மேலும் அறிய

Karnataka: ”வாங்கிய கடனை திருப்பி கொடுங்கள்” - காபி தோட்டத்தில் அடைத்து வைக்கப்பட்ட பட்டியலின தொழிலாளர்கள்

கர்நாடகாவில் தலித் தொழிலாளர்கள் 16 பேர் தாக்கப்பட்டு, சிக்கமகளூரு காபி எஸ்டேட்டில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.

Karnataka: 16 dalit workers locked: கர்நாடகாவில் தலித் தொழிலாளர்கள் 16 பேர் தாக்கப்பட்டு, சிக்கமகளூரு காபி எஸ்டேட்டில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.

கர்நாடகா: கடனை வசூலிப்பது தொடர்பாக காபி எஸ்டேட் உரிமையாளரும் அவரது மகனும் பட்டியலினத்  தொழிலாளர்கள் 16 பேரை  அக்டோபர் 8 ஆம் தேதி சிக்கமகளூரு மாவட்டத்தில் உள்ள ஹுசனேஹள்ளியில்  தாக்கி அவர்களது வீட்டில் அடைத்து வைத்ததாக கூறப்படுகிறது.

NDTV இன் செய்தியின்படி, இந்த சம்பவம் தொடர்பாக அர்பிதா என்ற பெண் ஒருவர் அளித்த புகாரில் காபி எஸ்டேட் உரிமையாளர் ஜெகதீஷ் கவுடா மற்றும் அவரது மகன் திலக் ஆகியோர் மீது, எஸ்சி-எஸ்டி வன்கொடுமைச் சட்டம் 2015ன் கீழ் பாலேஹொன்னூர் காவல் நிலையத்தில் அக்டோபர் 11ஆம் தேதி வழக்குப் பதிவு செய்யப்பட்டது. 

இந்த தோட்டத்தில் கடந்த மூன்று மாதங்களாக ஆறு பட்டியலின குடும்பங்கள் வேலை செய்து வந்தனர். அவர்கள் எஸ்டேட்டில் உள்ள தொழிலாளர்கள் காலனியில் தங்கியிருந்தனர். அக்கம்பக்கத்தினருடன் ஏற்பட்ட தகராறில், 15 நாட்களுக்கு முன்பு, தொழிலாளர்களில் ஒருவரை உரிமையாளர் தாக்கியதாக கூறப்படுகிறது. இது தொழிலாளர்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியிருந்தது. இதனால் அந்த எஸ்டேட்டில் வேலை செய்ய வேண்டாம் என்ற தொழிலாளர்கள் முடிவு எடுத்தனர். ஆனால் தன்னிடம் வாங்கிய பணத்தை திருப்பிக் கொடுத்த பின்பு தான் இடத்தை விட்டுச் வெளியே  செல்ல முடியும் என்று காபி எஸ்டேட்  உரிமையாளர் கூறியிருந்ததாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் பணத்தை திருப்பி தராததாக தொழிலாளர்கள் 16 பேரை திட்டியதுடன் செல்போன்களையும் பறித்ததாக கூறப்படுகிறது. மேலும் செல்போன்களை தர மறுத்த ஒரு பெண் உட்பட 3 பேரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் தாக்கப்பட்ட கர்ப்பிணி சிக்கமகளூரு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். பின்பு அந்த பெண் தனது குழந்தையை இழந்ததாக சொல்லப்படுகிறது. சிக்கமகளூரு காபி எஸ்டேட்டிற்கு காவல்துறை சென்று விசாரணை நடத்தினர். இதனை அடுத்து  அடைக்கப்பட்டிருந்த தொழிலாளர்களை காவல்துறை அதிகாரிகள் மீட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

எஸ்டேட் உரிமையாளர்  ஜெகதீஷிடம் தொழிலாளர்கள் கடன் வாங்கியுள்ளனர். ரூபாய் 9 லட்சம் கடனை திருப்பி செலுத்தாததால் 16 பட்டியலின மக்கள் அடைத்துவைக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். அவர்கள் அனைவரும் ஜெனுகத்தே கிராமத்தில் உள்ள காபி தோட்டத்தில் தினக்கூலி தொழிலாளர்களாக பணிபுரிந்து வந்ததாகவும் தெரிவித்தனர்.

மேலும் காண
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Minister Mano Thangaraj: ஆவின் ஊழியர்களுக்கு  போனஸ்... மாடு வாங்க கடன்! ஏபிபி நிகழ்வில் ஸ்வீட் செய்தி சொன்ன அமைச்சர் மனோ தங்கராஜ்
Minister Mano Thangaraj: ஆவின் ஊழியர்களுக்கு போனஸ்... மாடு வாங்க கடன்! ஏபிபி நிகழ்வில் ஸ்வீட் செய்தி சொன்ன அமைச்சர் மனோ தங்கராஜ்
Impact Makers Conclave: ரூ.1000-க்கு கரண்ட் யூஸ் பண்றதுக்கு, எவ்ளோ கார்பன் உமிழ்வு ஏற்படுது தெரியுமா.? அதிர்ச்சித் தகவல்
ரூ.1000-க்கு கரண்ட் யூஸ் பண்றதுக்கு, எவ்ளோ கார்பன் உமிழ்வு ஏற்படுது தெரியுமா.? அதிர்ச்சித் தகவல்
Impact Makers Conclave LIVE: சாதி என்பது அசிங்கம் - அமைச்சர் மனோதங்கராஜ்
Impact Makers Conclave LIVE: சாதி என்பது அசிங்கம் - அமைச்சர் மனோதங்கராஜ்
Thangam Tennarasu on Election: “எட்ட முடியாத இலக்கு அல்ல“ 200 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் - அமைச்சர் தங்கம் தென்னரசு உறுதி
“எட்ட முடியாத இலக்கு அல்ல“ 200 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் - அமைச்சர் தங்கம் தென்னரசு உறுதி
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Shiva Rajkumar | Kamalhaasan vs Vaiko : வைகோ OUTகமல்ஹாசன் IN திமுக அதிரடி முடிவுஅமைச்சரை தடுத்து நிறுத்திய நபர் அதிர்ந்த கோவி. செழியன் மயிலாடுதுறையில் பரபரப்பு | Govi Chezhiaanமாமன் மச்சான் தகராறு மச்சானை கொன்ற மர்மநபர்கள் ஓட ஓட வெட்டிய CCTV காட்சி | Jolarpettai Murder | Family Fight

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Minister Mano Thangaraj: ஆவின் ஊழியர்களுக்கு  போனஸ்... மாடு வாங்க கடன்! ஏபிபி நிகழ்வில் ஸ்வீட் செய்தி சொன்ன அமைச்சர் மனோ தங்கராஜ்
Minister Mano Thangaraj: ஆவின் ஊழியர்களுக்கு போனஸ்... மாடு வாங்க கடன்! ஏபிபி நிகழ்வில் ஸ்வீட் செய்தி சொன்ன அமைச்சர் மனோ தங்கராஜ்
Impact Makers Conclave: ரூ.1000-க்கு கரண்ட் யூஸ் பண்றதுக்கு, எவ்ளோ கார்பன் உமிழ்வு ஏற்படுது தெரியுமா.? அதிர்ச்சித் தகவல்
ரூ.1000-க்கு கரண்ட் யூஸ் பண்றதுக்கு, எவ்ளோ கார்பன் உமிழ்வு ஏற்படுது தெரியுமா.? அதிர்ச்சித் தகவல்
Impact Makers Conclave LIVE: சாதி என்பது அசிங்கம் - அமைச்சர் மனோதங்கராஜ்
Impact Makers Conclave LIVE: சாதி என்பது அசிங்கம் - அமைச்சர் மனோதங்கராஜ்
Thangam Tennarasu on Election: “எட்ட முடியாத இலக்கு அல்ல“ 200 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் - அமைச்சர் தங்கம் தென்னரசு உறுதி
“எட்ட முடியாத இலக்கு அல்ல“ 200 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் - அமைச்சர் தங்கம் தென்னரசு உறுதி
TVK Vijay: ”வண்டி வண்டிய கொண்டு வந்து கொட்ட போறாங்க..” தவெக தலைவர் விஜய் சொன்னது என்ன?
TVK Vijay: ”வண்டி வண்டிய கொண்டு வந்து கொட்ட போறாங்க..” தவெக தலைவர் விஜய் சொன்னது என்ன?
Anbumani Ramadoss PMK: தனிமரமாகும் ராமதாஸ்? பாஜக ஆசி, பாமகவை கைப்பற்றும் அன்புமணி? வடநாட்டு ஃபார்முலா
Anbumani Ramadoss PMK: தனிமரமாகும் ராமதாஸ்? பாஜக ஆசி, பாமகவை கைப்பற்றும் அன்புமணி? வடநாட்டு ஃபார்முலா
தமிழ்நாட்டில் புதியதாக 4 கல்லூரிகள் - மொத்தம் 180, எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா? - அரசு அறிவிப்பு
தமிழ்நாட்டில் புதியதாக 4 கல்லூரிகள் - மொத்தம் 180, எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா? - அரசு அறிவிப்பு
Operation Sindoor: பிரம்மோஸ் தாக்கியது உண்மை தான்! பகிரங்கமாக ஒப்புக்கொண்ட பாகிஸ்தான்
Operation Sindoor: பிரம்மோஸ் தாக்கியது உண்மை தான்! பகிரங்கமாக ஒப்புக்கொண்ட பாகிஸ்தான்
Embed widget