மேலும் அறிய

Road Accident: வாகன ஓட்டிகளே உஷார்! செல்போன் பேசிக்கொண்டே வாகனம் ஓட்டிய 1040 பேர் பலி - மத்திய அரசு அதிர்ச்சி ரிப்போர்ட்

செல்போன் பேசிக்கொண்டே வாகனம் ஓட்டியபோது ஏற்பட்ட விபத்துகளில் சிக்கி ஆயிரத்து 40 பேர் பலியானதாக, மத்திய அரசு தெரிவித்துள்ளது.

சாலை விபத்துகளில் ஒரே ஆண்டில் ஒரு லட்சத்து 53 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

சாலை விபத்துகள் தொடர்பான கேள்வி:

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பல்வேறு கேள்விகளை முன்வைத்து வருகின்றனர். அவற்றிற்கு மத்திய அரசு சார்பில் புள்ளிவிவரங்களுடன் பதிலளிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், கடந்த 3 ஆண்டுகளில் 13 லட்சம் பெண்கள் காணாமல் போயுள்ளதாக வெளியான அறிக்கை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் தான்,  சாலை விபத்தில் பலியானவர்களின் விவரங்கள் தொடர்பாக மாநிலங்களவையில் தி.மு.க. எம்.பி. ராஜேஷ்குமார்  கேள்வி எழுப்பினார்.

4.12 லட்சம் விபத்துகள்:

சாலை விபத்துகள் தொடர்பான கேள்விக்கு மத்திய சாலை போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி எழுத்துப்பூர்வமாக பதில் அளித்து இருந்தார். அதில், ”கடந்த 2021-ம் ஆண்டு மொத்தம் 4 லட்சத்து 12 ஆயிரத்து 432 விபத்துகள் நடைபெற்றன. இந்த விபத்துகளில் ஒரு லட்சத்து 53 ஆயிரத்து 972 பேர் இறந்தனர். 3 லட்சத்து 84 ஆயிரத்து 448 பேர் காயமடைந்துள்ளனர். அதிவேகமாக வாகனங்களை இயக்கியது, குடிபோதை மற்றும் செல்போன் பேசியபடி வாகனம் ஓட்டுதல் போன்ற போக்குவரத்து விதிமீறல்களால் ஒரு லட்சத்து 28 ஆயிரத்து 825 விபத்துகள் ஏற்பட்டுள்ளன. அதில் 56 ஆயிரத்து ஏழு பேர் உயிரிழந்துள்ளனர். 

கோளாறால் நிகழ்ந்த விபத்துகள்:

அதிவேகமாக வாகனங்களை இயக்கியபோது ஏற்பட்ட விபத்தில் சிக்கி 40 ஆயிரத்து 450 பேரும், செல்போன் பேசிக்கொண்டே வாகனங்களை இயக்கியதால் ஏற்பட்ட விபத்தில் ஆயிரத்து 40 பேரும் உயிரிழந்தனர். சாலை சிக்னல்களில் ஏற்பட்ட சில கோளாறுகளால் 555 விபத்துகள் ஏற்பட்டு 222 பேர் உயிரிழந்துள்ளனர். சாலையில் உள்ள குழிகள் காரணமாக  3 ஆயிரத்து 625 விபத்துகள் ஏற்பட்டு, அதில் ஆயிரத்து 481 பேர் உயிரிழந்துள்ளனர்”  என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு எச்சரிக்கை:

வாகனம் ஓட்டும் போது மொபைல் போன்களை வழி நேவிகேஷன் நோக்கத்திற்காக மட்டும் பயன்படுத்தலாம்.  அதுவும்  வாகனத்தை இயக்கும் ஓட்டுனரின் கவனத்தை தொந்தரவு செய்யாமல் அமைய வேண்டும். வேறு எந்த பயன்பாட்டிற்காகவும் செல்போன்களை பயன்படுத்த கூடாது என மத்திய அரசு எச்சரித்துள்ளது.

மத்திய அரசு தீவிரம்:

சாலை விபத்துக்கள் பல காரணங்களால் ஏற்படுகின்றன என்றும், அனைத்து தரப்பினரின் ஒருங்கிணைந்த முயற்சிகள் மூலம் பிரச்சனைகளைத் தணிக்க பல முனை நடவடிக்கைகள் தேவை என்றும் மத்திய அரசு கூறியுள்ளது. மத்திய, மாநில அரசுகள் சேர்ந்து செயல்பட வேண்டி உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அபராத விவரம்:

வாகனம் ஓட்டும் போது மொபைல் போன்களை பயன்படுத்துவது தண்டனைக்குரிய குற்றமாகும். மோட்டார் வாகனச் சட்டத்தின்படி, வாகனம் ஓட்டும் போது செல்போனில் பேசியபடி போது பிடிபட்டால், ரூ. 5000 அபராதமாக வசூலிக்கப்படுகிறது. அந்த அபராதத் தொகை ரூ.1000 ஆக இருந்த நிலையில், கடந்த 2020 ஆம் ஆண்டில் அது ஐந்து மடங்கு உயர்த்தப்பட்டது. 

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

22 வயது காதலன்.. 45 வயது கணவனை போட்டு தள்ளிய மனைவி - ப்ளானில் விழுந்த ஓட்டை, சிக்கியது எப்படி?
22 வயது காதலன்.. 45 வயது கணவனை போட்டு தள்ளிய மனைவி - ப்ளானில் விழுந்த ஓட்டை, சிக்கியது எப்படி?
MK Stalin:
MK Stalin: "போராட்டம்.. சிறை.. தியாகம்" - இதுதான் திமுக.. முதலமைச்சர் ஸ்டாலின் பதிலடி!
Gold Rate New Peak: அட ஆண்டவா.!! மீண்டும் ஒரு லட்சத்தை தாண்டி புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை - இப்போ எவ்வளவு .?
அட ஆண்டவா.!! மீண்டும் ஒரு லட்சத்தை தாண்டி புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை - இப்போ எவ்வளவு .?
JACTO-GEO Strike: பேச்சுவார்த்தை தோல்வி.. இனி காலவரையற்ற போராட்டம்தான்; தேதி குறித்த ஆசிரியர், அரசு ஊழியர்கள் சங்கம்
JACTO-GEO Strike: பேச்சுவார்த்தை தோல்வி.. இனி காலவரையற்ற போராட்டம்தான்; தேதி குறித்த ஆசிரியர், அரசு ஊழியர்கள் சங்கம்
ABP Premium

வீடியோ

தர்காவில் சந்தனக்கூடு விழா! ”இந்துக்களை விட மாட்டீங்களா” திருப்பரங்குன்றத்தில் மோதல்
”5 வருசம் நான் தான் CM
விஜய்யுடன் 3 மணி நேரம் மீட்டிங்செங்கோட்டையன் கொடுத்த IDEA! MISS ஆன ஆனந்த்
Bus Accident | தூங்கி வழிந்த ஓட்டுநர் ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்து!அந்தரத்தில் தொங்கும் காட்சிகள்
Thiruparankundram Case | “சர்வே கல்லா? சமணர் தூணா?”திருப்பரங்குன்றம் தீபம் சர்ச்சை நீதிமன்றத்தில் காரசார விவாதம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
22 வயது காதலன்.. 45 வயது கணவனை போட்டு தள்ளிய மனைவி - ப்ளானில் விழுந்த ஓட்டை, சிக்கியது எப்படி?
22 வயது காதலன்.. 45 வயது கணவனை போட்டு தள்ளிய மனைவி - ப்ளானில் விழுந்த ஓட்டை, சிக்கியது எப்படி?
MK Stalin:
MK Stalin: "போராட்டம்.. சிறை.. தியாகம்" - இதுதான் திமுக.. முதலமைச்சர் ஸ்டாலின் பதிலடி!
Gold Rate New Peak: அட ஆண்டவா.!! மீண்டும் ஒரு லட்சத்தை தாண்டி புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை - இப்போ எவ்வளவு .?
அட ஆண்டவா.!! மீண்டும் ஒரு லட்சத்தை தாண்டி புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை - இப்போ எவ்வளவு .?
JACTO-GEO Strike: பேச்சுவார்த்தை தோல்வி.. இனி காலவரையற்ற போராட்டம்தான்; தேதி குறித்த ஆசிரியர், அரசு ஊழியர்கள் சங்கம்
JACTO-GEO Strike: பேச்சுவார்த்தை தோல்வி.. இனி காலவரையற்ற போராட்டம்தான்; தேதி குறித்த ஆசிரியர், அரசு ஊழியர்கள் சங்கம்
TATA Sierra EV: அடி தூள்.! டாடா சியரா எலக்ட்ரிக் காரின் சோதனை தொடங்கியது; என்னென்ன அம்சங்கள் இருக்கு தெரியுமா.?
அடி தூள்.! டாடா சியரா எலக்ட்ரிக் காரின் சோதனை தொடங்கியது; என்னென்ன அம்சங்கள் இருக்கு தெரியுமா.?
துரோகிகளால் பாழுங்கிணற்றில் தள்ளப்பட்டு அரசனான இளைஞன்- கிறிஸ்துமஸ் விழாவில் குட்டிக்கதை சொன்ன விஜய்!
துரோகிகளால் பாழுங்கிணற்றில் தள்ளப்பட்டு அரசனான இளைஞன்- கிறிஸ்துமஸ் விழாவில் குட்டிக்கதை சொன்ன விஜய்!
Padayappa: வசூல்னு வந்துட்டா கில்லிதான்.. விஜயிடம் வீழ்ந்த ரஜினியின் படையப்பா ரீரிலீஸ் - மொத்த கலெக்‌ஷன் எப்படி?
Padayappa: வசூல்னு வந்துட்டா கில்லிதான்.. விஜயிடம் வீழ்ந்த ரஜினியின் படையப்பா ரீரிலீஸ் - மொத்த கலெக்‌ஷன் எப்படி?
செவிலியர்கள் போராட்டம் ; பொங்கலுக்கு முன்பு இது நடக்கும் !! அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி
செவிலியர்கள் போராட்டம் ; பொங்கலுக்கு முன்பு இது நடக்கும் !! அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி
Embed widget