மேலும் அறிய

Rahul Gandhi: மன்மோகனை அலட்சியப்படுத்திய ராகுல்..! திரும்பியதா கர்மா? என்ன நடந்தது 2013 ஆம் ஆண்டில்?

எம்.பி மற்றும் எம்.எல்.ஏ-க்கள் தகுதி நீக்கம் தொடர்பாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்-ன் அவசர சட்டத்துக்கு, ராகுல் காந்தி எதிர்ப்பு தெரிவித்தது, இன்று அவருக்கு எதிராகவே திரும்பியுள்ளது.

அவதூறு வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி சூரத் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வழக்கின் தீர்ப்பு காரணமாக, கேரள மாநிலம் வயநாடு தொகுதியின் எம். பி. பதவியில் இருந்து ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.

8 ஆண்டுகள் போட்டியிட முடியாது:

இதனிடையே, தனக்கு எதிரான தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்து அதற்கு தடை பெற ராகுல் காந்திக்கு ஒரு மாதம் மட்டுமே கால அவகாசம் உள்ளது. அதற்குள் தண்டனைக்கு தடை பெறாவிட்டால் ராகுல் காந்தி சிறையில் அடைக்கப்படுவார். இதையடுத்து, 2 ஆண்டுகள் சிறை தண்டனை காலம் மற்றும் அதை அடுத்த 6 ஆண்டுகள் என 8 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட முடியாத சூழல் உருவாகும். இதனால், அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலிலும் போட்டியிட முடியாத சூழல் உருவாகும்.

உச்சநீதிமன்றம் தீர்ப்பு:

முன்னதாக, எம்.பி-க்கள், எம்.எல்.ஏ-க்கள் தகுதி நீக்கம் குறித்து, 2013 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அதில் 2 ஆண்டுகளுக்கு மேல் சிறை தண்டனை விதிக்கப்பட்டால், தண்டனை பெற்ற எம்.பி-க்கள், 3 மாத காலம் வரை நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யலாம் என்பதற்கு எதிராக தீர்ப்பு வழங்கியது. இதன்மூலம் 2 ஆண்டுகளுக்கு மேல் சிறை தண்டனை விதிக்கப்பட்டாலே, தகுதி நீக்கம் உடனடியாக அமலுக்கு வரும் என்பதை உறுதி செய்தது.

தகுதி நீக்கம் செய்யப்பட்டு இருக்க மாட்டார்

ஆனால், அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங், உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து, அவசர சட்டத்தை கொண்டு வந்தார். ஆனால், அந்த அவசர சட்டத்துக்கு, காங்கிரசைச் சேர்ந்த ராகுல் காந்தியே கடும் கண்டனம் தெரிவித்து எதிர்ப்பு தெரிவித்தார். இதையடுத்து, அச்சட்டம் திரும்ப பெறப்பட்டது.

இந்நிலையில், ராகுல் காந்தி அந்த அவசர சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் இருந்திருந்தால், தற்போது அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டு இருக்க மாட்டார், 3 மாத கால அவகாசம் கிடைத்திருக்கும் என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

இந்நிலையில், ராகுல் காந்தி தகுதி நீக்கம் குறித்து பாஜகவைச் சேர்ந்த தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு சுந்தர் ட்விட்டரில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.

அதில் தெரிவித்துள்ளதாவது, 2013-ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் மீது அவசரச் சட்டம் கொண்டு வர மன்மோகன் சிங் விரும்பினார். ஆனால் ராகுல் காந்தி அதை துண்டு துண்டாக கிழித்தார். இதில் வேடிக்கை என்னவென்றால், அவரது தகுதி நீக்கம், அதே தீர்ப்பில் இருந்து வருகிறது என்றும் இதுதான் கர்மா என்றும் பதிவிட்டுள்ளார்.

அவசர சட்டத்தை முட்டாள்தனமானது என ராகுல் தெரிவித்தார் என தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ட்வீட் செய்துள்ளார்.

Also Read: Rahul gandhi mohammaed faisal: ராகுல் காந்திக்கு நம்பிக்கை அளிக்கும் முகமது ஃபைசல் வழக்கு..மக்களவை செயலகத்திடம் அதிகாரம்: முழு விபரம்

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Ditwah Cyclone: மிரட்டும் டித்வா புயல்.. இன்றும், நாளையும் தமிழ்நாட்டில் ரெட் அலர்ட் - எந்த மாவட்டங்களுக்கு?
Ditwah Cyclone: மிரட்டும் டித்வா புயல்.. இன்றும், நாளையும் தமிழ்நாட்டில் ரெட் அலர்ட் - எந்த மாவட்டங்களுக்கு?
MK STALIN: குட்ட குட்ட குனிய மாட்டோம்....மோடி அரசுக்கு எதிராக சீறிய ஸ்டாலின்
குட்ட குட்ட குனிய மாட்டோம்....மோடி அரசுக்கு எதிராக சீறிய ஸ்டாலின்
Ditwah Cyclone:: சுழற்றி அடிக்கும் சூறைக்காற்று... கர்ஜிக்கும் கடல்; தாக்குபிடிக்குமா மரக்காணம்?
Ditwah Cyclone:: சுழற்றி அடிக்கும் சூறைக்காற்று... கர்ஜிக்கும் கடல்; தாக்குபிடிக்குமா மரக்காணம்?
கோலி மீண்டும் களத்தில்! தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 'கிங்'கின் மிரட்டல் சாதனை
கோலி மீண்டும் களத்தில்! தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 'கிங்'கின் மிரட்டல் சாதனை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”50 வருஷம் போனதே தெரியல அடுத்த ஜென்மத்தில் நான்...” உணர்ச்சிவசப்பட்ட ரஜினி | Rajini Goa Speech
புரட்டிப்போட்ட டிட்வா புயல் மரத்தில் மாட்டிக்கொண்ட நபர் மூழ்கிய இலங்கை | Sri Lanka Ditwah Cyclone
Hindu Muslim | இதாண்டா தமிழ்நாடு! இந்து-முஸ்லீம் கூட்டு பிரார்த்தனை! கடலூரில் மத நல்லிணக்கம்!
Puducherry CM vs People | ’’ஒரு வாரத்துல நடக்கல..’’முதல்வரை மிரட்டிய நபர்புதுச்சேரியில் பரபரப்பு
Cyclone Ditwah | ’’நெருங்கும் டிட்வா புயல்நவம்பர் 30 சம்பவம் இருக்கு!’’பிரதீப் ஜான் எச்சரிக்கை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Ditwah Cyclone: மிரட்டும் டித்வா புயல்.. இன்றும், நாளையும் தமிழ்நாட்டில் ரெட் அலர்ட் - எந்த மாவட்டங்களுக்கு?
Ditwah Cyclone: மிரட்டும் டித்வா புயல்.. இன்றும், நாளையும் தமிழ்நாட்டில் ரெட் அலர்ட் - எந்த மாவட்டங்களுக்கு?
MK STALIN: குட்ட குட்ட குனிய மாட்டோம்....மோடி அரசுக்கு எதிராக சீறிய ஸ்டாலின்
குட்ட குட்ட குனிய மாட்டோம்....மோடி அரசுக்கு எதிராக சீறிய ஸ்டாலின்
Ditwah Cyclone:: சுழற்றி அடிக்கும் சூறைக்காற்று... கர்ஜிக்கும் கடல்; தாக்குபிடிக்குமா மரக்காணம்?
Ditwah Cyclone:: சுழற்றி அடிக்கும் சூறைக்காற்று... கர்ஜிக்கும் கடல்; தாக்குபிடிக்குமா மரக்காணம்?
கோலி மீண்டும் களத்தில்! தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 'கிங்'கின் மிரட்டல் சாதனை
கோலி மீண்டும் களத்தில்! தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 'கிங்'கின் மிரட்டல் சாதனை
Crop insurance for farmers: விவசாயிகளுக்கு குஷியோ குஷி... பயிர் காப்பீடு செய்ய விலக்கு- தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு
விவசாயிகளுக்கு குஷியோ குஷி... பயிர் காப்பீடு செய்ய விலக்கு- தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு
Toyota Glanza: ரூ.8 லட்சம்தான் ஆரம்ப விலை.. Glanza காரின் விலை, மைலேஜ் எப்படி?
Toyota Glanza: ரூ.8 லட்சம்தான் ஆரம்ப விலை.. Glanza காரின் விலை, மைலேஜ் எப்படி?
சபரிமலை ஐயப்ப பக்தர்கள் கவனத்திற்கு! விமானத்தில் இருமுடி அனுமதி: எதிர்பாராத அறிவிப்பு!
சபரிமலை ஐயப்ப பக்தர்கள் கவனத்திற்கு! விமானத்தில் இருமுடி அனுமதி: எதிர்பாராத அறிவிப்பு!
Ditwah Cyclone: புயல் சென்னையில் கரையை கடக்குதா.?  பொதுமக்களுக்கு அலர்ட் விடுத்த அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர்
புயல் சென்னையில் கரையை கடக்குதா.? பொதுமக்களுக்கு அலர்ட் விடுத்த அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர்
Embed widget