மேலும் அறிய

Intranasal Vaccine: குடியரசு தினத்தில் இந்தியாவில் அறிமுகமாகிறது மூக்கு வழி செலுத்தும் கொரோனா தடுப்பு மருந்து

பாரத் பயோடக் நிறுவனத்தின் மூக்கின் வழி செலுத்தக்கூடிய தடுப்பு மருந்து ஜனவரி 26-ம் தேதி அறிமுகப்படுத்தப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.

Intranasal Vaccine: பாரத் பயோடக் நிறுவனத்தின் மூக்கின் வழி செலுத்தக்கூடிய தடுப்பு மருந்து வரும் ஜனவரி 26-ஆம் தேதி அறிமுகப்படுத்தப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.

நாசிவழி தடுப்பு மருந்து:

பாரத் பயோடெக்கின் ChAd36-SARS-CoV-S கோவிட்-19 (சிம்பன்சி அடினோவைரஸ் வெக்டார்டு) மறுசீரமைப்பு நாசி தடுப்பு மருந்து iNCOVACC என்று அழைக்கப்படுகிறது. இதுவே இந்தியாவின் முதல் நாசிவழி கொரோனா தடுப்பு மருந்து என்பது குறிப்பிடத்தக்கது. கொரோனா வைரஸ் நாசி வழியாகத்தான் நம்மை ஆட்கொள்கிறது என்பதால் இந்த iNCOVACC தடுப்பு மருந்து நாசி வழியாக செலுத்தும் போது இது மூக்கிலேயே அதாவது வைரஸ் நுழைவுவாயிலிலேயே அதனைத் தடுக்கவல்லது. இந்நிலையில் இதனை பூஸ்டராக ஆறு மாத இடைவெளியில் இரண்டாவது தவணையில் எடுத்துக் கொள்வதால் கொரோனா தொற்றிலிருந்தும், பரவலில் இருந்தும் தற்காத்துக் கொள்ளலாம்.

ஏற்கெனவே பெரும்பாலான நாசி ஸ்ப்ரே தடுப்பூசி மூக்கு வழியாக கொடுக்கப்படுகிறது. இது மூக்கின் உள் பகுதிகளில் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குகிறது. கொரோனா உட்பட காற்றில் பரவும் பெரும்பாலான நோய்களின் வேர் முக்கியமாக மூக்கு என்பதால் இது மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. மேலும் மூக்கின் உள் பகுதிகளில் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குவது அத்தகைய நோய்களைத் தடுப்பதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

ஜனவரி 26ல் அறிமுகம்

முன்னதாக கடந்த செப்டம்பர் 6 ஆம் தேதி டிசிஜிஐ இந்த தடுப்பு மருந்தை 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு செலுத்த அனுமதி வழங்கியது. கடந்த ஆண்டு ஏப்ரல் 10 ஆம் தேதி தொடங்கி கொரோனா பூஸ்டர் டோஸ்கள் வழங்கப்பட்டு வரும் நிலையில் iNCOVACC பூஸ்டருக்கும் அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. 

இந்நிலையில், போபாலில் உள்ள மௌலானா ஆசாத் தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் சர்வதேச அறிவியல் விழா நடைபெற்றது. அதில் பாரத் பயோடெக் நிறுவனத்தின் செயல் தலைவர் கிருஷ்ணா இலா பங்கேற்றார். அந்நிகச்சியில் அவர் கூறியதாவது, ”பாரத் பயோடக் நிறுவனத்தின் மூக்கின் வழி செலுத்தக்கூடிய தடுப்பு மருந்து ஜனவரி 26-ஆம் தேதி அறிமுகப்படுத்தப்படும். iNCOVACC என்று அழைக்கப்படும் நாசி வழி தடுப்பு மருந்து குடியரசுத் தினத்தன்று அறிமுகப்படுத்தப்பட உள்ளது" என்றார்

”iNCOVACC ஆனது , மத்திய மற்றும் மாநில அரசுகளின் கொள்முதலுக்கு ஒரு டோஸுக்கு ரூ. 325 ஆகவும் , தனியார் தடுப்பூசி மையங்களில் ரூ. 800 ஆகவும் இருக்கும் என்று பாரத் பயோடெக் தெரிவித்துள்ளது. 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் இதனை செலுத்திக் கொள்ளலாம். இந்த தடுப்பு மருந்தானது ஒரு தவணை செலுத்திக் கொண்ட 28 நாட்களுக்கு பின் இரண்டாவது தவணையை செலுத்திக் கொள்ளலாம்” என்றார்.

4,000 பேருக்கு நாசி வழி தடுப்பூசி பரிசோதனை

நாசி ஸ்ப்ரே தடுப்பு மருந்தால் கைகளில் செலுத்திக் கொள்ளும் ஊசியிலிருந்து விடுதலை கிடைக்கும். சுகாதார பணியாளர்களுக்கு பயிற்சி தேவையில்லை. ஹைதராபாத்தை தளமாகக் கொண்ட பாரத் பயோடெக் நிறுவனம் சுமார் 4,000 தன்னார்வலர்களுடன் நாசி தடுப்பபு மருந்தின் மருத்துவ பரிசோதனைகளை முடித்தது. இதுவரை எந்த பக்க விளைவுகளும் அல்லது பாதகமான எதிர்வினையும் இல்லை என்று நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.

அண்மைக்காலமாக சீனாவில் அன்றாட கொரோனா பாதிப்பு அதிகரித்துவரும் சூழலில் நாம் பூஸ்டர் டோஸ்களை செலுத்திக் கொள்ள மருத்துவர்கள் பரிந்துரை செய்து வருகின்றன்றனர். இந்நிலையில் மூக்கின் வழியே செலுத்தி கொள்ள கூடிய தடுப்பு மருந்து ஜனவரி 26ஆம் தேதி இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Lok Sabha Election Phase 5 Polling: இன்று 5ம் கட்ட வாக்குப்பதிவு -  49 தொகுதிகள், ராகுல் காந்தி டூ ஸ்மிருதி இரானி - பலத்த பாதுகாப்பு
Lok Sabha Election Phase 5 Polling: இன்று 5ம் கட்ட வாக்குப்பதிவு - 49 தொகுதிகள், ராகுல் காந்தி டூ ஸ்மிருதி இரானி - பலத்த பாதுகாப்பு
Breaking News LIVE: நேபாளம்: பிரதமர் பிரசண்டா அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு..!
நேபாளம்: பிரதமர் பிரசண்டா அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு..!
Thalaimai Seyalagam Review : முதல்வரின் உயிர்.. ஜார்க்கண்ட் கொலை.. தலைமைச் செயலகம் சீரீஸ் விமர்சனம்
Thalaimai Seyalagam Review : முதல்வரின் உயிர்.. ஜார்க்கண்ட் கொலை.. தலைமைச் செயலகம் சீரீஸ் விமர்சனம்
Iranian President Raisi: ஈரான் அதிபர் உயிருடன் இருக்கிறாரா? என்ன ஆச்சு அவருக்கு? அமெரிக்கா அவசர ஆலோசனை..
ஈரான் அதிபர் உயிருடன் இருக்கிறாரா? அமெரிக்கா அவசர ஆலோசனை..
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Voting 8 times to BJP | பாஜகவுக்கு 8 முறை ஓட்டு! இளைஞரின் பகீர் வீடியோ! கொந்தளித்த அகிலேஷ் யாதவ்Chennais Amirta | சிங்கப்பூர் அகாடமியுடன் சென்னைஸ் அமிர்தா ஒப்பந்தம்! வேலையுடன் படிக்கும் வசதிMallikarjun Kharge | ”நாங்கதான் முடிவு எடுப்போம்! I.N.D.I.A கூட்டணியில் மம்தா” எகிறி அடித்த கார்கேPadayappa elephant Viral Video | ஆட்டம் காட்டிய படையப்பா தூக்கிய வனத்துறையினர் யானையின் அட்ராசிட்டி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Lok Sabha Election Phase 5 Polling: இன்று 5ம் கட்ட வாக்குப்பதிவு -  49 தொகுதிகள், ராகுல் காந்தி டூ ஸ்மிருதி இரானி - பலத்த பாதுகாப்பு
Lok Sabha Election Phase 5 Polling: இன்று 5ம் கட்ட வாக்குப்பதிவு - 49 தொகுதிகள், ராகுல் காந்தி டூ ஸ்மிருதி இரானி - பலத்த பாதுகாப்பு
Breaking News LIVE: நேபாளம்: பிரதமர் பிரசண்டா அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு..!
நேபாளம்: பிரதமர் பிரசண்டா அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு..!
Thalaimai Seyalagam Review : முதல்வரின் உயிர்.. ஜார்க்கண்ட் கொலை.. தலைமைச் செயலகம் சீரீஸ் விமர்சனம்
Thalaimai Seyalagam Review : முதல்வரின் உயிர்.. ஜார்க்கண்ட் கொலை.. தலைமைச் செயலகம் சீரீஸ் விமர்சனம்
Iranian President Raisi: ஈரான் அதிபர் உயிருடன் இருக்கிறாரா? என்ன ஆச்சு அவருக்கு? அமெரிக்கா அவசர ஆலோசனை..
ஈரான் அதிபர் உயிருடன் இருக்கிறாரா? அமெரிக்கா அவசர ஆலோசனை..
குற்றால அருவியில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்த சிறுவன்.. என்னது! வ.உ.சி-யின் கொள்ளுப்பேரனா..?
குற்றால அருவியில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்த சிறுவன்.. என்னது! வ.உ.சி-யின் கொள்ளுப்பேரனா..?
HBD Balu Mahendra: ஏ.ஆர்.ரஹ்மானுக்காக நண்பன் இளையராஜாவையே விட்டுக்கொடுத்த பாலுமகேந்திரா - ஏன்?
HBD Balu Mahendra: ஏ.ஆர்.ரஹ்மானுக்காக நண்பன் இளையராஜாவையே விட்டுக்கொடுத்த பாலுமகேந்திரா - ஏன்?
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Patanjali : பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Embed widget