மேலும் அறிய

இந்தியாவிற்கு, எஸ்பிஐ போன்று மேலும் வங்கிகள் தேவை: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

பொருளாதாரம் மற்றும் தொழில்துறையில் மாறிவருகிற தேவைகளை பூர்த்தி செய்வதற்காக வங்கிகளின் எண்ணிக்கையை  அதிகரிக்க வேண்டும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

பொருளாதாரத்தில் மாறி வரும் தேவைகளுக்கேற்ப ஸ்டேட் வங்கியைப் போன்று இந்தியாவுக்கு மேலும் நான்கு முதல் ஐந்து வங்கிகள் தேவைப்படும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். 

மும்பையில் இன்று இந்திய வங்கிகள் சங்கத்தின் 74 வது ஆண்டு பொதுக் கூட்டம் நடைபெற்றது. அதில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சிறப்புரையாற்றினார். கொரோனா பெருந்தொற்று காலத்தில் நாட்டிற்கு சேவையாற்றி உயிரிழந்த வங்கிப் பணியாளர்களுக்கு அஞ்சலி செலுத்தி அவர் தனது உரையைத் தொடங்கினார். 

கொரோனாவிற்குப் பிந்தைய சூழலில்  மற்ற வளரும் நாடுகளை விட இந்தியாவில் வங்கிகளின் டிஜிட்டல் மயமாக்கல் மிகவும் வெற்றிகரமாக ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது என்றும் அவர் தெரிவித்தார். அதே சமயம், வங்கி அமைப்பின் தற்போதைய மற்றும் எதிர்கால சவால்களை சந்திக்க எஸ்பிஐ அளவிலான குறைந்தது நான்கு வங்கிகள் தேவை என்றும் தெரிவித்தார். பொருளாதாரம் மற்றும் தொழில்துறையில் மாறிவருகிற தேவைகளை பூர்த்தி செய்வதற்காகவும் வங்கிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும், அதற்காக ஸ்டேட் வங்கி போன்ற வங்கிகள் இந்தியாவுக்கு தேவைப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்திய வங்கிகளின் டிஜிட்டல் மயமாக்கலின் காரணமாக  சிறு, நடுத்தர மற்றும் பெரிய கணக்கு வைத்திருப்பவர்களுக்கு பணப்பரிமாற்றம் செய்ய அரசுக்கு பெருமளவில் உதவியது என்று  அவர் பாராட்டு தெரிவித்தார். டிஜிட்டல் மயமாக்கலை முழுமனதுடன் ஏற்றுக்கொள்ள வேண்டியதன் அவசியத்தை அவர் அடிக்கோடிட்டு பேசினார். அதற்காக இந்திய வங்கிகளுக்கு புதிய தொழில்நுட்பங்கள் தேவைப்படுவதையும் அவற்றின் வரையறைகள் இந்தியாவிற்கு மிகவும் தனித்துவமானதாக இருக்க வேண்டியதன் அவசியத்தையும் குறிப்பிட்டார். 


இந்தியாவிற்கு, எஸ்பிஐ போன்று மேலும் வங்கிகள் தேவை: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

பரபரப்பான பொருளாதார நடவடிக்கைகள் இருந்த  போதிலும், பல கிராமப்புறங்களில் இன்னும் வங்கி வசதிகள் இல்லை என்ற உண்மையை சுட்டிக்காட்டினார். அதுபோன்ற பகுதிகளில் வங்கிகளின் கிளைகள் உருவாக்க வேண்டும், அதேபோல வங்கிகளின் கிளைகள் இல்லாத இடங்களில், நிதி பரிவர்த்தனைகள் டிஜிட்டல் கட்டமைப்பின் மூலம் நடைபெறுவதை உறுதின் செய்ய வேண்டும் என்றும் தெரிவித்தார். 

கொரோனா காலத்தில் பல்வேறு வங்கிகளின் இணைப்பின் காரணமாக வங்கிப் பணியாளர்கள் பல சவால்களை எதிர்க்கொண்டதாக குறிப்பிட்டார். வங்கிகளின் ஒருங்கிணைப்பு வாடிக்கையாளர்களுக்கு எந்த சிரமத்தையும் ஏற்படுத்தவில்லை  என்பதை உறுதி செய்ததற்காக வங்கிப் பணியாளர்களைப் பாராட்டுவதாக தெரிவித்தார்.  தொடர்ந்து, வங்கிகளின் இணைப்பு எனும் அரசின் நடவடிக்கை வெற்றியடைய வங்கிப் பணியாளர்கள் உதவியதற்கு தனது பாராட்டினை தெரிவித்தார். கொரோனா காலத்தில் நாட்டில் தொலைதூர கிராமங்களில் இருப்பவர்களுக்கும்  உதவ வங்கிகள் முன்வந்ததையும் குறிப்பிட்டு பேசினார்.

இதையும் படிக்க:

நதிகள் தினம்... பிரதமர் மோடி குறிப்பிட்டு பேசிய திருவண்ணாமலை ஆறு.. அப்படி என்ன சிறப்பு?

Cyclone Gulab Landfall : இன்று கரையைக் கடக்கவுள்ள 'குலாப் புயல்'! தமிழக மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை.. விவரம்!

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
6483
Active
15945
Recovered
113
Deaths
Last Updated: Wed 18 June, 2025 at 09:41 pm | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

TVK Vijay: ”நான் இளைய காமராஜரா?.. 2026 பற்றி பேசாதீங்க!”  கல்வி விருது விழாவில் விஜயின் எச்சரிக்கை
TVK Vijay: ”நான் இளைய காமராஜரா?.. 2026 பற்றி பேசாதீங்க!” கல்வி விருது விழாவில் விஜயின் எச்சரிக்கை
Ahmedabad Plane Crash: 10 நிமிடம் தான்.. லண்டன் விமானத்தை தவறவிட்ட பெண்.. உயிர் தப்பியது எப்படி?
Ahmedabad Plane Crash: 10 நிமிடம் தான்.. லண்டன் விமானத்தை தவறவிட்ட பெண்.. உயிர் தப்பியது எப்படி?
Ahmedabad Plane Crash: தவறு நடந்தது எங்கே? விமானம் கீழே விழுந்து நொறுங்கியது எப்படி? வல்லுநர்கள் விளக்கும் காரணம்
Ahmedabad Plane Crash: தவறு நடந்தது எங்கே? விமானம் கீழே விழுந்து நொறுங்கியது எப்படி? வல்லுநர்கள் விளக்கும் காரணம்
Israel Strikes Iran: ஈரானின் இதயத்தில் அடித்த இஸ்ரேல் - ”தம்பி எங்களுக்கு சம்மந்தமில்லை” ஓடி வந்த அமெரிக்கா
Israel Strikes Iran: ஈரானின் இதயத்தில் அடித்த இஸ்ரேல் - ”தம்பி எங்களுக்கு சம்மந்தமில்லை” ஓடி வந்த அமெரிக்கா
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”நமக்கு எதுக்கு அதிக சீட்” வார்னிங் கொடுத்த அமித்ஷா! EPS-ஐ வைத்து மோடியின் ப்ளான்பூட்டியிருந்த வீட்டில் தீ விபத்து சிலிண்டர் வெடித்ததால் பரபரப்பு பகீர் கிளப்பும் காட்சி Coimbatore Cylinder Blastசாப்பிட்டபடி பஸ் ஒட்டிய DRIVER பீதியில் உறைந்த பயணிகள்! ஆம்னி நிறுவனம் அதிரடி! | Careless Driving

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vijay: ”நான் இளைய காமராஜரா?.. 2026 பற்றி பேசாதீங்க!”  கல்வி விருது விழாவில் விஜயின் எச்சரிக்கை
TVK Vijay: ”நான் இளைய காமராஜரா?.. 2026 பற்றி பேசாதீங்க!” கல்வி விருது விழாவில் விஜயின் எச்சரிக்கை
Ahmedabad Plane Crash: 10 நிமிடம் தான்.. லண்டன் விமானத்தை தவறவிட்ட பெண்.. உயிர் தப்பியது எப்படி?
Ahmedabad Plane Crash: 10 நிமிடம் தான்.. லண்டன் விமானத்தை தவறவிட்ட பெண்.. உயிர் தப்பியது எப்படி?
Ahmedabad Plane Crash: தவறு நடந்தது எங்கே? விமானம் கீழே விழுந்து நொறுங்கியது எப்படி? வல்லுநர்கள் விளக்கும் காரணம்
Ahmedabad Plane Crash: தவறு நடந்தது எங்கே? விமானம் கீழே விழுந்து நொறுங்கியது எப்படி? வல்லுநர்கள் விளக்கும் காரணம்
Israel Strikes Iran: ஈரானின் இதயத்தில் அடித்த இஸ்ரேல் - ”தம்பி எங்களுக்கு சம்மந்தமில்லை” ஓடி வந்த அமெரிக்கா
Israel Strikes Iran: ஈரானின் இதயத்தில் அடித்த இஸ்ரேல் - ”தம்பி எங்களுக்கு சம்மந்தமில்லை” ஓடி வந்த அமெரிக்கா
Skoda Octavia RS: கிளாஸ் & மாஸ் ஸ்கோடா - குஷக், ஸ்லாவியா 2.0 ஆன் தி வே - ஆக்டேவியா கார் பந்தயம் அடிக்குமா?
Skoda Octavia RS: கிளாஸ் & மாஸ் ஸ்கோடா - குஷக், ஸ்லாவியா 2.0 ஆன் தி வே - ஆக்டேவியா கார் பந்தயம் அடிக்குமா?
Ahmedabad Plane Crash: விமானத்தில்..யாரையும் காப்பாற்ற முடியாது ஏன் தெரியுமா? கருகிப்போன லண்டனில் செட்டில் ஆகும் கனவு
Ahmedabad Plane Crash: விமானத்தில்..யாரையும் காப்பாற்ற முடியாது ஏன் தெரியுமா? கருகிப்போன லண்டனில் செட்டில் ஆகும் கனவு
ஆயிரத்தில் ஒருவன்.. விமான விபத்தில் உயிர் தப்பிய அந்த ஒரு நபர்.. பதற்றத்துடன் நடந்து செல்லும் காட்சி 
ஆயிரத்தில் ஒருவன்.. விமான விபத்தில் உயிர் தப்பிய அந்த ஒரு நபர்.. யார் இந்த ரமேஷ்?
Musk Spoke to Trump: பஞ்சாயத்து முடிஞ்சுடுச்சு, எல்லாரும் கிளம்புங்க; ட்ரம்ப்பிடம் பேசிய மஸ்க் - என்ன கூறினார் தெரியுமா.?
பஞ்சாயத்து முடிஞ்சுடுச்சு, எல்லாரும் கிளம்புங்க; ட்ரம்ப்பிடம் பேசிய மஸ்க் - என்ன கூறினார் தெரியுமா.?
Embed widget