மேலும் அறிய

Goa CM Comment Controversy: கோவா பாலியல் வன்புணர்வு விவகாரம் -முதல்வர் கருத்தால் சர்ச்சை!

‘14 வயது சிறுமி இரவு முழுவதும் கடற்கரையில் தங்கும்போது பெற்றோர்கள் ஏன் எனக் கண்டறிய வேண்டும். பிள்ளைகள் சொன்ன பேச்சு கேட்பதில்லை என்பதற்காக அரசாங்கத்தின் மீது பழி சுமத்தக்கூடாது ’ எனக் கூறியுள்ளார்.

 மைனர் சிறுமிகள் பாலியல் வன்புணர்வு வழக்கில் கோவா முதலமைச்சர் ப்ரமோத் சாவந்த்தின் கருத்து அந்த மாநிலத்தில் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அண்மையில் கோவா மாநிலத்தில் கடலோரம் இரவில் சுற்றிய 14 வயது மதிக்கத்தக்க சிறுமிகள் இரண்டு பேரை அரசு அதிகாரி உட்பட நான்கு பேர் காவல்துறை அதிகாரிகள் போல நடித்து பாலியல் வன்புணர்வு செய்தனர். அதோடு மட்டுமல்லாமல் அந்தச் சிறுமிகளுடன் வந்த இரண்டு சிறுவர்களையும் இந்த நால்வரும் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாகத் தெரிகிறது. இந்த விவகாரம் தற்போது அந்த மாநிலத்தைப் பற்றி எரியச் செய்துள்ளது. 

இதற்கிடையே இந்த விவகாரத்தில் கருத்து கூறியுள்ள அந்த மாநில முதல்வர் ப்ரமோத் சாவந்த் இரண்டு சிறுமிகளும் இரவில் கடலுக்குச் சென்றது குறித்து பெற்றோர்கள் ஏன் எனக் கண்டறிய வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார். அவரது இந்தக் கருத்து வலுத்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அவரது கருத்தில், ‘ஒரு 14 வயது சிறுமி இரவு முழுவதும் கடற்கரையில் தங்கும்போது பெற்றோர்கள் ஏன் எனக் கண்டறிய வேண்டும். பிள்ளைகள் சொன்ன பேச்சு கேட்பதில்லை என்பதற்காக அரசாங்கத்தின் மீதும் காவல்துறையின் மீதும் பழிசுமத்தக்கூடாது ’ எனக் கூறியுள்ளார். பிள்ளைகளின் பாதுகாப்பை உறுதிசெய்யவேண்டியது பெற்றோரின் கடமை என்றும் அவர்கள் இரவில் வெளியே சென்றிருக்கவே கூடாது என்றும் அவர் நேற்று கோவா சட்டப்பேரவையில் பேசியது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.

எதிர்கட்சிகள் இதனால் அங்கே கொதித்து எழுந்துள்ளனர். சிலர் கோவா முதல்வர் பதவி விலகவேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.கோவா காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் அல்டோன் டி காஸ்டா, ‘இரவில் வெளியே நடமாட நாம் ஏன் பயப்பட வேண்டும். குற்றவாளிகள் சிறையில் இருக்க வேண்டும். சட்டத்தை மதிப்பவர்கள் சுதந்திரமாக நடமாட வேண்டும்’ எனக் கூறியுள்ளார்.

சிவசேனா தலைவரும் ராஜ்யசபா உறுப்பினருமான பிரியங்கா சதுர்வேதி கூறுகையில், ‘தனது கடமையைத் தட்டிக்கழிக்கும் அருவருக்கத்தக்க செயல். வெட்கமற்றவர்கள்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

முதல்வரின் கருத்து அருவருக்கத்தக்கதாக உள்ளது என கோவா ஃபார்வர்ட் கட்சி தலைவர் விஜய் சர்தேசாய் கூறியுள்ளார்.மேலும் குடிமக்களுக்குப் பாதுகாப்பு அளிக்கவேண்டியது அரசு மற்றும் போலீஸின் கடமை. அதனைத் தரமுடியாதவர்கள் பதவிவிலக வேண்டும் எனக் கூறியுள்ளார்.

இந்த குற்றத்தில் ஈடுபட்ட நான்கு பேரும் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்றைய கோவா சட்டமன்ற விவாதத்தில் இந்த குற்றம்சாட்டப்பட்டவர்களைக் காப்பற்ற செல்வாக்குள்ள சிலர் முயன்றதாக எம்.எல்.ஏ. ஒருவர் சொன்னது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
5364
Active
4724
Recovered
55
Deaths
Last Updated: Fri 6 June, 2025 at 11:10 pm | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கபட்ட சோனியா காந்தி: இமாச்சலில் பரபரப்பு! காரணம் என்ன?
திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கபட்ட சோனியா காந்தி: இமாச்சலில் பரபரப்பு! காரணம் என்ன?
”ஓயாத கிளாம்பாக்கம் பரிதாபங்கள்
”ஓயாத கிளாம்பாக்கம் பரிதாபங்கள்" நிர்வாகத் திறனற்ற ஆட்சி.. திமுகவை கேள்விகளால் வறுத்தெடுத்த எடப்பாடி பழனிச்சாமி
ஆற்றல் அசோக்குமார் மீது அடுத்தடுத்து புகார்கள்.. அம்பலமானது எப்படி? யார் இந்த முன்னாள் எம்பி-யின் மகன்?
ஆற்றல் அசோக்குமார் மீது அடுத்தடுத்து புகார்கள்.. அம்பலமானது எப்படி? யார் இந்த முன்னாள் எம்பி-யின் மகன்?
L Murugan: ”முதல்வர் பூச்சாண்டி காட்ட வேணாம்... பொய் பிரச்சாரம் அம்பலம்! தொகுதி மறுவரையறை குறித்து எல். முருகன் குற்றச்சாட்டு
L Murugan: ”முதல்வர் பூச்சாண்டி காட்ட வேணாம்... பொய் பிரச்சாரம் அம்பலம்! தொகுதி மறுவரையறை குறித்து எல். முருகன் குற்றச்சாட்டு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TVK Vijay Alliance | பாமக - தேமுதிக  - தவெக! உருவாகும் மெகா கூட்டணி? விஸ்வரூபம் எடுக்கும் விஜய்தங்கத்தின் மதிப்பில் 85% கடன் அள்ளிக் கொடுக்க RBI அனுமதி  பிரச்னை ஓவர்..! RBI Gold Loan Rules”வைரமுத்து சமரசம் பேசுனாரு என்கிட்ட ஆதாரம் இருக்கு” சீறிய சின்மயி Chinmayi on VairamuthuTVK Vijay Alliance | தவெக யாருடன் கூட்டணி? விஜய் போட்ட ஸ்கெட்ச்! அறிவிப்பு எப்போது?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கபட்ட சோனியா காந்தி: இமாச்சலில் பரபரப்பு! காரணம் என்ன?
திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கபட்ட சோனியா காந்தி: இமாச்சலில் பரபரப்பு! காரணம் என்ன?
”ஓயாத கிளாம்பாக்கம் பரிதாபங்கள்
”ஓயாத கிளாம்பாக்கம் பரிதாபங்கள்" நிர்வாகத் திறனற்ற ஆட்சி.. திமுகவை கேள்விகளால் வறுத்தெடுத்த எடப்பாடி பழனிச்சாமி
ஆற்றல் அசோக்குமார் மீது அடுத்தடுத்து புகார்கள்.. அம்பலமானது எப்படி? யார் இந்த முன்னாள் எம்பி-யின் மகன்?
ஆற்றல் அசோக்குமார் மீது அடுத்தடுத்து புகார்கள்.. அம்பலமானது எப்படி? யார் இந்த முன்னாள் எம்பி-யின் மகன்?
L Murugan: ”முதல்வர் பூச்சாண்டி காட்ட வேணாம்... பொய் பிரச்சாரம் அம்பலம்! தொகுதி மறுவரையறை குறித்து எல். முருகன் குற்றச்சாட்டு
L Murugan: ”முதல்வர் பூச்சாண்டி காட்ட வேணாம்... பொய் பிரச்சாரம் அம்பலம்! தொகுதி மறுவரையறை குறித்து எல். முருகன் குற்றச்சாட்டு
நீங்கள் நினைத்த கூட்டணியில் பாமக... ஹின்ட் கொடுத்த ராமதாஸ்.. பாமக தலைவர் யார்?
நீங்கள் நினைத்த கூட்டணியில் பாமக... ஹின்ட் கொடுத்த ராமதாஸ்.. பாமக தலைவர் யார்?
அயோத்தியில் அநியாயம்.. ராமர் கோயில் பிரசாதத்திலே பல கோடி மோசடி - பக்தர்களுக்கே விபூதி..
அயோத்தியில் அநியாயம்.. ராமர் கோயில் பிரசாதத்திலே பல கோடி மோசடி - பக்தர்களுக்கே விபூதி..
இதைவிட வேறென்ன வேண்டும்? ரசிகர்கள் செயலால்... நெகிழ்ந்து போன நடிகர் கார்த்தி!
இதைவிட வேறென்ன வேண்டும்? ரசிகர்கள் செயலால்... நெகிழ்ந்து போன நடிகர் கார்த்தி!
Thanjavur Toll Gate: தமிழ்நாட்டில் இருக்குறதே தாங்கலை..! இப்ப புதுசா ஒரு டோல்கேட்டா, ட்ரிப்புக்கு ரூ.105 கட்டணமாம்..
Thanjavur Toll Gate: தமிழ்நாட்டில் இருக்குறதே தாங்கலை..! இப்ப புதுசா ஒரு டோல்கேட்டா, ட்ரிப்புக்கு ரூ.105 கட்டணமாம்..
Embed widget