மேலும் அறிய

ஒரே நேரத்தில் அரசுப் பணி...தாயும் மகனும் அசத்தல்...வெற்றிக்கு காரணம் என்ன?

கேரளாவில் பெண் ஒருவரும் அவரது மகனும் ஒரே நேரத்தில் அரசு பணியில் சேரவிருப்பது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

கேரளாவில் பெண் ஒருவரும் அவரது மகனும் ஒரே நேரத்தில் அரசு பணியில் சேரவிருப்பது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. பிந்து தனது மகன் 10 ஆம் வகுப்பு படிக்கும் போது அவரை படிக்க ஊக்குவிப்பதற்காக புத்தகங்களைப் படிக்கத் தொடங்கினார். 

ஆனால் அது அவரை கேரள பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (PSC) தேர்வுகளுக்குத் தயாராவதற்கும் தூண்டியது. ஒன்பது ஆண்டுகளுக்குப் பின், பிந்துவும் அவரது மகனும் ஒன்றாக அரசுப் பணியில் சேர உள்ளனர். 42 வயதான பிந்து லாஸ்ட் கிரேடு சர்வண்ட்ஸ் (எல்ஜிஎஸ்) தேர்வில் 92ஆவது ரேங்க் பெற்று தேர்ச்சி பெற்றாலும், அவரது 24 வயது மகன் லோயர் டிவிஷனல் கிளார்க் (எல்டிசி) தேர்வில் 38வது ரேங்க் பெற்று தேர்ச்சி பெற்றது பெருமை அளிப்பதாக பிந்து தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார்.

தனது மகனைப் படிக்கத் தூண்டுவதற்காக படிக்க தொடங்கிய அவர், பின்னர் ஒரு பயிற்சி மையத்தில் சேர்ந்துள்ளார். தனது மகன் பட்டப்படிப்பு முடித்த பிறகு அதே பயிற்சி மையத்தில் அவரை சேர்த்துள்ளார்.

இதுகுறித்து விரிவாக பேசிய அவர், "இரண்டு முறை எல்ஜிஎஸ் தேர்வையும் ஒரு முறை என்டிசி தேர்வையும் எழுதிய பிறகு நான்காவது முறையாக வெற்றிபெற்றேன். உண்மையான இலக்கு ICDS (ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு சேவைகள் மேற்பார்வையாளர் தேர்வு). LGS தேர்வில் தேர்ச்சி பெற்றதை போனஸாகவே பார்கிறேன்" என்றார்.

அங்கன்வாடியில் கடந்த 10 ஆண்டுகளாக ஆசிரியராக பணியாற்றி வரும் பிந்து, "பயிற்சி மையத்தில் உள்ள ஆசிரியர்கள், நண்பர்கள் மற்றும் எனது மகன் ஊக்கம் அளித்தனர். ஆதரவாக இருந்தனர். PSC தேர்வில் தேர்ச்சி பெற மீண்டும் மீண்டும் முயற்சிகளை மேற்கொண்டேன்.

இதுகுறித்து பிந்துவின் மகன் கூறுகையில், "இருவரும் ஒன்றாகப் படிக்காத நிலையில், சில விஷயங்களைப் பற்றி விவாதிப்போம். நான் தனியாக படிப்பதையே விரும்புகிறேன். மேலும், அவர் எப்போதும் படிப்பதில்லை. நேரம் கிடைக்கும்போதும், அங்கன்வாடிப் பணிகளுக்குப் பிறகும் படிப்பார். நான் முன்பு ஒரு போலீஸ் தேர்வை எழுதியிருந்தேன். துணைப் பட்டியலிலும் எனது பெயர் வந்தது. இம்முறை எல்.டி.சி தேர்வுக்கு அதிகம் படித்தேன்" என்றார்.

தேர்வுக்கு எப்படி தயாரானேன் என்பது குறித்து விவரித்த பிந்து, "PSC தேர்வுக்கு தயாராகுபவர் எப்படி இருக்க வேண்டும், எப்படி இருக்கக்கூடாது என்பதற்கு நான் சிறந்த உதாரணம். அதாவது நான் தொடர்ந்து படிப்பதில்லை. தேர்வுத் தேதிக்கு ஆறு மாதங்களுக்கு முன்பே தேர்வுக்குத் தயாராகிவிடுகிறேன். மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு அடுத்த சுற்று தேர்வுகள் அறிவிக்கப்படும். அது வரை நான் ஓய்வு எடுத்துக்கொள்வேன்" என்றார்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

About the author சுதர்சன்

Rookie Journalist. Writes on National, International, Politics, Human rights and Judiciary. Covered 2019 General Election, Apex Court Ayodhya judgement, 2021 Five state election, Pegasus etc.  
Read More

தலைப்பு செய்திகள்

PM Modi: இஸ்லாமாபாத்திற்கு செல்கிறாரா பிரதமர் மோடி? அழைப்பிதழை உறுதி செய்த பாக்., - அரசின் முடிவு என்ன?
இஸ்லாமாபாத்திற்கு செல்கிறாரா பிரதமர் மோடி? அழைப்பிதழை உறுதி செய்த பாக்., - அரசின் முடிவு என்ன?
வருமான வரி தாக்கல்: இன்றே இறுதி நாள்! தவறினால் ரூ.5000 அபராதம் உறுதி! விபரம் இதோ..
வருமான வரி தாக்கல்: இன்றே இறுதி நாள்! தவறினால் ரூ.5000 அபராதம் உறுதி! விபரம் இதோ..
மத்திய அரசு ஊழியர்களே! 8வது ஊதியக் குழுவின் FITMENT FACOTR: உங்கள் சம்பளம் எவ்வளவு?
மத்திய அரசு ஊழியர்களே! 8வது ஊதியக் குழுவின் FITMENT FACOTR: உங்கள் சம்பளம் எவ்வளவு?
ஆகஸ்ட் மாதத்தில் 14 நாட்கள் வங்கி விடுமுறை! தமிழ்நாட்டிற்கு எத்தனை நாள் தெரியுமா?
ஆகஸ்ட் மாதத்தில் 14 நாட்கள் வங்கி விடுமுறை! தமிழ்நாட்டிற்கு எத்தனை நாள் தெரியுமா?

வீடியோ

Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
சிஎம் விஜய் கர்நாடகாவிற்கு வர வேண்டாம் - டி.கே.சிவக்குமார் திடீர் அறிவிப்பு - காரணம் என்ன.?
சிஎம் விஜய் கர்நாடகாவிற்கு வர வேண்டாம் - டி.கே.சிவக்குமார் திடீர் அறிவிப்பு - காரணம் என்ன.?
செந்தில் பாலாஜியை கைது செய்ய தடை.! முன் ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
செந்தில் பாலாஜியை கைது செய்ய தடை.! முன் ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
MK Stalin: TVK ஆட்சி அமைந்ததில் இருந்தே தடங்கல்தான்..! அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் - அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை
TVK ஆட்சி அமைந்ததில் இருந்தே தடங்கல்தான்..! அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் - அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை
Income Tax Return: இன்றே கடைசி..! வருமான வரி தாக்கல் செய்யாவிட்டால் ரூ.5000 அபராதம் - கூடுதல் அவகாசம் யாருக்கு?
இன்றே கடைசி..! வருமான வரி தாக்கல் செய்யாவிட்டால் ரூ.5000 அபராதம் - கூடுதல் அவகாசம் யாருக்கு?
அந்தர் பல்டி அடித்து வந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்.. டம்மியாகவே வைத்திருக்கும் தவெக - காரணம் என்ன?
அந்தர் பல்டி அடித்து வந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்.. டம்மியாகவே வைத்திருக்கும் தவெக - காரணம் என்ன?
Hyundai Neira EV: சபாஷ்..சரியான போட்டி.! கியா கேரன்ஸ்-க்கு நேரடி சவால்.! தட்டித் தூக்குமா ஹூண்டாய் நீரா E-MPV.?
சபாஷ்..சரியான போட்டி.! கியா கேரன்ஸ்-க்கு நேரடி சவால்.! தட்டித் தூக்குமா ஹூண்டாய் நீரா E-MPV.?
Upcoming Powerful SUVs: SUV வாங்குற பிளான் இருக்கா.? அடுத்த 3 மாதங்களில் வரும் 3 பவர்ஃபுல் கார்கள்; விலை, அம்சங்கள் என்ன.?
SUV வாங்குற பிளான் இருக்கா.? அடுத்த 3 மாதங்களில் வரும் 3 பவர்ஃபுல் கார்கள்; விலை, அம்சங்கள் என்ன.?
Chennai Power Cut: சென்னை மக்களே.! ஆகஸ்ட் 1-ம் தேதி நிறைய இடங்கள்ல பவர் கட் ஆகப் போகுது; தெரிஞ்சுட்டு பிளான் பண்ணுங்க
சென்னை மக்களே.! ஆகஸ்ட் 1-ம் தேதி நிறைய இடங்கள்ல பவர் கட் ஆகப் போகுது; தெரிஞ்சுட்டு பிளான் பண்ணுங்க
Embed widget