மேலும் அறிய

இந்தியாவிலிருந்து துபாய்க்கு செல்லும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை இரு மடங்காக உயர்வு

இந்தியாவிலிருந்து துபாய்க்கு சுற்றுலா செல்லும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது என துபாயின் சுற்றுலாத்துறை உறுதிப்படுத்தி உள்ளது

இந்தியாவிலிருந்து  அரபு நாடுகளுக்கு வேலைக்கு செல்வோர் எண்ணிக்கை போலவே, துபாய்க்கு சுற்றுலா செல்வோரின் எண்ணிக்கையும்,மிக வேகமாக உயர்ந்துள்ளது.

இந்தியாவிலிருந்து அதிகப்படியான எண்ணிக்கையில் துபாய்க்கு சுற்றுலா செல்லும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது என துபாயின் சுற்றுலாத்துறை உறுதிப்படுத்தி உள்ளது. இதன்படி 2021 ஆம் ஆண்டின் முதல் பாதியில், இந்தியாவில் இருந்து 4.09 லட்சம் பேர் துபாய்க்கு வருகை தந்துள்ளனர்.

இதே எண்ணிக்கை 2002 ஆம் ஆண்டின் ஜனவரியில் இருந்து ஜூன் வரையிலும் 8.58 லட்சமாக ஏறக்குறைய இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது.

இந்த எண்ணிக்கை ஏற்றார் போல துபாயின் சுற்றுலாத்துறை மிக அதிகப்படியான வசதிகளை சுற்றுலா பயணிகளுக்கு வழங்கி வருகிறது. மேலும் இந்தியாவில் இருக்கும் திரை பிரபலங்கள் விளையாட்டு வீரர்கள் ஆகியோருக்கு கோல்டன் விசாக்களை வழங்கியும் தனது சுற்றுலா துறையை மேம்படுத்த விரிவான திட்டத்தை வகுத்து செயல்படுத்தி வருகிறது.

கச்சா எண்ணெய் வளமிகுந்த அரபு நாடுகளில் துபாய் முக்கிய இடத்தை பிடித்துள்ளது. கச்சா எண்ணெய்  மட்டுமல்லாது சுற்றுலா பயணிகளின் வருகையில் துபாய் ஒரு புதிய உச்சத்தை எட்டியுள்ளது.

ஒட்டுமொத்தமாக, துபாய்க்கு 2022 ஜனவரியில் இருந்து ஜூன் மாதங்களுக்கு இடையில் 71.2 லட்சம் சர்வதேச சுற்றுலா பயணிகள்  வந்திருக்கிறார்கள் என்று  துபாயின் சுற்றுலாத்துறை தெரிவித்திருக்கிறது.

2021 ஆம் ஆண்டின் இதே காலகட்டத்தில் வந்த 25.2 லட்சம் சுற்றுலாப் பயணிகளுடன் ஒப்பிடும்போது பார்வையாளர்களின் எண்ணிக்கை மூன்று மடங்கு வளர்ச்சியைப் அடைந்துள்ளது.

இது துபாயின் சுறுசுறுப்பான செயல்பாட்டையும் (பெட்ரோலிய பொருட்கள் அல்லாத) பொருளாதார வளர்ச்சியையும் தந்திருப்பதாக துபாய் முடிக்குரிய இளவரசரும், துபாய் நிர்வாக சபையின் தலைவருமான ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் தெரிவித்தார்.

சர்வதேச சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை வெகுவாக உயர்ந்திருப்பது,உலகில் அதிக சுற்றுலாப் பயணிகள் பார்வையிட்ட இடமாக துபாயை மாற்றும் தங்கள் லட்சியத்திற்கு, இந்த எண்ணிக்கை ஒரு உற்சாகத்தை அளிக்கும் என்றும், இந்த இலக்கை விரைவில் எட்டுவோம் என்றும்,அவர் தெரிவித்தார். மேலும் சுற்றுலா பயணிகளுக்கு சர்வதேச தரத்தில், தேவைப்படும் அனைத்து வசதிகளும் வழங்கப்பட்டு வருவதாகவும்,இதுவும் இந்த வளர்ச்சிக்கு ஒரு முக்கிய காரணம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

2019 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் மொத்தம் 83.6 லட்சம் சர்வதேச சுற்றுலாப் பயணிகள் துபாய்க்கு வருகை தந்துள்ளதாக துபாய் சுற்றுலாத்துறை  தெரிவித்து இருக்கிறது .

 2022 இன் முதல் ஆறு மாதங்களில் மொத்த சர்வதேச பார்வையாளர்களில் எண்ணிக்கையில்  கணக்கிடும் பொழுது  இது 22% ஆகும்.

உலகின் மிக உயரமான கட்டிடமான புர்ஜ் கலீஃபாவை காணவும்,அரேபிய வளைகுடாவில் உருவாக்கப்பட்ட செயற்கை தீவுகளின் தொகுப்பான  பாம் ஜுமைராவை,காணவும் சுற்றுலா பயணிகள் வருகிறார்கள். இந்த செயற்கைத் தீவானது வானத்திலிருந்து பார்க்கும் பொழுது ஒரு பனை மரத்தின் வடிவத்தை ஒத்திருக்கும்.

இதைப் போலவே டெசர்ட் சபாரி, பாலைவனத்தில் சிறப்பையும், அந்த பாலைவனத்தில் பயணிக்கும் திரில்லிங்கான உணர்வை அனுபவிப்பதற்கு சுற்றுலாப் பணிகளை ஊக்குவிக்கும்.இதே போலவே எதிர்கால மியூசியமானது, உலகின் அழகான கட்டிடங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.7 தலங்களைக் கொண்ட இந்த கட்டிடம் ஒரு வட்ட வடிவத்தில்  சுற்றுலாப் பயணிகளை கவர்ந்திழுக்கும் படியாக இருக்கிறது. இதே போலவே துபாய் ஃப்ரேம்,துபாய் அக்வாரியம், துபாய் ஸ்கைட் பீச் மற்றும் துபாய் பீச் என துபாயை பற்றி சொல்லிக் கொண்டே போகலாம்.
வெறும் மணல் பரப்பாக, பாலைவனமாக இருந்த துபாயை, மிக அழகான,உலகில் அதிக சுற்றுலாப் பயணிகள் வந்து குவிய கூடிய இடமாக மாற்றி வருவாயையும் மேம்படுத்தும் படியாக துபாயை மாற்றி அமைத்து இருப்பது பாராட்டக்கூடிய அம்சமாகும்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs SA Final: கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Bussy Anand Angry |கறார் காட்டிய புஸ்ஸி ஆனந்த்..முகம்சுழித்த தவெக நிர்வாகிகள்!Nellai Drunkard | ’’கார்ல கள்ளச்சாராயம் இருக்கு’’  வடிவேலு பாணியில் ரகளை!  மதுபிரியர் அட்ராசிட்டிAnnamalai on Sengol | ”செங்கோலை எடுக்கணுமா? திமுக என்ன சொல்லப்போகுது?”I.N.D.I.A-ஐ விளாசும் பாஜகவினர்Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs SA Final: கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Breaking News LIVE: ஐரோப்பிய கவுன்சிலின் தலைவராக தேர்வான அன்டோனியோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
Breaking News LIVE: ஐரோப்பிய கவுன்சிலின் தலைவராக தேர்வான அன்டோனியோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
Embed widget