![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
முறைகேட்டில் ஈடுபட்டதா ட்விட்டர் முன்னாள் சிஇஓ-வின் நிறுவனம்? ஹிண்டர்பர்க் அறிக்கையில் அதிர்ச்சி..!
ட்விட்டர் நிறுவனத்தின் முன்னாள் தலைமை செயல் அதிகாரியான ஜாக் டோர்சியின் நிறுவனம் முறைகேட்டில் ஈடுபட்டதாக ஹிண்டர்பர்க் நிறுவனம் குற்றம்சாட்டியுள்ளது.
![முறைகேட்டில் ஈடுபட்டதா ட்விட்டர் முன்னாள் சிஇஓ-வின் நிறுவனம்? ஹிண்டர்பர்க் அறிக்கையில் அதிர்ச்சி..! Hindenburg report next target is Block ex Twitter CEO Jack Dorsey led payments firm know more details முறைகேட்டில் ஈடுபட்டதா ட்விட்டர் முன்னாள் சிஇஓ-வின் நிறுவனம்? ஹிண்டர்பர்க் அறிக்கையில் அதிர்ச்சி..!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/23/5e1b0293eb3fa33b847157cff9004baf1679587857970224_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
அதானி நிறுவனம் குறித்து ஹிண்டர்பர்க் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையால், அதானி நிறுவனம் மிகப்பெரிய சரிவை கண்டது.
இந்த சூழலில், மீண்டும் ஒரு முக்கிய ஆய்வறிக்கையை வெளியிட போவதாக ஹிண்டர்பர்க் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தது. இதன்மூலம் பங்கு சந்தையில் என்ன ஆகுமோ என்ற அச்சம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
ஹிண்டர்பர்க் அறிக்கையில் அதிர்ச்சி:
இந்நிலையில், தற்போது அந்த அறிக்கை வெளியாகியுள்ளது. அந்த அறிக்கையில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. ட்விட்டர் நிறுவனத்தின் முன்னாள் தலைமை செயல் அதிகாரியான ஜாக் டோர்சியின் நிறுவனம் முறைகேட்டில் ஈடுபட்டதாக ஹிண்டர்பர்க் நிறுவனம் குற்றம்சாட்டியுள்ளது.
முறைகேட்டில் ஈடுபட்டதாக கூறப்படும் நிறுவனத்தின் பெயர் பிளாக். பரிவர்த்தனை நிறுவனமான பிளாக், அதிக பயனர்கள் இருப்பதாக கூறி வாடிக்கையாளர் கையகப்படுத்தல் செலவை குறைத்து காண்பித்துள்ளது இந்த அறிக்கையின் மூலம் தெரிய வந்துள்ளது.
பயனாளர் எண்ணிக்கையை அதிகரித்து காட்டி முறைகேடு?
2 வருட விசாரணையின் முடிவில், பிளாக், உதவி செய்வதாக கூறி பயனாளர் எண்ணிக்கையின் மூலம் பலன் அடைந்து கொண்டதாக ஹிண்டர்பர்க் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கை வெளியானதை தொடர்ந்து, பிளாக் நிறுவனத்தின் பங்குகள் 18 சதவிகிதம் குறைந்துள்ளது.
முன்னதாக, அமெரிக்காவை தளமாக கொண்ட ஹிண்டர்பர்க் ரிசர்ச் நிறுவனம், அதானி குழும மிகப்பெரிய அளவிலான கணக்கு மோசடி மற்றும் பங்கை கையாண்டதாக குற்றம் சாட்டி அறிக்கை ஒன்றை வெளியிட்டது.
இதன் மூலம் அதானி குழும நிறுவனங்களில் பங்குகள் கடும் சரிவை சந்திக்க தொடங்கியது. ஆனால், இந்த குற்றச்சாட்டுகளை கௌதம் அதானி தலைமையிலான குழு மறுத்து வந்தது குறிப்பிடத்தக்கது.
ஹிண்டர்பர்க் ரிசர்ச் நிறுவனம் அதானி குறித்து வெளியிட்ட அறிக்கையில், “அதானி நிறுவனத்தில் சொந்தங்களுக்கு மட்டுமே முக்கிய பதவிகள் வழங்கப்பட்டன. வரி முறைகேடு, செயற்கையான முயற்சியால் தனது பங்குகளில் விலையை ஏற்றுதல், வங்கிகளில் அதிக கடன் என பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ளது என தெரிவித்தது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)