மேலும் அறிய

''எங்கெங்கும் மக்கள் கூட்டம்.. இது ஆபத்து..'' மூன்றாவது அலை குறித்து எச்சரிக்கை விடுக்கும் மருத்துவ சங்கம்

இந்தியாவில் கொரோனா மூன்றாவது அலை தவிர்க்க முடியாதது என்று இந்திய மருத்துவ சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

நாடு முழுவதும் கடந்த பிப்ரவரி மாத இறுதி முதல் கொரோனா இரண்டாவது அலை பரவத் தொடங்கியது. கடந்த மே மாதம் உச்சத்தில் இருந்த கொரோனா பாதிப்பு நாடு முழுவதும் மாநில அரசுகள் மேற்கொண்ட ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தற்போது கட்டுக்குள் வந்துள்ளது.

இருப்பினும், உலகம் முழுவதும் கொரோனா மூன்றாவது அலை பரவுவதற்கு வாய்ப்புகள் இருப்பதாகவும், அதனால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பும், மருத்துவ நிபுணர்களும் அவ்வப்போது எச்சரித்து வருகின்றனர்.

இந்த சூழலில், இந்திய மருத்துவர்கள் சங்கம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது, “  நாடு முழுவதும் இப்போதுதான் கொரோனா இரண்டாவது அலையில் இருந்து மெல்ல மீண்டு வருகிறோம். அரசாங்கமும், மருத்துவ முன்களப் பணியாளர்களும் இணைந்து இதனை சாத்தியப்படுத்தியிருக்கின்றன. ஆனால், இப்போது அரசும், மக்களும் காட்டும் அலட்சியம் அச்சமூட்டுவதாக உள்ளது.


'எங்கெங்கும் மக்கள் கூட்டம்.. இது ஆபத்து..'' மூன்றாவது அலை குறித்து எச்சரிக்கை விடுக்கும் மருத்துவ சங்கம்

இந்தியாவில் கொரோனா மூன்றாவது அலையையும் நாம் எதிர்பார்க்கலாம். ஆனால், அதை தவிர்க்கவும் முடியும் என்ற வாய்ப்பு இருந்தும் அலட்சியம் காட்டப்படுவது அச்சமூட்டுகிறது. நாட்டின் பல பகுதிகளிலும் சுற்றுலா தலங்களில் கூட்டம் குவிந்து வருகிறது. புனித தலங்களிலும் மக்கள கூட்டம் கூட்டமாக குவிந்து வருகின்றனர்.

சுற்றுலாவும், புனித பயணங்களும், மதக்கூடல்களும் முக்கியமான ஒன்று. ஆனால், இவை தற்காலிகமாக தள்ளிவைக்கப்படலாம். அனைத்திற்கும் அனுமதி கொடுத்து மக்கள் பொது இடங்களில் கூடுவதற்கு அனுமதிப்பது ஆபத்தானது. அதுவும், நாட்டில் பலரும் இன்னும் ஒரு டோஸ் தடுப்பூசி கூட செலுத்திக்கொள்ளாத நிலையில், இதுபோல ஒன்று கூடுவதற்கு அனுமதி அளித்தால் கொரோனா மூன்றாம் அலை அதிகவேகமாக பரவ இவை காரணமாகிவிடும்.

தொற்று பாதிப்புகளின்படி கடந்த காலங்கள், சர்வதேச நிலவரங்களின்படி கொரோனா மூன்றாவது அலை என்பது தவிர்க்க முடியாதது. எந்த நேரத்திலும் மூன்றாவது அலை இந்தியாவை தாக்கக்கூடும். இப்படியான சூழ்நிலையில், நாட்டின் பல பகுதிகளில் கொரோனா கட்டுப்பாடுகளை மீறி  பொதுமக்கள் ஒன்று கூடுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கடந்த ஒன்றரை ஆண்டுகால படிப்பினைகள் மூலம் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வது, கொரோனா கட்டுப்பாடுகளை முறையாக பின்பற்றுவது ஆகியவை மேற்கொள்ளப்பட வேண்டும். “

இவ்வாறு இந்திய மருத்துவ சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.


'எங்கெங்கும் மக்கள் கூட்டம்.. இது ஆபத்து..'' மூன்றாவது அலை குறித்து எச்சரிக்கை விடுக்கும் மருத்துவ சங்கம்

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலையின்போது டெல்டா வகை கொரோனா வைரஸ் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியது. இந்த இரண்டாம் அலை காரணமாக நாட்டில் நேற்றைய நிலவரப்படி கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3 கோடியே 8 லட்சத்து 74 ஆயிரத்து 376 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் கொரோனாவால் புதியதாக 37 ஆயிரத்து 154 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸ் காரணமாக இதுவரை 4 லட்சத்து 8 ஆயிரத்து 764 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவில் ஏற்கனவே மகாராஷ்ட்ரா, கேரளா, மத்திய பிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்களில் டெல்டா பிளஸ் வகை கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ள சூழலில், மூன்றாவது அலை தவிரக்க முடியாதது என்ற மருத்துவ சங்கத்தின் எச்சரிக்கை மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.  

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Senthil Balaji: 10 வருடங்கள் கள்ள ஓட்டு கண்ணுக்குத் தெரியவில்லையா? முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி
Senthil Balaji: 10 வருடங்கள் கள்ள ஓட்டு கண்ணுக்குத் தெரியவில்லையா? முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி
200 கோடியா.!!! வெறும் 3 கப் மிளகு ரசம் மட்டுமே கொடுத்தாரு ரஜினி - நடந்தது என்ன.? தமிழருவி மணியன் பிளாஷ் பேக்
200 கோடியா.!!! வெறும் 3 கப் மிளகு ரசம் மட்டுமே கொடுத்தாரு ரஜினி - நடந்தது என்ன.? தமிழருவி மணியன் பிளாஷ் பேக்
TVK Vijay : திமுகவின் வாக்குகளை அள்ள விஜய் போட்ட செம பிளான்.! தேதி குறித்த தவெக
திமுகவின் வாக்குகளை அள்ள விஜய் போட்ட செம பிளான்.! தேதி குறித்த தவெக
Top 10 News Headlines: நெல்லையில் ஸ்டாலின், மோடி சூளுரை, விஜய் கொண்டாட்டம், இங்., பரிதாபம் - 11 மணி வரை இன்று
Top 10 News Headlines: நெல்லையில் ஸ்டாலின், மோடி சூளுரை, விஜய் கொண்டாட்டம், இங்., பரிதாபம் - 11 மணி வரை இன்று
ABP Premium

வீடியோ

Bus Accident | தூங்கி வழிந்த ஓட்டுநர் ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்து!அந்தரத்தில் தொங்கும் காட்சிகள்
Thiruparankundram Case | “சர்வே கல்லா? சமணர் தூணா?”திருப்பரங்குன்றம் தீபம் சர்ச்சை நீதிமன்றத்தில் காரசார விவாதம்
Edappadi Meet Adani ”தேர்தல் செலவு நான் பார்த்துக்கிறேன்”அதானியை சந்தித்த EPS! டீல் முடித்த அமித்ஷா
”கோவையை பிடிச்சே ஆகணும்” தூக்கியடிக்கும் செந்தில் பாலாஜி! 70 நிர்வாகிகள் ராஜினாமா
”10 நிமிஷம் பத்தாது” செங்கோட்டையன் அட்வைஸ்! விஜய்யின் அடுத்த மூவ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Senthil Balaji: 10 வருடங்கள் கள்ள ஓட்டு கண்ணுக்குத் தெரியவில்லையா? முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி
Senthil Balaji: 10 வருடங்கள் கள்ள ஓட்டு கண்ணுக்குத் தெரியவில்லையா? முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி
200 கோடியா.!!! வெறும் 3 கப் மிளகு ரசம் மட்டுமே கொடுத்தாரு ரஜினி - நடந்தது என்ன.? தமிழருவி மணியன் பிளாஷ் பேக்
200 கோடியா.!!! வெறும் 3 கப் மிளகு ரசம் மட்டுமே கொடுத்தாரு ரஜினி - நடந்தது என்ன.? தமிழருவி மணியன் பிளாஷ் பேக்
TVK Vijay : திமுகவின் வாக்குகளை அள்ள விஜய் போட்ட செம பிளான்.! தேதி குறித்த தவெக
திமுகவின் வாக்குகளை அள்ள விஜய் போட்ட செம பிளான்.! தேதி குறித்த தவெக
Top 10 News Headlines: நெல்லையில் ஸ்டாலின், மோடி சூளுரை, விஜய் கொண்டாட்டம், இங்., பரிதாபம் - 11 மணி வரை இன்று
Top 10 News Headlines: நெல்லையில் ஸ்டாலின், மோடி சூளுரை, விஜய் கொண்டாட்டம், இங்., பரிதாபம் - 11 மணி வரை இன்று
சாதி வெறி.. பாலியல் வன்கொடுமை செய்து தங்கையை கொலை செய்ய வைத்த அண்ணன் - நண்பனுக்கு உதவி
சாதி வெறி.. பாலியல் வன்கொடுமை செய்து தங்கையை கொலை செய்ய வைத்த அண்ணன் - நண்பனுக்கு உதவி
India T20 World Cup Squad: பேட்டிங் ஃபயரு தான்..! ஆனா, பவுலிங் எப்படி? ஆல்-ரவுண்டர்களை நம்பும் இந்திய அணி..!
India T20 World Cup Squad: பேட்டிங் ஃபயரு தான்..! ஆனா, பவுலிங் எப்படி? ஆல்-ரவுண்டர்களை நம்பும் இந்திய அணி..!
Personal Loan வாங்கப் போறீங்களா? எந்த வங்கியில் எவ்வளவு வட்டி? மாசம் EMI எவ்வளவு?
Personal Loan வாங்கப் போறீங்களா? எந்த வங்கியில் எவ்வளவு வட்டி? மாசம் EMI எவ்வளவு?
Tamilnadu Headlines: நெல்லையில் முதலமைச்சர்... சென்னையில் வாக்காளர் சிறப்பு முகாம் - 10 மணி சம்பவங்கள்
Tamilnadu Headlines: நெல்லையில் முதலமைச்சர்... சென்னையில் வாக்காளர் சிறப்பு முகாம் - 10 மணி சம்பவங்கள்
Embed widget