION முக்குலத்தோர்! எடப்பாடி புது வியூகம்! தேர்தல் அறிக்கையில் சம்பவம்
அதிமுகவில் இருந்து OUT! செங்கோட்டையன் நீக்கம்! ஆக்‌ஷன் எடுத்த EPS
ஆட்டத்தை தொடங்கிய EPSநிர்வாகிகளுடன் திடீர் MEETING!செங்கோட்டையன் நிரந்தர நீக்கம்?
CJI Suryakant |ARTICLE 370 முதல் SIR வரை!Gamechanger சூர்யகாந்த் 53-வது தலைமை நீதிபதி! Supreme Court

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IndW vs SAW:  இந்திய அணிக்கு காத்திருக்கும் ஜாக்பாட்! கோப்பை வென்றால் பரிசு மழை!எவ்வளவு தெரியுமா?
IndW vs SAW: இந்திய அணிக்கு காத்திருக்கும் ஜாக்பாட்! கோப்பை வென்றால் பரிசு மழை!எவ்வளவு தெரியுமா?
செங்கோட்டையன் மன்னிப்பு கேட்டாலும் அதிமுகவில் இடமில்லை! திண்டுக்கல் சீனிவாசன் அதிரடி!
செங்கோட்டையன் மன்னிப்பு கேட்டாலும் அதிமுகவில் இடமில்லை! திண்டுக்கல் சீனிவாசன் அதிரடி!
Andhra Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 9 பேர் உயிரிழப்பு.. சாமி கும்பிட போன இடத்தில் பரிதாபம் - ஆந்திராவில் சோகம்
Andhra Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 9 பேர் உயிரிழப்பு.. சாமி கும்பிட போன இடத்தில் பரிதாபம் - ஆந்திராவில் சோகம்
Chennai Crime ; ரயிலில் செல்போனில் ரீல்ஸ் பார்த்த பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
Chennai Crime ; ரயிலில் செல்போனில் ரீல்ஸ் பார்த்த பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
EPS On Sengottaiyan: ”திமுக உடன் கூட்டு, பொய்,  6 மாதங்களாக திட்டம்”  செங்கோட்டையன் மீது ஈபிஎஸ் குற்றச்சாட்டு
EPS On Sengottaiyan: ”திமுக உடன் கூட்டு, பொய், 6 மாதங்களாக திட்டம்” செங்கோட்டையன் மீது ஈபிஎஸ் குற்றச்சாட்டு
Sengottaiyan: EPSதான் ஏ1.. சர்வாதிகாரி! எடப்பாடி பழனிசாமி மீது செங்கோட்டையன் குற்றச்சாட்டு
Sengottaiyan: EPSதான் ஏ1.. சர்வாதிகாரி! எடப்பாடி பழனிசாமி மீது செங்கோட்டையன் குற்றச்சாட்டு
CMS 03 LVM 3 Rocket: இஸ்ரோ இதுவரை செய்யாத சம்பவம்,  4410 கிலோ - நாளை விண்ணில் பாய்கிறது LVM 3 ராக்கெட்
CMS 03 LVM 3 Rocket: இஸ்ரோ இதுவரை செய்யாத சம்பவம், 4410 கிலோ - நாளை விண்ணில் பாய்கிறது LVM 3 ராக்கெட்
பொங்கல் பரிசு: நவம்பர் 15 முதல் இலவச வேட்டி, புடவை விநியோகம்! அமைச்சர் காந்தி அறிவிப்பு, பட்டு சேலைகளில் மாற்றம்?
பொங்கல் பரிசு: நவம்பர் 15 முதல் இலவச வேட்டி, புடவை விநியோகம்! அமைச்சர் காந்தி அறிவிப்பு, பட்டு சேலைகளில் மாற்றம்?
Embed widget