மேலும் அறிய

பருமனான காவல்துறை அதிகாரிகளுக்கு சிக்கல்...அஸ்ஸாமை தொடர்ந்து ஹரியானாவில் அதிரடி...!

அஸ்ஸாமை தொடர்ந்து, ஹரியானாவில் பருமன் மிக்க காவல்துறை அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

பாஜக ஆளும் மாநிலங்களில் அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டு வருகிறது. உடல் பருமன் மிக்க காவல்துறை அதிகாரிகளை பதவியில் இருந்து தூக்க அஸ்ஸாம் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. காவல்துறையில், யார் எல்லாம் பருமனாக இருக்கிறார்களோ அவர்களின் பட்டியலை அஸ்ஸாம் காவல்துறை தயார் செய்தது.

அஸ்ஸாம் முதலமைச்சர் அதிரடி: 

அவர்களுக்கு விருப்பு ஓய்வு அளிக்கப்படும் என அம்மாநில முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா அறிவித்திருந்தார். பணிபுரிவதற்கு தகுதியற்ற 650 அதிகாரிகளுக்கு விருப்ப விருப்ப ஓய்வு அளிக்கப்படும் என அசாம் காவல்துறை தலைவர் ஜி.பி.சிங் தெரிவித்திருந்தார். 

அஸ்ஸாமை தொடர்ந்து, ஹரியானாவில் பருமன் மிக்க காவல்துறை அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. அதிக எடை கொண்ட காவலர்கள் மீண்டும் உடல் தகுதி பெறும் வரை காவலில் நிற்க வைக்க பணிக்கு மாற்றப்படுவார்கள் என ஹரியானா உள்துறை அமைச்சர் அனில் விஜ் உத்தரவிட்டுள்ளார்.

உள்துறை கூடுதல் தலைமைச் செயலருக்கு எழுத்துப்பூர்வமாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதில், "பல காவல்துறை அதிகாரிகள் அதிக எடையுடன் இருக்கின்றனர். காவல் நிற்கும் பணிக்கு அவர்கள் மாற்றப்படுவார்கள். இதனால் உடல் எடை அதிகரிக்கும் காவலர்களுக்கு உடற்பயிற்சியின் மூலம் உடற்தகுதி கிடைக்கும்.

ஹரியானாவிலும் கிடுக்குப்பிடி:

காவல்துறை அதிகாரிகள்/பணியாளர்களின் உடற்தகுதியைப் பேணுவதற்காக, அதிக உடல் எடை கொண்ட அனைத்து காவல்துறை அதிகாரிகளும்/ பணியாளர்களும் காவல் பணிக்கு மாற்றப்பட்டு, அவர்கள் பணிக்குத் தகுதி பெறாதவரை உடற்பயிற்சி செய்ய வேண்டும் என நான் விரும்புகிறேன்" என குறிப்பிடப்பட்டுள்ளது. 

ஹரியானா காவல்துறையில், தற்போது 75,000 காவல்துறை அதிகாரிகள் பணிபுரிந்து வருகின்றனர். அஸ்ஸாமை பொறுத்தவரையில், உடல் பருமனான அனைத்து அதிகாரிகளுக்கும் (பிஎம்ஐ 30+) உடல் எடையை குறைக்க மேலும் மூன்று மாதங்கள் வழங்கப்படும். அதன் பிறகு, அவர்களுக்கு விருப்ப ஓய்வு (விஆர்எஸ்) அளிக்கப்படும். ஹைப்போ தைராய்டிசம் போன்ற மருத்துவ காரணங்கள் உள்ளவர்களுக்கு விலக்கு அளிக்கப்பட உள்ளது.

அதிக மது அருந்தும் காவல்துறை அதிகாரிகள் மற்றும் பருமன் மிக்க காவல்துறை அதிகாரிகள் அடங்கிய பட்டியலை அஸ்ஸாம் காவல்துறை கடந்த வாரம் தயார் செய்தது. முழுமையான ஆய்வுக்கு பிறகு, இவர்களுக்கு விருப்பு ஓய்வு அளிக்கப்படும் என அஸ்ஸாம் டிஜிபி தெரிவித்திருந்தார்.

மது அருந்துவதால் உடலில் பல பிரச்னைகள் ஏற்படுகிறது. அதிக அளவில் மது அருந்தும் பழக்கம் தனிப்பட்ட அளவில் மட்டும் இன்றி சமூக அளவிலும் பெரும் நெருக்கடிகளை ஏற்படுத்துகிறது. எனவே, மக்களிடையே மது அருந்தும் பழக்கத்தை குறைக்க விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ஓய்ந்தது விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பரப்புரை! கடைசி நாளில் உதயநிதி, அன்புமணி, சீமான் தீவிர வாக்குசேகரிப்பு!
ஓய்ந்தது விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பரப்புரை! கடைசி நாளில் உதயநிதி, அன்புமணி, சீமான் தீவிர வாக்குசேகரிப்பு!
Breaking News LIVE: இரவு 10 மணிவரையில் 12 மாவட்டங்களில் மழை: வானிலை மையம் அறிவிப்பு
Breaking News LIVE: இரவு 10 மணிவரையில் 12 மாவட்டங்களில் மழை: வானிலை மையம் அறிவிப்பு
Cricketer Natarajan:
"இலக்கை அடைவதற்கு, பல விஷயங்களை தியாகம் செய்துதான் ஆகணும்" -மாணவர்களுக்கு நடராஜன் அட்வைஸ்.
Commissioner Arun: ” இனி ரவுடிகளுக்கு புரியும் மொழியில் நடவடிக்கை“ பதவியேற்ற சென்னை ஆணையரின் முதல் பேட்டி!
Commissioner Arun: ” இனி ரவுடிகளுக்கு புரியும் மொழியில் நடவடிக்கை“ பதவியேற்ற சென்னை ஆணையரின் முதல் பேட்டி!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Youtuber A2D issue  : யூடியூபரை சுத்துப்போட்ட கும்பல்! களத்தில் சென்னை POLICE! நடந்தது என்ன?Madurai News | அடிச்சது பாருங்க லக்..சிதறிய ரூ.500  நோட்டுகள் அள்ளிச் சென்ற மக்கள்Rahul Gandhi On Hathras | ஹத்ராஸ் கூட்ட நெரிசலில் சிக்கிய அதிர்ச்சி சம்பவம்..ராகுலின் அதிரடி ACTIONSalem VCK cadre | ”கதையை முடிக்கிறேன் பாரு” மிரட்டும் விசிக நிர்வாகி! பெண் அலுவலருடன் வாக்குவாதம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஓய்ந்தது விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பரப்புரை! கடைசி நாளில் உதயநிதி, அன்புமணி, சீமான் தீவிர வாக்குசேகரிப்பு!
ஓய்ந்தது விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பரப்புரை! கடைசி நாளில் உதயநிதி, அன்புமணி, சீமான் தீவிர வாக்குசேகரிப்பு!
Breaking News LIVE: இரவு 10 மணிவரையில் 12 மாவட்டங்களில் மழை: வானிலை மையம் அறிவிப்பு
Breaking News LIVE: இரவு 10 மணிவரையில் 12 மாவட்டங்களில் மழை: வானிலை மையம் அறிவிப்பு
Cricketer Natarajan:
"இலக்கை அடைவதற்கு, பல விஷயங்களை தியாகம் செய்துதான் ஆகணும்" -மாணவர்களுக்கு நடராஜன் அட்வைஸ்.
Commissioner Arun: ” இனி ரவுடிகளுக்கு புரியும் மொழியில் நடவடிக்கை“ பதவியேற்ற சென்னை ஆணையரின் முதல் பேட்டி!
Commissioner Arun: ” இனி ரவுடிகளுக்கு புரியும் மொழியில் நடவடிக்கை“ பதவியேற்ற சென்னை ஆணையரின் முதல் பேட்டி!
"நீட் வினாத்தாள் லீக்கானது உண்மை" தேர்வு ரத்து செய்யப்படுமா? உச்ச நீதிமன்றம் அதிரடி!
ஜார்க்கண்டில் நம்பிக்கை வாக்கெடுப்பில் ஜெயித்த ஹேமந்த் சோரன் அரசு!
ஜார்க்கண்டில் நம்பிக்கை வாக்கெடுப்பில் ஜெயித்த ஹேமந்த் சோரன் அரசு!
சென்னை மக்கள் கவனத்திற்கு - செல்லப்பிராணி வளர்ப்போர் 3 மாதத்திற்குள் லைசன்ஸ் எடுக்க வேண்டும்
சென்னை மக்கள் கவனத்திற்கு - செல்லப்பிராணி வளர்ப்போர் 3 மாதத்திற்குள் லைசன்ஸ் எடுக்க வேண்டும்
EPS: சென்னை காவல் ஆணையரை மாற்றியதும் உடனடி ரியாக்‌ஷன் கொடுத்த எடப்பாடி பழனிசாமி! 
EPS: சென்னை காவல் ஆணையரை மாற்றியதும் உடனடி ரியாக்‌ஷன் கொடுத்த எடப்பாடி பழனிசாமி! 
Embed widget