மேலும் அறிய

Kharge Vs Modi: “எஸ்கேப் ஆன மோடி; தகவல் சொல்லியிருந்தா காப்பாத்தி இருக்கலாமே“ - கொந்தளிக்கும் கார்கே

பஹல்காம் தாக்குதல் குறித்து தனக்கு முன்கூட்டியே கிடைத்த உளவுத்துறை தகவலை மோடி பகிராததாலேயே, 26 அப்பாவி உயிர்கள் கொல்லப்பட்டதாக, காங்கிரஸ் தலைவர் கார்கே குற்றம்சாட்டியுள்ளார்.

பஹல்காம் தீவிரவாத தாக்குதல் குறித்து, உளவுத்துறை மூலம் பிரதமர் மோடிக்கு முன்கூட்டியே கிடைத்த தகவலை அவர் பகிர்ந்திருந்தால், 26 சுற்றுலாப் பயணிகளின் உயிர் தப்பியிருக்கும் என, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் விழாவில் உரையாற்றிய கார்கே

கர்நாடகாவின் ஹோசபேட் நகரில், காங்கிரஸ் அரசு பொறுப்பேற்ற 2-ம் ஆண்டு விழா நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, விழாவில் உரையாற்றினார். அப்போது, பாகிஸ்தான் எப்போதுமே இந்தியாவை பலவீனமாக பார்ப்பதாகவும், சீனாவின் ஆதரவோடு இந்தியாவிற்கு தொந்தரவு கொடுக்க நினைப்பதாகவும் கூறினார். இதுபோன்ற விஷயங்களை இந்தியா ஒருபோதும் பொறுத்துக்கொள்ளாது என்றும், இந்த விஷயத்தில் நாங்கள் ஒன்றுபட்டுள்ளோம் என்றும் தெரிவித்தார்.

மேலும், நாடு முக்கியம் என்பதால், நாட்டை எதிர்ப்பவர்களுக்கு எதிரான போராட்டத்தில், அரசுக்கு தாங்கள் ஆதரவை வழங்கியதாகவும் குறிப்பிட்டார்.

மோடி மீது சரமாரியாக குற்றம்சாட்டிய கார்கே

தொடர்ந்து பேசிய அவர், பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு முன்னதாக, ஓர் உளவுத் துறை அறிக்கையை மோடி பெற்றதாகவும், அதன் அடிப்படையிலேயே தனது காஷ்மீர் பயணத்தை ரத்து செய்ததாகவும் கூறினார்.

அந்த உளவுத் துறை தகவலை வெளிப்படுத்தியிருந்தால், 26 சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்திருக்க மாட்டார்கள் என்றும், பஹல்காமில் நடந்த தீவிரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்ததற்கு, மோடி அரசு அங்கு பாதுகாப்பு வழங்காததே காரணம் எனவும் குற்றம்சாட்டினார்.

பிரமர் மோடிக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், சுற்றுலாப் பயணிகளுக்கு ஏன் காவல்துறை அல்லது ராணுவ பாதுகாப்பு வழங்கப்படவில்லை எனவும், அவர்களுக்கு ஏன் எச்சரிக்கை விடுக்கப்படவில்லை என்றும் கார்கே கேள்வி எழுப்பினார். அப்படி எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தால், 26 அப்பாவி உயிர்கள் காப்பாற்றப்பட்டிருக்கலாம் என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும், பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த எம்.பி-க்களின் தூதுக் குழுக்களை வெளிநாடுகளுக்கு அனுப்பும் விவகாரம் தொடர்பாக, பிரதமர் மோடி தங்களிடம் எதுவும் கேட்கவில்லை என்று கூறிய கார்கே, ஒருதலைபட்சமாக மோடி முடிவெடுத்ததாகவும் சாடினார்.

இருந்தாலும், நாட்டின் நலனை கருத்தில் கொண்டு, தங்கள் எதுவும் கூறவில்லை என்றும், நாட்டை காப்பாற்றுவதே காங்கிரஸின் நோக்கம் என்பதால், தூதுக் குழுவின் ஒரு பகுதியாக தங்கள் பிரதிநிதிகளையும் அனுப்புவதாக கார்கே தெரிவித்தார்.

“அனைத்துக்கட்சிக் கூட்டத்தை புறக்கணித்த மோடி ஒரு தேச பக்தரா?“

தொடர்ந்து பேசிய கார்கே, பஹல்காம் தாக்குதலுக்குப்பின் நடைபெற்ற னைத்துக் கட்சிக் கூட்டத்தை பிரதமர் மோடி புறக்கணித்ததாக குற்றம்சாட்டினார். மேலும், நாட்டிற்கு ஒற்றுமை தேவைப்பட்டபோது, மோடி தேசிய நலனை புறக்கணித்துவிட்டு, பீகாரில் தேர்தல் பிரசார கூட்டத்திற்கு சென்றதாகவும் கடுமையாக விமர்சித்தார் கார்கே.

மேலும், 2 முறை அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டிய மோடி, அதில் கலந்துகொள்ளவில்லை என்றும், அதை தாங்கள் தவிர்த்திருந்தால், தாங்கள் தேச விரோதிகள் என்றும் முத்திரை குத்தப்பட்டிருப்போம் எனவும், ஆனால் மோடி அதை தவிர்த்துவிட்டு தேச பக்தராகவே இருப்பதாகவும் விமர்சித்தார்.

அதோடு, காங்கிரஸ் தேசத்திற்காக போராடியுள்ளதாகவும், தேசபக்தி உங்களுக்கு(மோடி) சொந்தம் அல்ல, உண்மையான தேசபக்தி என்பது வெற்றுப் பேச்சுகளில் அல்ல, ஒற்றுமையில் உள்ளது என்றும் கார்கே தெரிவித்தார்.

மேலும், தாங்கள் நாட்டிற்காக எல்லாவற்றையும் கொடுத்துள்ளதாகவும், ஆனால், ஆட்சியில் இருப்பவர்கள் நாட்டிற்காக போராடவில்லை என்றம், அவர்கள் நாட்டில் தவறான செயல்களை நடத்துவதாகவும் கார்கே குற்றம் சாட்டினார்.

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

மோடியின் மதுரை முழக்கம்: திமுக ஆட்சி மாற்றத்திற்கான சூறாவளி... தேஜகூ கூட்டணி தரும் மாற்றங்கள்!
மோடியின் மதுரை முழக்கம்: திமுக ஆட்சி மாற்றத்திற்கான சூறாவளி... தேஜகூ கூட்டணி தரும் மாற்றங்கள்!
திருப்பரங்குன்றம் கோயிலில் பிரதமர் மோடி: எதிர்பாராத தரிசனம்.. பாதுகாப்பு, மரியாதை, சுவாரசியம் என்ன?
திருப்பரங்குன்றம் கோயிலில் பிரதமர் மோடி: எதிர்பாராத தரிசனம்.. பாதுகாப்பு, மரியாதை, சுவாரசியம் என்ன?
சென்னை - புதுச்சேரி பயணம் இனி 2 மணிநேரம் மட்டுமே: போக்குவரத்துப் புரட்சியை விளக்கிய பிரதமர்
சென்னை - புதுச்சேரி பயணம் இனி 2 மணிநேரம் மட்டுமே: போக்குவரத்துப் புரட்சியை விளக்கிய பிரதமர்
நீண்ட கால வலி...: பிரதமர் முன் ரங்கசாமி வைத்த முக்கிய கோரிக்கை! எதிர்பார்ப்பில் புதுச்சேரி மக்கள்...
நீண்ட கால வலி...: பிரதமர் முன் ரங்கசாமி வைத்த முக்கிய கோரிக்கை! எதிர்பார்ப்பில் புதுச்சேரி மக்கள்...
ABP Premium

வீடியோ

Vijay Sangeetha divorce | சங்கீதா போட்ட குண்டு ஆடிப்போயிருக்கும் விஜய் அரசியல் சதியா? | TVK
TVK Flag Accident | தலையில் விழுந்த கொடிக்கம்பம் பேச்சை நிறுத்தாத நாஞ்சில் தவெக மேடையில் பரபரப்பு
Pudukkottai DMK | புதுக்கோட்டை தொகுதி யாருக்கு? திமுகவில் கடும் போட்டி.. ரேஸில் முந்தும் முத்துராஜா!
Accident News | கட்டுப்பாட்டை இழந்த வேன் கவிழ்ந்து விபத்து பதற வைக்கும் CCTV வீடியோ | Puducherry
TVK issue | ’’தளபதிக்கு விஷயம் போச்சு தலையை வெட்டி வீசிடுவேன்’’ தவெக நிர்வாகி ஆபாச பேச்சு | Vijay

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs WI: சிங்கம் போல சீறிய சாம்சன்.. கெத்தா அரையிறுதியில் நுழைந்த இந்தியா! வெளியேறிய வெஸ்ட் இண்டீஸ்!
IND vs WI: சிங்கம் போல சீறிய சாம்சன்.. கெத்தா அரையிறுதியில் நுழைந்த இந்தியா! வெளியேறிய வெஸ்ட் இண்டீஸ்!
Congress: ஒத்த சீட்டுக்கு மல்லுகட்டு.. தமிழக காங்கிரசுக்கு அல்வா தரப்போகிறாரா ராகுல் காந்தி?
Congress: ஒத்த சீட்டுக்கு மல்லுகட்டு.. தமிழக காங்கிரசுக்கு அல்வா தரப்போகிறாரா ராகுல் காந்தி?
MK Stalin Birthday: நலத்திட்டங்கள், அன்னதானம்.. திருவிழா போல கொண்டாடப்பட்ட மு.க.ஸ்டாலின் பிறந்தநாள்!
MK Stalin Birthday: நலத்திட்டங்கள், அன்னதானம்.. திருவிழா போல கொண்டாடப்பட்ட மு.க.ஸ்டாலின் பிறந்தநாள்!
’’எந்த சாதிக்கு கல்வி இல்லை என்றார்களோ அந்த சாதியில் பிறந்த நான் உயர் கல்வித்துறை அமைச்சர்’’- கண்ணீர்விட்ட அமைச்சர் கோவி செழியன்!
’’எந்த சாதிக்கு கல்வி இல்லை என்றார்களோ அந்த சாதியில் பிறந்த நான் உயர் கல்வித்துறை அமைச்சர்’’- கண்ணீர்விட்ட அமைச்சர் கோவி செழியன்!
DMK Congress Alliance: ஆட்சியில் பங்கா? கப்சிப் ஆன காங்கிரஸ்.. கூலாக டீல் செய்யும் திமுக! எப்படி?
DMK Congress Alliance: ஆட்சியில் பங்கா? கப்சிப் ஆன காங்கிரஸ்.. கூலாக டீல் செய்யும் திமுக! எப்படி?
ஜாக்கெட் இல்லாமல் நடித்தது எப்படி இருந்தது? மனம் திறந்த நீலிமா ராணி
ஜாக்கெட் இல்லாமல் நடித்தது எப்படி இருந்தது? மனம் திறந்த நீலிமா ராணி
அமெரிக்க எம்பிஏ கனவு கலையுமா? இந்திய மாணவர் சேர்க்கையில் 45% சரிவு! மாற்று வழிகள் என்ன?
அமெரிக்க எம்பிஏ கனவு கலையுமா? இந்திய மாணவர் சேர்க்கையில் 45% சரிவு! மாற்று வழிகள் என்ன?
பட்டியலின மாணவர்களுக்கு கொடுமை: தனியார் மருத்துவக் கல்லூரிகள் அராஜகம்! அரசு வேடிக்கை பார்ப்பதா? அன்புமணி ஆவேசம்
பட்டியலின மாணவர்களுக்கு கொடுமை: தனியார் மருத்துவக் கல்லூரிகள் அராஜகம்! அரசு வேடிக்கை பார்ப்பதா? அன்புமணி ஆவேசம்
Embed widget