மேலும் அறிய

Train Ticket Booking: மாற்றம் பெறும் டிக்கெட் முன்பதிவு.. ரயில் பயணிகளுக்கு இனிப்பான செய்தி!

ரயில்வேயில் டிக்கெட் முன்பதிவு கடந்த சில ஆண்டுகளாக மிகப்பெரிய நெருக்கடியை சந்தித்து வருகிறது. டிக்கெட் கவுண்டர்கள் மட்டுமல்லாது ஐஆர்சிடிசி, ரயில் ஒன் செயலிகள் வழியாகவும் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும் நிலை உள்ளது.

இந்திய ரயில்வேயில் மேம்படுத்தப்பட்ட டிக்கெட் முன்பதிவு முறையானது 2026 ஆகஸ்ட் மாதம் முதல் அமலுக்கு வரும் என தகவல் வெளியாகியுள்ளது. இதன்மூலம் பயணிகள் சிரமம் குறையும் என கூறப்பட்டுள்ளது. 

இந்தியாவின் மிகப்பெரிய போக்குவரத்து துறையாக ரயில்வே திகழ்கிறது. மின்சார ரயில் தொடங்கி பாசஞ்சர், எக்ஸ்பிரஸ், சூப்பர் ஃபாஸ்ட், வந்தே பாரத், ராஜஸ்தானி, தேஜஸ் என பல வகையான ரயில்கள் இயக்கப்படுகிறது. குறைவான கட்டணம், பாதுகாப்பான பயணம் உள்ளிட்ட பல காரணங்கள் காரணமாக சாமானிய மக்கள் முதல் வசதி படைத்தவர்கள் வரை ரயில் பயணத்தையே விரும்புகின்றனர். 

இந்த நிலையில் ரயில்வேயில் டிக்கெட் முன்பதிவு கடந்த சில ஆண்டுகளாக மிகப்பெரிய நெருக்கடியை சந்தித்து வருகிறது. டிக்கெட் கவுண்டர்கள் மட்டுமல்லாது ஐஆர்சிடிசி, ரயில் ஒன் செயலிகள் வழியாகவும் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும். இதேபோல் ரயில்வே ஏஜெண்ட்கள் வாயிலாகவும் நாம் டிக்கெட்டுகள் பெற முடியும். ஆனால் இதில் மிகப்பெரிய மோசடி நடைபெறுவதால் ரயில்வே அமைச்சகம் பல்வேறு விதிமுறைகளை வகுத்து வருகிறது. சமீபகாலமாக தட்கல் மற்றும் முன்பதிவு டிக்கெட்டுகளை பெறுவதில் மக்கள் மிகுந்த சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.

இந்திய ரயில்வே கடந்த காலங்களில் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய அளவில் முன்பதிவு முறையில் மாற்றத்தை கொண்டு வர உள்ளது. தற்போது டிக்கெட் முன்பதிவில் இருக்கும் விதிமுறைகள் யாவும் 1986ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டவை. இனிமேல் ரயில்களும், அவற்றின் முன்பதிவு முறையும் படிப்படியாக புதிய முறைக்கு மாறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ரயில் டிக்கெட் முன்பதிவு முறையை மேம்படுத்துவதிலும், அமைப்பில் திறனை அதிகரிப்பதன் மூலமும் பயணிகளுக்கு ஒரு சிறந்த அனுபவத்தை வழங்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் இதுதொடர்பான பணிகளை ஆய்வு செய்துள்ளார். இந்த மாற்றம் முழுவதுமாக அமலுக்கு வரும் காலக்கட்டத்தில் கூட மக்கள் சிரமத்தை சந்திக்கக்கூடாது என்பதையும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.  புதிய முறையானது நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி   கட்டமைக்கப்பட்டுள்ளது. இணையவழி ரயில் பயணச்சீட்டு முன்பதிவுக்கான தேவை அதிகரித்து வரும் நிலையில் அந்த நடைமுறையை மேம்படுத்துவதும் நோக்கமாக உள்ளது. 

Also Read: விருதுநகர் மாவட்ட மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி... சிறப்பு தொழில் கடன் முகாமில் நீங்களும் பங்கேற்கலாம் - முழு விவரம் !

இந்திய ரயில்வே 2002ம் ஆண்டு தான் ஆன்லைன் மூலம் டிக்கெட் முன்பதிவு முறையை கொண்டு வந்தது. தற்சமயம் சுமார் 88 சதவிகித டிக்கெட்டுகள் ஆன்லைன் வழியாகவே செய்யப்படுகிறது. இந்திய ரயில்வேயின்  டிஜிட்டல் முன்னெடுப்பின் ஒரு பகுதியாக 2025ம் ஆண்டு ரயில் ஒன் செயலி அறிமுகம் செய்யப்பட்டது. இதனை சுமார் 3.5 கோடி பதிவிறக்கங்களை கடந்துள்ளது.  ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான காத்திருப்புப் பட்டியல் முன்கணிப்பு முறையில் ரயில் டிக்கெட் முன்பதிவு நடைபெற்று வருகிறது. இதன்மூலம் காத்திருப்பு பட்டியலில் இருக்கும் டிக்கெட்டுகள் கன்ஃபார்ம் ஆகுமா என்பது 94 சதவிகிதம் துல்லியமாக புதிய நடைமுறையின் மூலம் அறிய முடியும் என கூறப்பட்டுள்ளது.  

Advertisement

தலைப்பு செய்திகள்

இன்றைய டாப் 10 நியூஸ்: முக்கிய நிகழ்வுகள்... நீங்க கண்டிப்பா தெரிஞ்சுக்க வேண்டிய செய்திகள்!
இன்றைய டாப் 10 நியூஸ்: முக்கிய நிகழ்வுகள்... நீங்க கண்டிப்பா தெரிஞ்சுக்க வேண்டிய செய்திகள்!
PF பணம் எடுப்பதில் புதிய மாற்றம்: 12 மாத காத்திருப்பு! அவசர தேவைக்கு என்ன வழி?
PF பணம் எடுப்பதில் புதிய மாற்றம்: 12 மாத காத்திருப்பு! அவசர தேவைக்கு என்ன வழி?
ஆகஸ்ட் 15க்குள் கேஸ் சிலிண்டர் KYC கட்டாயம்! இல்லையெனில் மானியம் ரத்து!விபரம் இதோ.
ஆகஸ்ட் 15க்குள் கேஸ் சிலிண்டர் KYC கட்டாயம்! இல்லையெனில் மானியம் ரத்து!விபரம் இதோ.
டெக் பிரியர்களுக்கு செம்ம செய்தி: அசத்தலான அம்சங்களுடன் இந்தியாவில் விரைவில் அறிமுகமாகும் OnePlus Pad 4!
செம்ம செய்தி: அசத்தலான அம்சங்களுடன் இந்தியாவில் விரைவில் அறிமுகமாகும் OnePlus Pad 4!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Senthil Balaji: அவுட் ஆஃப் ரேஞ்சில் செந்தில் பாலாஜி? ”திமுகவை நம்பி இனி பயனில்லை” டெல்லிக்கு சகோதரர்கள் தூது
அவுட் ஆஃப் ரேஞ்சில் செந்தில் பாலாஜி? ”திமுகவை நம்பி இனி பயனில்லை” டெல்லிக்கு சகோதரர்கள் தூது
RB Udhayakumar: ”மோசடி செய்த CM விஜய்” மதுபானங்களால் கஜானாவை நிரப்புவது ஏன்? ஆர்.பி. உதயகுமார் கேள்வி
”மோசடி செய்த CM விஜய்” மதுபானங்களால் கஜானாவை நிரப்புவது ஏன்? ஆர்.பி. உதயகுமார் கேள்வி
TVK Govt: அடித்து ஆடும் தவெக அரசு - 95 நாட்கள், 97 ஒப்பந்தங்கள், ரூ.67ஆயிரத்து 452 கோடி முதலீடு - இன்று ஒப்பந்தம்
அடித்து ஆடும் தவெக அரசு - 95 நாட்கள், 97 ஒப்பந்தங்கள், ரூ.67ஆயிரத்து 452 கோடி முதலீடு - இன்று ஒப்பந்தம்
TVK Vijay: பொறாமையில் பொங்கும் Ex.அதிமுகவினர்.. முக்கிய பதவியை சிங்கைக்கு வழங்கும் CM விஜய்? என்ன தெரியுமா?
பொறாமையில் பொங்கும் Ex.அதிமுகவினர்.. முக்கிய பதவியை சிங்கைக்கு வழங்கும் CM விஜய்? என்ன தெரியுமா?
TNEB: 200 யூனிட் இலவச மின்சாரம் இல்லையா?.. தமிழக அரசு பரபரப்பு விளக்கம்.. வசமாக மாட்டிய நடிகை!
TNEB: 200 யூனிட் இலவச மின்சாரம் இல்லையா?.. தமிழக அரசு பரபரப்பு விளக்கம்.. வசமாக மாட்டிய நடிகை!
Thoothukudi district Holiday : நாளை முதல் பள்ளி, கல்லூரி, அரசு ஊழியர்களுக்கு 3 நாள் தொடர் விடுமுறை.! வெளியான முக்கிய அறிவிப்பு
நாளை முதல் பள்ளி, கல்லூரி, அரசு ஊழியர்களுக்கு 3 நாள் தொடர் விடுமுறை.! வெளியான அரசாணை
AIADMK Apsara Reddy: அதிமுகவில் அடுத்த விக்கெட்.. துணை கொள்கை பரப்பு செயலாளர் அப்சரா ரெட்டி விலகல்
AIADMK Apsara Reddy: அதிமுகவில் அடுத்த விக்கெட்.. துணை கொள்கை பரப்பு செயலாளர் அப்சரா ரெட்டி விலகல்
Gold and silver rate today : மீண்டும் உயர்ந்தது தங்கம் விலை.! ஒரு சவரன் இவ்வளவா.? இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் இதோ..
மீண்டும் உயர்ந்தது தங்கம் விலை.! ஒரு சவரன் இவ்வளவா.? இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் இதோ..
Embed widget