மேலும் அறிய

IND - AFG: இனி சைலண்ட் ரூட் செட் ஆகாது - தாலிபன் அரசுடன் இந்தியா பேச்சுவார்த்தை, கூட்டாளிகளை பலப்படுத்த முடிவு

IND - AFG Speech: ஆஃப்கானிஸ்தான் தாலிபன் அரசின் வெளியுறவு அமைச்சருடன் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் முதல்முறையாக பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

IND - AFG Speech: இந்தியாவால் அங்கீகரிக்கப்படாத தாலிபன் அரசு, பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

ஆஃப்கானிஸ்தான் உடன் பேச்சுவார்த்தை: 

பிராந்திய அரசியலில் ஒரு மைல்கல்லான நடவடிக்கையாக, வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், ஆஃப்கானிஸ்தானில் நடைபெற்றும் வரும் தாலிபன் அரசின் வெளியுறவு அமைச்சர் அமிர் கான் முத்தாகி உடன் தொலைபேசி வாயிலாக பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். தாலிபன் அரசுடன் இந்தியா தரப்பில் நடைபெறும் முதல் அமைச்சர்மட்டத்திலான பேச்சுவார்த்தை இதுவாகும். பஹல்காமில் 26 பேர் கொல்லப்பட்ட தீவிரவாத தாக்குதலுக்கு, தாலிபன் அரசாங்கம் கண்டனம் தெரிவித்த சில நாட்களுக்குப் பிறகு இந்த தொலைபேசி உரையாடல் அரங்கேறியுள்ளது. அமெரிக்க ராணுவம் வெளியேறியதை தொடர்ந்து ஆஃப்கானிஸ்தானில் அமைந்த தாலிபன்கள் ஆட்சியை, இந்தியா தற்போது வரை மக்களாட்சியாக அங்கீகரிக்காதது குறிப்பிடத்தக்கது.

தாலிபன்கள் உடன் பேச்சுவார்த்தை:

தொலைபேசி உரையாரல் குறித்து அமைச்சர் ஜெய்சங்கர் டிவிட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டார். அதில், “ ஆஃப்கானிஸ்தான் வெலியுறவு அமைச்சர் முத்தாகி உடன் நல்ல் உரையாடல் நடைபெற்றது. பஹல்காம் தீவிரவாத தாக்குதலை கண்டித்த அவர்களது முடிவை நான் மனமார பாராட்டுகிறேன். இந்த பேச்சுவார்த்தையின்போது, “இந்தியாவுடனான ஆஃப்கான் மக்களின் நீண்டகால உறவை குறிப்பிட்டதோடு, வளர்ச்சிக்கான தேவைக்கு இந்தியாவின் ஆதரவு தேவை” என அவர் குறிப்பிட்டார். இணைந்து செயல்படுவதை முன்னோக்கி கொண்டு செல்வதற்கான வழிகள் மற்றும் வாய்ப்புகள் குறித்து நாங்கள் விவாதித்தோம்” என ஜெய்சங்கர் குறிப்பிட்டுள்ளார். 

வணிகத்தை மேம்படுத்த திட்டம்:

தொலைபேசி உரையாடலின் போது இருநாடுகளுக்கு இடையேயான வர்த்தகத்தை மேம்படுத்துவது, இந்திய சிறைகளில் உள்ள ஆஃப்கான் கைதிகளை விடுவிப்பது மற்றும் சபஹர் துறைமுகத்தை மேம்படுத்துவது உள்ளிட்ட சில முக்கிய கோரிக்கைகள் தாலிபன் அரசு தரப்பில் முன்வைக்கப்பட்டுள்ளது. இந்தியா மற்றும் ஆஃப்கானிஸ்தான் நாடுகள் எல்லையை கூட பகிர்ந்து வருகிறது. ஆனால், பாகிஸ்தானால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காஷ்மீரில் அந்த எல்லை சிக்கியுள்ளது. எனவே இருநாடுகளுக்கு இடையேயான வணிகத்தை மேம்படுத்துவதற்கு, ஈரானில் உள்ள சபஹர் துறைமுகம் மட்டுமே ஒரு வழியாக கருதப்படுகிறது.

நட்பை பலப்படுத்த திட்டம்:

கடந்த 2021ம் ஆண்டு ஆப்கானிச்தானில் தாலிபன் அரசு அமைந்தது முதலே, இருநாட்டு உறவை வலுப்படுத்தும் விவகாரத்தில் இந்தியா தீவிரமாக பணியாற்றி வருகிறது. இணைந்து பணியாற்றுவது குறித்து அதிகாரிகள் மட்டத்தில் பல்வேறு பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. இருதரப்பு உறவும் தற்போது சுமூக நிலையை எட்டாவிட்டாலும், ஆஃப்கான் மக்களுக்கான மனிதாபிமான உதவிகளை செய்வதில் இந்தியா முனைப்பு காட்டி வருகிறது. ராஜாங்க ரீதியிலான நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. பஹல்காம் தாக்குதலால் இந்தியா பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவியபோது, இந்திய தூதரக அதிகாரில் பிரகாஷ் ஆனந்த் முத்தாகியை இஸ்லாமாபாத்தில் நேரில் சந்தித்தது குறிப்பிடத்தக்கது.

நம்பிக்கையை வளர்க்கும் நடவடிக்கை:

அண்மைக்காலமாக தாலிபன்களின் நம்பிக்கையை வளர்க்கும் விதமாக, நாட்டின் டெல்லி, மும்பை, மற்றும் ஐதராபாத் ஆகிய பகுதிகளில் உள்ள அவர்களது தூதரகங்களில் நிர்வாக பணிகளை மேம்படுத்த இந்திய அரசு அனுமதித்துள்ளது. கல்வி, வணிகம் மற்றும் மருத்துவம் போன்ற பல்வேறு காரணங்களுக்காக இந்தியா வரும், ஆஃப்கான் மக்களுக்கு தேவையான உதவிகள் இந்த தூதரகங்கள் மூலம் செய்யப்படுகின்றன.  மனிதாபிமான உதவியைப் பொறுத்தவரை, டிசம்பர் 2024 வரை கடந்த சில ஆண்டுகளில் 50,000 மெட்ரிக் டன்களுக்கும் அதிகமான கோதுமை, 300 டன் மருந்துகள், 27 டன் பூகம்ப நிவாரண உதவி, 40,000 லிட்டர் பூச்சிக்கொல்லிகள், 100 மில்லியன் போலியோ டோஸ்கள், 1.5 மில்லியன் டோஸ் கோவிட் தடுப்பூசி, போதைப்பொருள் ஒழிப்பு திட்டத்திற்கான 11,000 யூனிட் சுகாதார கருவிகள், 500 யூனிட் குளிர்கால ஆடைகள் மற்றும் 1.2 டன் எழுதுபொருள் கருவிகள் ஆகியவற்றை உள்ளடக்கிய பல கப்பல்களை இந்தியா ஆஃப்கானிஸ்தானிற்கு அனுப்பியுள்ளது.

பாகிஸ்தான் மற்றும் சீனா உடனான இந்தியாவின் உறவு தொடர்ந்து மோசமடைந்து வரும் நிலையில், மற்றொரு அண்டை நாடான ஆஃப்கானிஸ்தான் உடன் இந்தியா நெருக்கும் காட்ட தொட்ங்கியுள்ளது.இது புவிசார் அரசியலில் மிக முக்கியத்துவம் வாய்ந்த நடவடிக்கையாக கருதப்படுகிறது.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Bihar Exit Poll: தேர்தல் கருத்து கணிப்பு பலிக்குமா.?  2015, 2020, 2024ஆம் ஆண்டில் சொன்னது என்ன.? நடந்தது என்ன.?
மீண்டும் ஆட்சியில் பாஜக.! கருத்து கணிப்பு பலிக்குமா.? சொன்னதும் இதுவரை நடந்ததும் என்ன.?
என் கூட இருந்தவரு முதல்வர் ஆகிட்டாரு.. என்னால் ஒரு கவுன்சிலர் கூட  ஆக முடியவில்லை- கதறும் கே.டி .ராகவன்
என் கூட இருந்தவரு முதல்வர் ஆகிட்டாரு.. என்னால் ஒரு கவுன்சிலர் கூட ஆக முடியவில்லை- கதறும் கே.டி .ராகவன்
UPSC Mains 2025 Result: தலைநிமிரும் தமிழ்நாடு; யுபிஎஸ்சி முதன்மைத் தேர்வில் உயர்ந்த தேர்ச்சி- எத்தனை பேர் தெரியுமா?
UPSC Mains 2025 Result: தலைநிமிரும் தமிழ்நாடு; யுபிஎஸ்சி முதன்மைத் தேர்வில் உயர்ந்த தேர்ச்சி- எத்தனை பேர் தெரியுமா?
Modi TN Visit : ‘ஆபரேஷன் TN’ கோவைக்கு வரும் பிரதமர் மோடி ; சந்திக்கப்போவது யாரை..?
‘ஆபரேஷன் TN’ கோவைக்கு வரும் பிரதமர் மோடி ; சந்திக்கப்போவது யாரை..?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ஆற்றில் குதிக்க ஓடிய திருநங்கை! காப்பாற்றிய பத்திரிகையாளர்கள்! போராட்டத்தின் பின்னணி?
அரியணை ஏறும் பாஜக? ஷாக்கில் தேஜஸ்வி, ராகுல் வெளியான EXIT POLL | Bihar Exit Poll 2025
குடும்பத்தை பிரித்த ஆதவ் தூக்கி எறிந்த திமுக, விசிக விஜய்யை எச்சரிக்கும் சார்லஸ் | Charles Martin on Aadhav Arjuna
வெடித்து சிதறிய சிலிண்டர்கள் தீக்கிரையான டிப்பர் லாரி பரபரக்கும் அரியலூர் பகீர் வீடியோ | Ariyalur Gas Cylinder Lorry Blast
Terrorist Umar Mohammed Profile| பாகிஸ்தானின் SLEEPER CELL பழிதீர்க்க வந்த பயங்கரவாதியார் இந்த உமர்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Bihar Exit Poll: தேர்தல் கருத்து கணிப்பு பலிக்குமா.?  2015, 2020, 2024ஆம் ஆண்டில் சொன்னது என்ன.? நடந்தது என்ன.?
மீண்டும் ஆட்சியில் பாஜக.! கருத்து கணிப்பு பலிக்குமா.? சொன்னதும் இதுவரை நடந்ததும் என்ன.?
என் கூட இருந்தவரு முதல்வர் ஆகிட்டாரு.. என்னால் ஒரு கவுன்சிலர் கூட  ஆக முடியவில்லை- கதறும் கே.டி .ராகவன்
என் கூட இருந்தவரு முதல்வர் ஆகிட்டாரு.. என்னால் ஒரு கவுன்சிலர் கூட ஆக முடியவில்லை- கதறும் கே.டி .ராகவன்
UPSC Mains 2025 Result: தலைநிமிரும் தமிழ்நாடு; யுபிஎஸ்சி முதன்மைத் தேர்வில் உயர்ந்த தேர்ச்சி- எத்தனை பேர் தெரியுமா?
UPSC Mains 2025 Result: தலைநிமிரும் தமிழ்நாடு; யுபிஎஸ்சி முதன்மைத் தேர்வில் உயர்ந்த தேர்ச்சி- எத்தனை பேர் தெரியுமா?
Modi TN Visit : ‘ஆபரேஷன் TN’ கோவைக்கு வரும் பிரதமர் மோடி ; சந்திக்கப்போவது யாரை..?
‘ஆபரேஷன் TN’ கோவைக்கு வரும் பிரதமர் மோடி ; சந்திக்கப்போவது யாரை..?
Trump H1B Visa: ”அமெரிக்காட்ட அவ்ளோ திறமை இல்லப்பா” H1B விசா.. உண்மையை போட்டுடைத்த ட்ரம்ப்
Trump H1B Visa: ”அமெரிக்காட்ட அவ்ளோ திறமை இல்லப்பா” H1B விசா.. உண்மையை போட்டுடைத்த ட்ரம்ப்
Ramadoss PMK: முடக்கப்படுமா மாம்பழம் சின்னம்.? ராமதாஸ் எடுத்த முடிவால் அலறும் பாமக நிர்வாகிகள்
முடக்கப்படுமா மாம்பழம் சின்னம்.? ராமதாஸ் எடுத்த முடிவால் அலறும் பாமக நிர்வாகிகள்
TVK VIJAY: ஆட்சி அதிகாரத்தைப் பகல் கனவாக்கப் போகும் ஒரு ‘பக்கா மாஸ்’ கட்சி வந்திருக்கு- விஜய்
ஆட்சி அதிகாரத்தைப் பகல் கனவாக்கப் போகும் ஒரு ‘பக்கா மாஸ்’ கட்சி வந்திருக்கு- விஜய்
UPSC Exam Results: யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் வெளியீடு; 2736 பேர் தேர்ச்சி- காண்பது எப்படி?
UPSC Exam Results: யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் வெளியீடு; 2736 பேர் தேர்ச்சி- காண்பது எப்படி?
Embed widget