மேலும் அறிய

"பகவான் ராமரே அசைவம்தான்" - சர்ச்சையை கிளப்பிய தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர்

ராமர் கோயில் திறப்பு விழா தொடர் பேசுபொருளாகி வரும் நிலையில், ராமர் குறித்து தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜிதேந்திர அவாத் தெரிவித்த கருத்து சர்ச்சையை கிளப்பியுள்ளது.

வரும் ஜனவரி மாதம் 22ஆம் தேதி, அயோத்தி ராமர் கோயில் திறக்கப்பட உள்ளது. கோயில் திறப்பு விழாவின்போது, ராமர் கோயிலின் கருவறையில் ராமர் சிலையை பிரதமர் மோடி நிறுவ உள்ளார். கோயில் கும்பாபிஷேகத்துக்கு 136 சனாதன பாரம்பரியங்களைச் சேர்ந்த 25,000 இந்து மதத் தலைவர்களை அழைக்க அறக்கட்டளை திட்டமிட்டுள்ளது.

ராமர் கோயில் திறப்பு விழா தொடர் பேசுபொருளாகி வரும் நிலையில், ராமர் குறித்து தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜிதேந்திர அவாத் தெரிவித்த கருத்து சர்ச்சையை கிளப்பியுள்ளது. பகவான் ராமரே அசைவம்தான் எனக் கூறிய அவர், "ராமர் பகுஜன்களாகிய எங்களுக்கு சொந்தமானவர். 

"பகுஜன் சமூகத்தை சேர்ந்த ராமர்"

விலங்குகளை வேட்டையாடி உண்பது அவரின் வழக்கம். அவர், பகுஜன் சமூகத்தை சேர்ந்தவர். ராமரை முன்மாதிரியாகக் கொண்டு அனைவரையும் சைவ உணவு உண்பவர்களாக மாற்ற முயற்சிக்கின்றனர். ஆனால், ராமர் சைவ உணவு உண்பவர் அல்ல, அசைவ உணவு உண்பவர். 14 வருடங்கள் காட்டில் தங்கியவர். அவர் சைவ உணவுக்கு எங்கே போவார்?" என்றார்.

தேசியவாத காங்கிரஸ் கட்சி இரண்டாக உடைந்த நிலையில், சரத் பவார் அணியில் இருந்து வருகிறார் ஜிதேந்திர அவாத். ராமர் குறித்த அவரின் கருத்து சர்ச்சையானதை அடுத்து அஜித் பவாரின் ஆதரவாளர்கள், நேற்று இரவு, மும்பையில் உள்ள அவாத்தின் வீட்டிற்கு வெளியே  முழக்கங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இன்று மீண்டும் அவரது வீட்டுக்கு சென்ற போராட்டக்காரர்கள்,  அவாத்தின் போஸ்டரில் செருப்பை வீசி எதிர்ப்பை தெரிவித்தனர். இதை தொடர்ந்து, அவரின் வீட்டில் காவல்துறை குவிக்கப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட பாஜக எம்எல்ஏ ராம் கதம், "இந்துக்களின் உணர்வுகளை புண்படுத்தும் வகையில் கருத்து தெரிவித்த அவாத் மீது, அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு பேரணியாக சென்று வழக்கு பதிவு செய்ய உள்ளோம்.

"இந்துக்களை யார் வேண்டுமானாலும் கேலி செய்யலாம்"

ராமரின் அனைத்து பக்தர்களும் ஜிதேந்திர அவாத் மீது போலீஸ் வழக்குப் போடுவார்கள். பால் தாக்கரே உயிருடன் இருந்திருந்தால் இன்றைய சாம்னா நாளிதழ் ராமரை அசைவம் என்று சொன்னவர்களை கடுமையாக பேசியிருக்கும். ஆனால் இன்றைய யதார்த்தம் என்ன? ராமரைப் பற்றி யார் வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் சொல்லலாம்.

இந்துக்களை யார் வேண்டுமானாலும் கேலி செய்யலாம். அவர்கள் கவலைப்படுவதில்லை. பனி போல் குளிர்ச்சி அடைகின்றனர். ஆனால், தேர்தல் வந்தால் இந்துத்துவா பற்றி பேசுவார்கள்" என்றார்.

முன்னதாக, நேரு, காந்தி பற்றி பேசிய அவாத், "யார் என்ன சொன்னாலும், காந்தியாலும் நேருவாலும் தான் நமக்கு சுதந்திரம் கிடைத்தது என்பதே உண்மை. 1947இல் காந்தி படுகொலை செய்யப்படவில்லை. ஆனால், அவர் மீதான முதல் தாக்குதல் 1935 இல் நடந்தது. இரண்டாவது தாக்குதல் 1938ஆம் ஆண்டும் மூன்றாவது தாக்குதல் 1942 இல் நடந்தது.

எல்லாவற்றிற்கும் மேலாக, அவர்கள் ஏன் அவரை பல முறை தாக்கினார்கள். ஏனென்றால் காந்தி ஒரு வியாபாரி. OBC (இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்) வகுப்பை சேர்ந்தவர். இவ்வளவு பெரிய சுதந்திரப் போராட்டத்தின் தலைவர் ஓபிசி வகுப்பை சேர்ந்தவர் என்பதை அவர்களால் (ஆர்எஸ்எஸ்) ஏற்று கொள்ள முடியவில்லை" என்றார்.

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

Top 10 News Headlines: சிலிண்டர் பிரச்னையில் தீர்வு.. பாஜகவுக்கு எச்சரிக்கை.. 11 மணி செய்திகள் இதோ!
Top 10 News Headlines: சிலிண்டர் பிரச்னையில் தீர்வு.. பாஜகவுக்கு எச்சரிக்கை.. 11 மணி செய்திகள் இதோ!
LPG Cylinder Booking: கேஸ் சிலிண்டர் புக்கிங்கில் திடீர் மாற்றம்.. கடுப்பாகும் மக்கள்.. இதுக்கு தீர்வே இல்லையா?
LPG Cylinder Booking: கேஸ் சிலிண்டர் புக்கிங்கில் திடீர் மாற்றம்.. கடுப்பாகும் மக்கள்.. இதுக்கு தீர்வே இல்லையா?
PM Modi Iran: ஈரானுக்கே போன் போட்ட பிரதமர் மோடி - பிரச்னை முடியுமா? கேட்டுகள் திறக்கப்படுமா? பேசியது என்ன?
PM Modi Iran: ஈரானுக்கே போன் போட்ட பிரதமர் மோடி - பிரச்னை முடியுமா? கேட்டுகள் திறக்கப்படுமா? பேசியது என்ன?
Bengaluru Power Cut: ஈரான்-இஸ்ரேல் போர் பதற்றம்.. பெங்களூரில் மின் தடை அபாயம்? அதிர்ச்சியில் மக்கள்
Bengaluru Power Cut: ஈரான்-இஸ்ரேல் போர் பதற்றம்.. பெங்களூரில் மின் தடை அபாயம்? அதிர்ச்சியில் மக்கள்
ABP Premium

வீடியோ

Anbil Mahesh | விஜயை பார்க்க போய் விபத்து ”செலவை நான் பார்த்துக்கிறேன்” நேரில் சென்ற அன்பில்
Subramanian Swamy on Modi | ”ட்ரம்ப்-க்கு பயப்படும் மோடி! நான் உண்மைய சொன்னா..” சுப்ரமணியன் சுவாமி பகீர்
Sasikala meets Ramadoss | 1 மணி நேரம் ஆலோசனை! ராமதாஸை சந்தித்த சசிகலா! விஜய் TEAM உருவாகிறதா?
Iran Shuts Strait of Hormuz | உயரப்போகும் FUEL PRICE இந்தியாவுக்குப் பேரிடி ஈரான் அதிரடி மூவ்!
“CBI கூப்பிட்டா நான் போவேன்” செந்தில் பாலாஜி பதிலடி பாஜக போடும் ஸ்கெட்ச்? | Senthil Balaji Vs Vijay

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"கேஸ் தட்டுப்பாடு தாக்கம் - 1 லட்சம் மாணவர்கள் பாதிப்பு" - ஹாஸ்டல்கள் மூடப்படுமா.?
Kaliyammal: ''அதிமுகவில் இணைந்தது ஏன்? இவங்களுக்கெல்லாம் மரண தண்டனை அளிக்கணும்''- காளியம்மாள் ஆவேசம்
Kaliyammal: ''அதிமுகவில் இணைந்தது ஏன்? இவங்களுக்கெல்லாம் மரண தண்டனை அளிக்கணும்''- காளியம்மாள் ஆவேசம்
விஜய் பற்றிய கேள்விக்கு திரிஷாவின் ரியாக்ஷன்! பரபரப்பை ஏற்படுத்திய மௌனம்: வைரலாகும் காரணம்?
விஜய் பற்றிய கேள்விக்கு திரிஷாவின் ரியாக்ஷன்! பரபரப்பை ஏற்படுத்திய மௌனம்: வைரலாகும் காரணம்?
CSK Vijay: கைகோர்த்த தல - தளபதி ஃபேன்ஸ்..! சிஎஸ்கேவிற்கு எதிராக SRH கேஸ்- ரவுண்டு கட்டிய நெட்டிசன்கள்
CSK Vijay: கைகோர்த்த தல - தளபதி ஃபேன்ஸ்..! சிஎஸ்கேவிற்கு எதிராக SRH கேஸ்- ரவுண்டு கட்டிய நெட்டிசன்கள்
Kaliyammal Joins AIADMK: திடீர் ட்விஸ்ட்.. அதிமுகவில் இணைந்த காளியம்மாள்.. அதிர்ச்சியில் நாம் தமிழர் தொண்டர்கள்!
Kaliyammal Joins AIADMK: திடீர் ட்விஸ்ட்.. அதிமுகவில் இணைந்த காளியம்மாள்.. அதிர்ச்சியில் நாம் தமிழர் தொண்டர்கள்!
DMK: பதவியை பறித்த திமுக..! ராஜீவ் காந்தி தூக்கி அடிக்கப்பட காரணம் என்ன? நடந்தது? ஷாக்கில் உ.பிக்கள்..
DMK: பதவியை பறித்த திமுக..! ராஜீவ் காந்தி தூக்கி அடிக்கப்பட காரணம் என்ன? நடந்தது? ஷாக்கில் உ.பிக்கள்..
Karthigai Deepam: முத்துவேலை கடத்திய கார்த்திக்.. மாட்டிக்கொண்ட சந்திரகலா - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: முத்துவேலை கடத்திய கார்த்திக்.. மாட்டிக்கொண்ட சந்திரகலா - கார்த்திகை தீபத்தில் இன்று
Honda 0 Series: ஆரம்பிக்கும் முன்னே ஷட்டரை சாத்திய ஹோண்டா..! ஜீரோ சீரிஸ் எஸ்யுவி, செடானுக்கு கோவிந்தா..
Honda 0 Series: ஆரம்பிக்கும் முன்னே ஷட்டரை சாத்திய ஹோண்டா..! ஜீரோ சீரிஸ் எஸ்யுவி, செடானுக்கு கோவிந்தா..
Embed widget