மேலும் அறிய

Goa CM Comment Controversy: கோவா பாலியல் வன்புணர்வு விவகாரம் -முதல்வர் கருத்தால் சர்ச்சை!

‘14 வயது சிறுமி இரவு முழுவதும் கடற்கரையில் தங்கும்போது பெற்றோர்கள் ஏன் எனக் கண்டறிய வேண்டும். பிள்ளைகள் சொன்ன பேச்சு கேட்பதில்லை என்பதற்காக அரசாங்கத்தின் மீது பழி சுமத்தக்கூடாது ’ எனக் கூறியுள்ளார்.

 மைனர் சிறுமிகள் பாலியல் வன்புணர்வு வழக்கில் கோவா முதலமைச்சர் ப்ரமோத் சாவந்த்தின் கருத்து அந்த மாநிலத்தில் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அண்மையில் கோவா மாநிலத்தில் கடலோரம் இரவில் சுற்றிய 14 வயது மதிக்கத்தக்க சிறுமிகள் இரண்டு பேரை அரசு அதிகாரி உட்பட நான்கு பேர் காவல்துறை அதிகாரிகள் போல நடித்து பாலியல் வன்புணர்வு செய்தனர். அதோடு மட்டுமல்லாமல் அந்தச் சிறுமிகளுடன் வந்த இரண்டு சிறுவர்களையும் இந்த நால்வரும் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாகத் தெரிகிறது. இந்த விவகாரம் தற்போது அந்த மாநிலத்தைப் பற்றி எரியச் செய்துள்ளது. 

இதற்கிடையே இந்த விவகாரத்தில் கருத்து கூறியுள்ள அந்த மாநில முதல்வர் ப்ரமோத் சாவந்த் இரண்டு சிறுமிகளும் இரவில் கடலுக்குச் சென்றது குறித்து பெற்றோர்கள் ஏன் எனக் கண்டறிய வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார். அவரது இந்தக் கருத்து வலுத்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அவரது கருத்தில், ‘ஒரு 14 வயது சிறுமி இரவு முழுவதும் கடற்கரையில் தங்கும்போது பெற்றோர்கள் ஏன் எனக் கண்டறிய வேண்டும். பிள்ளைகள் சொன்ன பேச்சு கேட்பதில்லை என்பதற்காக அரசாங்கத்தின் மீதும் காவல்துறையின் மீதும் பழிசுமத்தக்கூடாது ’ எனக் கூறியுள்ளார். பிள்ளைகளின் பாதுகாப்பை உறுதிசெய்யவேண்டியது பெற்றோரின் கடமை என்றும் அவர்கள் இரவில் வெளியே சென்றிருக்கவே கூடாது என்றும் அவர் நேற்று கோவா சட்டப்பேரவையில் பேசியது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.

எதிர்கட்சிகள் இதனால் அங்கே கொதித்து எழுந்துள்ளனர். சிலர் கோவா முதல்வர் பதவி விலகவேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.கோவா காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் அல்டோன் டி காஸ்டா, ‘இரவில் வெளியே நடமாட நாம் ஏன் பயப்பட வேண்டும். குற்றவாளிகள் சிறையில் இருக்க வேண்டும். சட்டத்தை மதிப்பவர்கள் சுதந்திரமாக நடமாட வேண்டும்’ எனக் கூறியுள்ளார்.

சிவசேனா தலைவரும் ராஜ்யசபா உறுப்பினருமான பிரியங்கா சதுர்வேதி கூறுகையில், ‘தனது கடமையைத் தட்டிக்கழிக்கும் அருவருக்கத்தக்க செயல். வெட்கமற்றவர்கள்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

முதல்வரின் கருத்து அருவருக்கத்தக்கதாக உள்ளது என கோவா ஃபார்வர்ட் கட்சி தலைவர் விஜய் சர்தேசாய் கூறியுள்ளார்.மேலும் குடிமக்களுக்குப் பாதுகாப்பு அளிக்கவேண்டியது அரசு மற்றும் போலீஸின் கடமை. அதனைத் தரமுடியாதவர்கள் பதவிவிலக வேண்டும் எனக் கூறியுள்ளார்.

இந்த குற்றத்தில் ஈடுபட்ட நான்கு பேரும் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்றைய கோவா சட்டமன்ற விவாதத்தில் இந்த குற்றம்சாட்டப்பட்டவர்களைக் காப்பற்ற செல்வாக்குள்ள சிலர் முயன்றதாக எம்.எல்.ஏ. ஒருவர் சொன்னது குறிப்பிடத்தக்கது.

தலைப்பு செய்திகள்

NTA: உள்ளேயே கறுப்பு ஆடுகள்; நீட் வினாத்தாள் கசிவு- 47 என்டிஏ அதிகாரிகள் அதிரடி டிஸ்மிஸ்!
NTA: உள்ளேயே கறுப்பு ஆடுகள்; நீட் வினாத்தாள் கசிவு- 47 என்டிஏ அதிகாரிகள் அதிரடி டிஸ்மிஸ்!
ஒரே இளைஞரைத் திருமணம் செய்துகொண்ட 3 சகோதரிகள்! வைரலாகும் விசித்திரச் சம்பவம்!
ஒரே இளைஞரைத் திருமணம் செய்துகொண்ட 3 சகோதரிகள்! வைரலாகும் விசித்திரச் சம்பவம்!
SC On CJP: மாணவர்கள் மீது தாக்குதல்..! உச்சநீதிமன்றத்தில் நடந்த வாதம் - தலைமை நீதிபதியின் கருத்து என்ன?
மாணவர்கள் மீது தாக்குதல்..! உச்சநீதிமன்றத்தில் நடந்த வாதம் - தலைமை நீதிபதியின் கருத்து என்ன?
போலீஸ் வாகனத்தை வழிமறித்த இளம்பெண் யார்? நாடு முழுவதும் பேசப்படும் ரியா அஹிரின் பின்னணி!
போலீஸ் வாகனத்தை வழிமறித்த இளம்பெண் யார்? நாடு முழுவதும் பேசப்படும் ரியா அஹிரின் பின்னணி!

வீடியோ

Sonam Wangchuk : பணிந்த மத்திய அரசு! நேரில் வந்த நட்டா26 நாள் உண்ணாவிரதத்தை முடித்த சோனம் வாங்சுக்
CM Vijay Meets DK Shivakumar : நானே களத்துல இறங்குறேன்! காவிரி விவகாரம்.. கர்நாடகா செல்லும் CM விஜய்!
Senthil Balaji Entry : ஒரு மாதம் தலைமறைவு.. STATION-ல வந்து SIGN போடணும்! ஆஜரான செந்தில் பாலாஜி
அரசு நிகழ்ச்சியில் ரீல்ஸ் தவெக-வினர் அலப்பறை கண்டுகொள்ளாத அருண்ராஜ்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK STALIN : “Sorry சொன்னால் போதுமா?” என கேட்டீங்க.. நீங்க எங்கே ஒளிந்திருக்கீங்க.? CM விஜய்யை கேள்வி கேட்கும் ஸ்டாலின்
“Sorry சொன்னால் போதுமா?” என கேட்டீங்க.. நீங்க எங்கே ஒளிந்திருக்கீங்க.? CM விஜய்யை கேள்வி கேட்கும் ஸ்டாலின்
Actress Jyothika : அமைச்சரே உடனே ராஜினாமா பண்ணுங்க.! தைரியமாக இறங்கி அடித்த நடிகை ஜோதிகா
அமைச்சரே உடனே ராஜினாமா பண்ணுங்க.! தைரியமாக இறங்கி அடித்த நடிகை ஜோதிகா
Chengalpattu metro rail : அடி தூள்.! செங்கல்பட்டு வரை மெட்ரோ ரயில்.. எதிர்பார்த்த மக்களுக்கு அசத்தல் அறிவிப்பு வந்தாச்சு
அடி தூள்.! செங்கல்பட்டு வரை மெட்ரோ ரயில்.. எதிர்பார்த்த மக்களுக்கு அசத்தல் அறிவிப்பு வந்தாச்சு
Thirumavalavan:
Thirumavalavan: "தர்மேந்திர பிரதான் பாவம்.." திருமாவளவன் திடீரென ஏன் அப்படி பேசினார்?
Sanam Shetty:
Sanam Shetty: "நான் தளபதி ரசிகை.." சனம் ஷெட்டியிடம் மைக்கைப் பிடுங்கி அனுப்பிய மாணவர்கள் - நீங்களே பாருங்க
TASMAC SHOP : பாட்டிலுக்கு ரூ.10 வாங்கினால் இனி தப்பிக்க முடியாது.! என்னென்ன Punishment.? லிஸ்ட் போட்ட டாஸ்மாக்
பாட்டிலுக்கு ரூ.10 வாங்கினால் இனி தப்பிக்க முடியாது.! என்னென்ன Punishment.? லிஸ்ட் போட்ட டாஸ்மாக்
ஆபத்தை ஏற்படுத்த காத்திருக்கும் கால்நடை தடுப்பு... நோயாளிகள் பெரும் அவதி: எங்கே தெரியுமா?
ஆபத்தை ஏற்படுத்த காத்திருக்கும் கால்நடை தடுப்பு... நோயாளிகள் பெரும் அவதி: எங்கே தெரியுமா?
வறண்டு வரும் அணைகள், ஏரிகள்! வறட்சியை சந்திக்கும் தமிழ்நாடு? உடனடி தீர்வு காண்பாரா விஜய்?
வறண்டு வரும் அணைகள், ஏரிகள்! வறட்சியை சந்திக்கும் தமிழ்நாடு? உடனடி தீர்வு காண்பாரா விஜய்?
Embed widget