மதுரையில் “காக்ரோச்” அமைப்பின் பேரணி: வேலைவாய்ப்பு, ஊழல் எதிர்ப்பு கோரிக்கைகள் வலியுறுத்தல் !
“2014ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்தபோது ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு வழங்குவோம் என்று மத்திய அரசு உறுதியளித்தது. - குறிப்பிடதக்கது.

இந்தியாவின் மிகப்பெரிய வளமாக உள்ள இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே இந்த பேரணியின் முக்கிய நோக்கம்” என்றும் செல்வா கூறினார்.
காக்ரோச் (Cockroach) பேரணி
வேலையின்மை, போட்டித் தேர்வுகளில் நடைபெறும் முறைகேடுகள், பெட்ரோல்–டீசல் விலை உயர்வு உள்ளிட்ட பிரச்னைகளை எதிர்த்து, “காக்ரோச்” (Cockroach) என்ற பெயரில் இளைஞர்கள் முன்னெடுத்துள்ள இயக்கத்தின் பேரணி மதுரையில் நடைபெற்றது. இந்த பேரணியில் கலந்து கொண்டு பேசிய மாவட்ட ஒருங்கிணைப்பாளர் செல்வா, “இந்திய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சமீபத்தில் இளைஞர்கள் கருப்பான் பூச்சி மற்றும் ஒட்டுண்ணி போல தொந்தரவு செய்கிறார்கள் என கருத்து தெரிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து, வேலையின்மை மற்றும் வாழ்வாதார சிக்கல்களில் சிக்கித் தவிக்கும் இளைஞர்கள் தங்களை ‘கருப்பான் பூச்சி’ என அடையாளப்படுத்திக் கொண்டு நாடு முழுவதும் ஒன்றிணைந்து வருகின்றனர்” என்றார்.
இது இளைஞர்களின் எதிர்ப்புணர்வின் வெளிப்பாடாக பார்க்கப்பட வேண்டும்.
மேலும், இந்த இயக்கத்துடன் தொடர்புடைய சமூக வலைதள பக்கங்கள் முடக்கப்பட்டுள்ளதாகவும், அதை தொடங்கிய நபரை கைது செய்ய முயற்சிகள் நடைபெறுவதாகவும் குற்றம்சாட்டிய அவர், “இது இளைஞர்களின் எதிர்ப்புணர்வின் வெளிப்பாடாக பார்க்கப்பட வேண்டும். ஆனால், அதை ஒடுக்க முயற்சிப்பது ஜனநாயகத்திற்கு எதிரானது” என தெரிவித்தார். நீட் தேர்வு வினாத்தாள் கசிவு, ஒன்றிய அரசு நடத்தும் போட்டித் தேர்வுகளில் ஏற்பட்ட முறைகேடுகள் போன்றவை இளைஞர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் கூறினார். “நீட் தேர்வு ஏழை, எளிய மாணவர்களின் மருத்துவக் கனவை எட்டாக்கனியாக்கியுள்ளது. அதனுடன் வினாத்தாள் கசிவும் ஏற்பட்டுள்ளது. பல்வேறு போட்டித் தேர்வுகளிலும் முறைகேடுகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன” என்றார்.
ரூ.105 ஆக உயர்ந்த பிறகும் அதே தொகைதான் வழங்கப்படுகிறது
பெட்ரோல், டீசல் விலை உயர்வால் டெலிவரி தொழிலில் ஈடுபடும் இளைஞர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் செல்வா குறிப்பிட்டார். “ஜொமாட்டோ, ஸ்விக்கி போன்ற நிறுவனங்களில் பணிபுரியும் இளைஞர்களுக்கு ஒரு கிலோமீட்டருக்கு ரூ.15 மட்டுமே வழங்கப்படுகிறது. பெட்ரோல் விலை ரூ.85 இருந்தபோதும் அதே தொகைதான் வழங்கப்பட்டது; தற்போது ரூ.105 ஆக உயர்ந்த பிறகும் அதே தொகைதான் வழங்கப்படுகிறது” என்றார்.
காந்தி அருங்காட்சியகத்திலிருந்து தமுக்கம் மைதானம் வரை நடைபெற்றது
இந்த பேரணி, மதுரையில் உள்ள மகாத்மா காந்தி அருங்காட்சியகத்திலிருந்து தமுக்கம் மைதானம் வரை நடைபெற்றது. “ஊழலை எதிர்த்தும், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையையும் வலியுறுத்தி இந்த பேரணி நடத்தப்படுகிறது” என்று அவர் தெரிவித்தார். மேலும், “2014ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்தபோது ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு வழங்குவோம் என்று மத்திய அரசு உறுதியளித்தது. ஆனால் இதுவரை அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை. இந்தியாவின் மிகப்பெரிய வளமாக உள்ள இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே இந்த பேரணியின் முக்கிய நோக்கம்” என்றும் செல்வா கூறினார்.
ட்ரெண்டிங் செய்திகள்





















