மேலும் அறிய

Kiran Kumar Reddy: காங்கிரஸில் இருந்து விலகி, பாஜகவில் இணைந்த ஆந்திர முன்னாள் முதலமைச்சர்.. அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு

ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலத்தின் கடைசி முதலமைச்சராக இருந்த கிரண் குமார் ரெட்டி பாஜகவில் இணைந்தார். இந்த சம்பவம் அம்மாநில அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலத்தின் கடைசி முதலமைச்சராக இருந்த கிரண் குமார் ரெட்டி பாஜகவில் இணைந்தார். இந்த சம்பவம் அம்மாநில அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலத்தில் 4 முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்த அவர் சில காலம் முதலமைச்சராகவும் பதவி வகித்தார். அம்மாநிலம் 2014 ஆம் ஆண்டு ஆந்திரா, தெலங்கானாவாக பிரிக்கப்பட்டப்போது அதற்கு எதிர்ப்பு தெரிவித்து தனது பதவியை ராஜினாமா செய்ததோடு மட்டுமல்லாமல் காங்கிரஸ் கட்சியில் இருந்தும் விலகினார். 

தொடர்ந்து ஜெய் சமைக்யந்திரா கட்சியை தொடங்கிய கிரண் குமார் ரெட்டி 2018 ஆம் ஆண்டு அக்கட்சியை கலைத்து மீண்டும் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். அக்கட்சியின் மாநில தலைவராக பதவி வகித்து வந்த அவர் சில வாரங்களுக்கு முன் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் ராஜினாமா செய்தார். அவர் பாஜகவில் சேர இருப்பதாகவும் தகவல் வெளியானது. இந்நிலையில் கிரண் குமார் ரெட்டி பாஜகவில் இணைந்துள்ளார். 

அரசியல் வரலாறு 

ஆந்திர மாநிலம் அன்னமய்யா மாவட்டம் அருகேயுள்ள நகரிபள்ளியில் 1959 ஆம் ஆண்டு செப்டம்பர் 13 ஆம் தேதி கிரண் குமார் ரெட்டி பிறந்தார். இவரது தந்தை அமர்நாத் ரெட்டி பி.வி.நரசிம்மராவ் ஆட்சிக் காலத்தில் அமைச்சராக இருந்தார். தனது தந்தையின் மரணத்திற்குப் பின் 1989 ஆம் ஆண்டு ஆந்திரப் பிரதேச சட்டப் பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். இதன்பின்னர் 1999, 2004, 2009 ஆகிய ஆண்டுகளில் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் எம்.எல்.ஏ. ஆக தேர்வானார்.

2004 ஆண்டு முதல் 2009 ஆம் ஆண்டு வரையிலான காங்கிரஸ் ஆட்சியில் அரசு தலைமை கொறடாவாக இருந்த கிரண் குமார் ரெட்டி, 2009 ஆண்டில் ஆந்திர சட்டப்பேரவையின் சபாநாயகராக தேர்வு செய்யப்பட்டார். இதற்கிடையில் ஆந்திர முதலமைச்சராக இருந்த ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி விமான விபத்தில் 2009 ஆம் ஆண்டு உயிரிழந்தார். அதன்பிறகு முதலமைச்சரான ரோசய்யா தனிப்பட்ட காரணங்களுக்காக ஒன்றரை ஆண்டுகளில் விலகினார். இதன் பின்னர் ஆந்திர முதலமைச்சராக கிரண் குமார் ரெட்டி தேர்வு செய்யப்பட்டார். இவர் 2010 ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு வரை இருங்கிணைந்த ஆந்திராவின் முதலமைச்சராக இருந்தார். 

அப்போதைய மத்திய காங்கிரஸ் அரசு ஆந்திராவை இரண்டாக பிரிக்க முடிவு செய்த போது, அதற்கு அக்கட்சியைச் சேர்ந்த கிரண் குமார் ரெட்டி கடும் எதிர்ப்பு தெரிவித்து தனது பதவியை ராஜினாமா செய்தார். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

ADMK alliance: ஜன.23ஆம் தேதியை டிக் செய்த மோடி.! அதிமுக கூட்டணியில் யார் யார்.? வெளியாகப்போகும் முக்கிய அறிவிப்பு
ஜன.23ஆம் தேதியை டிக் செய்த மோடி.! அதிமுக கூட்டணியில் யார் யார்.? வெளியாகப்போகும் முக்கிய அறிவிப்பு
பணி நிரந்தரம் கோரும் ஆசிரியர்களின் முடியைப் பிடித்திழுத்து கைது செய்வதுதான் பரிசா? அன்புமணி கேள்வி!
பணி நிரந்தரம் கோரும் ஆசிரியர்களின் முடியைப் பிடித்திழுத்து கைது செய்வதுதான் பரிசா? அன்புமணி கேள்வி!
பரீட்சா பே சர்ச்சா 2026: மோடியுடன் உரையாட இத்தனை கோடி பேர் பதிவா? மாணவர்களுக்கு காத்திருக்கும் ஆச்சரியம்!
பரீட்சா பே சர்ச்சா 2026: மோடியுடன் உரையாட இத்தனை கோடி பேர் பதிவா? மாணவர்களுக்கு காத்திருக்கும் ஆச்சரியம்!
Pongal Special Buses: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்புப் பேருந்துகள்; நூற்றுக்கணக்கில் பல்வேறு ஊர்களுக்கு இயக்கம்
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்புப் பேருந்துகள்; நூற்றுக்கணக்கில் பல்வேறு ஊர்களுக்கு இயக்கம்
ABP Premium

வீடியோ

ஜனநாயகன் புது ரிலீஸ் தேதி அதிரடி காட்டும் விஜய் ரசிகர்களுக்கு GOOD NEWS | Jana Nayagan New Release Date
Girish Chodankar On DMK Alliance | பிரவீன் விஜய்யுடன் சந்திப்புராகுல் கொடுத்த ஐடியாவா?
Congress Aslam Basha | மிரட்டல்.. கட்டப்பஞ்சாயத்து..காங்கிரஸ் நிர்வாகி வீடியோ வைரல்!அலறவிடும் பாஷா!
Madhampatti Rangaraj|”அது என் குழந்தையா DNA TEST எடுக்கணும்” ஜாய்-ஐ சீண்டும் மாதம்பட்டி
MP Jothimani Issue | ’’எதுக்கு வந்தீங்க ஜோதிமணி?’’வாக்குவாதத்தில் ஈடுபட்ட நபர்அடித்து விரட்டிய காங்கிரஸார்’’ஏய்..போடா’’

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ADMK alliance: ஜன.23ஆம் தேதியை டிக் செய்த மோடி.! அதிமுக கூட்டணியில் யார் யார்.? வெளியாகப்போகும் முக்கிய அறிவிப்பு
ஜன.23ஆம் தேதியை டிக் செய்த மோடி.! அதிமுக கூட்டணியில் யார் யார்.? வெளியாகப்போகும் முக்கிய அறிவிப்பு
பணி நிரந்தரம் கோரும் ஆசிரியர்களின் முடியைப் பிடித்திழுத்து கைது செய்வதுதான் பரிசா? அன்புமணி கேள்வி!
பணி நிரந்தரம் கோரும் ஆசிரியர்களின் முடியைப் பிடித்திழுத்து கைது செய்வதுதான் பரிசா? அன்புமணி கேள்வி!
பரீட்சா பே சர்ச்சா 2026: மோடியுடன் உரையாட இத்தனை கோடி பேர் பதிவா? மாணவர்களுக்கு காத்திருக்கும் ஆச்சரியம்!
பரீட்சா பே சர்ச்சா 2026: மோடியுடன் உரையாட இத்தனை கோடி பேர் பதிவா? மாணவர்களுக்கு காத்திருக்கும் ஆச்சரியம்!
Pongal Special Buses: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்புப் பேருந்துகள்; நூற்றுக்கணக்கில் பல்வேறு ஊர்களுக்கு இயக்கம்
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்புப் பேருந்துகள்; நூற்றுக்கணக்கில் பல்வேறு ஊர்களுக்கு இயக்கம்
Trump Tariff: அடுத்த வாரமே.. ”இந்தியா,சீனா மீது 500 சதவிகித வரி” - ஒப்புதல் கொடுத்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப் - என்ன ஆச்சு?
Trump Tariff: அடுத்த வாரமே.. ”இந்தியா,சீனா மீது 500 சதவிகித வரி” - ஒப்புதல் கொடுத்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப் - என்ன ஆச்சு?
Ramadoss Vs Anbumani: “நான் அமைப்பதே பாமக கூட்டணி, அன்புமணியின் வேட்பாளருக்கு மக்கள் வாக்களிக்க மாட்டார்கள்“: ராமதாஸ் ஆவேசம்
“நான் அமைப்பதே பாமக கூட்டணி, அன்புமணியின் வேட்பாளருக்கு மக்கள் வாக்களிக்க மாட்டார்கள்“: ராமதாஸ் ஆவேசம்
விஜய்க்காக ஒட்டுமொத்தமாக களத்தில் இறங்கிய காங்கிரஸ்.! வெளியான பரபரப்பு அறிக்கை
விஜய்க்காக ஒட்டுமொத்தமாக களத்தில் இறங்கிய காங்கிரஸ்.! வெளியான பரபரப்பு அறிக்கை
தொடர் போராட்டத்தில் ஆசிரியர்கள்: சம்பளம் கட், விடுமுறை கிடையாது- தொடக்கக் கல்வித்துறை அதிரடி உத்தரவு!
தொடர் போராட்டத்தில் ஆசிரியர்கள்: சம்பளம் கட், விடுமுறை கிடையாது- தொடக்கக் கல்வித்துறை அதிரடி உத்தரவு!
Embed widget