மேலும் அறிய

குஜராத் : கோயிலுக்குள் நுழைந்ததால் தலிக் குடும்பத்தை சேர்ந்த 6 பேர் மீது தாக்குதல்..

குஜராத்தில் கோயிலுக்குள் நுழைந்ததற்காக தலித் குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் மீது வன்முறைத் தாக்குதல் நடந்துள்ளது.

குஜராத்தில் கோயிலுக்குள் நுழைந்ததற்காக தலித் குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் மீது வன்முறைத் தாக்குதல் நடந்துள்ளது. குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டம் காந்திதம் பகுதியில் தான் இந்தக் கொடூரச் சம்பவம் நடந்துள்ளது. கடந்த 26-ஆம் தேதி, பச்சாவூ காவல் சரகத்துக்கு உட்பட்ட நேர் கிராமத்தில் இச்சம்பவம் நடந்ததாக காவல் கண்காணிப்பாளர் கிஷோர்ஷின் ஜாலா தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் அளித்தப் பேட்டியில், இந்தச் சம்பவம் தொடர்பாக இதுவரை இரண்டு எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. 20 பேர் சேர்ந்த கும்பல் வன்முறைத் தாக்குதலில் ஈடுபட்டதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றவாளிகளைத் தேடி வருகிறோம் என்றார்.

தலித் குடும்பத்தைத் தாக்கியதாக கானா அஹிர், ராஜேஷ் மகாராஜ், கேஸ்ரா ராபாய், பாபாய் ராபரி, கானா கோலி, ஆகியோர் மீது எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. கொலை முயற்சி, வழிப்பறி, திருட்டு, தாக்குதல், எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டம் ஆகியனவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கோவிந்த வகேலா குடும்பத்தினர் மீது தாக்குதல் நடத்தியவர்கள், அவர் நேர் கிராமத்தில் உள்ள ராமர் கோயிலில் முக்கியமான பூஜை நடந்து கொண்டிருந்த போது குடும்பத்துடன் அங்கு வந்தார் என்பதால் ஆத்திரமடைந்து தாக்கியுள்ளனர்.

இது நடந்த ஒரு மணி நேரத்திலேயே அவர் குடும்பத்தினர்  மீது இன்னொரு தாக்குதல் நடந்தது. கோவிந்த் வகேலாவின் வயலில் கால்நடைகளை அனுப்பி மேயவிட்டு பயிர்களுக்கு சேதம் விளைவித்துள்ளனர். இதனையறிந்த கணேஷ் வகேலா சம்பவ இடத்துக்குச் செல்ல அங்கே அவர் வன்முறை கும்பல் பைப், தடிகள் மற்றும் கூர்மையான ஆயுதங்கள் கொண்டு தாக்கியுள்ளனர். எவ்வளவு தைரியிம் இருந்தால் குடும்பத்துடன் ராமர் கோயிலுக்கு வருவீர்கள் என்று கூறி தாக்குதல் நடத்தியுள்ளனர்.

சத்தம் கேட்டு அவங்கு வந்த கனேஷின் தாயார் பாதிபென், தந்தை ஜகாபாய், அவர்களின் உறவினர்கள் என மொத்தம் 6 பேர் தாக்குதலுக்கு உள்ளாகினர். பாதிக்கப்பட்ட அனைவரும் பூஜ் பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
சாதியால் யாரையும் பிரிவினைப்படுத்தி கோயிலுக்குள் வர தடுக்கக் கூடாது என்பது அரசியல் சாசனத்தில் கூறப்பட்டுள்ள சட்டம். ஆனால், இதையும் மீறி இவ்வாறான தலித் விரோத சம்பவங்கள் நடந்து வருகின்றன.

கடந்த செப்டம்பர் மாதம் கர்நாடக மாநிலம் கொப்பால் மாவட்டத்தில், உள்ளூர் ஆஞ்சநேயர் கோயிலில் 2 வயது குழந்தை தவறுதலாக நுழைந்துவிட்டது. அந்தக் குழந்தை தலித் குடும்பத்தைச் சேர்ந்தது என்பதால், 23,000 ரூ. அபராதம் செலுத்தும்படி அந்தக் குடும்பத்தினருக்கு தண்டனை வழங்கப்பட்டது. தற்போது குஜராத்தில் தலித் குடும்பத்தின் மீது வன்முறை தாக்குதல் நடந்துள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

எதிர்பாராத விபத்து - கல்பாக்கத்தில் பாதுகாப்பு படை வீரர் மீது துப்பாக்கி தோட்டா பாய்ந்து உயிரிழப்பு
எதிர்பாராத விபத்து - கல்பாக்கத்தில் பாதுகாப்பு படை வீரர் மீது துப்பாக்கி தோட்டா பாய்ந்து உயிரிழப்பு
Breaking News LIVE: ஜவ்வாது மலைத்தொடரில் கனமழை - வேலூர் உத்திர காவிரி ஆற்றில் வெள்ளம்
Breaking News LIVE: ஜவ்வாது மலைத்தொடரில் கனமழை - வேலூர் உத்திர காவிரி ஆற்றில் வெள்ளம்
RCB Vs CSK: இவங்களையா பென்ச்ல உட்கார வச்சோம்! சென்னையிடம் அசத்திய அந்த 3 வீரர்கள்! அட்ராசிட்டி செய்யும் ஆர்சிபி!
RCB Vs CSK: இவங்களையா பென்ச்ல உட்கார வச்சோம்! சென்னையிடம் அசத்திய அந்த 3 வீரர்கள்! அட்ராசிட்டி செய்யும் ஆர்சிபி!
RCB vs CSK:
"மகேந்திர சிங் தோனி கிரீஸில் இருந்ததால்..." வெற்றிக்கு பின் திக் திக் நிமிடங்களை பகிர்ந்த ஆர்சிபி கேப்டன் ஃபாஃப்!
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Mallikarjun Kharge | ”நாங்கதான் முடிவு எடுப்போம்! I.N.D.I.A கூட்டணியில் மம்தா” எகிறி அடித்த கார்கேPadayappa elephant Viral Video | ஆட்டம் காட்டிய படையப்பா தூக்கிய வனத்துறையினர் யானையின் அட்ராசிட்டிChennai's Amirtha Aviation | சென்னைஸ் அமிர்தா சர்வதேச விமானக் கல்லூரி படிக்கும் போதே 15000 சம்பளம்Sathyaraj in Modi Biopic | அப்போ பெரியார்  இப்போ மோடிஅதிர்ச்சி கொடுத்த சத்யராஜ் மகள் சொன்ன GOOD NEWS

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
எதிர்பாராத விபத்து - கல்பாக்கத்தில் பாதுகாப்பு படை வீரர் மீது துப்பாக்கி தோட்டா பாய்ந்து உயிரிழப்பு
எதிர்பாராத விபத்து - கல்பாக்கத்தில் பாதுகாப்பு படை வீரர் மீது துப்பாக்கி தோட்டா பாய்ந்து உயிரிழப்பு
Breaking News LIVE: ஜவ்வாது மலைத்தொடரில் கனமழை - வேலூர் உத்திர காவிரி ஆற்றில் வெள்ளம்
Breaking News LIVE: ஜவ்வாது மலைத்தொடரில் கனமழை - வேலூர் உத்திர காவிரி ஆற்றில் வெள்ளம்
RCB Vs CSK: இவங்களையா பென்ச்ல உட்கார வச்சோம்! சென்னையிடம் அசத்திய அந்த 3 வீரர்கள்! அட்ராசிட்டி செய்யும் ஆர்சிபி!
RCB Vs CSK: இவங்களையா பென்ச்ல உட்கார வச்சோம்! சென்னையிடம் அசத்திய அந்த 3 வீரர்கள்! அட்ராசிட்டி செய்யும் ஆர்சிபி!
RCB vs CSK:
"மகேந்திர சிங் தோனி கிரீஸில் இருந்ததால்..." வெற்றிக்கு பின் திக் திக் நிமிடங்களை பகிர்ந்த ஆர்சிபி கேப்டன் ஃபாஃப்!
Rain Alert: ரெட் அலெர்ட் - இன்று அதிகனமழைக்கு வாய்ப்பு, எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா? சென்னை நிலவரம்..
Rain Alert: ரெட் அலெர்ட் - இன்று அதிகனமழைக்கு வாய்ப்பு, எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா? சென்னை நிலவரம்..
Karunas:
Karunas: "பணம் வைத்திருப்பவர்கள் எல்லாரும் நல்லவர்கள் கிடையாது" - நடிகர் கருணாஸ் ஆக்ரோஷம்!
SRH Vs PBKS, IPL 2024: புள்ளிப்பட்டியலில் 2வது இடத்தை குறிவைக்கும் ஐதராபாத்..! பஞ்சாப் உடன் இன்று பலப்பரீட்சை
SRH Vs PBKS, IPL 2024: புள்ளிப்பட்டியலில் 2வது இடத்தை குறிவைக்கும் ஐதராபாத்..! பஞ்சாப் உடன் இன்று பலப்பரீட்சை
K Rajan: “சினிமாவில் அட்ஜஸ்மெண்ட் நடக்குது” - சுசித்ரா குற்றச்சாட்டுக்கு பதிலளித்த கே.ராஜன்!
K Rajan: “சினிமாவில் அட்ஜஸ்மெண்ட் நடக்குது” - சுசித்ரா குற்றச்சாட்டுக்கு பதிலளித்த கே.ராஜன்!
Embed widget