மேலும் அறிய

"கள்ள உறவில் இல்லையென்று காட்டு"! கொதிக்கும் எண்ணெயில் கையை முக்கிய பெண்.. குஜராத் கிராமத்தில் ஒரு அவலம்..!

திருமணத்தைத் தாண்டிய உறவு இல்லை என்பதை நிரூபிக்க குஜராத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் கொதிக்கும் எண்ணெயில் கையை முக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருமணத்தைத் தாண்டிய உறவு இல்லை என்பதை நிரூபிக்க குஜராத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் கொதிக்கும் எண்ணெயில் கையை முக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலம் சுரேந்திரநகர் மாவட்டம் திரன்கத்ரா தாலுகாவில் உள்ளது நிமக்நகர் என்ற கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் கீதா விஞ்சியா (39). இவருக்கும் இன்னொரு நபருக்கும் திருமணத்தைத் தாண்டிய உறவு இருப்பதாக அதே பகுதியைச் சேர்ந்த திரு பிமானி (60) என்ற நபர் குற்றஞ்சாட்டினார். ஆனால், அதனை கீதா திட்டவட்டமாக மறுத்துவந்தார். 

இந்நிலையில், கீதா தன்னை குற்றமற்றவர் என்று நிரூபிக்க கொதிக்கும் எண்ணெயில் கையை முக்க வேண்டும் என்று பிமானி கூறினார். மேலும், தானும் அவ்வாறு செய்யத் தயார் என்றும் யார் நிரபராதியோ அவருக்கு ஏதும் ஆகாது என்றும் பிமானி கூறினார். அதனால், இருவரும் கொதிக்கும் எண்ணெயில் கையை முக்கினர். இதில் இருவருக்குமே காயம் ஏற்பட்டுள்ளது. கீதா படுகாயமடைந்துள்ளார்.

இது குறித்து த்ரங்கபத்ரா தாலுகா போலீஸ் விசாரணை மேற்கொண்டனர். விஞ்சியா மீதும் பிமானி மீதும் வழக்குப்பதிவு செய்து தடுப்புக் காவலில் எடுத்தனர். இருவருமே நீதிபதியின் முன் நிலைநிறுத்தப்பட்டனர். சொந்த ஜாமீனின் பேரில் அவர்கள் விடுவிக்கப்பட்டனர். இந்தச் சம்பவத்தில் பெண்ணைத் தூண்டி கையை எண்ணெய்யில் முக்கச் செய்த பிமானி மீது நடவடிக்கை எடுக்குமாறு பலதரப்பிலிருந்தும் அழுத்தம் ஏற்பட்டுள்ளது. நிமக்நகர் பஞ்சாயத்துத் தலைவரின் கணவர் சந்து குதேச்சாவும் இதனை போலீஸாரிடம் வலியுறுத்தினார். ஆனால் போலீஸ் தரப்பிலோ, சம்பந்தப்பட்ட பெண் இதற்கு மறுப்பு தெரிவித்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கீதா விஞ்சியாவின் கணவர் வாஷ்ராம் லாரி ஓட்டுநராகப் பணிபுரிகிறார். 

ஏன் இப்படிச் செய்தேன்!

கொதிக்கும் எண்ணெயில் கையை முக்கியது தொடர்பாக கீதா விஞ்சியா கூறும்போது, "கடந்த சில மாதங்களாகவே பிமானி என் மீது அவதூறு பரப்பி வந்தார். அதிகாலையில் என் கணவர் வேலைக்குச் சென்றதும் என் வீட்டினுள் யாரோ ஒருவர் நுழைவதாக அவர் ஊர் முழுக்கச் சொல்லிவந்தார். இதனால் என் கணவரை பலரும் இழிவாகப் பேசினர். நான் நிரபராதி என நிரூபிக்க கொதிக்கும் எண்ணெய்யில் கையை முக்க வேண்டும் என்று பிமானி கூறினார். அவருக்கு அவர் குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் ஆதரவாக இருந்தனர். என் கணவருக்காக நான் எண்ணெய்யில் கையை முக்கினேன். எனக்கு வேறு வழி தெரியவில்லை. பிமான அவர் விரல் நுனியால் மட்டுமே எண்ணெய்யை தொட்டார். நான் கையை முக்கினேன்.

எனக்கு 13 வயதிருக்கும்போது என் கணவரை திருமணம் செய்தேன். 27 ஆண்டுகள் வாழ்வில் எங்களுக்கு குழந்தை இல்லை. அதனால் ஊரார் என் மீது வதந்திகளைப் பரப்பி வருகின்றனர். பிமானி எனது அண்டை வீட்டுக்காரர். அவர் வீட்டில் ஐந்து ஆண்கள் உள்ளனர். நான் அவர் மீது புகார் கொடுத்தால் என்னாளும் என் கணவருக்கு இடையூறாகிவிடும் " என்று கூறினார்.

நிமக்நார் ராண் ஆஃப் கச் பகுதியை ஒட்டி உள்ளது. இப்பகுதியில் கல்வியறிவு மிகமிகக் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

18 மாவட்ட விவசாயிகளின் வங்கி கணக்கில் ஓரிரு நாட்களில் பணம் வரும் - குட் நியூஸ் சொன்ன முதலமைச்சர்
18 மாவட்ட விவசாயிகளின் வங்கி கணக்கில் ஓரிரு நாட்களில் பணம் வரும் - குட் நியூஸ் சொன்ன முதலமைச்சர்
Minister Anbil Mahesh: ’’உங்கள் அப்பன் வீட்டுப் பணமா? ஸ்டாலினை ஏமாற்ற பிறந்துதான் வரணும்’’- அமைச்சர் அன்பில் மகேஸ் ஆவேசம்!
’’உங்கள் அப்பன் வீட்டுப் பணமா? ஸ்டாலினை ஏமாற்ற பிறந்துதான் வரணும்’’- அமைச்சர் அன்பில் மகேஸ் ஆவேசம்!
உஷார்! தமிழகத்தில் காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பா? செய்ய வேண்டியது என்ன?
உஷார்! தமிழகத்தில் காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பா? செய்ய வேண்டியது என்ன?
CBSE: 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு வினாத்தாள்கள் கசிவா? சிபிஎஸ்இ பரபரப்பு விளக்கம்!
CBSE: 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு வினாத்தாள்கள் கசிவா? சிபிஎஸ்இ பரபரப்பு விளக்கம்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Tiruppur : ”துப்பாக்கி வச்சி மிரட்டுறாங்க” ஜெய் பீம் பட பாணியில் போலீஸ்! கதறி அழும் குறவர் பெண்கள்!Avadi Murder CCTV: பட்டப்பகலில் வெட்டிக்கொலை!பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள்!ஆவடியில் நடந்த பயங்கரம்Chengalpattu News: ”நீதான கட்டிங் கேட்ட”நடுரோட்டில் நடந்த சண்டை ஊராட்சி அலுவலகத்தில் பரபரப்புChengalpattu News | ”நீதான கட்டிங் கேட்ட”நடுரோட்டில் நடந்த சண்டை ஊராட்சி அலுவலகத்தில் பரபரப்பு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
18 மாவட்ட விவசாயிகளின் வங்கி கணக்கில் ஓரிரு நாட்களில் பணம் வரும் - குட் நியூஸ் சொன்ன முதலமைச்சர்
18 மாவட்ட விவசாயிகளின் வங்கி கணக்கில் ஓரிரு நாட்களில் பணம் வரும் - குட் நியூஸ் சொன்ன முதலமைச்சர்
Minister Anbil Mahesh: ’’உங்கள் அப்பன் வீட்டுப் பணமா? ஸ்டாலினை ஏமாற்ற பிறந்துதான் வரணும்’’- அமைச்சர் அன்பில் மகேஸ் ஆவேசம்!
’’உங்கள் அப்பன் வீட்டுப் பணமா? ஸ்டாலினை ஏமாற்ற பிறந்துதான் வரணும்’’- அமைச்சர் அன்பில் மகேஸ் ஆவேசம்!
உஷார்! தமிழகத்தில் காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பா? செய்ய வேண்டியது என்ன?
உஷார்! தமிழகத்தில் காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பா? செய்ய வேண்டியது என்ன?
CBSE: 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு வினாத்தாள்கள் கசிவா? சிபிஎஸ்இ பரபரப்பு விளக்கம்!
CBSE: 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு வினாத்தாள்கள் கசிவா? சிபிஎஸ்இ பரபரப்பு விளக்கம்!
முஸ்லீம்கள் ஓட்டு கிடைக்குமா? தவெக விஜய்யின் மாஸ்டர் ஸ்ட்ரோக்.. திமுக கோட்டையில் ஓட்டை!
முஸ்லீம்கள் ஓட்டு கிடைக்குமா? தவெக விஜய்யின் மாஸ்டர் ஸ்ட்ரோக்.. திமுக கோட்டையில் ஓட்டை!
Watch video: பாலத்தை எல்லாம் கும்பிட்றீங்க? மகா கும்பமேளாவில் நடக்கும் மூடநம்பிக்கையின் உச்சம்
Watch video: பாலத்தை எல்லாம் கும்பிட்றீங்க? மகா கும்பமேளாவில் நடக்கும் மூடநம்பிக்கையின் உச்சம்
Coimbatore Shutdown: கோவையில் எங்கெல்லாம் மின்தடை (20.02.2025 ): செக் பன்னிக்கோங்க.!
Coimbatore Shutdown: கோவையில் எங்கெல்லாம் மின்தடை (20.02.2025 ): செக் பன்னிக்கோங்க.!
Champions Trophy 2025: சாம்பியன்ஸ் டிராபி புது ஜெர்சியில இந்திய அணி வீரர்கள பார்த்துட்டீங்களா.? இதோ புகைப்படங்கள்...
சாம்பியன்ஸ் டிராபி புது ஜெர்சியில இந்திய அணி வீரர்கள பார்த்துட்டீங்களா.? இதோ புகைப்படங்கள்...
Embed widget

We use cookies to improve your experience, analyze traffic, and personalize content. By clicking "Allow All Cookies", you agree to our use of cookies.