மேலும் அறிய

Chandrababu Arrest: வீட்டு காவலுக்கு மாற்றப்படுவாரா சந்திரபாபு நாயுடு..? உடல்நிலையில் பிரச்சனையா? இன்று நீதிமன்றத்தில் தீர்ப்பு!

சந்திரபாபுவின் உடல்நிலையை கருத்தில் கொண்டு அவரை சிறையில் அடைப்பதற்கு பதிலாக வீட்டுக்காவலில் வைக்குமாறு சந்திரபாபுவின் வழக்கறிஞர்கள் நேற்று மனு தாக்கல் செய்தனர்.

தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும், சிறைக்கு பதிலாக வீட்டு காவலில் வைக்கக்கோரி தெலுங்கு தேச கட்சியின் தலைவரும், ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சருமான சந்திரபாபு நாயுடு நேற்று நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவானது இன்று விசாரணைக்கு வருகிறது. 

சந்திரபாபுவின் உடல்நிலையை கருத்தில் கொண்டு அவரை சிறையில் அடைப்பதற்கு பதிலாக வீட்டுக்காவலில் வைக்குமாறு சந்திரபாபுவின் வழக்கறிஞர்கள் மனு தாக்கல் செய்தனர். அரசு சார்பில் அட்வகேட் ஜெனரல் ஸ்ரீராம், பொன்னவோலு சுதாகர் ரெட்டி, சந்திரபாபு வழக்கறிஞர் சித்தார்த்த லுத்ரா ஆகியோர் நேற்று காலை வாதங்களை முன்வைத்தனர். மூன்று சுற்று வாதங்களுக்குப் பிறகு, வீட்டுக்காவல் மனு மீதான நீதிமன்றத்தின் தீர்ப்பை ஏசிபி நீதிமன்றம் இன்று ஒத்திவைத்தது.

சந்திரபாபுவுக்கு உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும், அவரை சிறையில் அடைப்பது ஏற்புடையதல்ல என்றும் நீதிமன்றத்தில் குறிப்பிடப்பட்டது. (ஹவுஸ் ரிமாண்ட்) வீட்டு காவல் வழங்க வேண்டும் என்றும், கடந்த காலங்களில் அவர் மீது தாக்குதல் சம்பவங்கள் நடந்துள்ளதாகவும் கூறினார். ஹவுஸ் அரெஸ்ட் மனு மீதான வாதங்களின் ஒரு பகுதியாக மேற்கு வங்கத்தைச் சேர்ந்த அமைச்சர்கள் வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை வழக்கறிஞர் சித்தார்த் லுத்ரா குறிப்பிட்டார். மத்திய அரசின் பாதுகாப்பு தொடர்பான விவகாரத்தில் ஆந்திர அரசு தலையிட கூடாது என்று உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் லுத்ரா நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். கவுதம் நவர்க்கர் வழக்கில் ஹவுஸ் ரிமாண்ட் செய்ய உச்சநீதிமன்றம் அனுமதி அளித்ததை அவர் நினைவுபடுத்தினார். 

சிஐடி சார்பில், ஏஏஜி பொன்னவொலு சுதாகர் ரெட்டி வாதிடுகையில், சந்திரபாபு கைது செய்யப்படும் போது அவர் ஆரோக்கியமாக இருந்தார். சாட்சிகள் மீது செல்வாக்கு செலுத்த வாய்ப்புள்ளதால் வீட்டுக்காவலில் வைக்கக்கூடாது என நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். சந்திரபாபு வீட்டுக்காவலுக்கு வாய்ப்பு கொடுத்தால் வழக்கு நிச்சயம் பாதிக்கப்படும் என்றும் சிஆர்சிபியில் வீட்டுக்காவலில்லை என்றார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட ஏசிபி நீதிமன்றம், இது தொடர்பாக வழக்கறிஞர்களிடம் மேலும் விளக்கம் கேட்டுள்ளது. வீட்டுக்காவலில் அனுமதி பெற்ற வழக்குகளின் முழு விவரங்களையும் தருமாறு வழக்கறிஞர்களை நீதிமன்றம் கேட்டுக் கொண்டது. 

அரசியல் காரணங்களுக்காகவே சந்திரபாபு கைது: 

அரசியல் காரணங்களுக்காகவே முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டதாகவும், எஃஃப்ஐஆரில் இல்லாத அவரது பெயரை அவசரமாக சேர்த்து கைது செய்ய சதி நடந்துள்ளதாக தெலுங்கு தேச கட்சியினர் குற்றம் சாட்டினர். நந்தியாலாவில் கைது செய்யப்பட்ட சந்திரபாபு ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 10) காலை ஏசிபி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். சந்திரபாபு சார்பில் சித்தார்த்த லுத்ராவும், சிஐடி சார்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் சுதாகர் ரெட்டியும் பேசினர். நீண்ட வாதங்களுக்குப் பிறகு, சந்திரபாபுவை நீதிமன்றம் 2 வாரங்கள் ரிமாண்ட் செய்தது. பின்னர் போலீசார் சந்திரபாபுவை சாலை வழியாக ராஜமுந்திரி மத்திய சிறைக்கு அழைத்துச் சென்றனர்.

உடல்நிலையை கருத்தில்கொண்டு வீட்டு சாப்பாடு: 

ஞாயிற்றுக்கிழமை சந்திரபாபுவுக்கு வீட்டுச் சாப்பாடு வழங்க நீதிமன்றம் ஒப்புக்கொண்டதையடுத்து, திங்கள்கிழமை மதியம் சந்திரபாபுவுக்கு குடும்பத்தினர் பிரவுன் ரைஸ், பனீர் கறி மற்றும் தயிர் ஆகியவற்றை அனுப்பி வைத்தனர். அவரது வயதைக் கருத்தில் கொண்டு, அவருக்கு உதவியாளருடன் சிறப்பு வசதிகள் ராஜமுந்திரி சிறையில் வழங்கப்பட்டன.

வீட்டு காவலுக்கு அவசியம் என்ன..? 

சந்திரபாபு நாயுடு முதலமைச்சராக இருந்தபோது மாவோயிஸ்டுகள் அவர் மீது தாக்குதல் நடத்தினர். அதன் காரணமாகவே தன் உயிருக்கு ஆபத்து இருப்பதாக மேற்கோள் காட்டி வீட்டு சிறைக்கு மாற்றுமாறு சந்திரபாபு தரப்பில் ஏசிபி நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TVK Vijay: ஈரோட்டில் 16ம் தேதி தவெக பொதுக்கூட்டம்.. விஜய்க்காக களமிறங்கிய செங்கோட்டையன்
TVK Vijay: ஈரோட்டில் 16ம் தேதி தவெக பொதுக்கூட்டம்.. விஜய்க்காக களமிறங்கிய செங்கோட்டையன்
மதுரை மக்களே மகிழ்ச்சியான செய்தி.. ரூ.37 ஆயிரம் கோடி முதலீடு, 57 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு - முழு விவரம் !
மதுரை மக்களே மகிழ்ச்சியான செய்தி.. ரூ.37 ஆயிரம் கோடி முதலீடு, 57 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு - முழு விவரம் !
Ramadoss Statement: அன்புமணி தலைவர் இல்லை; கட்சியை பறிக்கும் சதித் திட்டம் முறியடிப்பு - பாமக நிறுவனர் ராமதாஸ்
அன்புமணி தலைவர் இல்லை; கட்சியை பறிக்கும் சதித் திட்டம் முறியடிப்பு - பாமக நிறுவனர் ராமதாஸ்
Watch Video: கோலியை மதிக்காத குட்டி கோலி.. தீயாய் பரவும் வீடியோ - லெஜண்டை அசிங்கப்படுத்திய ராகுல்?
Watch Video: கோலியை மதிக்காத குட்டி கோலி.. தீயாய் பரவும் வீடியோ - லெஜண்டை அசிங்கப்படுத்திய ராகுல்?
ABP Premium

வீடியோ

Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்
Madurai Loganathan IPS Profile | ‘’WE ARE NOT ALLOWING’’ஒற்றை ஆளாக சம்பவம்! யார் இந்த லோகநாதன் IPS?
தமிழ்நாடு வரும் அமித்ஷா திருப்பரங்குன்றம் விவகாரம் கையிலெடுக்கும் பாஜக | Amitsha in Tamilnadu
ஆதவ் Vs ஜோஸ் சார்லஸ் கட்சி தொடங்கும் முன்னே சரிவு விஜய்யுடன் கூட்டணிக்கு END CARD | Aadhav Vs Joes Charles
Thiruparankundram Dheepam|”இன்னும் சில நிமிடங்களில் தீபம்”144 ரத்து போய் பாதுகாப்பு குடுங்க!-நீதிபதி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vijay: ஈரோட்டில் 16ம் தேதி தவெக பொதுக்கூட்டம்.. விஜய்க்காக களமிறங்கிய செங்கோட்டையன்
TVK Vijay: ஈரோட்டில் 16ம் தேதி தவெக பொதுக்கூட்டம்.. விஜய்க்காக களமிறங்கிய செங்கோட்டையன்
மதுரை மக்களே மகிழ்ச்சியான செய்தி.. ரூ.37 ஆயிரம் கோடி முதலீடு, 57 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு - முழு விவரம் !
மதுரை மக்களே மகிழ்ச்சியான செய்தி.. ரூ.37 ஆயிரம் கோடி முதலீடு, 57 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு - முழு விவரம் !
Ramadoss Statement: அன்புமணி தலைவர் இல்லை; கட்சியை பறிக்கும் சதித் திட்டம் முறியடிப்பு - பாமக நிறுவனர் ராமதாஸ்
அன்புமணி தலைவர் இல்லை; கட்சியை பறிக்கும் சதித் திட்டம் முறியடிப்பு - பாமக நிறுவனர் ராமதாஸ்
Watch Video: கோலியை மதிக்காத குட்டி கோலி.. தீயாய் பரவும் வீடியோ - லெஜண்டை அசிங்கப்படுத்திய ராகுல்?
Watch Video: கோலியை மதிக்காத குட்டி கோலி.. தீயாய் பரவும் வீடியோ - லெஜண்டை அசிங்கப்படுத்திய ராகுல்?
Goa Cylinder Blast: அடக்கடவுளே..! நைட் க்ளப்பில் வெடித்த சிலிண்டர் - தீ விபத்தில் 23 பேர் பலியான சோகம்
Goa Cylinder Blast: அடக்கடவுளே..! நைட் க்ளப்பில் வெடித்த சிலிண்டர் - தீ விபத்தில் 23 பேர் பலியான சோகம்
இளைஞர்களுக்கு ஜாக்பாட்.!  56,768 புதிய வேலைவாய்ப்பு... ரூ.36,860.36 கோடி முதலீடு- அசத்தும் தமிழக அரசு
இளைஞர்களுக்கு ஜாக்பாட்.! 56,768 புதிய வேலைவாய்ப்பு... ரூ.36,860.36 கோடி முதலீடு- அசத்தும் தமிழக அரசு
Gautam Gambhir: கப் வேணும்னா கோலி, ரோகித் இருக்கணும்.. பேட்டிங்கில் சொன்ன சேதி, கம்பீர் சொல்வது என்ன?
Gautam Gambhir: கப் வேணும்னா கோலி, ரோகித் இருக்கணும்.. பேட்டிங்கில் சொன்ன சேதி, கம்பீர் சொல்வது என்ன?
Virat Kohli: எப்போதும் அரசன்தான்.. 2025 விராட் கோலிக்கு எப்படி? இவ்வளவு ரன்களா?
Virat Kohli: எப்போதும் அரசன்தான்.. 2025 விராட் கோலிக்கு எப்படி? இவ்வளவு ரன்களா?
Embed widget