மேலும் அறிய

ரயிலில் ஏடிஎம் வசதி.. இந்தியாவில் முதல்முறை.. இனி கஷ்டப்பட வேண்டாம் மக்களே

மும்பையில் இருந்து மன்மாத்துக்கு செல்லும் பஞ்சவடி எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏடிஎம் வசதி கொண்டு வரப்பட்டுள்ளது. ரயிலின் ஏசி கோச்சில் ஏடிஎம் பொருத்தப்பட்டு, அதன் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் முதல்முறையாக ஓடும் ரயிலில் ஏடிஎம் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மும்பையில் இருந்து மன்மாத்துக்கு செல்லும் பஞ்சவடி எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏடிஎம் வசதி கொண்டு வரப்பட்டுள்ளது. ரயிலின் ஏசி கோச்சில் ஏடிஎம் பொருத்தப்பட்டு, அதன் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், ஓடும் ரயலில் கூட மக்களால் பணத்தை எடுக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. 

நவீனமயமாகும் இந்தியன் ரயில்வே:

நாட்டில் ரயில்களை மேம்படுத்த தொடர் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்தாண்டு மட்டும் இதற்காக 22 பில்லியன் அமெரிக்க டாலர்களை இந்திய அரசு செலவு செய்துள்ளது. ரயிலில் பயணிகள் கொள் திறனை மேம்படுத்தவும் பயணிகளை வேகமாகவும் பாதுகாப்பாகவும் அழைத்த செல்ல இந்த பணம் செலவிடப்பட்டுள்ளது.

கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் 100 வந்தே பாரத் ரயில்கள் உள்பட 772 ரயில் சேவைகளை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளதாக மாநிலங்களவையில் கடந்தாண்டு மத்திய ரயில்வேத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தகவல் தெரிவித்திருந்தார். புதிய ரயில் பாதைகளை அமைக்கவும் மின்மயமாக்கவும் அரசு தற்போது முனைப்பு காட்டி வருகிறது. மேலும், பல்வேறு விதமான வசதிகளை கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 

இந்த நிலையில், நாட்டில் முதல்முறையாக மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் இருந்து மன்மாத்துக்கு செல்லும் பஞ்சவடி எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏடிஎம் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஓடும் ரயிலில் ஏடிஎம் வசதி கொண்டு வரப்பட உள்ளதால் ரயிலை விட்டு கீழே இறங்காமல் கூட பயணிகளால் பணத்தை எடுக்க முடியும். இதன் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.

ரயிலில் வருகிறது ஏடிஎம் வசதி:

இந்திய ரயில்வேயின் புதுமையான மற்றும் கட்டணம் அல்லாத வருவாய் யோசனை திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்திய ரயில்வேயின் பூசாவல் மண்டலமும் மகாராஷ்டிரா வங்கியும் இணைந்து இந்த திட்டத்தை சாத்தியப்படுத்தியுள்ளது.

இதுகுறித்து ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், "சோதனை ஓட்டம் வெற்றிகரமாக முடிந்தது. பயணம் முழுவதிலும் ஏடிஎம் இயந்திரம் சீராக செயல்பட்டது. இருப்பினும், சுரங்கப்பாதைகள் மற்றும் குறைந்த மொபைல் சிக்னல் இருக்கும் இடங்களான இகத்புரி மற்றும் கசாரா இடையேயான பகுதியில் கொஞ்ச நேரம் ஏடிஎம் செயல்படவில்லை" என்றார்கள்.

இதுகுறித்து பூசாவல் கோட்ட ரயில்வே மேலாளர் இதி பாண்டே கூறுகையில், "நல்ல பலன்கள் கிடைத்திருக்கின்றன. மக்கள் இப்போது பயணம் செய்யும் போது பணத்தை எடுக்க முடியும். இயந்திரத்தின் செயல்திறனை நாங்கள் தொடர்ந்து கண்காணிப்போம்.

மக்கள் மத்தியில் பிரபலமாகுமா?

ஏசி பெட்டியில் இந்த ஏடிஎம் வைக்கப்பட்டிருந்தாலும், ரயில் பெட்டிகள் ஒன்றுக்கொன்று இணைக்கப்பட்டிருப்பதால் பஞ்சவதி எக்ஸ்பிரஸின் 22 பெட்டிகளிலிருந்தும் பயணிகள் ஏடிஎம்-ஐ பயன்படுத்தலாம். பணம் எடுப்பதைத் தவிர, செக் புக்கை பெறவும் பண விவரத்தை அறியவும் ஏடிஎம்மைப் பயன்படுத்தலாம்" என்றார்.

இதில் கவனிக்க வேண்டியது என்னவென்றால், மும்பை - ஹிங்கோலி ஜன் சதாப்தி எக்ஸ்பிரஸ் பயணிகளும் இந்த ஏடிஎம்-ஐ பயன்படுத்தலாம். ஏனெனில், பஞ்சவதி எக்ஸ்பிரஸ் ரயிலும் அதே ரயில் ரேக்கைதான் பகிர்ந்து கொள்கிறது. ஏடிஎம் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, ஏடிஎம்மில் ஷட்டர் அமைப்பு பொருத்தப்பட்டுள்ளது. சிசிடிவி கேமராக்கள் மூலம் 24 மணி நேரமும் கண்காணிக்கப்படுகிறது.

பயணிகள் மத்தியில் இந்த சேவை பிரபலமடைந்தால், மேலும் பல ரயில்களுக்கு இந்த சேவை விரிவுபடுத்தப்படலாம் என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். 

About the author சுதர்சன்

Rookie Journalist. Writes on National, International, Politics, Human rights and Judiciary. Covered 2019 General Election, Apex Court Ayodhya judgement, 2021 Five state election, Pegasus etc.  

Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
612
Active
28518
Recovered
157
Deaths
Last Updated: Sun 13 July, 2025 at 12:57 pm | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

Air Flight Crash Report: 270 பேரை காவு வாங்கிய ஏர் இந்தியா விமான விபத்து -  ”32 விநாடிகளில்..” காரணம் இதுதான் - அறிக்கை
Air Flight Crash Report: 270 பேரை காவு வாங்கிய ஏர் இந்தியா விமான விபத்து - ”32 விநாடிகளில்..” காரணம் இதுதான் - அறிக்கை
EPS Slams DMK: ரூ.1000-க்கு ஆசைப்பட்டு ரூ.1500-அ விட்டுட்டீங்களே.?! - மக்களிடம் மத்தியில் பேசிய இபிஎஸ் ஆதங்கம்
ரூ.1000-க்கு ஆசைப்பட்டு ரூ.1500-அ விட்டுட்டீங்களே.?! - மக்களிடம் மத்தியில் பேசிய இபிஎஸ் ஆதங்கம்
Velachery-Guindy Flyover: போட்ரா வெடிய, தீரப்போகுது போக்குவரத்து நெரிசல்; வேளச்சேரி to கிண்டி புதிய மேம்பாலம் - முழு விவரம்
போட்ரா வெடிய, தீரப்போகுது போக்குவரத்து நெரிசல்; வேளச்சேரி to கிண்டி புதிய மேம்பாலம் - முழு விவரம்
அன்புமணி எதற்காக தைலாபுரம் வீட்டிற்கு வந்தார்? - ராமதாஸ் அளித்த பதில் இதோ
அன்புமணி எதற்காக தைலாபுரம் வீட்டிற்கு வந்தார்? - ராமதாஸ் அளித்த பதில் இதோ
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

800 கோடி.. BOAT CLUB-ல் 1 ஏக்கர்! மாறன் BROTHERS டீல்! ஸ்டாலின்,வீரமணி சம்பவம்
தைலாபுரத்தில் அன்புமணி ENTRY! 5 நிமிடத்தில் பேசி முடித்த ராமதாஸ்! மயிலாடுதுறையில் நடந்தது என்ன?
Nayanthara Divorce | விக்னேஷ் சிவனுடன் விவாகரத்தா?வெளியான பரபரப்பு தகவல் நயன்தாரா கொடுத்த ரியாக்‌ஷன்
Pothupani Thilagam | ’நீர்வளத்துறையில் முறைகேடு?’ துரைமுருகனுக்கே விபூதி அடித்த பொதுப்பணி திலகம்!
EPS with Amit Shah | களம் இறங்கும் அமித்ஷா உறுதி அளித்த நயினார்! இபிஎஸ் பக்கா ஸ்கெட்ச்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Air Flight Crash Report: 270 பேரை காவு வாங்கிய ஏர் இந்தியா விமான விபத்து -  ”32 விநாடிகளில்..” காரணம் இதுதான் - அறிக்கை
Air Flight Crash Report: 270 பேரை காவு வாங்கிய ஏர் இந்தியா விமான விபத்து - ”32 விநாடிகளில்..” காரணம் இதுதான் - அறிக்கை
EPS Slams DMK: ரூ.1000-க்கு ஆசைப்பட்டு ரூ.1500-அ விட்டுட்டீங்களே.?! - மக்களிடம் மத்தியில் பேசிய இபிஎஸ் ஆதங்கம்
ரூ.1000-க்கு ஆசைப்பட்டு ரூ.1500-அ விட்டுட்டீங்களே.?! - மக்களிடம் மத்தியில் பேசிய இபிஎஸ் ஆதங்கம்
Velachery-Guindy Flyover: போட்ரா வெடிய, தீரப்போகுது போக்குவரத்து நெரிசல்; வேளச்சேரி to கிண்டி புதிய மேம்பாலம் - முழு விவரம்
போட்ரா வெடிய, தீரப்போகுது போக்குவரத்து நெரிசல்; வேளச்சேரி to கிண்டி புதிய மேம்பாலம் - முழு விவரம்
அன்புமணி எதற்காக தைலாபுரம் வீட்டிற்கு வந்தார்? - ராமதாஸ் அளித்த பதில் இதோ
அன்புமணி எதற்காக தைலாபுரம் வீட்டிற்கு வந்தார்? - ராமதாஸ் அளித்த பதில் இதோ
Google's New Gmail Tool: அப்பாடா நிம்மதி.! இனிமே தேவையில்லாத மெயில ஈசியா தட்டித் தூக்கிரலாம் - ஜி மெயிலில் புதிய டூல்
அப்பாடா நிம்மதி.! இனிமே தேவையில்லாத மெயில ஈசியா தட்டித் தூக்கிரலாம் - ஜி மெயிலில் புதிய டூல்
Tesla India Launch: இந்தியாவில் கலக்க வரும் டெஸ்லா; முதல் மாடலான 'Y'-ல் இவ்வளவு வசதிகளா.!! விலை என்ன தெரியுமா.?
இந்தியாவில் கலக்க வரும் டெஸ்லா; முதல் மாடலான 'Y'-ல் இவ்வளவு வசதிகளா.!! விலை என்ன தெரியுமா.?
Iran Threatens Trump: ஈரானிடமிருந்து கொலை மிரட்டல்; புன்னகையால் டீல் செய்த ட்ரம்ப் - நடந்தது என்ன தெரியுமா.?
ஈரானிடமிருந்து கொலை மிரட்டல்; புன்னகையால் டீல் செய்த ட்ரம்ப் - நடந்தது என்ன தெரியுமா.?
சென்னையிலே இப்படியா? ஆசிரியர்கள் இல்லா அரசுப்பள்ளிகள்.. அப்புறம் எப்படி பசங்க படிப்பாங்க?
சென்னையிலே இப்படியா? ஆசிரியர்கள் இல்லா அரசுப்பள்ளிகள்.. அப்புறம் எப்படி பசங்க படிப்பாங்க?
Embed widget