மேலும் அறிய

Watch Video: உயிருக்கு போராடிய பெண்! பாம்பை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற குடும்பம் - என்ன காரணம்?

பீகாரில் பாம்பு கடித்த பெண்ணை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நிலையில், அந்த பெண்ணை கடித்த பாம்பையும் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பீகார் மாநிலத்தில் அமைந்துள்ளது நாளந்தா மாவட்டம். நாளந்தா மாவட்டத்தில் அமைந்துள்ளது தௌலத்புர் கிராமம். இந்த கிராமத்தில்  இளம்பெண் ஒருவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்த நிலையில், அந்த பெண் வழக்கமாக அருகில் உள்ள செடிகளில் இருந்து தனது வீட்டிற்காக பூக்களை பறித்து வருவது வழக்கம்.

பாம்பு கடிக்கு ஆளான பெண்:

இந்த நிலையில், வழக்கம்போல நேற்றும் அந்த பெண் பூக்களை பறிக்கச் சென்றுள்ளார். அப்போது, அங்கு செடிகளின் நடுவே இருந்த பாம்பு ஒன்று அந்த பெண்ணை கடித்துள்ளது. இதனால், அந்த பெண் அச்சத்தில் கத்தியுள்ளார். உடனே அக்கம்பக்கத்தினரும், அந்த பெண்ணின் குடும்பத்தினரும் அந்த பெண்ணை அருகில் உள்ள சன்டெய் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

அங்கு அந்த பெண்ணை பரிசோதித்த மருத்துவர்கள் அந்த பெண்ணை உடனடியாக வேறு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல பரிந்துரைத்துள்ளனர். இதையடுத்து, அந்த பெண்ணை அருகில் இருந்த பிகார்ஷரீப் சதார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் பெண்ணை எந்த பாம்பு கடித்தது என்று தெரியவில்லை என்பதால், சிகிச்சை அளிப்பதில் சிரமமாக இருக்கிறது என்று கூறியுள்ளனர்.

குடும்பத்தினர் செய்தி காரியம்:

இதைக்கேட்ட குடும்பத்தினர் செய்த காரியத்தை பார்த்த மருத்துவர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த மருத்துவமனையும் அதிர்ச்சியில் உறைந்தது. அதாவது, மருத்துவர்கள் எந்த பாம்பு என்ற கேட்டதும் அந்த பெண்ணின் குடும்பத்தினர் தாங்கள் கொண்டு வந்திருந்த சிறிய அளவிலான ட்ரம்மை திறந்துள்ளனர். அந்த ட்ரம்மில் அந்த பெண்ணை கடித்த பாம்பு இருந்துள்ளது.

அந்த பாம்பை மருத்துவரிடம் காட்டி இந்த பாம்புதான், அந்த பெண்ணை கடித்ததாக கூறியுள்ளனர். இதைக்கேட்ட மருத்துவர்களும், அங்கு நின்ற மருத்துவமனை ஊழியர்களும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். பின்னர், மருத்துவர்கள் அந்த பெண்ணிற்கு உரிய சிகிச்சை அளித்தனர். இதையடுத்து, அபாய கட்டத்தில் இருந்து தப்பித்த அந்த பெண் உரிய சிகிச்சை பெற்ற பிறகு, வீட்டிற்கு திரும்பினார்.

பெண்ணின் உயிரை காப்பாற்ற அந்த பெண்ணின் குடும்பத்தினர், கடித்த பாம்பையே மருத்துவமனைக்கு தூக்கி வந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தை அங்கிருந்த சிலர் வீடியோவாக எடுத்தனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

மேலும் படிக்க: மக்களிடம் கத்தியைக் காட்டி தொடர் அட்டூழியம்; 3 இளைஞர்களுக்கு மாவுக்கட்டு போட்ட போலீஸ் - நடந்தது என்ன.?

மேலும் படிக்க: ஆட்டை வேட்டையாடி சென்ற சிறுத்தை..! அச்சத்தில் நெல்லை மக்கள்..!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

கோவையில் கிரிக்கெட் மைதானம் அமைக்க இடம் ஆய்வு; வாக்குறுதியை நிறைவேற்ற களமிறங்கிய உதயநிதி
கோவையில் கிரிக்கெட் மைதானம் அமைக்க இடம் ஆய்வு; வாக்குறுதியை நிறைவேற்ற களமிறங்கிய உதயநிதி
கஞ்சா விற்பனையில் போட்டா போட்டி! பெற்றோர் கண் முன்னே 20 வயது இளைஞர் கொடூர கொலை! நடந்தது என்ன?
கஞ்சா விற்பனையில் போட்டா போட்டி! பெற்றோர் கண் முன்னே 20 வயது இளைஞர் கொடூர கொலை! நடந்தது என்ன?
Breaking News LIVE: இரு பாலர் கல்லூரியாகும் நந்தனம் அரசு கல்லூரி: காரணம் தெரியுமா?
Breaking News LIVE: இரு பாலர் கல்லூரியாகும் நந்தனம் அரசு கல்லூரி: காரணம் தெரியுமா?
Salem Leopard: சேலம் மக்களை அச்சுறுத்தும் சிறுத்தை; குழந்தைகளை வெளியே அனுப்ப வேண்டாம் -  வனத்துறை எச்சரிக்கை
சேலம் மக்களை அச்சுறுத்தும் சிறுத்தை; குழந்தைகளை வெளியே அனுப்ப வேண்டாம் - வனத்துறை எச்சரிக்கை
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

Ramadoss vs Anbumani  : வேண்டும்.. வேண்டாம்..ராமதாஸ் vs அன்புமணி! குழப்பத்தில் பாமக!Tamilisai Vs Annamalai : தமிழிசைக்கு அழுத்தம்? மேடையில் நடந்தது என்ன? பரபரப்பு விளக்கம்Yediyurappa Arrest? | சிறுமிக்கு பாலியல் தொல்லை எடியூரப்பாவுக்கு கைது வாரண்ட்!Madurai Muthu Help Handicap People | லாரான்ஸ், பாலா வரிசையில்..   நடிகர் மதுரை முத்து!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
கோவையில் கிரிக்கெட் மைதானம் அமைக்க இடம் ஆய்வு; வாக்குறுதியை நிறைவேற்ற களமிறங்கிய உதயநிதி
கோவையில் கிரிக்கெட் மைதானம் அமைக்க இடம் ஆய்வு; வாக்குறுதியை நிறைவேற்ற களமிறங்கிய உதயநிதி
கஞ்சா விற்பனையில் போட்டா போட்டி! பெற்றோர் கண் முன்னே 20 வயது இளைஞர் கொடூர கொலை! நடந்தது என்ன?
கஞ்சா விற்பனையில் போட்டா போட்டி! பெற்றோர் கண் முன்னே 20 வயது இளைஞர் கொடூர கொலை! நடந்தது என்ன?
Breaking News LIVE: இரு பாலர் கல்லூரியாகும் நந்தனம் அரசு கல்லூரி: காரணம் தெரியுமா?
Breaking News LIVE: இரு பாலர் கல்லூரியாகும் நந்தனம் அரசு கல்லூரி: காரணம் தெரியுமா?
Salem Leopard: சேலம் மக்களை அச்சுறுத்தும் சிறுத்தை; குழந்தைகளை வெளியே அனுப்ப வேண்டாம் -  வனத்துறை எச்சரிக்கை
சேலம் மக்களை அச்சுறுத்தும் சிறுத்தை; குழந்தைகளை வெளியே அனுப்ப வேண்டாம் - வனத்துறை எச்சரிக்கை
NEET Re Exam: கருணை மதிப்பெண் விவகாரம்; மாறும் நீட் தேர்வு முடிவுகள்? 23 பேர் மட்டுமே முழு மதிப்பெண்?
NEET Re Exam: கருணை மதிப்பெண் விவகாரம்; மாறும் நீட் தேர்வு முடிவுகள்? 23 பேர் மட்டுமே முழு மதிப்பெண்?
BREAKING: திருப்பத்தூரில் சிறுத்தை: முதியவர் காயம்? பொதுமக்கள், மாணவர்கள் நிலை என்ன?
திருப்பத்தூரில் சிறுத்தை: முதியவர் காயம்? பொதுமக்கள், மாணவர்கள் நிலை என்ன?
எடியூரப்பாவை கைது செய்ய இடைக்கால தடை.. போக்சோ வழக்கில் கர்நாடக உயர் நீதிமன்றம் உத்தரவு!
எடியூரப்பாவை கைது செய்ய இடைக்கால தடை.. போக்சோ வழக்கில் கர்நாடக உயர் நீதிமன்றம் உத்தரவு!
சீக்கியர்களின் முதல் மன்னரின் நினைவு தினம்! 509 இந்தியர்களுக்கு விசா வழங்கிய பாகிஸ்தான்!
சீக்கியர்களின் முதல் மன்னரின் நினைவு தினம்! 509 இந்தியர்களுக்கு விசா வழங்கிய பாகிஸ்தான்!
Embed widget