மேலும் அறிய

West Bengal Train Accident: ”ரயில்வேயை நாசமாக்கிய மோடி” - எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் - அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் பதவி விலகல்?

West Bengal Train Accidernt: மோடி தலைமையிலான அரசு ரயில்வேதுறையை நாசமாக்கி விட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.

West Bengal Train Accidernt: மேற்குவங்க ரயில் விபத்திற்கு பொறுப்பேற்று ரயில்வே அமைச்சர் அஷ்விணி வைஷ்ணவ் பதவி விலக எதிர்க்கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனர்.

மேற்குவங்க ரயில் விபத்து:

ஒடிசாவில் பாலசோர் ரயில் விபத்து நடந்து சரியாக ஒரு வருடம் கழித்து, மேற்கு வங்காளத்தின் டார்ஜிலிங்கில் கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் மீது சரக்கு ரயிலில் மோதியதால் இந்தியா மற்றொரு பெரிய ரயில் விபத்தை எதிர்கொண்டது. ரங்கபாணி ரயில் நிலையம் அருகே காலை 8.45 மணியளவில் இந்த விபத்து ஏற்பட்டது. சீல்டா செல்லும் கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ்  மீது, சரக்கு ரயிலில் மோதியதில் அதன் ஓட்டுநர் உட்பட 15 பேர் உயிரிழந்தனர். விபத்தில் குறைந்தது 30 பேர் காயமடைந்துள்ளனர். விபத்து தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசையும், ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவையும் எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

ரயில்வே துறையை நாசமாக்கிய மோடி - காங்கிரஸ் 

காங்கிரஸ் ராஜ்யசபா எம்.பி பிரமோத் திவாரி விபத்து பற்றி கூறுகையில், "ரயில்வே பாதுகாப்பில் அரசு கவனம் செலுத்தவில்லை என்பதையே விபத்துகள் காட்டுகின்றன. தார்மீக அடிப்படையில் ரயில்வே அமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும்" என்றார். விபத்தில் காயமடைந்த பயணிகள் விரைவில் குணமடைய வாழ்த்து தெரிவித்துள்ள காங்கிரஸ், பிரதமர் மோடி ரயில்வேயை சீரழித்து விட்டார் என்று குற்றம்சாட்டியுள்ளது. காங்கிரஸ் தலைவர் பவன் கேரா பேசுகையில், “இந்த காட்சிகள் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் விபத்தை நமக்கு நினைவூட்டுகின்றன. கடந்த 7-8 ஆண்டுகளில் ரயில்வே எப்படி சீரழிந்துள்ளது என்பதை இது காட்டுகிறது. ரயில்வே தொடர்பாக விசித்திரமான கொள்கையை எடுக்க அரசு முடிவு செய்துள்ளது. முன்னதாக ரயில்வே பட்ஜெட் தனியாக இருந்தது, இப்போது அது நிறுத்தப்பட்டுள்ளது. ஒரு சில வந்தே பாரத் ரயில்களை இயக்குவதால் ரயில்வேயின் தரத்தை உயர்த்த முடியாது. பயணிகளின் நிலை ரயில்வேயின் மோசமான நிலையை நமக்கு காட்டுகிறது” என பேசியுள்ளார்.

மம்த பானர்ஜி ஆவேசம்:

விபத்து தொடர்பாக பேசிய மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, “ரயில்வே துறை ஒட்டுமொத்தமாக அலட்சியமாக செயல்படுகிறது. நான் ரயில்வே அமைச்சராக இருந்தபோது  பல விஷயங்களைத் தொடங்கினேன். ஆனால் அவர்கள் வந்தே பாரத் ரயில்களுக்கு மட்டும் விளம்பரம் செய்கிறார்கள். துரந்தோ எக்ஸ்பிரஸ் எங்கே? ராஜ்தானி எக்ஸ்பிரஸுக்குப் பிறகு, துரந்தோ அதிவேகமான ரயிலாக இருந்தது. நான் ரயில்வே அமைச்சராக இருந்தபோது, ​​2-3 பெரிய ரயில் விபத்துகளைப் பார்த்தேன். அதன் பிறகு விபத்துகளை தடுப்பதற்கான சாதனங்கள் நிறுவப்பட்டதன் விளைவாக ரயில்களின் மோதல் நிறுத்தப்பட்டது. ஆனால்,  இன்று ரயில்வேயில் என்ன நடக்கிறது என்பது யாருக்கும் தெரியாது. ரயில்வே அமைச்சகத்தில் பல சிக்கல்கள் உள்ளன. தனி ரயில்வே பட்ஜெட் நிறுத்தப்பட்டு, அந்த துறைக்கு இப்போது போதிய முக்கியத்துவம் கிடைக்கவில்லை” என ஆவேசமாக பேசியுள்ளார்.

விபத்துக்கு யார் பொறுப்பு?

ஆர்ஜேடி தலைவர் பாய் வீரேந்திரா பேசுகையில், "ரயில்வே துறையை தனியார் மயமாக்கிய நாட்டில் விபத்துகள் நிச்சயம் நடக்கும். முன்பு காங்கிரஸ், ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் விபத்துகள் ஏற்படும் போது அமைச்சர்கள் ராஜினாமா செய்தார்கள். இப்போது இவ்வளவு பெரிய விபத்துகளுக்குப் பிறகு எந்த அமைச்சரும் ராஜினாமா செய்வதில்லை. இந்த அரசாங்கத்தின் மீது எங்களுக்கு எந்த நம்பிக்கையும் இல்லை. இந்த அரசாங்கமே இந்த விஷயங்களுக்கு பொறுப்பான ஒரு கும்பல்” என தெரிவித்துள்ளார். 

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Seeman: இடைநிலை ஆசிரியர்களுக்கும் சம ஊதியத்திற்கு அரசாணை வெளியிட வேண்டும் - சீமான் வலியுறுத்தல்
Seeman: இடைநிலை ஆசிரியர்களுக்கும் சம ஊதியத்திற்கு அரசாணை வெளியிட வேண்டும் - சீமான் வலியுறுத்தல்
தமிழகத்தில் கால் வைக்கும் முன் விஜய்க்கு கை கொடுத்த ராகுல் காந்தி.! ஷாக்காகி நிற்கும் திமுக
தமிழகத்தில் கால் வைக்கும் முன் விஜய்க்கு கை கொடுத்த ராகுல் காந்தி.! ஷாக்காகி நிற்கும் திமுக
பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி: பணி நிரந்தரம் கோரி போராட்டம்! அதிர்ச்சியில் ஆசிரியர்கள்
பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி: பணி நிரந்தரம் கோரி போராட்டம்! அதிர்ச்சியில் ஆசிரியர்கள்
Iran Warns America: அமெரிக்காவை எச்சரித்த ஈரான் உச்ச தலைவர்; அமெரிக்கர்கள் வெளியேற ட்ரம்ப் உத்தரவு; வெடிக்குமா போர்.?
அமெரிக்காவை எச்சரித்த ஈரான் உச்ச தலைவர்; அமெரிக்கர்கள் வெளியேற ட்ரம்ப் உத்தரவு; வெடிக்குமா போர்.?
ABP Premium

வீடியோ

H.ராஜா ARREST! போலீசாருடன் வாக்குவாதம்! ”உங்க வண்டில ஏன் ஏறணும்”
ஆட்சியில் பங்கு பஞ்சாயத்து! தமிழ்நாடு வரும் ராகுல்! நிர்வாகிகளுடன் MEETING
Vijay in CBI Office | டெல்லி சென்ற விஜய் திக்திக் CBI விசாரணை உச்சக்கட்ட பரபரப்பில் தவெகவினர் | TVK | Karur Stampede
Annamalai 2026 election | அரவக்குறிச்சிக்கு NO! தொகுதி மாறும் அண்ணாமலை? பாஜகவின் கொங்கு கணக்கு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Seeman: இடைநிலை ஆசிரியர்களுக்கும் சம ஊதியத்திற்கு அரசாணை வெளியிட வேண்டும் - சீமான் வலியுறுத்தல்
Seeman: இடைநிலை ஆசிரியர்களுக்கும் சம ஊதியத்திற்கு அரசாணை வெளியிட வேண்டும் - சீமான் வலியுறுத்தல்
தமிழகத்தில் கால் வைக்கும் முன் விஜய்க்கு கை கொடுத்த ராகுல் காந்தி.! ஷாக்காகி நிற்கும் திமுக
தமிழகத்தில் கால் வைக்கும் முன் விஜய்க்கு கை கொடுத்த ராகுல் காந்தி.! ஷாக்காகி நிற்கும் திமுக
பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி: பணி நிரந்தரம் கோரி போராட்டம்! அதிர்ச்சியில் ஆசிரியர்கள்
பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி: பணி நிரந்தரம் கோரி போராட்டம்! அதிர்ச்சியில் ஆசிரியர்கள்
Iran Warns America: அமெரிக்காவை எச்சரித்த ஈரான் உச்ச தலைவர்; அமெரிக்கர்கள் வெளியேற ட்ரம்ப் உத்தரவு; வெடிக்குமா போர்.?
அமெரிக்காவை எச்சரித்த ஈரான் உச்ச தலைவர்; அமெரிக்கர்கள் வெளியேற ட்ரம்ப் உத்தரவு; வெடிக்குமா போர்.?
BiggBoss Tamil : வெளியவந்து ரொம்ப வருத்தப்பட்டேன்...18 லட்சத்துடன் வெளியேறிய கானா வினோத் வீடியோ
BiggBoss Tamil : வெளியவந்து ரொம்ப வருத்தப்பட்டேன்...18 லட்சத்துடன் வெளியேறிய கானா வினோத் வீடியோ
PhD Scholarship: பட்டப்படிப்பு மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் உதவித்தொகை! வெளியான அறிவிப்பு- உடனே விண்ணப்பிங்க!
PhD Scholarship: பட்டப்படிப்பு மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் உதவித்தொகை! வெளியான அறிவிப்பு- உடனே விண்ணப்பிங்க!
பொங்கல் விடுமுறை மழையிலேயே போய்டுமா? ஒரு பக்கம் குளிர் அதிகரிக்குமாம் - வானிலை மையம் விடுத்த எச்சரிக்கை என்ன?
பொங்கல் விடுமுறை மழையிலேயே போய்டுமா? ஒரு பக்கம் குளிர் அதிகரிக்குமாம் - வானிலை மையம் விடுத்த எச்சரிக்கை என்ன?
India Germany Visa: அப்பாடா, இனி பிரச்னையே இல்ல.! இந்தியர்களுக்கு இனிப்பான அறிவிப்பை வெளியிட்ட ஜெர்மனி; அது என்ன.?
அப்பாடா, இனி பிரச்னையே இல்ல.! இந்தியர்களுக்கு இனிப்பான அறிவிப்பை வெளியிட்ட ஜெர்மனி; அது என்ன.?
Embed widget