மேலும் அறிய

முஸ்லீம் பெண்ணுடன் சாப்பிட்டு கொண்டிருந்த இந்து இளைஞர்... சரமாரியாக தாக்கிய கும்பல்... கர்நாடகாவில் அதிர்ச்சி..!

சிக்கபல்லாபூர் நகரில் முஸ்லிம் பெண் ஒருவருடன் உணவுக் கடையில் சிற்றுண்டி சாப்பிட்டு கொண்டிருந்த இந்து இளைஞரை இஸ்லாமிய மதத்தை சேர்ந்த சிலர் தாக்கியுள்ளனர்.

சமீப காலமாகவே, கும்பல் வன்முறை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இஸ்லாமிய - இந்து மக்களிடையே உள்ள ஒற்றுமையை குலைக்கும் வகையில் பல்வேறு விதமான வன்முறை சம்பவங்களில் அடிப்படைவாதிகள் ஈடுபட்டு வருகின்றனர். அதன் தொடர்ச்சியாகதான், கர்நாடகாவில் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

கர்நாடகாவில் அதிர்ச்சி:

சிக்கபல்லாபூர் நகரில் முஸ்லிம் பெண் ஒருவருடன் உணவுக் கடையில் சிற்றுண்டி சாப்பிட்டு கொண்டிருந்த இந்து இளைஞரை இஸ்லாமிய மதத்தை சேர்ந்த சிலர் தாக்கியுள்ளனர். அந்த பெண்ணுடன் வந்த ஆண் இந்து என்பதை அறிந்த ஆசாமிகள் அவரைத் தாக்கினர். அதே நேரத்தில் ஒரு இந்து ஆணுடன் உணவகத்திற்குச் சென்றதற்காக அந்த முஸ்லீம் பெண்ணை  மிரட்டியுள்ளனர்.

இந்த சம்பவத்தை விரிவாக எடுத்துரைத்த காவல்துறை தரப்பு, "அந்த இளைஞரும் பெண்ணும் சிக்கபல்லாப்பூரில் உள்ள கோபிகா சாட்ஸுக்குச் சாப்பிட சென்றுள்ளனர். குற்றம் சாட்டப்பட்ட நபர்கள் இருவரையும் கவனித்துள்ளனர். இஸ்லாமிய பெண்ணுடன் வந்திருப்பது இந்து மதத்தை சேர்ந்தவர் என்பதை அறிந்து கொண்டனர். இதையடுத்து, இந்து இளைஞரை வரவழைத்து, அவர் மீது தாக்குதல் நடத்தினர்.

தன்னுடைய நண்பரை காப்பாற்ற வந்த அந்த பெண் தாக்குதல் நடத்தியவர்களை நோக்கி சரமாரியாக கேள்வி எழுப்பினார். இருப்பினும், ஒரு இந்து இளைஞருடன் ஓட்டலுக்கு வந்தது பொருத்தமற்றது என்றும், அவர் உணர்ந்த தவறுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் முஸ்லீம் ஆண்கள் அவரை எதிர்த்தனர்.

கும்பல் அட்டூழியம்:

இந்த சம்பவம் தொடர்பான வீடியோ ஆதாரங்களை பெற்று, சம்பந்தப்பட்ட நபர்களை உடனடியாக கைது செய்துள்ளோம்" என தகவல் தெரிவித்தது. இதுகுறித்து கர்நாடகா கூடுதல் காவல்துறை இயக்குநர் (சட்டம் மற்றும் ஒழுங்கு) அலோக் குமார் கூறுகையில், "இது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது" என்றார்.

கர்நாடக முதலமைச்சராக சித்தராமையா பதவியேற்று ஒரு சில நாள்களிலேயே இந்த சம்பவம் நடந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுபோன்ற சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என சித்தராமையா முன்னதாக தெரிவித்திருந்தார். "இதுபோன்று செயல்படுபவர்களுக்கு எதிராக காங்கிரஸ் அரசு கடுமையாக நடவடிக்கை எடுக்கும். இனியும், இப்படி நடக்காது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்" என தெரிவித்திருந்தார்.

இதேபோன்று, நேற்று முன்தினம், மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள ஒரு ஹோட்டலில் இருந்து வெளியே வந்த இந்து இளைஞர் ஒருவரும், இஸ்லாமிய பெண் ஒருவரையும் சுமார் 20 பேர் கொண்ட கும்பல் சரமாரியாக தாக்கினர்.

முன்னதாக, உத்தர பிரதேசத்தில் பிஜ்னோர் பகுதியில் சாலையில் இருசக்கர வாகனத்தில் இந்து இளைஞர் ஒருவரும் அவருக்கு பின்னால் இஸ்லாமிய பெண்கள் இருவரும் அமர்ந்தப்படி பயணம் செய்தனர். இதனை கண்ட இஸ்லாமிய இளைஞர்கள் அவர்களிடம் தகராறு செய்தனர்.  இது சம்பந்தமான வீடியோ இணையத்தில் வெளியாகி வைரனாதை அடுத்து நான்கு இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Jayalalitha: ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. தூக்கத்திலும் நடு நடுங்கிய ரத்தத்தின் ரத்தங்கள்-பிளாஷ்பேக் இதோ
ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. தூக்கத்திலும் நடு நடுங்கிய ரத்தத்தின் ரத்தங்கள்-பிளாஷ்பேக் இதோ
திருப்பரங்குன்றம் தீபத்தூண் சர்ச்சை: மலைக்கு அனுமதிக்காத காவல்துறை.. பாஜகவினர் போராட்டம், கைது!
திருப்பரங்குன்றம் தீபத்தூண் சர்ச்சை: மலைக்கு அனுமதிக்காத காவல்துறை.. பாஜகவினர் போராட்டம், கைது!
திருப்பரங்குன்றம்: தமிழக அரசு அனுமதி மறுத்ததற்கு இது தான் காரணம்.! ஆதாரத்துடன் பதிலடி கொடுத்த ரகுபதி
திருப்பரங்குன்றம்: தமிழக அரசு அனுமதி மறுத்ததற்கு இது தான் காரணம்.! ஆதாரத்துடன் பதிலடி கொடுத்த ரகுபதி
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Thiruparankundram Dheepam|”இன்னும் சில நிமிடங்களில் தீபம்”144 ரத்து போய் பாதுகாப்பு குடுங்க!-நீதிபதி
எகிறும் டாலர்.. சரியும் ரூபாய்.. என்ன பண்ண போறீங்க நிர்மலா? | Modi | Rupees VS Dollar
எச்சில் இலை முதல் திருப்பரங்குன்றம் வரை!சர்ச்சைகளும்.. பரபரப்பும்..யார் இந்த நீதிபதி GR சுவாமிநாதன்? | GR Swaminathan
டிட்வா கதை ஓவர்?மழை நிற்குமா? தொடருமா?வானிலை நிலவரம் என்ன? | Ditwah Cyclone TN Rain
திருப்பரங்குன்றம் தீப பதட்டம் தீபத்தூணில் ஏற்றப்படாத தீபம் நடந்தது என்ன? முழு விவரம் | Madurai | Dheepam 2025 Thiruparankundram Issue |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Jayalalitha: ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. தூக்கத்திலும் நடு நடுங்கிய ரத்தத்தின் ரத்தங்கள்-பிளாஷ்பேக் இதோ
ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. தூக்கத்திலும் நடு நடுங்கிய ரத்தத்தின் ரத்தங்கள்-பிளாஷ்பேக் இதோ
திருப்பரங்குன்றம் தீபத்தூண் சர்ச்சை: மலைக்கு அனுமதிக்காத காவல்துறை.. பாஜகவினர் போராட்டம், கைது!
திருப்பரங்குன்றம் தீபத்தூண் சர்ச்சை: மலைக்கு அனுமதிக்காத காவல்துறை.. பாஜகவினர் போராட்டம், கைது!
திருப்பரங்குன்றம்: தமிழக அரசு அனுமதி மறுத்ததற்கு இது தான் காரணம்.! ஆதாரத்துடன் பதிலடி கொடுத்த ரகுபதி
திருப்பரங்குன்றம்: தமிழக அரசு அனுமதி மறுத்ததற்கு இது தான் காரணம்.! ஆதாரத்துடன் பதிலடி கொடுத்த ரகுபதி
Thiruparankundram: பற்றி எரியும் திருப்பரங்குன்றம்.. நயினார் நாகேந்திரன் கைது.. தீபமேற்றும் விவகாரத்தில் திருப்பம்!
Thiruparankundram: பற்றி எரியும் திருப்பரங்குன்றம்.. நயினார் நாகேந்திரன் கைது.. தீபமேற்றும் விவகாரத்தில் திருப்பம்!
Thiruparankundram Issue: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இன்றே தீபமேற்ற வேண்டும்.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அதிரடி உத்தரவு!
Thiruparankundram Issue: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இன்றே தீபமேற்ற வேண்டும்.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அதிரடி உத்தரவு!
புதுச்சேரியில் அதிர்ச்சி! போலி மாத்திரை தொழிற்சாலைகள் தொடர் கண்டுபிடிப்பு: ரூ.30 கோடி மதிப்பிலான மருந்துகள் பறிமுதல்!
புதுச்சேரியில் அதிர்ச்சி! போலி மாத்திரை தொழிற்சாலைகள் தொடர் கண்டுபிடிப்பு: ரூ.30 கோடி மதிப்பிலான மருந்துகள் பறிமுதல்!
அண்ணா திமுகவா.? அமித்ஷா திமுக வா.? இபிஎஸ்யை போட்டுத்தாக்கும் அமைச்சர் ரகுபதி
அண்ணா திமுகவா.? அமித்ஷா திமுக வா.? இபிஎஸ்யை போட்டுத்தாக்கும் அமைச்சர் ரகுபதி
Embed widget