மேலும் அறிய

ஏழை மக்களுக்கு இலவச ஆடை, அணிகலன்கள்... ஷாப்பிங் மால் செய்த அசத்தல் காரியம்..!

ஏழை, எளிய, ஒடுக்கப்பட்ட மக்களுக்கு தங்களால் முடிந்தவற்றை செய்வது அனைவரின் சமூக கடமையாகும்.

ஏழை மக்களின் நலன்களுக்காக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கார்ப்பரேட் சோசியல் ரெஸ்பான்சிபிலிட்டி திட்டம் மூலம் சமூகத்திற்கு தங்களால் முடிந்தவற்றை பெரும் கார்ப்பரேட் நிறுவனங்கள் செய்து வருகிறது.

ஏழை, எளிய, ஒடுக்கப்பட்ட மக்களுக்கு தங்களால் முடிந்தவற்றை செய்வது அனைவரின் சமூக கடமையாகும். அந்த வகையில், உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில்  உள்ள ஒரு மாலில் ஏழை மக்கள் இலவசமாக ஆடை மற்றும் அணிகலன்களை வாங்கி கொள்ளலாம். 

அனோகா மாலுக்கு செல்லும் ஏழை, எளிய மக்கள் ஆடை மற்றும் அணிகலன்களை இலவசமாக வாங்கி செல்கின்றனர். இந்த ஆடைகளை நலவிரும்பிகள் நன்கொடையாக வழங்குகின்றனர். ரிக்சா ஓட்டுபவர்கள், கூலி தொழிலாளிகள், குடிசைவாசிகள், சமூகத்தில் ஒடுக்கப்பட்ட மக்கள் மழை காலத்தின் குளிரை சமாளிப்பதற்கு இந்த ஆடைகள் உதவும் வகையில் அமைந்துள்ளது.

டிசம்பர், ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் மட்டும் இந்த ஷாப்பிங் மால் திறக்கப்படும். இது ரஹீம் நகரில் அமைந்துள்ளது. நன்கொடையாளர்களிடம் இருந்து கம்பளி ஆடைகளை வாங்கி ஷாப்பிங் மாலில் அவை காட்சிப்படுத்தபடுகின்றன.

பிடித்தவர்கள், அதை இலவசமாக வாங்கி கொள்ளலாம். இந்த ஷாப்பிங் மால், கடந்த 5 ஆண்டுகளாக குளிருக்கு போடும் ஆடைகளை இலவசமாக விற்று வருகிறது.

இந்த ஷாப்பிங் மாலின் உரிமையாளர் டாக்டர் அகமது ரசா கான் (யுனானி மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சை) ஆவார். இதுகுறித்து அவர் விவரிக்கையில், "பொதுவாக, இலவச ஆடைகளை ஏற்பவர்கள் தயக்கம் காட்டுவர். ஆனால், இங்கு அப்படி இல்லை. தேவைப்படுவோருக்கு மட்டுமே கம்பளி ஆடைகள் வழங்கப்படுகிறது.

அனோகா மாலை பொறுத்தவரையில், கம்பளி ஆடைகளை எடுத்துச் செல்பவர், ஒரு ஷாப்பிங் மாலில் நுழைவது போல் எளிதாக உள்ளே நுழைந்து, துணிகளைப் பார்த்து, தங்கள் விருப்பப்படி எடுத்துச் செல்லலாம். நன்கொடையாளர்கள் மற்றும் ஆடைகளை எடுத்து வருபவர்கள் பற்றிய முறையான பதிவு பராமரிக்கப்படுகிறது.

தேவைப்படுபவர்களுக்கு உதவி செய்யும் வணிக வளாகத்தை யாரும் தேவையற்ற அனுகூலங்களைப் பெற முனையக்கூடாது என்பதற்காக இது செய்யப்படுகிறது. கடந்த காலங்களில் சிலர் இங்கிருந்து துணிகளை எடுத்து வந்து சந்தையில் விற்பனை செய்தனர். ஏழைகளுக்கு ஆடைகள் மட்டுமின்றி செருப்புகள், சூட்கேஸ்கள், பள்ளி சீருடைகள், போர்வைகள் ஆகியவையும் மாலில் வைக்கப்பட்டுள்ளன.

நன்கொடையாளர்களில் பெரும்பாலானவர்கள் மருத்துவர்கள். உடைகள் மற்றும் பிற பொருட்கள் சுத்தமாகவும், அணிவதற்கு ஏற்றதாகவும் இருப்பதை உறுதிசெய்கிறோம். 

இந்த வணிக வளாகம் தினமும் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை நான்கு பேர் கொண்ட ஊழியர்களால் இயக்கப்படுகிறது. கடந்த ஆண்டு, சுமார் 3,000 முதல் 4,000 பேர் மாலில் இருந்து துணிகளை எடுத்துள்ளனர். ஆடைகளை எடுப்பவர்களில் பெரும்பாலானோர் ரிக்ஷாக்காரர்கள், கூலித் தொழிலாளர்கள் மற்றும் குடிசைவாசிகள்" என்றார்.

About the author சுதர்சன்

Rookie Journalist. Writes on National, International, Politics, Human rights and Judiciary. Covered 2019 General Election, Apex Court Ayodhya judgement, 2021 Five state election, Pegasus etc.  
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

PIT BULL , ROTTWEILLER DOG: பிட்புல், ராட்வீலர் நாய்களை வளர்த்தால் இனி அவ்வளவு தான்.. நாளை முதல் ரூ.1 லட்சம் அபராதம்
பிட்புல், ராட்வீலர் நாய்களை வளர்த்தால் இனி அவ்வளவு தான்.. நாளை முதல் ரூ.1 லட்சம் அபராதம்
TN SIR Voter List: வரைவு வாக்காளர் பட்டியல் - உங்கள் பெயர் இருக்கா? இல்லையா? அறிந்துகொள்வது எப்படி? வழிகள் இதோ
TN SIR Voter List: வரைவு வாக்காளர் பட்டியல் - உங்கள் பெயர் இருக்கா? இல்லையா? அறிந்துகொள்வது எப்படி? வழிகள் இதோ
Country Chicken : ‘நாட்டுக்கோழியை கண்டுபிடித்து வாங்குவது எப்படி?’ சென்னை மக்களுக்கு ஒரு அடடே அப்டேட்..!
‘நாட்டுக்கோழியை கண்டுபிடித்து வாங்குவது எப்படி?’ சென்னை மக்களுக்கு ஒரு அடடே அப்டேட்..!
BS6 Vs BS5 Vs BS4: கார்களுக்கு விதிக்கப்பட்ட தடை.. BS6 Vs BS5 Vs BS4 என்ன வித்தியாசம்? ஏன் அவசியம்?
BS6 Vs BS5 Vs BS4: கார்களுக்கு விதிக்கப்பட்ட தடை.. BS6 Vs BS5 Vs BS4 என்ன வித்தியாசம்? ஏன் அவசியம்?
ABP Premium

வீடியோ

Thiruparankundram Case | “சர்வே கல்லா? சமணர் தூணா?”திருப்பரங்குன்றம் தீபம் சர்ச்சை நீதிமன்றத்தில் காரசார விவாதம்
Edappadi Meet Adani ”தேர்தல் செலவு நான் பார்த்துக்கிறேன்”அதானியை சந்தித்த EPS! டீல் முடித்த அமித்ஷா
”கோவையை பிடிச்சே ஆகணும்” தூக்கியடிக்கும் செந்தில் பாலாஜி! 70 நிர்வாகிகள் ராஜினாமா
”10 நிமிஷம் பத்தாது” செங்கோட்டையன் அட்வைஸ்! விஜய்யின் அடுத்த மூவ்
TN IPS Officers Transfer | அருண் ஐபிஎஸ் மாற்றம்? டேவிட்சனுக்கு முக்கிய பதவி.. தயாரான ஐபிஎஸ் பட்டியல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PIT BULL , ROTTWEILLER DOG: பிட்புல், ராட்வீலர் நாய்களை வளர்த்தால் இனி அவ்வளவு தான்.. நாளை முதல் ரூ.1 லட்சம் அபராதம்
பிட்புல், ராட்வீலர் நாய்களை வளர்த்தால் இனி அவ்வளவு தான்.. நாளை முதல் ரூ.1 லட்சம் அபராதம்
TN SIR Voter List: வரைவு வாக்காளர் பட்டியல் - உங்கள் பெயர் இருக்கா? இல்லையா? அறிந்துகொள்வது எப்படி? வழிகள் இதோ
TN SIR Voter List: வரைவு வாக்காளர் பட்டியல் - உங்கள் பெயர் இருக்கா? இல்லையா? அறிந்துகொள்வது எப்படி? வழிகள் இதோ
Country Chicken : ‘நாட்டுக்கோழியை கண்டுபிடித்து வாங்குவது எப்படி?’ சென்னை மக்களுக்கு ஒரு அடடே அப்டேட்..!
‘நாட்டுக்கோழியை கண்டுபிடித்து வாங்குவது எப்படி?’ சென்னை மக்களுக்கு ஒரு அடடே அப்டேட்..!
BS6 Vs BS5 Vs BS4: கார்களுக்கு விதிக்கப்பட்ட தடை.. BS6 Vs BS5 Vs BS4 என்ன வித்தியாசம்? ஏன் அவசியம்?
BS6 Vs BS5 Vs BS4: கார்களுக்கு விதிக்கப்பட்ட தடை.. BS6 Vs BS5 Vs BS4 என்ன வித்தியாசம்? ஏன் அவசியம்?
Robotics Labs: அரசுப் பள்ளிகளில் ரோபோட்டிக்ஸ் புரட்சி; மாணவர்கள் எதிர்காலத்தை வடிவமைக்கும் புதிய லேப்கள் தொடக்கம்!
Robotics Labs: அரசுப் பள்ளிகளில் ரோபோட்டிக்ஸ் புரட்சி; மாணவர்கள் எதிர்காலத்தை வடிவமைக்கும் புதிய லேப்கள் தொடக்கம்!
பாகிஸ்தானிற்கு வார்னிங்.. 24 ஆயிரம் பிச்சைக்காரர்களை அனுப்பிய சவுதி அரேபியா - காரணம் என்ன?
பாகிஸ்தானிற்கு வார்னிங்.. 24 ஆயிரம் பிச்சைக்காரர்களை அனுப்பிய சவுதி அரேபியா - காரணம் என்ன?
Car Price Hike: ரெண்டே வாரம்.. கிடுகிடுவென உயரப்போகும் விலை, எந்தெந்த ப்ராண்ட், கார்களுக்கு தெரியுமா?
Car Price Hike: ரெண்டே வாரம்.. கிடுகிடுவென உயரப்போகும் விலை, எந்தெந்த ப்ராண்ட், கார்களுக்கு தெரியுமா?
தமிழ் கலை ஆசிரியர்கள் பணி: ரூ.1.25 லட்சம் ஊதியம்- என்ன தகுதி? விண்ணப்பிப்பது எப்படி?
தமிழ் கலை ஆசிரியர்கள் பணி: ரூ.1.25 லட்சம் ஊதியம்- என்ன தகுதி? விண்ணப்பிப்பது எப்படி?
Embed widget