மேலும் அறிய

Kharge Vs Modi: “எஸ்கேப் ஆன மோடி; தகவல் சொல்லியிருந்தா காப்பாத்தி இருக்கலாமே“ - கொந்தளிக்கும் கார்கே

பஹல்காம் தாக்குதல் குறித்து தனக்கு முன்கூட்டியே கிடைத்த உளவுத்துறை தகவலை மோடி பகிராததாலேயே, 26 அப்பாவி உயிர்கள் கொல்லப்பட்டதாக, காங்கிரஸ் தலைவர் கார்கே குற்றம்சாட்டியுள்ளார்.

பஹல்காம் தீவிரவாத தாக்குதல் குறித்து, உளவுத்துறை மூலம் பிரதமர் மோடிக்கு முன்கூட்டியே கிடைத்த தகவலை அவர் பகிர்ந்திருந்தால், 26 சுற்றுலாப் பயணிகளின் உயிர் தப்பியிருக்கும் என, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் விழாவில் உரையாற்றிய கார்கே

கர்நாடகாவின் ஹோசபேட் நகரில், காங்கிரஸ் அரசு பொறுப்பேற்ற 2-ம் ஆண்டு விழா நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, விழாவில் உரையாற்றினார். அப்போது, பாகிஸ்தான் எப்போதுமே இந்தியாவை பலவீனமாக பார்ப்பதாகவும், சீனாவின் ஆதரவோடு இந்தியாவிற்கு தொந்தரவு கொடுக்க நினைப்பதாகவும் கூறினார். இதுபோன்ற விஷயங்களை இந்தியா ஒருபோதும் பொறுத்துக்கொள்ளாது என்றும், இந்த விஷயத்தில் நாங்கள் ஒன்றுபட்டுள்ளோம் என்றும் தெரிவித்தார்.

மேலும், நாடு முக்கியம் என்பதால், நாட்டை எதிர்ப்பவர்களுக்கு எதிரான போராட்டத்தில், அரசுக்கு தாங்கள் ஆதரவை வழங்கியதாகவும் குறிப்பிட்டார்.

மோடி மீது சரமாரியாக குற்றம்சாட்டிய கார்கே

தொடர்ந்து பேசிய அவர், பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு முன்னதாக, ஓர் உளவுத் துறை அறிக்கையை மோடி பெற்றதாகவும், அதன் அடிப்படையிலேயே தனது காஷ்மீர் பயணத்தை ரத்து செய்ததாகவும் கூறினார்.

அந்த உளவுத் துறை தகவலை வெளிப்படுத்தியிருந்தால், 26 சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்திருக்க மாட்டார்கள் என்றும், பஹல்காமில் நடந்த தீவிரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்ததற்கு, மோடி அரசு அங்கு பாதுகாப்பு வழங்காததே காரணம் எனவும் குற்றம்சாட்டினார்.

பிரமர் மோடிக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், சுற்றுலாப் பயணிகளுக்கு ஏன் காவல்துறை அல்லது ராணுவ பாதுகாப்பு வழங்கப்படவில்லை எனவும், அவர்களுக்கு ஏன் எச்சரிக்கை விடுக்கப்படவில்லை என்றும் கார்கே கேள்வி எழுப்பினார். அப்படி எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தால், 26 அப்பாவி உயிர்கள் காப்பாற்றப்பட்டிருக்கலாம் என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும், பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த எம்.பி-க்களின் தூதுக் குழுக்களை வெளிநாடுகளுக்கு அனுப்பும் விவகாரம் தொடர்பாக, பிரதமர் மோடி தங்களிடம் எதுவும் கேட்கவில்லை என்று கூறிய கார்கே, ஒருதலைபட்சமாக மோடி முடிவெடுத்ததாகவும் சாடினார்.

இருந்தாலும், நாட்டின் நலனை கருத்தில் கொண்டு, தங்கள் எதுவும் கூறவில்லை என்றும், நாட்டை காப்பாற்றுவதே காங்கிரஸின் நோக்கம் என்பதால், தூதுக் குழுவின் ஒரு பகுதியாக தங்கள் பிரதிநிதிகளையும் அனுப்புவதாக கார்கே தெரிவித்தார்.

“அனைத்துக்கட்சிக் கூட்டத்தை புறக்கணித்த மோடி ஒரு தேச பக்தரா?“

தொடர்ந்து பேசிய கார்கே, பஹல்காம் தாக்குதலுக்குப்பின் நடைபெற்ற னைத்துக் கட்சிக் கூட்டத்தை பிரதமர் மோடி புறக்கணித்ததாக குற்றம்சாட்டினார். மேலும், நாட்டிற்கு ஒற்றுமை தேவைப்பட்டபோது, மோடி தேசிய நலனை புறக்கணித்துவிட்டு, பீகாரில் தேர்தல் பிரசார கூட்டத்திற்கு சென்றதாகவும் கடுமையாக விமர்சித்தார் கார்கே.

மேலும், 2 முறை அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டிய மோடி, அதில் கலந்துகொள்ளவில்லை என்றும், அதை தாங்கள் தவிர்த்திருந்தால், தாங்கள் தேச விரோதிகள் என்றும் முத்திரை குத்தப்பட்டிருப்போம் எனவும், ஆனால் மோடி அதை தவிர்த்துவிட்டு தேச பக்தராகவே இருப்பதாகவும் விமர்சித்தார்.

அதோடு, காங்கிரஸ் தேசத்திற்காக போராடியுள்ளதாகவும், தேசபக்தி உங்களுக்கு(மோடி) சொந்தம் அல்ல, உண்மையான தேசபக்தி என்பது வெற்றுப் பேச்சுகளில் அல்ல, ஒற்றுமையில் உள்ளது என்றும் கார்கே தெரிவித்தார்.

மேலும், தாங்கள் நாட்டிற்காக எல்லாவற்றையும் கொடுத்துள்ளதாகவும், ஆனால், ஆட்சியில் இருப்பவர்கள் நாட்டிற்காக போராடவில்லை என்றம், அவர்கள் நாட்டில் தவறான செயல்களை நடத்துவதாகவும் கார்கே குற்றம் சாட்டினார்.

 

தலைப்பு செய்திகள்

Dharmendra Pradhan Resign: மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா; மாணவர்களின் தொடர் போராட்டத்தையடுத்து முடிவு
மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா; மாணவர்களின் தொடர் போராட்டத்தையடுத்து முடிவு
NTA: உள்ளேயே கறுப்பு ஆடுகள்; நீட் வினாத்தாள் கசிவு- 47 என்டிஏ அதிகாரிகள் அதிரடி டிஸ்மிஸ்!
NTA: உள்ளேயே கறுப்பு ஆடுகள்; நீட் வினாத்தாள் கசிவு- 47 என்டிஏ அதிகாரிகள் அதிரடி டிஸ்மிஸ்!
ஒரே இளைஞரைத் திருமணம் செய்துகொண்ட 3 சகோதரிகள்! வைரலாகும் விசித்திரச் சம்பவம்!
ஒரே இளைஞரைத் திருமணம் செய்துகொண்ட 3 சகோதரிகள்! வைரலாகும் விசித்திரச் சம்பவம்!
SC On CJP: மாணவர்கள் மீது தாக்குதல்..! உச்சநீதிமன்றத்தில் நடந்த வாதம் - தலைமை நீதிபதியின் கருத்து என்ன?
மாணவர்கள் மீது தாக்குதல்..! உச்சநீதிமன்றத்தில் நடந்த வாதம் - தலைமை நீதிபதியின் கருத்து என்ன?

வீடியோ

Sonam Wangchuk : பணிந்த மத்திய அரசு! நேரில் வந்த நட்டா26 நாள் உண்ணாவிரதத்தை முடித்த சோனம் வாங்சுக்
CM Vijay Meets DK Shivakumar : நானே களத்துல இறங்குறேன்! காவிரி விவகாரம்.. கர்நாடகா செல்லும் CM விஜய்!
Senthil Balaji Entry : ஒரு மாதம் தலைமறைவு.. STATION-ல வந்து SIGN போடணும்! ஆஜரான செந்தில் பாலாஜி
அரசு நிகழ்ச்சியில் ரீல்ஸ் தவெக-வினர் அலப்பறை கண்டுகொள்ளாத அருண்ராஜ்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Dharmendra Pradhan Resign: மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா; மாணவர்களின் தொடர் போராட்டத்தையடுத்து முடிவு
மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா; மாணவர்களின் தொடர் போராட்டத்தையடுத்து முடிவு
NTA: நாட்டின் அதிமுக்கிய தேர்வு முகமை; என்டிஏவில் வெறும் 24 ஊழியர்கள்- முறைகேடுகளுக்கு இதுதான் காரணமா?
NTA: நாட்டின் அதிமுக்கிய தேர்வு முகமை; என்டிஏவில் வெறும் 24 ஊழியர்கள்- முறைகேடுகளுக்கு இதுதான் காரணமா?
NTA: உள்ளேயே கறுப்பு ஆடுகள்; நீட் வினாத்தாள் கசிவு- 47 என்டிஏ அதிகாரிகள் அதிரடி டிஸ்மிஸ்!
NTA: உள்ளேயே கறுப்பு ஆடுகள்; நீட் வினாத்தாள் கசிவு- 47 என்டிஏ அதிகாரிகள் அதிரடி டிஸ்மிஸ்!
Tata Tiago EMI: வெறும் ரூ.50 ஆயிரம் போதும்; டாடா டியாகோ பட்ஜெட் காரை சொந்தமாக்கலாம்! 4 ஆண்டு லோன்- இதோ EMI!
Tata Tiago EMI: வெறும் ரூ.50 ஆயிரம் போதும்; டாடா டியாகோ பட்ஜெட் காரை சொந்தமாக்கலாம்! 4 ஆண்டு லோன்- இதோ EMI!
MK STALIN : “Sorry சொன்னால் போதுமா?” என கேட்டீங்க.. நீங்க எங்கே ஒளிந்திருக்கீங்க.? CM விஜய்யை கேள்வி கேட்கும் ஸ்டாலின்
“Sorry சொன்னால் போதுமா?” என கேட்டீங்க.. நீங்க எங்கே ஒளிந்திருக்கீங்க.? CM விஜய்யை கேள்வி கேட்கும் ஸ்டாலின்
Actress Jyothika : அமைச்சரே உடனே ராஜினாமா பண்ணுங்க.! தைரியமாக இறங்கி அடித்த நடிகை ஜோதிகா
அமைச்சரே உடனே ராஜினாமா பண்ணுங்க.! தைரியமாக இறங்கி அடித்த நடிகை ஜோதிகா
Chengalpattu metro rail : அடி தூள்.! செங்கல்பட்டு வரை மெட்ரோ ரயில்.. எதிர்பார்த்த மக்களுக்கு அசத்தல் அறிவிப்பு வந்தாச்சு
அடி தூள்.! செங்கல்பட்டு வரை மெட்ரோ ரயில்.. எதிர்பார்த்த மக்களுக்கு அசத்தல் அறிவிப்பு வந்தாச்சு
Thirumavalavan:
Thirumavalavan: "தர்மேந்திர பிரதான் பாவம்.." திருமாவளவன் திடீரென ஏன் அப்படி பேசினார்?
Embed widget