மேலும் அறிய

Sabarimala: சபரிமலையில் விரதமிருந்து சாமி தரிசனம் செய்த பாதிரியார்.. கடைசியில் நடந்த எதிர்பாராத திருப்பம்..!

கிறிஸ்தவ பாதிரியார் ஒருவர் 41 நாட்கள் விரதமிருந்து சபரிமலை ஐயப்பன் கோயிலில் தரிசனம் செய்த சம்பவம் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. 

கிறிஸ்தவ பாதிரியார் ஒருவர் 41 நாட்கள் விரதமிருந்து சபரிமலை ஐயப்பன் கோயிலில் தரிசனம் செய்த சம்பவம் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. 

கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயில் உலக பிரசித்தி பெற்றது. இந்த கோயிலில் அனைத்து வயதினருடைய ஆண்களும், 10 வயதுக்குட்பட்ட சிறுமிகளும், 50 வயதுக்கு மேற்பட்ட பெண்களும் தரிசனம் செய்ய வேண்டும் என்பது ஐதீகம். என்னதான் நீதிமன்றம் அனைத்து வயது பெண்களும் சபரிமலைக்கு செல்லலாம் என தெரிவித்தாலும் மக்களிடையே பெரும்பாலும் பழைய ஐதீகமே தொடர்கிறது. இப்படியான நிலையில் ஐயப்பனுக்கு கார்த்திகை - மார்கழி மாதம் தான் உகந்தது என்றாலும் ஒவ்வொரு தமிழ் மாதமும் குறிப்பிட்ட சில நாட்கள் சாமி தரிசம் செய்ய பக்தர்கள் கூட்டம் அலைமோதும்.

அந்த வகையில்  புரட்டாசி மாத பூஜைக்காக கடந்த செப்டம்பர் 17 ஆம் தேதி  சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடை திறக்கப்பட்டது.இந்நிகழ்வில் தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி ஜெயராமன் நம்பூதிரி நடையை திறந்து வைத்தார். இரவு வழக்கம் போல் 10.30 மணிக்கு நடை அடைக்கப்பட்டது. வழக்கம் போல் ஆன்லைன் முன்பதிவு அடிப்படையிலேயே பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வரும் நிலையில்,  முன்பதிவு செய்யாதவர்களும் சாமி  தரிசனம் செய்யும் வகையில் உடனடி முன்பதிவு செய்யும் ஏற்பாடுகள் நிலக்கல், பம்பையில் செய்யப்பட்டிந்தது.

எனவே வழக்கம்போல ஆயிரக்கணக்கான பக்தர்கள் மழையும் பொருட்படுத்தாமல் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.இந்நிலையில் சபரிமலையில் கிறிஸ்தவ பாதிரியார் சாமி தரிசனம் செய்த நிகழ்வு பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. திருவனந்தபுரம் மாவட்டம் பாலராமபுரம் அருகே உள்ள உச்சக்கடை பகுதியைச் சேர்ந்தவர் மனோஜ்.  இவர் ஆங்கிலிக்கன் (Anglican) சபை பாதிரியாராக உள்ளார்.  மனோஜ் தற்போது பெங்களூருவில் பணியாற்றி வரும் நிலையில் அவருக்கு சபரிமலை ஐயப்பன் மீது ஈர்ப்பு ஏற்பட்டு சாமி தரிசனம் செய்ய முடிவு செய்துள்ளார். 

இதற்காக 41 நாட்கள் விரதம் இருந்து இருமுடி கட்டி கோயில் செல்ல எண்ணினார். அதன்படி திருவனந்தபுரம் பகுதியில் உள்ள திருமலை மகாதேவர் கோயிலில் இருமுடி கட்டினார். அவருடன் 5 பேர் கொண்ட குழுவும் இணைந்தனர். தொடர்ந்து நடைபயணம் மேற்கொண்டு சாமி தரிசனம் செய்ய வந்த அவருக்கு பாதிரியார் மனோஜுக்கு திருவிதாங்கூர் தேவசம்போர்டு சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மேல்சாந்தி ஜெயராமன் நம்பூதிரி, மாளிகைப்புரம் கோவில் மேல்சாந்தி ஹரிஹரன் நம்பூதிரி ஆகியோர் அவருக்கு பொன்னாடை அணிவித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். 

இதனைத் தொடர்ந்து செய்தியார்களை சந்தித்த பாதிரியார் மனோஜ், ‘இந்து மதம் குறித்து ஆழமாக தெரிந்து கொள்வது மட்டுமே எனது நோக்கம். மதம் மாறும் எண்ணம் இல்லை. இந்த சபரிமலை பயணம் என் மனதுக்கு மிகவும் இனிமையாக அமைந்தது’ என தெரிவித்தார்.  இதற்கிடையில் சபரிமலைக்கு சென்ற பாதிரியார் மனோஜ் மீது ஆங்கிலிக்கன் சபை நடவடிக்கை எடுத்துள்ளது. அவர் தேவாலயத்தில் திருப்பலி உள்ளிட்ட எந்த சடங்குகளையும் நடத்தக்கூடாது என தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் அவரின் அடையாள அட்டையும் திரும்ப பெறப்பட்டுள்ளது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

தஞ்சை கூலித்தொழிலாளி மகளின் மருத்துவக் கனவு நனவாகுமா? அரசு உதவிக்கரம் நீட்டுமா?
தஞ்சை கூலித்தொழிலாளி மகளின் மருத்துவக் கனவு நனவாகுமா? அரசு உதவிக்கரம் நீட்டுமா?
Udhayanithi Stalin: முதல் முறையாக மதுரை வரும் துணை முதல்வர்: மு.க.அழகிரி இல்லம் செல்வாரா?
Udhayanithi Stalin: முதல் முறையாக மதுரை வரும் துணை முதல்வர்: மு.க.அழகிரி இல்லம் செல்வாரா?
TN ALERT App: அடி தூள்.. இனி வானிலை முன்னெச்சரிக்கைகளை போனிலேயே பெறலாம்; அரசு அசத்தல் அறிவிப்பு- விவரம்
TN ALERT App: அடி தூள்.. இனி வானிலை முன்னெச்சரிக்கைகளை போனிலேயே பெறலாம்; அரசு அசத்தல் அறிவிப்பு- விவரம்
Dadasaheb Phalke Award: திரைத்துறையின் உயரிய கவுரவம்..! பிரபல நடிகருக்கு தாதா சாகேப் பால்கே விருது அறிவிப்பு
Dadasaheb Phalke Award: திரைத்துறையின் உயரிய கவுரவம்..! பிரபல நடிகருக்கு தாதா சாகேப் பால்கே விருது அறிவிப்பு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Dindigul Rowdy Murder : பிரபல ரவுடி வெட்டிக்கொலை!திமுக பிரமுகர் கொலையில் தொடர்பு?Mallikarjun Kharge Fainted : மயங்கி விழுந்த கார்கே!Genjee KS Masthan | ஓரம் கட்டப்பட்ட செஞ்சி மஸ்தான்.. பொன்முடி காரணமா? ஸ்டாலினின் ட்விஸ்ட் மூவ்Udhayanidhi Stalin Journey |  பாஜகவை அலறவிட்ட கலைஞர் பேரன்MLA.,அமைச்சர் to துணை முதல்வர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தஞ்சை கூலித்தொழிலாளி மகளின் மருத்துவக் கனவு நனவாகுமா? அரசு உதவிக்கரம் நீட்டுமா?
தஞ்சை கூலித்தொழிலாளி மகளின் மருத்துவக் கனவு நனவாகுமா? அரசு உதவிக்கரம் நீட்டுமா?
Udhayanithi Stalin: முதல் முறையாக மதுரை வரும் துணை முதல்வர்: மு.க.அழகிரி இல்லம் செல்வாரா?
Udhayanithi Stalin: முதல் முறையாக மதுரை வரும் துணை முதல்வர்: மு.க.அழகிரி இல்லம் செல்வாரா?
TN ALERT App: அடி தூள்.. இனி வானிலை முன்னெச்சரிக்கைகளை போனிலேயே பெறலாம்; அரசு அசத்தல் அறிவிப்பு- விவரம்
TN ALERT App: அடி தூள்.. இனி வானிலை முன்னெச்சரிக்கைகளை போனிலேயே பெறலாம்; அரசு அசத்தல் அறிவிப்பு- விவரம்
Dadasaheb Phalke Award: திரைத்துறையின் உயரிய கவுரவம்..! பிரபல நடிகருக்கு தாதா சாகேப் பால்கே விருது அறிவிப்பு
Dadasaheb Phalke Award: திரைத்துறையின் உயரிய கவுரவம்..! பிரபல நடிகருக்கு தாதா சாகேப் பால்கே விருது அறிவிப்பு
Nepal Flood: நேபாள வெள்ளப்பெருக்கு - கொத்து கொத்தாக சடலங்கள் - 170-ஐ தாண்டிய உயிரிழப்பு - மீட்பு பணி தீவிரம்
Nepal Flood: நேபாள வெள்ளப்பெருக்கு - கொத்து கொத்தாக சடலங்கள் - 170-ஐ தாண்டிய உயிரிழப்பு - மீட்பு பணி தீவிரம்
Breaking News LIVE 30th SEP 2024: 9 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - எங்கெல்லாம் தெரியுமா?
Breaking News LIVE 30th SEP 2024: 9 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - எங்கெல்லாம் தெரியுமா?
IND vs BAN 2nd Test: இந்தியா - வங்கதேசம் 2வது டெஸ்ட் - 4வது நாள் ஆட்டத்திலும் மழையா? டெஸ்ட் சாம்பியன்ஷிப் கணக்கு
IND vs BAN 2nd Test: இந்தியா - வங்கதேசம் 2வது டெஸ்ட் - 4வது நாள் ஆட்டத்திலும் மழையா? டெஸ்ட் சாம்பியன்ஷிப் கணக்கு
Must Visit Temples: தென்னிந்தியாவில் கட்டாயம் பார்க்க வேண்டிய 5 திருத்தலங்கள் - லிஸ்ட் இதோ, உங்க ஃபேவரட் எது?
Must Visit Temples: தென்னிந்தியாவில் கட்டாயம் பார்க்க வேண்டிய 5 திருத்தலங்கள் - லிஸ்ட் இதோ, உங்க ஃபேவரட் எது?
Embed widget