![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
MRSAM Missile Test: ஒடிசாவில் வான் பாதுகாப்பு ஏவுகணைச் சோதனை வெற்றி - டிஆர்டிஓ தகவல்
இந்த அமைப்பு இந்திய ராணுவத்தின் ஒரு பகுதியாகும். சோதனையில், ஏவுகணை மிக தொலைவில் உள்ள இலக்கை நேரடியாக தாக்கியதாக டிஆர்டிஓ அதிகாரிகள் தெரிவித்தனர்.
![MRSAM Missile Test: ஒடிசாவில் வான் பாதுகாப்பு ஏவுகணைச் சோதனை வெற்றி - டிஆர்டிஓ தகவல் India today successfully test fired Medium Range Surface to Air Missile air defence system off coast Balasore, Odisha: DRDO officials MRSAM Missile Test: ஒடிசாவில் வான் பாதுகாப்பு ஏவுகணைச் சோதனை வெற்றி - டிஆர்டிஓ தகவல்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/03/27/b12525c3a2471a3afe4b28b2352c28cf_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
ஒடிசாவில் நடைபெற்ற வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்பின் சோதனை வெற்றி பெற்றதாக பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆர்டிஓ) அறிவித்துள்ளது. பாலசோர் கடற்கரையில் நடைபெற்ற சோதனையில் ஏவுகணை மிக தொலைவில் உள்ள இலக்கை நேரடியாக தாக்கியதாக டிஆர்டிஓ தெரிவித்துள்ளது. நிலத்தில் இருந்து ஏவிய வான்பாதுகாப்பு அமைப்பு ஏவுகணை மிகத் தொலைவிலுள்ள இலக்கை வெற்றிக்கரமாக தாக்கியது.
India today successfully carried out the test firing of the Medium Range Surface to Air Missile air defence system off the coast of Balasore, Odisha: DRDO officials pic.twitter.com/xfqTy4vvKL
— ANI (@ANI) March 27, 2022
“எம்ஆர்எஸ்ஏஎம்-ஆர்மி ஏவுகணை அமைப்பு விமானம், ஒடிசாவின் ஐடிஆர் பாலசோரில் இருந்து சுமார் 10.30 மணி நேரத்தில் நீண்ட தூரத்தில் அதிவேக வான் இலக்கை இடைமறித்து சோதனை செய்யப்பட்டது. இலக்கை ஏவுகணை நேரடியாக தாக்கி அழித்துவிட்டது” என்று டிஆர்டிஓ தெரிவித்துள்ளது.
இந்த அமைப்பு இந்திய ராணுவத்தின் ஒரு பகுதியாகும். சோதனையில், ஏவுகணை மிக தொலைவில் உள்ள இலக்கை நேரடியாக தாக்கியதாக டிஆர்டிஓ அதிகாரிகள் தெரிவித்தனர்.
The system is part of the Indian Army. In the test, the missile secured a direct hit at the target at a very far off distance.@DRDO_India @adgpi
— Prasar Bharati News Services पी.बी.एन.एस. (@PBNS_India) March 27, 2022
கடந்த ஜனவரி 20 அன்று, பிரம்மோஸ் சூப்பர்சோனிக் குரூஸ் ஏவுகணை பல புதிய உள்நாட்டு அமைப்புகளை சரிபார்க்கும் வகையில் ஒடிசா கடற்கரையில் உள்ள ஒருங்கிணைந்த சோதனை ரேஞ்சில் (ITR) சோதனை செய்யப்பட்டது.
“அதிகரித்த உள்நாட்டு உள்ளடக்கம் மற்றும் மேம்பட்ட செயல்திறன் கொண்ட பிரம்மோஸ் சூப்பர்சோனிக் கப்பல் ஏவுகணை ஜனவரி 20 அன்று ஒடிசா கடற்கரையில் உள்ள சந்திப்பூரில் உள்ள ஒருங்கிணைந்த சோதனைத் தளத்தில் இருந்து காலை 10.30 மணிக்கு வெற்றிகரமாகச் சோதனை செய்யப்பட்டது. டிஆர்டிஓ குழுக்களுடன் நெருங்கிய ஒருங்கிணைப்புடன் பிரம்மோஸ் ஏரோஸ்பேஸ் இந்த ஏவுதலை நடத்தியது” என்று டிஆர்டிஓ கூறியது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)