மேலும் அறிய

’’அமைதி மாநிலம் என்ற நிலைமாறி கொலை நகரமாகி வருகிறது புதுச்சேரி’’- நாராயணசாமி குற்றச்சாட்டு

’’என்.ஆர்.காங்கிரஸ் பா ஜ க 6 மாத ஆட்சியில் அமைதி மாநிலம் என்ற நிலை மாறி புதுச்சேரி கொலை நகரமாகி வருகிறது என்று நாராயணசாமி குற்றஞ்சாட்டினார்’’

என்.ஆர்.காங்கிரஸ்- பா.ஜ.க. 6 மாத ஆட்சியில் அமைதி மாநிலம் என்ற நிலை மாறி புதுச்சேரி கொலை நகரமாகி வருகிறது என முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி குற்றஞ்சாட்டி உள்ளார். சமூக வலைதளத்தில் புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி  வெளியிட்டுள்ள பதிவில்:- புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜ.க. கூட்டணி ஆட்சி வந்த 6 மாத காலத்தில் மாநிலத்தின் அமைதி குலைந்துள்ளது. கொலை, கொள்ளை, நிலம், வீடு அபகரிப்பு, கடைகளில் பணம் பறித்தல், தொழிற்சாலைகளில் அதிகாரத்தில் உள்ளவர்களை மிரட்டி மாமூல் வசூல் போன்றவை தாராளமாக நடந்து வருகிறது.  கடந்த காங்கிரஸ், தி.மு.க. கூட்டணி ஆட்சியின்போது சட்டம் ஒழுங்கை கட்டுக்குள் வைக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுத்தோம். தற்போது புதுச்சேரி மாநிலத்தில் பணிபுரிகின்ற இதே காவல்துறை அதிகாரிகள் தான் அப்போது மிக சிறப்பாக பணி செய்து சட்டம் ஒழுங்கை கட்டுக்குள் வைத்திருந்தனர். ஆனால் தற்போது நிலைமை தலை கீழாக மாறி மாநில மக்கள் அச்சத்திலும், பீதியிலும் வாழ வேண்டிய ஒரு நிலை ஏற்பட்டுள்ளது. பெண்கள் எந்தவித பாதுகாப்பும் இல்லாமல் வெளியே நடமாட முடியவில்லை. கடைகளுக்குள் புகுந்து ரவுடிகள் மிரட்டி செல்கின்றனர். கடந்த 6 மாதங்களில் 10க்கும் மேற்பட்டவர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். 2 நாட்களுக்கு முன்பு காரைக்காலில் ஒருவர் கூலிப்படையால் கொலை செய்யப்பட்டுள்ளார். வாணரப்பேட்டையில் 2 பேர் பட்டப்பகலில் பொதுமக்கள் முன்னிலையில் வெடிகுண்டு வீசியும், வெட்டியும் கொலை செய்யப்பட்டுள்ளனர்.


’’அமைதி மாநிலம் என்ற நிலைமாறி கொலை நகரமாகி வருகிறது புதுச்சேரி’’- நாராயணசாமி குற்றச்சாட்டு

இது தொடர்ந்து நடந்து வருகிறது. தொழிற்சாலை அதிபர்கள் நிம்மதியாக தொழில் செய்ய முடியவில்லை. அதிபர்களை மிரட்டி பணம் பறிக்கப்படுகிறது. அமைதியான மாநிலம் என்ற நிலை மாறி புதுச்சேரி கொலை நகரமாக மாறி வருகிறது. இதற்கு முதலமைச்சர் ரங்கசாமி பொறுப்பேற்க வேண்டும். வாணரப்பேட்டையில் நடைபெற்ற கொலை பொது மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதற்கு முதலமைச்சர் என்ன நடவடிக்கை எடுக்க போகிறார். ஆட்சியாளர்களுக்கு மக்களை பற்றி கவலை இல்லை. எவ்வாறு அதிகாரத்தை பகிர்ந்து கொள்வது, எவ்வாறு கட்சியின் பலத்தை வளர்த்து கொள்வது என்பதைத் தான் பார்க்கின்றனர். நிர்வாகத்தை பற்றியோ, மாநில மக்களை பற்றியோ கவலையில்லை.

இப்போதாவது விழித்துக் கொண்டு முதலமைச்சர் ரங்கசாமி இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். காவல்துறை தலைமை அதிகாரியும் இதில் கவனம் செலுத்த வேண்டும். மத்திய மந்திரிகளை சந்தித்து மாநில வளர்ச்சிக்கு தேவையான நிதியை பெற நடவடிக்கை இல்லை. புதுவை மாநில மக்களுக்கு உரிய பாதுகாப்பை முதலமைச்சர் கொடுக்க வேண்டும். தற்போது விலைவாசி உயர்வு உச்சத்தை எட்டியுள்ளது. அரிசி, பருப்பு, சமையல் எண்ணை விலைவாசி விஷம் போல் உயர்ந்து வருகிறது. இதற்கு மத்திய, மாநில அரசுகள் பொறுப்பேற்க வேண்டும்.

காய்கறிகள், அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளது. இதனை கட்டுப்படுத்தும் நடவடிக்கையை மாநில அரசு எடுக்க வேண்டும். பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும்.  இந்த விலையை உயர்த்துவதால் மக்கள் பெரிய அளவில் பாதிக்கப்படுவார்கள். அதற்கான தண்டனையை மத்திய அரசுக்கு இந்த நாட்டு மக்கள் விரைவில் கொடுப்பார்கள் என அவர் கூறினார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Team India: இந்திய அணிக்கு 125 கோடி ரூபாயை பரிசாக வழங்கிய பிசிசிஐ.. குதூகலத்தில் வீரர்கள்!
Team India: இந்திய அணிக்கு 125 கோடி ரூபாயை பரிசாக வழங்கிய பிசிசிஐ.. குதூகலத்தில் வீரர்கள்!
எம்.பி, எம்.எல்.ஏ-க்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்: திட்ட விரிவாக்க நிகழ்ச்சிகளுக்கு அழைப்பு
எம்.பி, எம்.எல்.ஏ-க்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்: திட்ட விரிவாக்க நிகழ்ச்சிகளுக்கு அழைப்பு
"தொழில்நுட்பத்தை சமூகத்தின் நலனுக்காக பயன்படுத்த வேண்டும்" பிரதமர் மோடி பேச்சு!
Tamannaah: ரியல் எஸ்டேடில் முதலீடு செய்யும் பிரபலங்கள்... சொந்த வீட்டை அடமானம் வைத்த தமன்னா
Tamannaah: ரியல் எஸ்டேடில் முதலீடு செய்யும் பிரபலங்கள்... சொந்த வீட்டை அடமானம் வைத்த தமன்னா
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Namakkal woman bus fall video | பேருந்தில் இருந்து தவறி விழுந்த பெண்! பதறவைக்கும் CCTV காட்சிTeam India Victory Parade | தோளில் உலகக் கோப்பை! இந்திய வீரர்களின் ENTRY! கட்டுக்கடங்காத கூட்டம்Subramanian Swamy | ”சோனியா, ராகுலுடன் டீல்! கொலை வழக்கு பயமா மோடி?” பற்றவைத்த சுப்ரமணியன் சுவாமிTN Cabinet Reshuffle | பதறும் அமைச்சர்கள்.. கட்டம் கட்டிய ஸ்டாலின்! அமைச்சரவையில் மாற்றம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Team India: இந்திய அணிக்கு 125 கோடி ரூபாயை பரிசாக வழங்கிய பிசிசிஐ.. குதூகலத்தில் வீரர்கள்!
Team India: இந்திய அணிக்கு 125 கோடி ரூபாயை பரிசாக வழங்கிய பிசிசிஐ.. குதூகலத்தில் வீரர்கள்!
எம்.பி, எம்.எல்.ஏ-க்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்: திட்ட விரிவாக்க நிகழ்ச்சிகளுக்கு அழைப்பு
எம்.பி, எம்.எல்.ஏ-க்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்: திட்ட விரிவாக்க நிகழ்ச்சிகளுக்கு அழைப்பு
"தொழில்நுட்பத்தை சமூகத்தின் நலனுக்காக பயன்படுத்த வேண்டும்" பிரதமர் மோடி பேச்சு!
Tamannaah: ரியல் எஸ்டேடில் முதலீடு செய்யும் பிரபலங்கள்... சொந்த வீட்டை அடமானம் வைத்த தமன்னா
Tamannaah: ரியல் எஸ்டேடில் முதலீடு செய்யும் பிரபலங்கள்... சொந்த வீட்டை அடமானம் வைத்த தமன்னா
TRP Rating 26th Week: புது சீரியலுக்கு அடித்தது ஜாக்பாட்! கயலை தள்ளிவிட்டு  சிங்கநடை போட்ட சிங்கப்பெண்ணே! - இந்த வார டிஆர்பி நிலவரம்
TRP Rating 26th Week: புது சீரியலுக்கு அடித்தது ஜாக்பாட்! கயலை தள்ளிவிட்டு  சிங்கநடை போட்ட சிங்கப்பெண்ணே! - இந்த வார டிஆர்பி நிலவரம்
Pakistan Milk Price: என்னது! ஒரு லிட்டர் பால் விலை ரூ.370 ஆ? - அதிர்ச்சியில் பாகிஸ்தான் மக்கள்! காரணம் என்ன?
Pakistan Milk Price: என்னது! ஒரு லிட்டர் பால் விலை ரூ.370 ஆ? - அதிர்ச்சியில் பாகிஸ்தான் மக்கள்! காரணம் என்ன?
Team India Marine Drive: மிளிரும் டி20 உலகக் கோப்பை.. அதிரும் வான்கடே மைதானம்! வரிசை கட்டி நிற்கும் ரசிகர்கள்
Team India Marine Drive: மிளிரும் டி20 உலகக் கோப்பை.. அதிரும் வான்கடே மைதானம்! வரிசை கட்டி நிற்கும் ரசிகர்கள்
அப்போலோ மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட முன்னாள் துணை பிரதமர் எல்.கே. அத்வானி
அப்போலோ மருத்துவமனையில் இருந்து எல்.கே. அத்வானி டிஸ்சார்ஜ்!
Embed widget