மேலும் அறிய

CJI Ramana Update: இதெல்லாம் இங்கே கட்டுக்கதைங்க.! இந்திய நீதித்துறையை புட்டு புட்டு வைத்த தலைமை நீதிபதி!

அரசின் 3 அங்கங்களான பேரவை , நிர்வாகம், நீதித்துறை ஆகியவை அரசியலமைப்புக்கு உட்பட்டு செயல் பட வேண்டும் என்பதால், சட்ட அமைப்புகளை மேலாய்வுக்கு உட்படுத்தும் பொறுப்பு நீதித்துறைக்கு உண்டு

நீதிபதிகளின் நியமன முறையில் நீதித்துறை மட்டுமே ஆதிக்கம் செலுத்துகிறது என்ற தவறான கருத்து பரப்பப்பட்டு வருவதாக இந்திய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா தெரிவித்துள்ளார். இந்திய- நீதித்துறையின் எதிர்கால சவால்கள் என்ற தலைப்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கருத்தரங்கில் கலந்து கொண்டு பேசிய அவர் இவ்வாறு தெரிவித்தார்.  

சமீப நாட்களில், நீதிபதிகளை நீதிபதிகளே தேர்வு செய்கின்றனர் என்ற முழக்கமிடுவது பெருவழக்கமாக உள்ளது. ஆனால், இது மிகவும் கட்டமைக்கப்பட்ட கட்டுக்கதை.  இத்தகையை கதையாடலை அவர்களின் குறுகிய நோக்கங்களுக்கு பயன்படுவதால், நியமன முறையைப் பற்றி நன்குணர்ந்த சிலர் கூட அதனை ஊக்கமளித்து வருகின்றனர். 

நீதிபதிகளின் நியமனத்தில் நீதித்துறை ஒரு அங்கமே.  அரசின் மற்ற அங்கங்களான, குடியரசுத் தலைவர், மத்திய சட்ட அமைச்சகம், மாநில அரசு, மாநில ஆளுநர், உயர்நீதிமன்ற கொலிஜியம், உளவுத்துறை பிரிவு, ஆகியவையும் நியமன முறையில் பங்கு வகிக்கின்றன" என்று தெரிவித்தார். 

அதிகார வரம்பு: 

நீதித்துறை தனது லட்சுமண ரேகையை தாண்டி நிர்வாகத்தில் அத்துமீறக் கூடாது என்ற வாதம் 'நீதிமுறை மேலாய்வு' கட்டுபடுத்தும் ஒரே நோக்கில் தான் எழுப்பப்படுகிறது. அதேபோன்று, நீதித்துறையின்அதீத செயல்பாடு (Judicial Overreach)  என்பதும் புனையப்பட்ட கற்பனை. அரசியலமைப்பை விட உயர்ந்தது எதுவும் இல்லை. அரசின் 3 அங்கங்களான பேரவை , நிர்வாகம், நீதித்துறை ஆகியவை அரசியலமைப்புக்கு உட்பட்டு செயல் பட வேண்டும் என்பதால், சட்ட அமைப்புகளை மேலாய்வுக்கு உட்படுத்தும் பொறுப்பு நீதித்துறைக்கு உண்டு என்றும் தெரிவித்தார்.   

 

 

ஜனநாயகம் மற்றும் சட்டத்தின் ஆட்சி மீதான அடிப்படை நம்பிக்கையைக் கொண்டு வர, அரசு நிர்வாகம் நீதித்துறையோடு இணக்கத்துடனும், பரஸ்பர மரியாதையுடனும் செயல்பட வேண்டும். ஆனால், தற்போது நீதிமன்ற உத்தரவுகளை அவமதிக்கும் போக்கு அதிகம் காணப்படுகிறது" என்றும் தெரிவித்தார்.        

அரசு நிர்வாகம் தனது நியாயமற்ற நடவடிக்கைகளை, பெரும்பான்மை சமூகம் உருவாக்கியுள்ள கருத்தியலை மட்டும் கொண்டு  நியாயப்படுத்தமுடியாது. அனைத்து நடவடிக்கைகளும் அரசியலமைப்புக்கு உட்பட்டது என்றம் தெரிவித்தார்.            

நீதிபதிகள் நியமனம்:  

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 124-வது பிரிவில், உச்ச நீதிமன்ற நீதிபதி ஒவ்வொருவரையும், உச்ச நீதிமன்றத்திலும் மாநிலங்களிலுள்ள நீதிமன்றங்களிலுமுள்ள நீதிபதிகளில் யாரை ஒருவர் கலந்தாய்வு செய்வது அவசியமெனக்  குடியரசுத்தலைவர் கருதுகின்றாரோ அந்நீதிபதிகளுடன் கலந்தாய்வு செய்த பின்பு தன் கையொப்பமும் முத்திரையும் கொண்ட அதிகார ஆணையினால் குடியரசுத்தலைவர் அமர்த்துவார்

தலைமை நீதிபதி அல்லாத பிற நீதிபதியின் நியமனம் இந்தியத் தலைமை நீதிபதியுடன் தவறாது கலந்தாய்வு செய்யப்படுதல் வேண்டும்" என்று  தெரிவிக்கப்பட்டுள்ளது.   

அதாவது, இந்திய உச்சநீதிமன்ற நீதிபதிகளை இந்திய குடியரசுத் தலைவர் நியமிப்பார். ஆனால், அவ்வாறு நியமிக்கின்ற போது, நீதிபதிகள் தேர்வுக் குழுவின் (கொலிஜியம்) சிபாரிசுக்கு இணங்கவே குடியரசுத் தலைவர் செயற்பட வேண்டும். உச்சநீதிமன்ற தேர்வுக்குழு பரிந்துரைக்கும் யாரையாவது அரசு ஏற்கவில்லை எனில், அதற்குப் போதிய காரணங்களைத் தெரிவித்தாக வேண்டும். இறுதி முடிவு எடுக்கும் அதிகாரம் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியிடம்தான் உள்ளது என  Second Judges Case (1993) வழக்கில் உச்சநீதிமன்றம் தெரிவித்தது. 

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

ராமதாஸை கொலை செய்து , கட்சியை பறிக்க பார்க்கிறார் அன்புமணி - பாமக MLA அருள் பரபரப்பு பேட்டி
ராமதாஸை கொலை செய்து , கட்சியை பறிக்க பார்க்கிறார் அன்புமணி - பாமக MLA அருள் பரபரப்பு பேட்டி
TN Election 2026: திமுக பக்கம் திரும்புமா கொங்கு மண்டலம்? 10 மாவட்டங்கள், 68 தொகுதிகள் - அதிமுகவின் கோட்டை வீக்கானதா?
TN Election 2026: திமுக பக்கம் திரும்புமா கொங்கு மண்டலம்? 10 மாவட்டங்கள், 68 தொகுதிகள் - அதிமுகவின் கோட்டை வீக்கானதா?
Bondi Beach: தந்தை மகன் நடத்திய கொடூர தாக்குதல்.. 16 பேர்பலி - போண்டி கடற்கரையில் துப்பாக்கிச் சூடு
Bondi Beach: தந்தை மகன் நடத்திய கொடூர தாக்குதல்.. 16 பேர்பலி - போண்டி கடற்கரையில் துப்பாக்கிச் சூடு
MK Stalin Vs Amit Shah: “உங்கள் சங்கி படையையே கூட்டி வந்தாலும் ஒன்றும் செய்ய முடியாது“; அமித் ஷாவிற்கு மு.க. ஸ்டாலின் சவால்
“உங்கள் சங்கி படையையே கூட்டி வந்தாலும் ஒன்றும் செய்ய முடியாது“; அமித் ஷாவிற்கு மு.க. ஸ்டாலின் சவால்
ABP Premium

வீடியோ

DMK Youth Meeting | 1.5 லட்சம் நிர்வாகிகள்!கடல்போல் திரண்ட கூட்டம்கெத்து காட்டிய முதல்வர்
Sreelekha IPS Profile | கேரளாவில் தடம்பதித்த பாஜகIPS அதிகாரி to முதல் மேயர்!யார் இந்த ஸ்ரீலேகா?
தவெக-விற்கு தாவும் வைத்திலிங்கம்?OPS-க்கு விரைவில் டாடா?பறிபோகும் ஆதரவாளர்கள் | Vaithilingam in TVK
கிளம்பிய LIONEL MESSIஆத்திரமடைந்த ரசிகர்கள் விழா ஏற்பாட்டாளர் கைது | Lionel Messi in Kolkata
சாக்கு சொன்ன சவுக்கு ARREST பேட்டி”G PAY-ல பணம் அனுப்புனா நான் பொறுப்பா?” | Savukku Shankar Arrest

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ராமதாஸை கொலை செய்து , கட்சியை பறிக்க பார்க்கிறார் அன்புமணி - பாமக MLA அருள் பரபரப்பு பேட்டி
ராமதாஸை கொலை செய்து , கட்சியை பறிக்க பார்க்கிறார் அன்புமணி - பாமக MLA அருள் பரபரப்பு பேட்டி
TN Election 2026: திமுக பக்கம் திரும்புமா கொங்கு மண்டலம்? 10 மாவட்டங்கள், 68 தொகுதிகள் - அதிமுகவின் கோட்டை வீக்கானதா?
TN Election 2026: திமுக பக்கம் திரும்புமா கொங்கு மண்டலம்? 10 மாவட்டங்கள், 68 தொகுதிகள் - அதிமுகவின் கோட்டை வீக்கானதா?
Bondi Beach: தந்தை மகன் நடத்திய கொடூர தாக்குதல்.. 16 பேர்பலி - போண்டி கடற்கரையில் துப்பாக்கிச் சூடு
Bondi Beach: தந்தை மகன் நடத்திய கொடூர தாக்குதல்.. 16 பேர்பலி - போண்டி கடற்கரையில் துப்பாக்கிச் சூடு
MK Stalin Vs Amit Shah: “உங்கள் சங்கி படையையே கூட்டி வந்தாலும் ஒன்றும் செய்ய முடியாது“; அமித் ஷாவிற்கு மு.க. ஸ்டாலின் சவால்
“உங்கள் சங்கி படையையே கூட்டி வந்தாலும் ஒன்றும் செய்ய முடியாது“; அமித் ஷாவிற்கு மு.க. ஸ்டாலின் சவால்
Renault Triber: பட்ஜெட் விலையில் 7 சீட்டர் கார்.. Renault Triber காரின் விலையும், மைலேஜும் எப்படி?
Renault Triber: பட்ஜெட் விலையில் 7 சீட்டர் கார்.. Renault Triber காரின் விலையும், மைலேஜும் எப்படி?
MK Stalin: உதயநிதிக்கு பாராட்டு; பாஜகவிற்கு குட்டு; திருவண்ணாமலை மாநாட்டில் மு.க. ஸ்டாலின் பேசியது என்ன.?
உதயநிதிக்கு பாராட்டு; பாஜகவிற்கு குட்டு; திருவண்ணாமலை மாநாட்டில் மு.க. ஸ்டாலின் பேசியது என்ன.?
Udhayanidhi:
Udhayanidhi: "எதிரிகள் தப்புக்கணக்கை சுக்கு நூறாக்கும் கொள்கை கூட்டம் இது" ஆர்ப்பரித்த உதயநிதி
Udhayanidhi:
Udhayanidhi: "2026 தேர்தலில் இளைஞர்களுக்கு போட்டியிட அதிக வாய்ப்பு வழங்க வேண்டும்" - மு.க.ஸ்டாலினுக்கு உதயநிதி கோரிக்கை
Embed widget