மேலும் அறிய

ஒரே நேரத்தில் அரசுப் பணி...தாயும் மகனும் அசத்தல்...வெற்றிக்கு காரணம் என்ன?

கேரளாவில் பெண் ஒருவரும் அவரது மகனும் ஒரே நேரத்தில் அரசு பணியில் சேரவிருப்பது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

கேரளாவில் பெண் ஒருவரும் அவரது மகனும் ஒரே நேரத்தில் அரசு பணியில் சேரவிருப்பது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. பிந்து தனது மகன் 10 ஆம் வகுப்பு படிக்கும் போது அவரை படிக்க ஊக்குவிப்பதற்காக புத்தகங்களைப் படிக்கத் தொடங்கினார். 

ஆனால் அது அவரை கேரள பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (PSC) தேர்வுகளுக்குத் தயாராவதற்கும் தூண்டியது. ஒன்பது ஆண்டுகளுக்குப் பின், பிந்துவும் அவரது மகனும் ஒன்றாக அரசுப் பணியில் சேர உள்ளனர். 42 வயதான பிந்து லாஸ்ட் கிரேடு சர்வண்ட்ஸ் (எல்ஜிஎஸ்) தேர்வில் 92ஆவது ரேங்க் பெற்று தேர்ச்சி பெற்றாலும், அவரது 24 வயது மகன் லோயர் டிவிஷனல் கிளார்க் (எல்டிசி) தேர்வில் 38வது ரேங்க் பெற்று தேர்ச்சி பெற்றது பெருமை அளிப்பதாக பிந்து தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார்.

தனது மகனைப் படிக்கத் தூண்டுவதற்காக படிக்க தொடங்கிய அவர், பின்னர் ஒரு பயிற்சி மையத்தில் சேர்ந்துள்ளார். தனது மகன் பட்டப்படிப்பு முடித்த பிறகு அதே பயிற்சி மையத்தில் அவரை சேர்த்துள்ளார்.

இதுகுறித்து விரிவாக பேசிய அவர், "இரண்டு முறை எல்ஜிஎஸ் தேர்வையும் ஒரு முறை என்டிசி தேர்வையும் எழுதிய பிறகு நான்காவது முறையாக வெற்றிபெற்றேன். உண்மையான இலக்கு ICDS (ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு சேவைகள் மேற்பார்வையாளர் தேர்வு). LGS தேர்வில் தேர்ச்சி பெற்றதை போனஸாகவே பார்கிறேன்" என்றார்.

அங்கன்வாடியில் கடந்த 10 ஆண்டுகளாக ஆசிரியராக பணியாற்றி வரும் பிந்து, "பயிற்சி மையத்தில் உள்ள ஆசிரியர்கள், நண்பர்கள் மற்றும் எனது மகன் ஊக்கம் அளித்தனர். ஆதரவாக இருந்தனர். PSC தேர்வில் தேர்ச்சி பெற மீண்டும் மீண்டும் முயற்சிகளை மேற்கொண்டேன்.

இதுகுறித்து பிந்துவின் மகன் கூறுகையில், "இருவரும் ஒன்றாகப் படிக்காத நிலையில், சில விஷயங்களைப் பற்றி விவாதிப்போம். நான் தனியாக படிப்பதையே விரும்புகிறேன். மேலும், அவர் எப்போதும் படிப்பதில்லை. நேரம் கிடைக்கும்போதும், அங்கன்வாடிப் பணிகளுக்குப் பிறகும் படிப்பார். நான் முன்பு ஒரு போலீஸ் தேர்வை எழுதியிருந்தேன். துணைப் பட்டியலிலும் எனது பெயர் வந்தது. இம்முறை எல்.டி.சி தேர்வுக்கு அதிகம் படித்தேன்" என்றார்.

தேர்வுக்கு எப்படி தயாரானேன் என்பது குறித்து விவரித்த பிந்து, "PSC தேர்வுக்கு தயாராகுபவர் எப்படி இருக்க வேண்டும், எப்படி இருக்கக்கூடாது என்பதற்கு நான் சிறந்த உதாரணம். அதாவது நான் தொடர்ந்து படிப்பதில்லை. தேர்வுத் தேதிக்கு ஆறு மாதங்களுக்கு முன்பே தேர்வுக்குத் தயாராகிவிடுகிறேன். மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு அடுத்த சுற்று தேர்வுகள் அறிவிக்கப்படும். அது வரை நான் ஓய்வு எடுத்துக்கொள்வேன்" என்றார்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

About the author சுதர்சன்

Rookie Journalist. Writes on National, International, Politics, Human rights and Judiciary. Covered 2019 General Election, Apex Court Ayodhya judgement, 2021 Five state election, Pegasus etc.  
Read More

தலைப்பு செய்திகள்

FCRA Bill: உங்க சந்தோஷம் தான் முக்கியம்..! DMK-விற்காக FCRA மசோதாவை தாமதப்படுத்த BJP முடிவு? காரணம் என்ன?
உங்க சந்தோஷம் தான் முக்கியம்..! DMK-விற்காக FCRA மசோதாவை தாமதப்படுத்த BJP முடிவு? காரணம் என்ன?
Students Protest : தேர்வை முழுமையாக ரத்து செய்யனும்.! இன்று சட்டமன்ற முற்றுகை உறுதி - ஜார்க்கண்டில் மாணவர்கள் அதிரடி அறிவிப்பு
தேர்வை முழுமையாக ரத்து செய்யனும்.! இன்று சட்டமன்ற முற்றுகை உறுதி - ஜார்க்கண்டில் மாணவர்கள் அதிரடி அறிவிப்பு
சபரிமலை பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு: கொள்முதல் நடைமுறையில் புதிய விதிகள்! விபரம் இதோ..
சபரிமலை பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு: கொள்முதல் நடைமுறையில் புதிய விதிகள்! விபரம் இதோ..
Independence Day 2026 Theme: எதிர்காலத்திற்கு உத்வேகம் அளிப்போம்.. 2026 சுதந்திர தினத்தின் தீம் என்ன?
Independence Day 2026 Theme: எதிர்காலத்திற்கு உத்வேகம் அளிப்போம்.. 2026 சுதந்திர தினத்தின் தீம் என்ன?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
விவசாயிகளுக்கு சட்டசபையில் ஜாக்பாட்.! நெல், கரும்புக்கு ஊக்கத்தொகை உயர்வு- முதலமைச்சர் விஜய் அறிவிப்பு
விவசாயிகளுக்கு சட்டசபையில் ஜாக்பாட்.! நெல், கரும்புக்கு ஊக்கத்தொகை உயர்வு- முதலமைச்சர் விஜய் அறிவிப்பு
'தமிழ் என்றால் கெத்து, தமிழ் என்றால் POWER' சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் கர்ஜனை
'தமிழ் என்றால் கெத்து, தமிழ் என்றால் POWER' சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் கர்ஜனை
இது தான் மாற்றமா.? லஞ்சம் வாங்கிய கணவனை நீக்கிட்டு மனைவிக்கு பொறுப்பு.! TVK- வை கிண்டல் செய்யும் நெட்டிசன்கள்
இது தான் மாற்றமா.? லஞ்சம் வாங்கிய கணவனை நீக்கிட்டு மனைவிக்கு பொறுப்பு.! TVK- வை கிண்டல் செய்யும் நெட்டிசன்கள்
FCRA Bill: உங்க சந்தோஷம் தான் முக்கியம்..! DMK-விற்காக FCRA மசோதாவை தாமதப்படுத்த BJP முடிவு? காரணம் என்ன?
உங்க சந்தோஷம் தான் முக்கியம்..! DMK-விற்காக FCRA மசோதாவை தாமதப்படுத்த BJP முடிவு? காரணம் என்ன?
ARR AMEEN CAR ACCIDENT : விபத்தில் சிக்கிய ஏ.ஆர்.ரகுமான் மகன் ஓட்டிய கார்.! சென்னையில் நள்ளிரவில் நடந்தது என்ன.?
விபத்தில் சிக்கிய ஏ.ஆர்.ரகுமான் மகன் ஓட்டிய கார்.! சென்னையில் நள்ளிரவில் நடந்தது என்ன.?
CM Vijay: தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்..! தனித்தீர்மானம் கொண்டு வரும் CM விஜய் - ஒருமனதாக நிறைவேறுமா?
தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்..! தனித்தீர்மானம் கொண்டு வரும் CM விஜய் - ஒருமனதாக நிறைவேறுமா?
Gold and silver rate today : வாரத்தின் முதல் நாளே நகைப்பிரியர்களுக்கு ஜாலி.! குறைந்தது தங்கம் விலை- இன்றைய விலை இதோ
வாரத்தின் முதல் நாளே நகைப்பிரியர்களுக்கு ஜாலி.! குறைந்தது தங்கம் விலை- இன்றைய விலை இதோ
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
Embed widget