மேலும் அறிய

இந்தியாவிற்கு, எஸ்பிஐ போன்று மேலும் வங்கிகள் தேவை: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

பொருளாதாரம் மற்றும் தொழில்துறையில் மாறிவருகிற தேவைகளை பூர்த்தி செய்வதற்காக வங்கிகளின் எண்ணிக்கையை  அதிகரிக்க வேண்டும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

பொருளாதாரத்தில் மாறி வரும் தேவைகளுக்கேற்ப ஸ்டேட் வங்கியைப் போன்று இந்தியாவுக்கு மேலும் நான்கு முதல் ஐந்து வங்கிகள் தேவைப்படும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். 

மும்பையில் இன்று இந்திய வங்கிகள் சங்கத்தின் 74 வது ஆண்டு பொதுக் கூட்டம் நடைபெற்றது. அதில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சிறப்புரையாற்றினார். கொரோனா பெருந்தொற்று காலத்தில் நாட்டிற்கு சேவையாற்றி உயிரிழந்த வங்கிப் பணியாளர்களுக்கு அஞ்சலி செலுத்தி அவர் தனது உரையைத் தொடங்கினார். 

கொரோனாவிற்குப் பிந்தைய சூழலில்  மற்ற வளரும் நாடுகளை விட இந்தியாவில் வங்கிகளின் டிஜிட்டல் மயமாக்கல் மிகவும் வெற்றிகரமாக ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது என்றும் அவர் தெரிவித்தார். அதே சமயம், வங்கி அமைப்பின் தற்போதைய மற்றும் எதிர்கால சவால்களை சந்திக்க எஸ்பிஐ அளவிலான குறைந்தது நான்கு வங்கிகள் தேவை என்றும் தெரிவித்தார். பொருளாதாரம் மற்றும் தொழில்துறையில் மாறிவருகிற தேவைகளை பூர்த்தி செய்வதற்காகவும் வங்கிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும், அதற்காக ஸ்டேட் வங்கி போன்ற வங்கிகள் இந்தியாவுக்கு தேவைப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்திய வங்கிகளின் டிஜிட்டல் மயமாக்கலின் காரணமாக  சிறு, நடுத்தர மற்றும் பெரிய கணக்கு வைத்திருப்பவர்களுக்கு பணப்பரிமாற்றம் செய்ய அரசுக்கு பெருமளவில் உதவியது என்று  அவர் பாராட்டு தெரிவித்தார். டிஜிட்டல் மயமாக்கலை முழுமனதுடன் ஏற்றுக்கொள்ள வேண்டியதன் அவசியத்தை அவர் அடிக்கோடிட்டு பேசினார். அதற்காக இந்திய வங்கிகளுக்கு புதிய தொழில்நுட்பங்கள் தேவைப்படுவதையும் அவற்றின் வரையறைகள் இந்தியாவிற்கு மிகவும் தனித்துவமானதாக இருக்க வேண்டியதன் அவசியத்தையும் குறிப்பிட்டார். 


இந்தியாவிற்கு, எஸ்பிஐ போன்று மேலும் வங்கிகள் தேவை: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

பரபரப்பான பொருளாதார நடவடிக்கைகள் இருந்த  போதிலும், பல கிராமப்புறங்களில் இன்னும் வங்கி வசதிகள் இல்லை என்ற உண்மையை சுட்டிக்காட்டினார். அதுபோன்ற பகுதிகளில் வங்கிகளின் கிளைகள் உருவாக்க வேண்டும், அதேபோல வங்கிகளின் கிளைகள் இல்லாத இடங்களில், நிதி பரிவர்த்தனைகள் டிஜிட்டல் கட்டமைப்பின் மூலம் நடைபெறுவதை உறுதின் செய்ய வேண்டும் என்றும் தெரிவித்தார். 

கொரோனா காலத்தில் பல்வேறு வங்கிகளின் இணைப்பின் காரணமாக வங்கிப் பணியாளர்கள் பல சவால்களை எதிர்க்கொண்டதாக குறிப்பிட்டார். வங்கிகளின் ஒருங்கிணைப்பு வாடிக்கையாளர்களுக்கு எந்த சிரமத்தையும் ஏற்படுத்தவில்லை  என்பதை உறுதி செய்ததற்காக வங்கிப் பணியாளர்களைப் பாராட்டுவதாக தெரிவித்தார்.  தொடர்ந்து, வங்கிகளின் இணைப்பு எனும் அரசின் நடவடிக்கை வெற்றியடைய வங்கிப் பணியாளர்கள் உதவியதற்கு தனது பாராட்டினை தெரிவித்தார். கொரோனா காலத்தில் நாட்டில் தொலைதூர கிராமங்களில் இருப்பவர்களுக்கும்  உதவ வங்கிகள் முன்வந்ததையும் குறிப்பிட்டு பேசினார்.

இதையும் படிக்க:

நதிகள் தினம்... பிரதமர் மோடி குறிப்பிட்டு பேசிய திருவண்ணாமலை ஆறு.. அப்படி என்ன சிறப்பு?

Cyclone Gulab Landfall : இன்று கரையைக் கடக்கவுள்ள 'குலாப் புயல்'! தமிழக மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை.. விவரம்!

தலைப்பு செய்திகள்

ஓணம் பண்டிகை: சேலம் வழியாக கேரளாவுக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு! தெரிந்துகொள்ளுங்கள் மக்களே!
ஓணம் பண்டிகை: சேலம் வழியாக கேரளாவுக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு! தெரிந்துகொள்ளுங்கள் மக்களே!
சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு: ஆவணி, ஓணம் தரிசனத்திற்கு பக்தர்கள் குவிந்தனர்!
சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு: ஆவணி, ஓணம் தரிசனத்திற்கு பக்தர்கள் குவிந்தனர்!
ஆதார் கார்டு தொலைந்தாலும் கவலையில்லை! வாட்ஸ்அப்பில் நொடியில் டவுன்லோட் செய்யுங்கள்!
ஆதார் கார்டு தொலைந்தாலும் கவலையில்லை! வாட்ஸ்அப்பில் நொடியில் டவுன்லோட் செய்யுங்கள்!
BJP: டீம் 2029..! மொத்தமாக கலைத்து போட்டு தேர்தலுக்கு தயாராகும் பாஜக..! யாருக்கு என்ன பொறுப்பு? இன்று வெளியீடு
டீம் 2029..! மொத்தமாக கலைத்து போட்டு தேர்தலுக்கு தயாராகும் பாஜக..! யாருக்கு என்ன பொறுப்பு? இன்று வெளியீடு

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN GOVT Announcements : 20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
Crop Loan Waivers : தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
TVK vs DMK:
TVK vs DMK: "உதயநிதிக்கு கண்ணியத்தை கற்றுக்கொடுங்கள்.." ஓ.பன்னீர்செல்வத்துக்கு அமைச்சர் ரமேஷ் அட்வைஸ்
வெட்கக்கேடு, மோசம்; திருப்புகழ் குழு அறிக்கையை தமிழக அரசு ஒளித்து வைத்திருப்பது ஏன்? பாமக கேள்வி
வெட்கக்கேடு, மோசம்; திருப்புகழ் குழு அறிக்கையை தமிழக அரசு ஒளித்து வைத்திருப்பது ஏன்? பாமக கேள்வி
Udhayanidhi: உதயநிதிக்கு சவால் விட்ட அமைச்சர் கில்லி சரத்..! போதைப்பொருள் விவகாரம் - கடுப்பான கே.என். நேரு
உதயநிதிக்கு சவால் விட்ட அமைச்சர் கில்லி சரத்..! போதைப்பொருள் விவகாரம் - கடுப்பான கே.என். நேரு
சட்டசபையில் உதயநிதி- ஆதவ் நேருக்கு நேர் கடும் வாக்குவாதம்.! மோதிக்கொண்ட திமுக- தவெக.! நடந்தது என்ன.?
சட்டசபையில் உதயநிதி- ஆதவ் நேருக்கு நேர் கடும் வாக்குவாதம்.! மோதிக்கொண்ட திமுக- தவெக.! நடந்தது என்ன.?
VinFast VF5: சிங்கிள் சார்ஜில் 326 கிமீ மைலேஜ்.? நெக்ஸானுக்கு நெருக்கடி கொடுக்குமா வின்ஃபாஸ்ட் EV.? விலை என்ன.?
சிங்கிள் சார்ஜில் 326 கிமீ மைலேஜ்.? நெக்ஸானுக்கு நெருக்கடி கொடுக்குமா வின்ஃபாஸ்ட் EV.? விலை என்ன.?
Embed widget