மேலும் அறிய

Israel Hamas Gaza : "அப்பாவி மக்கள் கொல்லப்படுவதை தவிர்க்க வேண்டும்" காசா விவகாரத்தில் வலியுறுத்தும் இந்தியா

அப்பாவி மக்கள் கொல்லப்படுவதோடு உயிரை காப்பாற்றி கொள்வதற்காக வரும் மக்கள் தஞ்சம் புகுந்த மருத்துவமனையில் இஸ்ரேல் ராணுவம் அராஜகத்தில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.

பாலஸ்தீனத்தைச் சேர்ந்த ஹமாஸ் அமைப்புக்கும் இஸ்ரேலுக்கும் நடந்து வரும் போர், உலக நாடுகளை நெருக்கடியில் தள்ளியுள்ளது. உலக அமைதிக்கு பெரும் சவாலாக மாறியுள்ள இஸ்ரேல் போரால் பாலஸ்தீன காசா பகுதியில் இதுவரை, 11,320 மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். கொல்லப்பட்டவர்களில் 4,650 குழந்தைகளும் 3,145 பெண்களும் அடங்குவர்.

ஒருபுறத்தில் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட வேண்டும் என அரபு நாடுகளும் ஐநாவும் வலியுறுத்தி வரும் நிலையில், போர் நடக்கும் பகுதியில் அத்தியாவசிய பொருள்களை எடுத்து செல்ல போரை ஒத்திவைக்க வேண்டும் என அமெரிக்கா, பிரிட்டன், இந்தியா உள்ளிட்ட நாடுகள் கோரிக்கை விடுத்து வருகிறது. ஆனால், எந்த விதமான கோரிக்கைக்கும் இஸ்ரேல் உடன்படவில்லை.

தீவிரம் அடைந்த போர்:

போர் நிறுத்தத்தை வலியுறுத்தி, கடந்த அக்டோபர் மாதம் 28ஆம் தேதி ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. தீர்மானத்துக்கு ஆதரவாக 120 நாடுகள் வாக்களித்த போதிலும், அமெரிக்கா, இந்தியா, ஆஸ்திரேலியா, கனடா, ஜெர்மனி, ஜப்பான், உக்ரைன், பிரிட்டன் உள்ளிட்ட 45 நாடுகள் தீர்மானத்தை புறக்கணித்தது. 

போர் நிறுத்தம் தொடர்பாக கொண்டு வரப்பட்ட தீர்மானத்தின் மீது இந்தியா உள்ளிட்ட நாடுகள் வாக்களிக்காமல் புறக்கணித்தது பெரும் விமர்சனத்திற்கு உள்ளானது. இப்படிப்பட்ட சூழலில், காசாவில் உள்ள அல் ஷிபா மருத்துவமனைக்குள் இஸ்ரேல் ராணுவம் புகுந்த சம்பவம், உலகளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அப்பாவி மக்கள் கொல்லப்படுவதோடு உயிரை காப்பாற்றி கொள்வதற்காக வரும் மக்கள் தஞ்சம் புகுந்த மருத்துவமனையில் இஸ்ரேல் ராணுவம் அராஜகத்தில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.

"சர்வதேச சட்ட விதிகளை பின்பற்றவேண்டும்"

இதற்கு எதிர்வினையாற்றியுள்ள இந்தியா, "சர்வதேச சட்ட விதிகளை பின்பற்ற வேண்டும்" என மீண்டும் வலியுறுத்தியுள்ளது. செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி, "பாலஸ்தீன மக்களுக்கு மேலும் மனிதாபிமான உதவிகளை அனுப்புவதை இந்தியா கவனித்து வருகிறது" என்றார்.

அல் ஷிபா மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்டு வரும் ராணுவ நடவடிக்கை குறித்து பேசிய அவர், "பிரச்னை ஒரு மருத்தவமனையில் நடப்பதோ அல்லது குறிப்பிட்ட மருத்துவமனையை பற்றியதோ அல்ல. அப்பாவி மக்களின் உயிரிழப்புகள் தவிர்க்கப்பட வேண்டும். மனிதாபிமானச் சட்டம் கடைபிடிக்கப்பட வேண்டும்.

மோதலில் சிக்கியவர்களுக்கு மனிதாபிமான நிவாரணம் வழங்குவதற்கான எந்தவொரு முயற்சியையும் ஊக்குவிப்பதன் அவசியத்தை இந்தியா எப்போதும் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. நிலைமையை தணிப்பதற்கான முயற்சிகள், மனிதாபிமான உதவிகளை வழங்குதல், அதிகரித்து வரும் குடிமக்களின் இறப்பு எண்ணிக்கையில் அக்கறை கொண்டுள்ளோம்" என்றார்.                                                                                      

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Leader of Opposition: மக்களவை எதிர்க்கட்சி தலைவரானார் ராகுல் காந்தி.. காங்கிரஸ் அறிவிப்பு!
மக்களவை எதிர்க்கட்சி தலைவரானார் ராகுல் காந்தி.. காங்கிரஸ் அறிவிப்பு!
Chennai Rain: சென்னையில் திடீரென மின்னல்-இடியுடன் கூடிய மழை:ஆயிரம் விளக்கு, நுங்கம்பாக்கத்தில் வெளுக்கும் மழை
Chennai Rain: சென்னையில் திடீரென மின்னல்-இடியுடன் கூடிய மழை:ஆயிரம் விளக்கு, நுங்கம்பாக்கத்தில் வெளுக்கும் மழை
சபாநாயகர் பதவிக்கான தேர்தல்; காங்கிரஸ் முடிவால் மம்தா அப்செட் - சிக்கலில் இந்தியா கூட்டணி!
சபாநாயகர் பதவிக்கான தேர்தல்; காங்கிரஸ் முடிவால் மம்தா அப்செட் - சிக்கலில் இந்தியா கூட்டணி!
மதுரையில் மூட்டை, மூட்டையாக ரேஷன் அரிசிக் கடத்தல்? விசாரணைக்கு வலியுறுத்தும் சமூக ஆர்வலர்கள்
மதுரையில் மூட்டை, மூட்டையாக ரேஷன் அரிசிக் கடத்தல்? விசாரணைக்கு வலியுறுத்தும் சமூக ஆர்வலர்கள்
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

DMK MLA on kalla sarayam | ”என் தொகுதியிலேயே சாராயமா?”ON THE SPOT-ல் ரெய்டு! திமுக MLA Mass சம்பவம்!lok sabha Speaker Election | மோதி பார்க்கலாம் மோடி முஷ்டி முறுக்கும் ராகுல்!வரலாற்று சம்பவம் LOADINGAyodhya Ram Temple  rain water leakage | ”அய்யோ ராமா”அலரும் அயோத்தி அர்ச்சகர் கோவில் கூரையின் நிலைAccident News :  BIKE-ல் மோதிய பேருந்து..தூக்கி வீசப்பட்ட இளைஞர் பதற வைக்கும் CCTV காட்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Leader of Opposition: மக்களவை எதிர்க்கட்சி தலைவரானார் ராகுல் காந்தி.. காங்கிரஸ் அறிவிப்பு!
மக்களவை எதிர்க்கட்சி தலைவரானார் ராகுல் காந்தி.. காங்கிரஸ் அறிவிப்பு!
Chennai Rain: சென்னையில் திடீரென மின்னல்-இடியுடன் கூடிய மழை:ஆயிரம் விளக்கு, நுங்கம்பாக்கத்தில் வெளுக்கும் மழை
Chennai Rain: சென்னையில் திடீரென மின்னல்-இடியுடன் கூடிய மழை:ஆயிரம் விளக்கு, நுங்கம்பாக்கத்தில் வெளுக்கும் மழை
சபாநாயகர் பதவிக்கான தேர்தல்; காங்கிரஸ் முடிவால் மம்தா அப்செட் - சிக்கலில் இந்தியா கூட்டணி!
சபாநாயகர் பதவிக்கான தேர்தல்; காங்கிரஸ் முடிவால் மம்தா அப்செட் - சிக்கலில் இந்தியா கூட்டணி!
மதுரையில் மூட்டை, மூட்டையாக ரேஷன் அரிசிக் கடத்தல்? விசாரணைக்கு வலியுறுத்தும் சமூக ஆர்வலர்கள்
மதுரையில் மூட்டை, மூட்டையாக ரேஷன் அரிசிக் கடத்தல்? விசாரணைக்கு வலியுறுத்தும் சமூக ஆர்வலர்கள்
Indian 2 Trailer Review:
Indian 2 Trailer Review: "காந்திய வழியில் நீங்க! நேதாஜி வழியில் நான்" எப்படி இருக்கு இந்தியன் 2 ட்ரெயிலர்?
Breaking News LIVE: மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக ராகுல் காந்தி தேர்வு - காங்கிரஸ் தொண்டர்கள் மகிழ்ச்சி
Breaking News LIVE: மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக ராகுல் காந்தி தேர்வு - காங்கிரஸ் தொண்டர்கள் மகிழ்ச்சி
பாலாற்றில் தடுப்பணை! தமிழ்நாட்டுக்கு அதிர்ச்சியளித்த ஆந்திர முதலமைச்சர் - அதிர்ச்சியில் மக்கள்
பாலாற்றில் தடுப்பணை! தமிழ்நாட்டுக்கு அதிர்ச்சியளித்த ஆந்திர முதலமைச்சர் - அதிர்ச்சியில் மக்கள்
Indian 2:
Indian 2: "நான்கு நாட்கள் கயிற்றில் தொங்கிய கமல்" பிரமித்த இயக்குனர் ஷங்கர்!
Embed widget