மேலும் அறிய

India Coronavirus Cases Today: 3 லட்சத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை..

இந்தியாவில் ஒருநாள் கொரோனா தொற்று பாதிப்பு 3 லட்சத்தை நெருங்கியுள்ளது.

கொரோனா இரண்டாவது அலை பரவலை தடுக்க மத்திய அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. மகாராஷ்டிரா, டெல்லி, கேரளா, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் தொற்று பாதிப்பு வேகமாக பரவி வருவது கவலை அளிக்கும் விதமாக உள்ளது. ஊரடங்கில் மீண்டும் கடுமையான கட்டுப்பாட்டுகள் விதிக்கப்பட்டுள்ள அதே நேரத்தில், தடுப்பூசி செலுத்தும் பணிகளையும் வேகப்படுத்த மத்திய அரசு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. 

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 2 லட்சத்து 95 ஆயிரத்து 41 பேருக்கு பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் கூறியுள்ளது. நேற்று முன்தினம் 2.73 லட்சம், நேற்று 2.59 லட்சமாக இருந்த பாதிப்பு இன்று 2.95  லட்சமாக உயர்ந்தது.


India Coronavirus Cases Today: 3 லட்சத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை..

இதுதொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘நாட்டில் ஒரே நாளில் 2 லட்சத்து 95ஆயிரத்து 41 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ‘இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஒரு  கோடியே 53 லட்சத்து 21 ஆயிரத்து 89-இல் இருந்து ஒரு  கோடியே 56 லட்சத்து 16 ஆயிரத்து 130- ஆக அதிகரித்துள்ளது.


India Coronavirus Cases Today: 3 லட்சத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை..


ஒரே நாளில் கொரோனாவுக்கு 2,023 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை இல்லாத அளவுக்கு ஒரேநாளில் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 80 ஆயிரத்து 530-ல் இருந்து ஒரு லட்சத்து 82 ஆயிரத்து 553-ஆக உயர்ந்துள்ளது. பாதிப்பில் இருந்து ஒரே நாளில் ஒரு லட்சத்து 67 ஆயிரத்து 457 பேர் குணமடைந்துள்ளனர். இதன்மூலம், குணமடைந்தோரின் எண்ணிக்கை ஒரு கோடியே 31 லட்சத்து 8 ஆயிரத்து 582-இல் இருந்து ஒரு கோடியே 32 லட்சத்து 76 ஆயிரத்து 39 ஆக உள்ளது.


India Coronavirus Cases Today: 3 லட்சத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை..

கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோர் விகிதம் 85.56 சதவீதம் மற்றும் உயிரிழப்பு விகிதம் 1.18 சதவிகிதமாக உள்ளது. நாடு முழுவதும் கொரோனா பாதித்து சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 21 லட்சத்து 57 ஆயிரத்து 538-ஆக உயர்ந்துள்ளது. ஒரேநாளில் ஒரு லட்சத்து 25 ஆயிரத்து 561 பேர் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர். இதுவரை 13 கோடியே ஒரு லட்சத்து 19 ஆயிரத்து 310 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 16 லட்சத்து 39 ஆயிரத்து 357 மாதிரிகளும், இதுவரை 27 கோடியே 10 லட்சத்து 53 ஆயிரத்து 392 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் ஐசிஎம்ஆர் தகவல் தெரிவித்துள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கை மற்றும் தடுப்பூசி தொடர்பாக நாட்டு மக்களிடையே பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். 

அதில்,"கொரோனா நோய் தொற்றுக்கு எதிராக மீண்டும் போராடிவருகிறது. தற்போது கொரோனாவின் இரண்டாவது அலை இந்தியாவில் பரவி வருகிறது. இந்த இரண்டாவது அலையின்போது இறந்தவர்களின் குடும்பத்தின் ஒருவனாக அவர்களின் துக்கத்தை பகிர்ந்துகொள்கிறேன். முதலில் இந்தியாவில் கொரோனா நோய் தொற்று எதிராக தீவிரமாக போராடி வரும் மருத்துவர்கள், சுகாதார பணியாளர்கள், ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் உள்ளிட்டவர்கள் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இவர்கள் அனைவரும் தங்களின் உயிரை பணயம் வைத்து பிற மக்களை காப்பாற்றி வருகின்றனர். 

தற்போது கொரோனா தொற்று காரணமாக நாடு முழுவது ஆக்சிஜன் வாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனை சரிசெய்ய மத்திய மாநில அரசுகள் தீவிர முயற்சியை எடுத்துவருகின்றன. இந்த ஆண்டில் தொடக்கத்திலிருந்த அளவைவிட தற்போது ஆக்சிஜன் உற்பத்தி அதிகரித்துள்ளது. மேலும் கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டு முதல் நாட்டின் ஃபார்மா நிறுவனங்கள் அனைத்தும் வேகமாக செயல்பட்டு வருகின்றன. அதேபோல் தடுப்பூசி தயாரிப்பதிலும் அதை நடைமுறைக்கு கொண்டு வருவதிலும் தீவிர முனைப்புகாட்டி வருகிறோம். இதுவரை 12 கோடி மக்களுக்கு மேல் தடுப்பூசி செலுத்தியுள்ளனர். 

நேற்று மத்திய அரசு ஒரு சிறப்பான முடிவை எடுத்துள்ளது. அதாவது 18 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்த மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதன்மூலம் இந்தியாவில் உள்ள அனைவருக்கும் தடுப்பூசி கிடைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ஏழைகள் மற்றும் நடுத்தர குடும்பங்களுக்கு இலவசமாக தடுப்பூசி செலுத்தும் முறை தொடரும். 

பொருளாதார பாதிப்பு ஏற்படாமல் உயிர்களை காக்கவேண்டும் என்பதே அரசின் முக்கிய கடமையாக உள்ளது. கொரோனா பாதிப்பு முதலில் ஏற்பட்டபோது இதற்கு என்ன சிகிச்சை என்று யாருக்கும் தெரியாது. எனினும் நமது மருத்துவர்கள் விரைவில் கொரோனாவிற்கு ஏற்ற சிகிச்சை முறைகளை செய்து உயிர்களை காப்பாற்றினர். முகக்கவசம் முதல் வென்ட்டிலேட்டர் வரை அனைத்தையும் நாம் சிறப்பாக தயாரித்துள்ளோம். எனவே கொரோனா பாதிப்பு எதிராக நடைபெறும் இந்தப் போராட்டத்தில் மக்கள் யாரும் பயப்படவேண்டாம். மேலும் தடுப்பூசி உற்பத்தியில் 50 சதவிகிதம் மாநிலங்களுக்கு செல்லும். தற்போது இருக்கும் சூழலில் முழு ஊரடங்கு தேவையில்லை. எனினும் முமு ஊரடங்கு நிலைக்கு மீண்டும் செல்லாமல் இருப்பதை மக்கள்தான் தடுக்க வேண்டும். ஆகவே தேவையில்லாமல் மக்கள் வெளியே செல்வதை தவிர்க்கவேண்டும். தற்போது நாட்டு மக்கள் தைரியத்துடனும் நலமுடன் இருக்க வேண்டும் என்பதே என்னுடைய வேண்டுகோள். தற்போது இருக்கும் நிலையை விரைவில் மாற்ற அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது" என்றார். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Crime: வீட்டில் தனியாக இருக்கும் பெண்களே ஜாக்கிரதை! பட்டப்பகலில் மிளகாய்ப்பொடி தூவி நகை பறிப்பு!
Crime: வீட்டில் தனியாக இருக்கும் பெண்களே ஜாக்கிரதை! பட்டப்பகலில் மிளகாய்ப்பொடி தூவி நகை பறிப்பு!
Vikaravandi by election 2024: அதிமுக இடைத்தேர்தல் புறக்கணிப்பு... களத்தில் தீவிரம் காட்டும் பாமக...
Vikaravandi by election 2024: அதிமுக இடைத்தேர்தல் புறக்கணிப்பு... களத்தில் தீவிரம் காட்டும் பாமக...
வார விடுமுறை: தாம்பரம் - ராமநாதபுரம் சிறப்பு ரயில் குறித்து தெரிந்துகொள்ள முழுமையாக வாசிக்கவும் !
வார விடுமுறை: தாம்பரம் - ராமநாதபுரம் சிறப்பு ரயில் குறித்து தெரிந்துகொள்ள முழுமையாக வாசிக்கவும் !
TN 12th Revaluation 2024: நாளை மறுநாள் வெளியாகும் பிளஸ் 2 பொதுத்தேர்வு மறுகூட்டல்‌, மறுமதிப்பீடு முடிவுகள்‌; காண்பது எப்படி?
TN 12th Revaluation 2024: நாளை மறுநாள் வெளியாகும் பிளஸ் 2 பொதுத்தேர்வு மறுகூட்டல்‌, மறுமதிப்பீடு முடிவுகள்‌; காண்பது எப்படி?
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

ADMK Vikravandi Bypoll | அதிமுக புறக்கணிப்பு ஏன்? யாருக்கு லாபம்? விக்கிரவாண்டி இடைத்தேர்தல்ADMK Boycotts Vikravandi By election | விக்கிரவாண்டி இடைத்தேர்தல்அதிமுக புறக்கணிப்பு!EPS அதிரடிVikravandi PMK Candidate | விக்கிரவாண்டியில் அன்புமணி போட்டி!பரபரக்கும் தேர்தல் களம்Modi Meloni | மீண்டும் #MELODI! மெலோனியுடன் மோடி! வைரல் PHOTOS

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Crime: வீட்டில் தனியாக இருக்கும் பெண்களே ஜாக்கிரதை! பட்டப்பகலில் மிளகாய்ப்பொடி தூவி நகை பறிப்பு!
Crime: வீட்டில் தனியாக இருக்கும் பெண்களே ஜாக்கிரதை! பட்டப்பகலில் மிளகாய்ப்பொடி தூவி நகை பறிப்பு!
Vikaravandi by election 2024: அதிமுக இடைத்தேர்தல் புறக்கணிப்பு... களத்தில் தீவிரம் காட்டும் பாமக...
Vikaravandi by election 2024: அதிமுக இடைத்தேர்தல் புறக்கணிப்பு... களத்தில் தீவிரம் காட்டும் பாமக...
வார விடுமுறை: தாம்பரம் - ராமநாதபுரம் சிறப்பு ரயில் குறித்து தெரிந்துகொள்ள முழுமையாக வாசிக்கவும் !
வார விடுமுறை: தாம்பரம் - ராமநாதபுரம் சிறப்பு ரயில் குறித்து தெரிந்துகொள்ள முழுமையாக வாசிக்கவும் !
TN 12th Revaluation 2024: நாளை மறுநாள் வெளியாகும் பிளஸ் 2 பொதுத்தேர்வு மறுகூட்டல்‌, மறுமதிப்பீடு முடிவுகள்‌; காண்பது எப்படி?
TN 12th Revaluation 2024: நாளை மறுநாள் வெளியாகும் பிளஸ் 2 பொதுத்தேர்வு மறுகூட்டல்‌, மறுமதிப்பீடு முடிவுகள்‌; காண்பது எப்படி?
Breaking News LIVE: ஜூன் 22 வரை தமிழ்நாடு, புதுச்சேரியில் மிதமான மழைக்கு வாய்ப்பு..!
Breaking News LIVE: ஜூன் 22 வரை தமிழ்நாடு, புதுச்சேரியில் மிதமான மழைக்கு வாய்ப்பு..!
CM Stalin:
"ஏழைகளுக்கு எதிரான நீட் தேர்வை நிறுத்துக” - மத்திய அரசை வலியுறுத்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
RahulGandhi On EVM : மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை ஒழிக்க சொன்ன மஸ்க்.. ஆதரவுக்கரம் நீட்டிய ராகுல் காந்தி
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை ஒழிக்க சொன்ன மஸ்க்.. ஆதரவுக்கரம் நீட்டிய ராகுல் காந்தி
New Fee Refund Policy: கல்லூரிகள் இந்த மாணவர்களுக்கெல்லாம் முழு கட்டணத்தையும் திருப்பித்தர வேண்டும்: யுஜிசி அதிரடி!
New Fee Refund Policy: கல்லூரிகள் இந்த மாணவர்களுக்கெல்லாம் முழு கட்டணத்தையும் திருப்பித்தர வேண்டும்: யுஜிசி அதிரடி!
Embed widget