மேலும் அறிய

UCC: பொது சிவில் சட்டத்திற்கு எதிராக தீர்மானம்.. மிசோரமை தொடர்ந்து கேரள அரசு அதிரடி

பொது சிவில் சட்டத்திற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், மிசோரமை தொடர்ந்து கேரள சட்டப்பேரவையில் அதற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

சமீப காலமாக, பொது சிவில் சட்டம் தொடர் பேசுபொருளாக மாறி வருகிறது. அதற்கு முக்கிய காரணம், பொது சிவில் சட்டம் தொடர்பாக பிரதமர் மோடி தெரிவித்த கருத்து. கடந்த மாதம், மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் பாஜக சார்பில் நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் பொது சிவில் சட்டம் குறித்து பேசிய பிரதமர் மோடி, "இந்தியாவுக்கு பொது சிவில் சட்டம் தேவைப்படுகிறது. வெவ்வேறு சமூகங்களுக்கு தனி சட்டங்கள் என்ற இரட்டை அமைப்புடன் நாடு இயங்க முடியாது" என்றார்.

நடைமுறைக்கு வருகிறதா பொது சிவில் சட்டம்?

இந்த பேச்சின் மூலம் பொது சிவில் சட்டத்தை கொண்டு வர மத்திய அரசு முயற்சி எடுத்து வருவது தெளிவாகிறது. இதற்கு, திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. சட்ட ஆணையத்தின் தலைவருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், திமுக சார்பில் அதன் பொதுச்செயலாளர் துரைமுருகனும் கடிதம் எழுதியிருந்தனர்.

பொது சிவில் சட்டத்திற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், மிசோரமை தொடர்ந்து கேரள சட்டப்பேரவையில் அதற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பொது சிவில் சட்டத்தை அமல்படுத்தக் கூடாது என மத்திய பாஜக அரசை கேரள மாநில அரசு கேட்டு கொண்டுள்ளது.  

கடந்த பிப்ரவரி மாதம்தான், மிசோரமில் பொது சிவில் சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதை தொடர்ந்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான கேரள அரசும், தீர்மானத்தை ஒருமனதாக நிறைவேற்றியுள்ளது. இந்த தீர்மானத்திற்கு பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் ஆதரவு தெரிவித்துள்ளது.

கேரள அரசு எடுத்த அதிரடி முடிவு:

கேரள சட்டப்பேரவை அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் கொண்டு வந்த தீர்மானத்திற்கு வரவேற்பு தெரிவித்த காங்கிரஸ், சில திருத்தங்களை பரிந்துரைத்தது. இதை தொடர்ந்து, திருத்தப்பட்ட தீர்மானம் இறுதியாக நிறைவேற்றுப்பட்டது. அப்போது பேசிய பினராயி விஜயன், "சங்பரிவார் திட்டத்தின்படி கொண்டி வரப்பட்ட பொது சிவில் சட்டம் அரசியலமைப்புச் சட்டத்தின்படி இல்லை. 

மாறாக அது இந்து சட்ட நூலான 'மனுஸ்மிருதி'யை அடிப்படையாகக் கொண்டுள்ளது. இதை சங்பரிவாரம் வெகு காலத்திற்கு முன்பே தெளிவாக்கியுள்ளது. அரசியலமைப்புச் சட்டத்தில் உள்ள ஒன்றைச் செயல்படுத்த அவர்கள் முயற்சிக்கவில்லை. அப்படித் தவறாகப் புரிந்து கொள்ளத் தேவையில்லை.

முஸ்லீம் தனிநபர் சட்டத்தின் கீழ் மட்டுமே விவாகரத்தை மத்தியில் ஆளும் பாஜக அரசு குற்றமாக்கியுள்ளது. ஆனால், பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவோ அல்லது ஒதுக்கப்பட்டவர்களின் நலனுக்காக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. நாட்டின் மதச்சார்பற்ற தன்மையை பறிக்கும் ஒருதலைப்பட்சமான அவசரமான முடிவு என்பதால், பொது சிவில் சட்டத்தை திணிக்கும் மத்திய அரசின் நடவடிக்கையால் மாநில சட்டசபை கவலையும் அதிர்ச்சியும் அடைந்துள்ளது.

அரசியலமைப்பின் 25 வது பிரிவின் கீழ் மத சுதந்திரத்திற்கு உத்தரவாதம் அளிக்கப்பட்டு, தனிப்பட்ட மத விதிகளைப் பின்பற்றுவதற்கும், நடைமுறைப்படுத்துவதற்கும் உள்ள உரிமையை உள்ளடக்கியிருந்தால், அதைத் தடைசெய்யும் எந்தவொரு சட்டமும் அரசியலமைப்பு உரிமையை மீறும் செயலாகும்" என்றார்.

About the author சுதர்சன்

Rookie Journalist. Writes on National, International, Politics, Human rights and Judiciary. Covered 2019 General Election, Apex Court Ayodhya judgement, 2021 Five state election, Pegasus etc.  
Read More

தலைப்பு செய்திகள்

BJP: மேஜிக் நம்பரை எட்டும் பாஜக..! திமுகவின் நிலைப்பாடு என்ன? அரசியலமைப்பு சட்ட திருத்த மசோதாக்கள்
மேஜிக் நம்பரை எட்டும் பாஜக..! திமுகவின் நிலைப்பாடு என்ன? அரசியலமைப்பு சட்ட திருத்த மசோதாக்கள்
தூத்துக்குடி ITI: சிறந்த வேலைவாய்ப்புடன் தொழிற்பயிற்சி! ஜூலை 31 வரை விண்ணப்பிக்கலாம்!
தூத்துக்குடி ITI: சிறந்த வேலைவாய்ப்புடன் தொழிற்பயிற்சி! ஜூலை 31 வரை விண்ணப்பிக்கலாம்!
EPFO-வின் பொது மன்னிப்பு திட்டம்: பிஎஃப் நிறுவனங்களுக்கு அபராதம் இன்றி ஒரு அரிய வாய்ப்பு!
EPFO-வின் பொது மன்னிப்பு திட்டம்: பிஎஃப் நிறுவனங்களுக்கு அபராதம் இன்றி ஒரு அரிய வாய்ப்பு!
PF கணக்குதாரர்களுக்கு நல்ல செய்தி! 8.25% வட்டி ஜூலை 15-க்குள் வரவு!
PF கணக்குதாரர்களுக்கு நல்ல செய்தி! 8.25% வட்டி ஜூலை 15-க்குள் வரவு!

வீடியோ

விசாரணை கைதி மரணம் ”அடிச்சே கொன்னுட்டாங்க” பகீர் கிளப்பும் குடும்பத்தினர்
மீண்டும் கொத்தடிமை முறை துப்புரவு பணியாளர்களுக்கு அநீதி சேலத்தில் அரங்கேறிய அவலம்
’’கேரளா காருக்கு NO ENTRY அரசு பஸ் போகலாம்’’ அத்துமீறிய TRAFFIC POLICE?
CM Vijay : சிங்கப்பூராக மாறும் பெரம்பூர்!1000 கோடியில் மெகா திட்டம்..கீரின் சிக்னல் கொடுத்த CM விஜய்
Farmers beat Officers | அதிகாரிகளை துடைப்பத்தை வைத்து அடித்த விவசாயிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
E.V. Velu lookout notice : அப்பாடா.! நிம்மதி அடைந்த எ.வ.வேலு... தவெக அரசுக்கு ஷாக் கொடுத்த உச்சநீதிமன்றம்- நடந்தது என்ன.?
அப்பாடா.! நிம்மதி அடைந்த எ.வ.வேலு... தவெக அரசுக்கு ஷாக் கொடுத்த உச்சநீதிமன்றம்- நடந்தது என்ன.?
IIT Madras: ஒன்றாகப் பட்டம் பெற்ற தாய், மகன்- ஐஐடி சென்னை பட்டமளிப்பு விழாவில் ருசிகரம்!
IIT Madras: ஒன்றாகப் பட்டம் பெற்ற தாய், மகன்- ஐஐடி சென்னை பட்டமளிப்பு விழாவில் ருசிகரம்!
’’உங்க விஜய் ஆட்சி’’ அரசு அலுவலகங்களில் லஞ்சமா? புகார் அளிக்க வாட்ஸப் எண் அறிமுகம்
’’உங்க விஜய் ஆட்சி’’ அரசு அலுவலகங்களில் லஞ்சமா? புகார் அளிக்க வாட்ஸப் எண் அறிமுகம்
‘வரலாறு தெரியாமல் நீக்கம்’ சமூக நீதி துறை பெயருக்கு திமுக கடும் எதிர்ப்பு..!
‘வரலாறு தெரியாமல் நீக்கம்’ சமூக நீதி துறை பெயருக்கு திமுக கடும் எதிர்ப்பு..!
நாகர்கோவில் சிறையில் மாற்றுத்திறனாளி படுகொலை: சிபிஐ விசாரணைக்கு அன்புமணி வலியுறுத்தல்!
நாகர்கோவில் சிறையில் மாற்றுத்திறனாளி படுகொலை: சிபிஐ விசாரணைக்கு அன்புமணி வலியுறுத்தல்!
TTV Dhinakaran :
"தொட்டால் விடமாட்டேன்" சொன்ன விஜய்.! சொந்தக் கட்சி ஊழல்வாதிய என்ன செய்யப்போறீங்க.? டிடிவி கேள்வி
Gold rate today : மீண்டும் உயர்ந்தது தங்கம், வெள்ளி விலை.! இன்றைய விலை நிலவரம் என்ன தெரியுமா.?
மீண்டும் உயர்ந்தது தங்கம், வெள்ளி விலை.! இன்றைய விலை நிலவரம் என்ன தெரியுமா.?
RB Udhayakumar: தவெகவில் இணையும் அதிமுகவினர்.. விஜயால் வயிறு எரிவதாக ஆர்.பி.உதயகுமார் ஆவேசம்!
RB Udhayakumar: தவெகவில் இணையும் அதிமுகவினர்.. விஜயால் வயிறு எரிவதாக ஆர்.பி.உதயகுமார் ஆவேசம்!
Embed widget