நொடிப் பொழுதில் மீட்கப்பட்ட உயிர்! மும்பை இரயில் நிலையத்தில் மூதாட்டியை மீட்ட 'ஹீரோ' TC! வைரல் வீடியோ.
தானே-CSMT உள்ளூர் இரயிலில் இருந்து இறங்க முயன்ற மூதாட்டி ஒருவர், எதிர்பாராதவிதமாக நிலைதடுமாறி நடைமேடைக்கும் (Platform) இரயிலுக்கும் இடையிலுள்ள இடைவெளியில் வழுக்கி விழுந்தார்.

மும்பை குர்லா இரயில் நிலையத்தில் ஓடும் இரயிலுக்கும் நடைமேடைக்கும் இடையில் சிக்கவிருந்த முதியவரை, அங்கிருந்த டிக்கெட் பரிசோதகர் மின்னல் வேகத்தில் செயல்பட்டு காப்பாற்றிய வீடியோ சமூக வைரலாகி வருகிறது
வைரல் வீடியோ:
மும்பையின் பரபரப்பான குர்லா இரயில் நிலையத்தில் ஒரு பெரிய அசம்பாவிதம் நூலிழையில் தவிர்க்கப்பட்டுள்ளது. தானே-CSMT உள்ளூர் இரயிலில் இருந்து இறங்க முயன்ற முதியவர் ஒருவர், எதிர்பாராதவிதமாக நிலைதடுமாறி நடைமேடைக்கும் (Platform) இரயிலுக்கும் இடையிலுள்ள இடைவெளியில் வழுக்கி விழுந்தார்.
அப்போது அங்கே பாதுகாப்புப் பணியில் இருந்த டிக்கெட் பரிசோதகர் (TC), மின்னல் வேகத்தில் செயல்பட்டு அந்த முதியவரைப் பாதுகாப்பாகப் பிடித்து இழுத்தார். சில நொடிகள் தாமதித்திருந்தாலும் அந்த முதியவர் இரயிலுக்கு அடியில் சிக்கியிருக்கக்கூடும். இந்த நெஞ்சைப் பதறவைக்கும் காட்சிகள் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி, தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
சம்பவம் நடந்தது எப்படி?
நேரில் பார்த்தவர்களின் தகவல்படி, இரயில் நின்றவுடன் கூட்ட நெரிசலில் இறங்க முயன்ற அந்த முதியவர் நிலைதடுமாறி தண்டவாளத்தை நோக்கி கீழே விழுந்தார். இதைக் கவனித்த டிக்கெட் பரிசோதகர், ஒரு வினாடி கூட யோசிக்காமல் ஓடிச் சென்று தனது முழு பலத்தையும் பயன்படுத்தி முதியவரை நடைமேடைக்கு இழுத்தார். அருகில் இருந்தவர்கள் அதிர்ச்சியில் உறைந்து போவதற்குள், அந்த ஊழியரின் துரித செயல் ஒரு உயிரைக் காப்பாற்றியது. மீட்புக்குப் பிறகு முதியவருக்கு உடனடியாக முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
🚨 Life-saving act at Kurla Station
— DRM Mumbai CR (@drmmumbaicr) February 11, 2026
On 07.02.2026 at about 12:30 hrs, Shri John Paul, CCTC/Kurla, displayed exemplary presence of mind and courage by saving an elderly lady passenger who slipped while alighting from a moving local train at Kurla station.
The grateful passenger… pic.twitter.com/IieF6yWb0v
குவியும் பாராட்டுக்கள்
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானதிலிருந்து, அந்த ஊழியரின் துணிச்சலைப் பாராட்டி பலரும் பாராட்டி வருகின்றனர். "மும்பையின் கூட்ட நெரிசலில் இதுபோன்ற இரயில்வே ஊழியர்களே பயணிகளின் நிஜமான பாதுகாப்பு அரண்" என நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர். இரயில்வே உயர் அதிகாரிகளும் அந்த ஊழியரின் மனிதநேயத்தைப் பாராட்டியதோடு, இக்கட்டான சூழலில் ஊழியர்கள் காட்டும் விழிப்புணர்வுக்கு இது ஒரு சிறந்த சான்று எனத் தெரிவித்துள்ளனர்.























