மேலும் அறிய

Cruise Ship Drugs Case: ஆர்யன் கான் ஜாமீன் மீதான உத்தரவை தள்ளி வைத்த நீதிமன்றம்... மீண்டும் ஒரு வாரத்திற்கு சிறை!

மேலும் ஒரு வாரத்திற்கு ஆர்யன் கான் சிறையில் இருக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.

ஷாருக் கானின் மகன் ஆர்யன் கானின் ஜாமீன் தொடர்பாக வரும் அக்டோபர் 20ம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்படும் என சிறப்பு நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதன்மூலம் மேலும் ஒரு வாரத்திற்கு ஆர்யன் கான் சிறையில் இருக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.

மும்பை சொகுசுக் கப்பலில் போதைப்பொருள் பயன்படுத்தியது தொடர்பான வழக்கில் ஆர்யன் கான் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஆர்யன் கானின் ஜாமீன் மனு ஏற்கெனவே கீழமை நீதிமன்றத்தில் நிராகரிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து கடந்த அக்டோபர் 11ம் தேதி மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் ஜாமீன் மீதான விசாரணை நடைபெற்றது. இந்த வழக்கில் அதிகாரிகள் தன்னை வேண்டுமென்றே தொடர்புபடுத்தி இருப்பதாகவும், எனவே தனது ஜாமீன் மனுவை உடனடியாக விசாரித்து தனக்கு ஜாமீன் வழங்கவேண்டும் என்றும் ஆர்யன் கான் தரப்பில் வாதிடப்பட்டது. ஆனால் இந்த வழக்கு தற்போது சரியான சென்று கொண்டிருப்பதால் கூடுதல் ஆவணங்கள் இந்த வழக்கில் தாக்கல் செய்யப்பட இருப்பதால் வழக்கை ஒத்திவைக்க வேண்டும் என போதைப்பொருள் தடுப்பு அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. எனவே ஆர்யன் கான் உள்ளிட்ட 8 பேரின் ஜாமீன் மனுக்கள் மீதான விசாரணையை மும்பை சிறப்பு நீதிமன்றம் புதன்கிழமைக்கு ஒத்திவைத்தது. 


Cruise Ship Drugs Case: ஆர்யன் கான் ஜாமீன் மீதான உத்தரவை தள்ளி வைத்த நீதிமன்றம்... மீண்டும் ஒரு வாரத்திற்கு சிறை!

ஜாமீன் தொடர்பான வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. விசாரணையின்போது ஆர்யன்கான் தரப்பில் அவரது வழக்கறிஞர் ஆஜரானார். அப்போது கப்பலில்  ஆர்யன்கானிடமிருந்து தடை செய்யப்பட்ட போதைப்பொருட்கள் எதுவும் கைப்பற்றப்படவில்லை என தெரிவித்துள்ளார். போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் கப்பலில் சோதனை நடத்தியபோது அவரிடம் பணம் எதுவும் இருக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார். அவர்கள் குறிப்பிடுவதுபோல, 13 கிராம் கொக்கையினோ, மெஃபெட்ரோன் பரவச மாத்திரைகள் ஆகியவற்றை ஆர்யன்கான் வைத்திருக்கவில்லை. அவரிடம் பணம் இருக்கவில்லை. போதை மருந்துகளை உட்கொள்ளவோ, விற்கவோ அவர் திட்டமிடவுமில்லை என்றும் தெரிவித்தார். ஆனால் போதைப்பொருள் கடத்தல் பிரிவு சார்பாக ஆஜரான வழக்கறிஞர்,  அனில் சிங் தனது வாதங்களை நிறைவு செய்ய முடியவில்லை. இதையடுத்து இந்த வழக்கு இன்றும் மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது ஆர்யன் கானுக்கு போதைப்பொருள் பயன்படுத்தும் பழக்கம் உள்ளதாக தெரிவித்தார்.அவருடைய வாட்ஸ் ஆப் சேட்கள் அதைதான் உறுதி செய்கின்றன என தெரிவித்தார்.
அப்போது ஆர்யன் கான் தரப்பில் ஆஜரான பிரபல வழக்கறிஞர் அமித் தேசாய் எதிர்ப்பு தெரிவித்தார். வாட்ஸ் ஆப் சேட்கள் ஒருவரின் தனிப்பட்ட உரையாடல்களாகவே கருதப்பட  வேண்டும். அதை வேறொருவர் படிக்கும்போது தவறாக நினைக்கக்கூடும். ஆனால் ரேவ் பார்ட்டி பற்றி அந்த சேட்களில் எதுவும் இல்லை என்றுதான் நான் கேள்விபட்டேன். வாட்ஸ்அப்பில் நண்பர்களுக்கிடையேயான சாதாரண உரையாடல்கள்கூட  சந்தேகத்திற்குரியதாகத் தோன்றும் வாய்ப்பு எப்போதும் உள்ளதாகவும் வழக்கறிஞர் தெரிவித்தார். 
இந்நிலையில் ஆர்யன் கானின் ஜாமீன் தொடர்பாக வரும் அக்டோபர் 20ம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்படும் என சிறப்பு நீதிமன்றம் தெரிவித்துள்ளது

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Magalir Urimai Thogai: இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
ADMK BJP: அதிமுக கூட்டணி.. அமித்ஷாவிற்கு தலைவலி - இதுதான் சங்கதி!
ADMK BJP: அதிமுக கூட்டணி.. அமித்ஷாவிற்கு தலைவலி - இதுதான் சங்கதி!
Chennai Metro Rail Work: சென்னை மெட்ரோ பணியில் கலக்கும்
சென்னை மெட்ரோ பணியில் கலக்கும் "மயில்"; எந்த மயில்னு யோசிக்கிறீங்களா.? இத படிங்க தெரியும்
PM Kisan 22nd Installment: பிரதம மந்திரி கிசான் நிதியின் 22-வது தவணை எப்போ வரும்.? அதுக்குள்ள விவசாயிகள் இத செஞ்சுடுங்க
பிரதம மந்திரி கிசான் நிதியின் 22-வது தவணை எப்போ வரும்.? அதுக்குள்ள விவசாயிகள் இத செஞ்சுடுங்க
ABP Premium

வீடியோ

Magalir Urimai Thogai | ''மகளிருக்கு இன்னொரு CHANCE..!''கலைஞர் மகளிர் உரிமைத்தொகை
Rajinikanth 75th Birthday Celebration|’’ரஜினி என் குலசாமி!’’வீடு முழுக்க RAJINISMவியக்க வைத்த ரசிகர்
Tindivanam Bus Accident - டயர் வெடித்து விபத்து ஒருவர் பலி, 15 பேர் படுகாயம்; உதவிய விழுப்புரம் கலெக்டர்
Nainar Nagendran Meet EPS | டெல்லிக்கு அழைத்த அமித் ஷா; ஈபிஎஸ்-நயினார் திடீர் சந்திப்பு; அண்ணாமலை பலே ப்ளான்!
LAW & ORDER இனிமே இவர் கையில் தமிழகத்தின் புதிய பொறுப்பு DGPயார் இந்த அபய் குமார் சிங் IPS? | Abhay Kumar Singh | MK Stalin | TN New DGP

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Magalir Urimai Thogai: இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
ADMK BJP: அதிமுக கூட்டணி.. அமித்ஷாவிற்கு தலைவலி - இதுதான் சங்கதி!
ADMK BJP: அதிமுக கூட்டணி.. அமித்ஷாவிற்கு தலைவலி - இதுதான் சங்கதி!
Chennai Metro Rail Work: சென்னை மெட்ரோ பணியில் கலக்கும்
சென்னை மெட்ரோ பணியில் கலக்கும் "மயில்"; எந்த மயில்னு யோசிக்கிறீங்களா.? இத படிங்க தெரியும்
PM Kisan 22nd Installment: பிரதம மந்திரி கிசான் நிதியின் 22-வது தவணை எப்போ வரும்.? அதுக்குள்ள விவசாயிகள் இத செஞ்சுடுங்க
பிரதம மந்திரி கிசான் நிதியின் 22-வது தவணை எப்போ வரும்.? அதுக்குள்ள விவசாயிகள் இத செஞ்சுடுங்க
Trump's C5 Plan.?: ஐரோப்பாவிற்கு G7; ஆசியாவிற்கு C5; ட்ரம்ப்பின் பலே பிளான்.? எந்தெந்த நாடுகள் தெரியுமா.?
ஐரோப்பாவிற்கு G7; ஆசியாவிற்கு C5; ட்ரம்ப்பின் பலே பிளான்.? எந்தெந்த நாடுகள் தெரியுமா.?
Gold Rate Dec.13th: அய்யய்யோ.! தங்கம் விலை ரூ.99,000-த்தை நெருங்கியது; ஒரே நாளில் ரூ.2560 உயர்வு - இன்று விலை என்ன.?
அய்யய்யோ.! தங்கம் விலை ரூ.99,000-த்தை நெருங்கியது; ஒரே நாளில் ரூ.2560 உயர்வு - இன்று விலை என்ன.?
Magalir Urimai Thogai: மகளிர் உரிமை தொகை ரூ. 1000 கிடைக்கவில்லையா.! மீண்டும் ஒரு வாய்ப்பு- எப்போ தெரியுமா.?
மகளிர் உரிமை தொகை ரூ. 1000 கிடைக்கவில்லையா.! மீண்டும் ஒரு வாய்ப்பு- எப்போ தெரியுமா.?
Hyundai Verna: ரூ.13 லட்சம்தான் ஆரம்பம்.. ஹுண்டாய் Verna காரை வாங்கலாமா? வேண்டாமா?
Hyundai Verna: ரூ.13 லட்சம்தான் ஆரம்பம்.. ஹுண்டாய் Verna காரை வாங்கலாமா? வேண்டாமா?
Embed widget