மேலும் அறிய

நாட்டிலேயே ஒரு தொகுதிக்கு மட்டும் 2 நாள்கள் வாக்குப்பதிவு.. காரணம் என்ன?

நாடு முழுவதும் 543 மக்களவை தொகுதிகள் இருக்கும் நிலையில், தேர்தல் ஆணையம் வெளியிட்ட அட்டவணையில் கூடுதலாக ஒரு தொகுதி குறிப்பிடப்பட்டுள்ளது.

Lok Sabha Elections 2024: பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே நாடாளுமன்ற மக்களவை தேர்தல் தேதி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த முறை போன்று, இந்த தடவையும் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்பட உள்ளது. வரும் ஏப்ரல் மாதம் 19ஆம் தேதி முதற்கட்ட வாக்குப்பதிவும் ஜூன் மாதம் 1ஆம் தேதி கடைசிக்கட்ட வாக்குப்பதிவும் நடைபெறுகிறது.

வரும் ஜூன் 4ஆம் தேதி, தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. நாடு முழுவதும் 543 மக்களவை தொகுதிகள் இருக்கும் நிலையில், தேர்தல் ஆணையம் வெளியிட்ட அட்டவணையில் கூடுதலாக ஒரு தொகுதி குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியாவில் எத்தனை தொகுதிகள் உள்ளன?

அதாவது, அட்டவணையில் தேர்தல் நடத்தப்படும் தொகுதிகளை கூட்டி பார்த்தால் 544 தொகுதிகள் என வந்தது. இதனால், கூடுதலாக ஒரு தொகுதி சேர்க்கப்பட்டதா என கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்து தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமாரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

அப்போதுதான் தெரியவந்தது, இந்தியாவில் ஒரே தொகுதிக்கு மட்டும் இரண்டு நாள்களுக்கு வாக்குப்பதிவு நடக்க உள்ளது. இதுதொடர்பாக விளக்கம் அளித்த தலைமை தேர்தல் ஆணையர், "அவுட்டர் மணிப்பூர் தொகுதியில் நிலவி வரும் சூழ்நிலையே இதற்குக் காரணம்" என்றார்.

அனைத்து தொகுதியிலும் ஒரே நாளில் வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில், மணிப்பூர் தொகுதிக்கு மட்டும் இரண்டு நாட்களில் தேர்தல் நடைபெறவிருக்கிறது. வடகிழக்கில் உள்ள மணிப்பூர் மாநிலத்தில் அண்மைக்காலமாக நடந்து வரும் இனக்கலவரத்தை கருத்தில் கொண்டு இந்த சிறப்பு ஏற்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நாட்டில் ஒரு தொகுதிக்கு மட்டும் 2 நாள் தேர்தல்:

மணிப்பூரில் மொத்தம் 2 மக்களவை தொகுதிகள் உள்ளன. அதில், மணிப்பூர் தொகுதிக்கு ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே நாளில் வாக்குப்பதிவு நடத்தப்படுகிறது. ஆனால், அவுட்டர் மணிப்பூர் தொகுதியில் வரும் ஏப்ரல் 19ஆம் தேதியும் ஏப்ரல் 26ஆம் தேதியும் வாக்குப்பதிவு நடக்க உள்ளது.

சுராசந்த்பூர் மற்றும் சந்தேல் மாவட்டங்கள் முதற்கட்ட தேர்தலில் வாக்குப்பதிவுக்கு செல்கிறது. குக்கி மற்றும் மெய்தேய் சமூக மக்களுக்கு இடையே ஏற்பட்ட வன்முறை இந்த இரண்டு மாவட்டங்களை நிலைகுலைய வைத்தது.

அவுட்டர் மணிப்பூர் நாடாளுமன்ற தொகுதியின் கீழ் வரும் 15 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு ஏப்ரல் 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.  ஹீரோக், வாங்ஜிங் டெந்தா, கங்காபோக், வாப்காய், கக்சிங், ஹியாங்லாம், சுக்னூ, சண்டல் (எஸ்டி), சைகுல் (எஸ்டி), காங்போக்பி, சைட்டு (எஸ்டி), ஹெங்லெப் (எஸ்டி), சுராசந்த்பூர் (எஸ்டி), சைகோட் (எஸ்டி), மற்றும் சிங்கத்(எஸ்டி) தொகுதிகள் இதில் அடங்கும்.

அவுட்டர் மணிப்பூரில் மீதமுள்ள 13 சட்டமன்றத் தொகுதிகளுக்கு ஏப்ரல் 26ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. அவை ஜிரிபாம், தெங்னௌபால் (எஸ்டி), புங்யார் (எஸ்டி), உக்ருல் (எஸ்டி), சிங்கை (எஸ்டி), கரோங் (எஸ்டி), மாவோ (எஸ்டி), தடுபி (எஸ்டி), தமேய் (எஸ்டி), தமெங்லாங் (எஸ்டி), நுங்பா (எஸ்டி), திபைமுக் (எஸ்டி), மற்றும் தன்லோன் (எஸ்டி) ஆகும்.

 

About the author சுதர்சன்

Rookie Journalist. Writes on National, International, Politics, Human rights and Judiciary. Covered 2019 General Election, Apex Court Ayodhya judgement, 2021 Five state election, Pegasus etc.  
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Rain Alert: வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. 13 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை!
Rain Alert: வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. 13 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை!
Ramanathapuram Accident: ராமநாதபுரத்தில் கோர விபத்து.. 2 கார்கள் நேருக்கு நேர் மோதியதில் 5 பேர் பலி!
Ramanathapuram Accident: ராமநாதபுரத்தில் கோர விபத்து.. 2 கார்கள் நேருக்கு நேர் மோதியதில் 5 பேர் பலி!
Tirunelveli Halwa: நெய்க்கு பதிலாக டால்டா.. திருநெல்வேலி அல்வாவில் கலப்படம்.. ஆயிரம் கிலோ பறிமுதல்!
Tirunelveli Halwa: நெய்க்கு பதிலாக டால்டா.. திருநெல்வேலி அல்வாவில் கலப்படம்.. ஆயிரம் கிலோ பறிமுதல்!
Train: இனி ரயிலில் கூட்ட நெரிசல் இருக்காது.. பயணிகளுக்கு சூப்பரான அறிவிப்பை வெளியிட்ட ரயில்வே துறை
இனி ரயிலில் கூட்ட நெரிசல் இருக்காது.. பயணிகளுக்கு சூப்பரான அறிவிப்பை வெளியிட்ட ரயில்வே துறை
ABP Premium

வீடியோ

Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்
Madurai Loganathan IPS Profile | ‘’WE ARE NOT ALLOWING’’ஒற்றை ஆளாக சம்பவம்! யார் இந்த லோகநாதன் IPS?
தமிழ்நாடு வரும் அமித்ஷா திருப்பரங்குன்றம் விவகாரம் கையிலெடுக்கும் பாஜக | Amitsha in Tamilnadu
ஆதவ் Vs ஜோஸ் சார்லஸ் கட்சி தொடங்கும் முன்னே சரிவு விஜய்யுடன் கூட்டணிக்கு END CARD | Aadhav Vs Joes Charles
Thiruparankundram Dheepam|”இன்னும் சில நிமிடங்களில் தீபம்”144 ரத்து போய் பாதுகாப்பு குடுங்க!-நீதிபதி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Rain Alert: வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. 13 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை!
Rain Alert: வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. 13 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை!
Ramanathapuram Accident: ராமநாதபுரத்தில் கோர விபத்து.. 2 கார்கள் நேருக்கு நேர் மோதியதில் 5 பேர் பலி!
Ramanathapuram Accident: ராமநாதபுரத்தில் கோர விபத்து.. 2 கார்கள் நேருக்கு நேர் மோதியதில் 5 பேர் பலி!
Tirunelveli Halwa: நெய்க்கு பதிலாக டால்டா.. திருநெல்வேலி அல்வாவில் கலப்படம்.. ஆயிரம் கிலோ பறிமுதல்!
Tirunelveli Halwa: நெய்க்கு பதிலாக டால்டா.. திருநெல்வேலி அல்வாவில் கலப்படம்.. ஆயிரம் கிலோ பறிமுதல்!
Train: இனி ரயிலில் கூட்ட நெரிசல் இருக்காது.. பயணிகளுக்கு சூப்பரான அறிவிப்பை வெளியிட்ட ரயில்வே துறை
இனி ரயிலில் கூட்ட நெரிசல் இருக்காது.. பயணிகளுக்கு சூப்பரான அறிவிப்பை வெளியிட்ட ரயில்வே துறை
Rain Alert: காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர்: இன்று மழை வருமா? வானிலை மையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
Rain Alert: காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர்: இன்று மழை வருமா? வானிலை மையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
’ஆதவ் Vs சார்லஸ்’ குடும்ப பிரச்னைக்காக மக்களை பயன்படுத்துவதா? ஜோஸ் சார்லஸ் மீது புதுச்சேரி மக்கள் அதிருப்தி..!
’ஆதவ் Vs சார்லஸ்’ குடும்ப பிரச்னைக்காக மக்களை பயன்படுத்துவதா? ஜோஸ் சார்லஸ் மீது புதுச்சேரி மக்கள் அதிருப்தி..!
Modi Putin Meet: கூடங்குளத்தில் மிகப்பெரிய அணுமின் நிலையம் உருவாக்க உதவும் ரஷ்யா; மோடி-புதின் பேசியது என்ன.?
கூடங்குளத்தில் மிகப்பெரிய அணுமின் நிலையம் உருவாக்க உதவும் ரஷ்யா; மோடி-புதின் பேசியது என்ன.?
Embed widget