மேலும் அறிய

அமெரிக்காவில் இந்திய மாணவி மரணம்.. ஜோக் சொல்லி கிண்டலடித்த போலீஸ்.. கடுப்பான இந்தியா

இந்த விவகாரத்தை கையில் எடுத்த இந்திய தூதரகம், அமெரிக்க அரசிடம் முறையிட்டது.

ஆந்திரப் பிரதேச மாநிலம் குர்னூல் மாவட்டத்தை சேர்ந்தவர் ஜானவி கண்டுலா. இவர், அமெரிக்கா சியாட்டில் நகரில் உள்ள வடகிழக்கு பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டப்படிப்பை படித்து வந்தார். கடந்த ஜனவரி மாதம் நடந்த விபத்தில் இவர் உயிரிழந்தார்.

அமெரிக்காவில் இந்திய மாணவி மரணம்:

இந்த நிலையில், எக்ஸ் சமூக வலைதளத்தில் சியாட்டில் காவல்துறை வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தது. அதில், இந்திய மாணவி ஜானவி உயிரிழந்த விபத்து குறித்து காவல்துறை அதிகாரிகள் கிண்டல் அடித்து பேசியது பதிவாகியிருந்தது. விபத்தைப் பற்றி பேசி சிரிக்கும் காவல்துறை அதிகாரி டேனியல் ஆடரர், விபத்தை ஏற்படுத்திய காரை ஓட்டி வந்த தனது சக காவல்துறை அதிகாரி கெவின் டேவ் மீது குற்றவியல் விசாரணை தேவையில்லை என்று கூறுகிறார்.

இது, அமெரிக்க வாழ் இந்தியர்கள் மத்தியிலும் அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்தியிலும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்தியா வம்சாவளியை சேர்ந்த அமெரிக்க எம்.பி. ரோ கண்ணா, இதுகுறித்து குறிப்பிடுகையில், "ஜானவி கந்துலா இந்தியாவில் இருந்து பட்டதாரி படிப்புக்காக இங்கு வந்துள்ளார். 

கிண்டல் அடித்த போலீஸ்:

சாலையில் நடந்த வந்த அவர் மீது வேகமாக வந்த போலீஸ் கார் மோதியதில் அவர் கொல்லப்பட்டார். அவரின் உயிருக்கு குறைந்து மதிப்பே இருப்பதாக அதிகாரி ஆடரர் கூறுகிறார். 20 வயதில் இங்கு வந்த என் அப்பாவை நினைத்துப் பார்த்தேன். புலம்பெயர்ந்து வந்த ஒவ்வொரு இந்தியரின் உயிருக்கும் எல்லையற்ற மதிப்பு உள்ளது" என்றார்.

இதுகுறித்து இந்தியா வம்சாவளி எம்.பி. பிரமிளா ஜெயபால் குறிப்பிடுகையில், "இது பயங்கரமான சம்பவம். ஜானவி கந்துலாவின் குடும்பத்திற்கு நீதி கிடைக்க வேண்டும். இதில், சம்பந்தப்பட்டவர்கள் பொறுப்பேற்க வேண்டும்" என்றார்.
 
இந்த விவகாரத்தை கையில் எடுத்த இந்திய தூதரகம், அமெரிக்க அரசிடம் முறையிட்டது. ஜானவியின் மரணத்திற்கு காரணமானவர்கள் மீதும், வீடியோவில் கேலி செய்தவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க தூதரகம் சார்பில் வலியுறுத்தப்பட்டது.

சான் பிரான்சிஸ்கோவில் உள்ள இந்திய துணை தூதரகம், இதுகுறித்து எக்ஸ் சமூக வலைதளத்தில் குறிப்பிடுகையில், "சியாட்டிலில் ஜனவரி மாதம் நடந்த சாலை விபத்தில் ஜானவி கந்துலாவின் மரணத்தை கையாண்ட விதம் தொடர்பான சமீபத்திய செய்திகள் கவலையளிக்கின்றன.

சியாட்டில் மற்றும் வாஷிங்டனில் உள்ள உள்ளூர் அதிகாரிகளிடமும், வாஷிங்டன் டிசியில் உள்ள மூத்த அதிகாரிகளிடமும், இந்த துயரமான வழக்கில் தொடர்புடையவர்கள் மீது முழுமையான விசாரணை நடத்த வேண்டும். நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரியுள்ளோம்" என பதிவிடப்பட்டுள்ளது.

About the author சுதர்சன்

Rookie Journalist. Writes on National, International, Politics, Human rights and Judiciary. Covered 2019 General Election, Apex Court Ayodhya judgement, 2021 Five state election, Pegasus etc.  
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

திருப்பரங்குன்றம்: தமிழக அரசு அனுமதி மறுத்ததற்கு இது தான் காரணம்.! ஆதாரத்துடன் பதிலடி கொடுத்த ரகுபதி
திருப்பரங்குன்றம்: தமிழக அரசு அனுமதி மறுத்ததற்கு இது தான் காரணம்.! ஆதாரத்துடன் பதிலடி கொடுத்த ரகுபதி
Thiruparankundram: பற்றி எரியும் திருப்பரங்குன்றம்.. நயினார் நாகேந்திரன் கைது.. தீபமேற்றும் விவகாரத்தில் திருப்பம்!
Thiruparankundram: பற்றி எரியும் திருப்பரங்குன்றம்.. நயினார் நாகேந்திரன் கைது.. தீபமேற்றும் விவகாரத்தில் திருப்பம்!
Thiruparankundram Issue: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இன்றே தீபமேற்ற வேண்டும்.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அதிரடி உத்தரவு!
Thiruparankundram Issue: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இன்றே தீபமேற்ற வேண்டும்.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அதிரடி உத்தரவு!
புதுச்சேரியில் அதிர்ச்சி! போலி மாத்திரை தொழிற்சாலைகள் தொடர் கண்டுபிடிப்பு: ரூ.30 கோடி மதிப்பிலான மருந்துகள் பறிமுதல்!
புதுச்சேரியில் அதிர்ச்சி! போலி மாத்திரை தொழிற்சாலைகள் தொடர் கண்டுபிடிப்பு: ரூ.30 கோடி மதிப்பிலான மருந்துகள் பறிமுதல்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Thiruparankundram Dheepam|”இன்னும் சில நிமிடங்களில் தீபம்”144 ரத்து போய் பாதுகாப்பு குடுங்க!-நீதிபதி
எகிறும் டாலர்.. சரியும் ரூபாய்.. என்ன பண்ண போறீங்க நிர்மலா? | Modi | Rupees VS Dollar
எச்சில் இலை முதல் திருப்பரங்குன்றம் வரை!சர்ச்சைகளும்.. பரபரப்பும்..யார் இந்த நீதிபதி GR சுவாமிநாதன்? | GR Swaminathan
டிட்வா கதை ஓவர்?மழை நிற்குமா? தொடருமா?வானிலை நிலவரம் என்ன? | Ditwah Cyclone TN Rain
திருப்பரங்குன்றம் தீப பதட்டம் தீபத்தூணில் ஏற்றப்படாத தீபம் நடந்தது என்ன? முழு விவரம் | Madurai | Dheepam 2025 Thiruparankundram Issue |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
திருப்பரங்குன்றம்: தமிழக அரசு அனுமதி மறுத்ததற்கு இது தான் காரணம்.! ஆதாரத்துடன் பதிலடி கொடுத்த ரகுபதி
திருப்பரங்குன்றம்: தமிழக அரசு அனுமதி மறுத்ததற்கு இது தான் காரணம்.! ஆதாரத்துடன் பதிலடி கொடுத்த ரகுபதி
Thiruparankundram: பற்றி எரியும் திருப்பரங்குன்றம்.. நயினார் நாகேந்திரன் கைது.. தீபமேற்றும் விவகாரத்தில் திருப்பம்!
Thiruparankundram: பற்றி எரியும் திருப்பரங்குன்றம்.. நயினார் நாகேந்திரன் கைது.. தீபமேற்றும் விவகாரத்தில் திருப்பம்!
Thiruparankundram Issue: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இன்றே தீபமேற்ற வேண்டும்.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அதிரடி உத்தரவு!
Thiruparankundram Issue: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இன்றே தீபமேற்ற வேண்டும்.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அதிரடி உத்தரவு!
புதுச்சேரியில் அதிர்ச்சி! போலி மாத்திரை தொழிற்சாலைகள் தொடர் கண்டுபிடிப்பு: ரூ.30 கோடி மதிப்பிலான மருந்துகள் பறிமுதல்!
புதுச்சேரியில் அதிர்ச்சி! போலி மாத்திரை தொழிற்சாலைகள் தொடர் கண்டுபிடிப்பு: ரூ.30 கோடி மதிப்பிலான மருந்துகள் பறிமுதல்!
அண்ணா திமுகவா.? அமித்ஷா திமுக வா.? இபிஎஸ்யை போட்டுத்தாக்கும் அமைச்சர் ரகுபதி
அண்ணா திமுகவா.? அமித்ஷா திமுக வா.? இபிஎஸ்யை போட்டுத்தாக்கும் அமைச்சர் ரகுபதி
Top Searched Travel Destinations: 2025-ல் கூகுள் பயண தேடலில் முதலிடம் பிடித்தது எது? - அட நம்ம புதுச்சேரிக்கு எந்த இடம் தெரியுமா?
2025-ல் கூகுள் பயண தேடலில் முதலிடம் பிடித்தது எது? - அட நம்ம புதுச்சேரிக்கு எந்த இடம் தெரியுமா?
Ration Shop: வீடு தேடி வரும் ரேஷன் பொருட்கள்.! பொதுமக்கள் எதிர்பார்த்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு
வீடு தேடி வரும் ரேஷன் பொருட்கள்.! பொதுமக்கள் எதிர்பார்த்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு
Tatkal Ticket Booking: கவுண்டர்களில் தட்கல் முன்பதிவு செய்ய ஓடிபி அவசியம்.. கொதிக்கும் பயணிகள்!
Tatkal Ticket Booking: கவுண்டர்களில் தட்கல் முன்பதிவு செய்ய ஓடிபி அவசியம்.. கொதிக்கும் பயணிகள்!
Embed widget