மேலும் அறிய

மும்பை: பட்டியலின இளைஞரை நாக்கால் காலணியை சுத்தம் செய்ய வைத்த போலீஸ்? நடந்தது என்ன?

மும்பையில் பட்டியிலின இளைஞரின் முகத்தில் உமிழ்ந்த போலீஸ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மும்பையில் பட்டியிலின இளைஞரின் முகத்தில் உமிழ்ந்த போலீஸ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

நவி மும்பையைச் சேர்ந்த 28 வயது பட்டியிலன இளைஞர் ஒருவர் வழக்கு தொடர்பாக காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டார். அப்போது அந்த நபரை சாதி ரீதியாக தரக்குறைவாக விமர்சித்த அந்த காவல் அதிகாரி இன்னும் கொடூரமான செயலிலும் ஈடுபட்டார். காவலர் தான் அணிந்திருந்த காலணியை அந்த இளைஞரை தனது நாவால் நக்கி சுத்தம் செய்யுமாறு துன்புறுத்தியுள்ளார். மூன்று நாட்கள் அந்த இளைஞர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் சம்பந்தப்பட்ட காவலர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

நடந்தது என்ன?

பாதிக்கப்பட்ட இளைஞரின் பெயர் உஜ்கரே. இவர் கலம்போலி காவல் நிலையத்தில் சைபர் குற்றம் ஒன்றில் தன்னை ஏமாற்றியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க புகார் அளித்தார். ஆனால் அந்தப் புகாரை ஏற்க கம்போலி காவல் நிலையம் முன்வரவில்லை. இதனையடுத்து அவர் உயரதிகாரிகளை அணுகி புகார் தெரிவித்தார். இதனால் கலம்போலி காவல் நிலைய அதிகாரிகள் உஜ்கரே மீது கடுமையான அதிருப்தியில் இருந்துள்ளனர்.

 

இதுகுறித்து அந்த இளைஞர் கூறுகையில், “கடந்த ஜனவரி 6ஆம் தேதியன்று சீன உணவகம் ஒன்றில் நான் எனது நண்பருடன் இருந்தேன். அப்போது அந்த உணவக உரிமையாளர் என் நண்பரை தாக்கினார். உடனே நான் போலீஸுக்கு தகவல் கொடுத்தேன். உடனே சிறிது நேரத்தில் கலம்போலி போலீஸார் அங்கு வந்தனர்.

அவர்கள் என்னை தாக்கினர். நான் காயமடைந்தேன். என்னை மருத்துவமனைக்கு கூட்டிச் செல்லச் சொன்னேன். அவர்கள் பான்வெல் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு மருத்துவர்கள் என்னை வேறு மருத்துவமனைக்கு செல்லுமாறு கூறினர். ஆனால் அதிகாரிகள் என்னை கலம்போலி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அங்கே அதிகாரி பாட்டீல் வந்தார். அவர் என்னை அறைந்தார். பின்னர் என் முகத்தில் உமிழ்ந்தார். அவரது காலணியை என் நாக்கால் சுத்தம் செய்ய வைத்தார்” என்று கூறினார்.

நாடு ஒரு புறம் உலகப் பணக்காரர்களை உருவாக்கிக் கொண்டிருக்கிறது. ஆனால் சமூக கட்டமைப்பு ரீதியாக ஒடுக்கப்பட்ட மக்கள் இன்னமும் ஒடுக்கப்பட்டுக் கொண்டே தான் இருக்கின்றன. மும்பையில் இப்படி ஒரு சம்பவம் என்றால். தமிழ்நாட்டில் புதுக்கோட்டை வேங்கைவயலில் அண்மையில் நடந்த சம்பவத்தைக் கூறலாம். புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் பட்டியல் இன மக்கள் பயன்படுத்தும் மேல்நிலைத்தொட்டி குடிநீரில் மனித மலம் கொட்டிய சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

எஸ்.சி, எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டம்:

கடந்த 2022 புள்ளிவிவரத்தின்படி தமிழ்நாட்டில் எஸ்.சி, எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் 5,916 வழக்குகள் நீதிமன்றத்திலும் 570 வழக்குகள் காவல்துறை விசாரணையிலும் நிலுவையில் உள்ளது தகவல் அறியும் உரிமை சட்டம் (ஆர்.டி.ஐ) மூலம் தெரிய வந்துள்ளது. குடிமக்கள் விழிப்பு மற்றும் கண்கானிப்பு குழு ஆர்.டி.ஐ சட்டம் மூலம் கடந்த நவம்பர் மாதம் வரை இந்த தகவல்களைப் பெற்று தொகுத்துள்ளனர்.

மேலும், எஸ்.சி, எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் பதியப்பட்டுள்ள வழக்குகளில் 11% வழக்குகளில் மட்டுமே குற்றம் நிரூபிக்கப்படுகின்றன. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள 5,916 வழக்குகளில் அதிகபட்சமாக 835 வழக்குகள் திருநெல்வேலி சிறப்பு நீதிமன்றத்திலும் அதற்கு அடுத்தபடியாக 678 வழக்குகள் மதுரை சிறப்பு நீதிமன்றத்திலும் நிலுவையில் உள்ளன.

எஸ்.சி/எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் மாநில அளவில் முதல்வர் தலைமையில் விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் ஆறு மாதங்களுக்கு ஒருமுறை நடைபெற வேண்டும்.

தலைப்பு செய்திகள்

FCRA Bill: உங்க சந்தோஷம் தான் முக்கியம்..! DMK-விற்காக FCRA மசோதாவை தாமதப்படுத்த BJP முடிவு? காரணம் என்ன?
உங்க சந்தோஷம் தான் முக்கியம்..! DMK-விற்காக FCRA மசோதாவை தாமதப்படுத்த BJP முடிவு? காரணம் என்ன?
Students Protest : தேர்வை முழுமையாக ரத்து செய்யனும்.! இன்று சட்டமன்ற முற்றுகை உறுதி - ஜார்க்கண்டில் மாணவர்கள் அதிரடி அறிவிப்பு
தேர்வை முழுமையாக ரத்து செய்யனும்.! இன்று சட்டமன்ற முற்றுகை உறுதி - ஜார்க்கண்டில் மாணவர்கள் அதிரடி அறிவிப்பு
சபரிமலை பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு: கொள்முதல் நடைமுறையில் புதிய விதிகள்! விபரம் இதோ..
சபரிமலை பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு: கொள்முதல் நடைமுறையில் புதிய விதிகள்! விபரம் இதோ..
Independence Day 2026 Theme: எதிர்காலத்திற்கு உத்வேகம் அளிப்போம்.. 2026 சுதந்திர தினத்தின் தீம் என்ன?
Independence Day 2026 Theme: எதிர்காலத்திற்கு உத்வேகம் அளிப்போம்.. 2026 சுதந்திர தினத்தின் தீம் என்ன?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Archana Kalpathi : ’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு கொடுத்த முதல்வர் விஜய்..!
’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அரசு பொறுப்பு..!
Archana Kalpathi Agoram : பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
CV Shanmugam Vs EPS: தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
Tamilisai: சட்டப்பேரவையில் உமிழப்பட்ட வன்மம்..! ரூல்ஸ் படிச்சிங்களா இல்லையா? தீர்மானத்தால் கடுப்பான தமிழிசை
சட்டப்பேரவையில் உமிழப்பட்ட வன்மம்..! ரூல்ஸ் படிச்சிங்களா இல்லையா? தீர்மானத்தால் கடுப்பான தமிழிசை
நெல் ஊக்கத்தொகை உயர்வு கண்துடைப்பு: இது போதுமானதே அல்ல- தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்!
நெல் ஊக்கத்தொகை உயர்வு கண்துடைப்பு: இது போதுமானதே அல்ல- தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்!
Tamil Thai Vazhthu : ‘தமிழ்த்தாய் வாழ்த்தை மாநில பாடலாக்கிய திமுக’ அரசாணை வெளியிட்டதும் திமுக..!
‘தமிழ்த்தாய் வாழ்த்தை மாநில பாடலாக்கிய திமுக’ அரசாணை வெளியிட்டதும் திமுக..!
புதுசா.. பெருசா.. ஃப்ரெஷ்ஷா.. அதிரடி மாற்றங்களுடன் ஹூண்டாய் க்ரெட்டா SUV: டிசைன், இன்ஜின், மைலேஜ்!
புதுசா.. பெருசா.. ஃப்ரெஷ்ஷா.. அதிரடி மாற்றங்களுடன் ஹூண்டாய் க்ரெட்டா SUV: டிசைன், இன்ஜின், மைலேஜ்!
ADMK to TVK: எந்த பதவியும் இன்னும் கொடுக்கலையே.!! ஏண்டா இங்க வந்தோம்.? தவெகவில் தவிக்கும் அதிமுக மாஜிக்கள்.?
எந்த பதவியும் இன்னும் கொடுக்கலையே.!! ஏண்டா இங்க வந்தோம்.? தவெகவில் தவிக்கும் அதிமுக மாஜிக்கள்.?
Embed widget