மேலும் அறிய

Electoral Bonds: பாஜக ஷாக், நிர்மலா சீதாராமனின் கணவர் போட்ட குண்டு..! ”உலகின் மிகப்பெரிய ஊழல் தேர்தல் பத்திரம்”

Electoral Bonds: பாஜக தலைமையிலான அரசு கொண்டு வந்த தேர்தல் பத்திரம் முறையை, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் கணவரும், பொருளாதார வல்லுநருமான பிரபாகர் கடுமையாக சாடியுள்ளார்.

Electoral Bonds: தேர்தல் பத்திரம் முறை உலகின் மிகப்பெரிய ஊழல் என, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் கணவரும், பொருளாதார வல்லுநருமான பிரபாகர் குற்றம்சாட்டியுள்ளார்.

”உலகின் மிகப்பெரிய ஊழல் தேர்தல் பத்திரம்” - பிரபாகர்:

மத்திய அரசால் கொண்டு வரப்பட்டு, உச்சநீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்ட தேர்தல் பத்திரம் நடைமுறை, இந்த தேர்தலில் பெரும் பேசுபொருளாகியுள்ளது. இந்நிலையில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் கணவரும், பிரபல பொருளாதார வல்லுநருமான பிரபாகர் தேர்தல் பத்திரங்கள் முறயை சாடியுள்ளார். இதுதொடர்பாக பேசிய அவர், “தேர்தல் பத்திர விவகாரம் இன்று இருப்பதை விட இன்னும் அதிக வேகம் பெறும். இது இந்தியாவில் நடந்த மிகப்பெரிய ஊழல் என்பதை அனைவரும் இப்போது புரிந்து கொண்டுள்ளனர். அதோடு, இது தான் உலகிலேயே மிகப் பெரிய ஊழல் ஆகும்.

இந்தப் பிரச்சினையால், பாஜக தலைமையிலான மத்திய அரசாங்கம் வாக்காளர்களால் கடுமையாகத் தண்டிக்கப்படும். தேர்தல் பத்திர ஊழல் பகிரங்கமான பிறகு, இப்போது சண்டை இரண்டு கூட்டணிகளுக்கு இடையே இல்லை. பாஜக மற்றும் இந்திய மக்களுக்கு இடைப்பட்டதாக மாறியுள்ளது.

இந்த விவகாரம் ஏற்கனவே பாஜக மற்றும் பாஜக அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இருந்து வெளியேறிவிட்டது” என பிரபாகர் தெரிவித்துள்ளார். மனைவி நிர்மலா சீதாராமன் நிதியமச்சராக அங்கம் வகிக்கும், அரசின் திட்டத்தையே பிரபாகர் விமர்சித்து இருப்பது பாஜகவினரை அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது.

தேர்தல் பத்திரங்கள் திட்டம்:

தங்களது அடையாளங்களை வெளிப்படுத்தாமல் தனி நபர்கள் அரசியல் கட்சிகளுக்கு நிதி அளிக்கலாம் என, மத்திய அரசு கொண்டு வந்த தேர்தல் பத்திரங்கள் திட்டத்தை கடந்த மார்ச் மாதம் உச்சநீதிமன்றம் ரத்து செய்தது. அதோடு, இந்த திட்டம் அமலுக்கு வந்தது முதல் அரசியல் கட்சிகள் வாங்கிய நிதி விவரங்களை வெளியிட வேண்டும் என, தேர்தல் பத்திரங்களை விநியோகித்த எஸ்பிஐ வங்கிக்கு உத்தரவிட்டது. விவரங்களை வெளியிட கூடுதல் அவகாசம் கேட்ட எஸ்பிஐ வங்கியை கடுமையாக கண்டித்த உச்சநீதிமன்றம்,  உடனடியாக தகவல்களை வெளியிட வைத்தது.

பெரும்பயன் யாருக்கு?

இந்திய தேர்தல் ஆணையம் தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட்ட தேர்தல் பத்திரங்கள் தொடர்பான தரவுகளின்படி, ஏப்ரல் 12, 2019 முதல் பிப்ரவரி 15, 2024 வரை 6,986.5 கோடி ரூபாயை பாஜக பெற்றுள்ளது. அதைத் தொடர்ந்து, மேற்கு வங்கத்தில் ஆளும் கட்சியான திரிணாமுல் காங்கிரஸ்  ரூ. 1,397 கோடியும், காங்கிரஸ் 1,334 கோடியும், தெலங்கானாவில் ஆளும் கட்சியாக இருந்த பாரத ராஷ்டிர சமிதி (பிஆர்எஸ்) 1,322 கோடியையும் தேர்தல் பத்திரங்கள் மூலம் நிதியாக பெற்று அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளன.

எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு:

அமலாக்கத்துறை, வருமானவரித்துறை மற்றும் சிபிஐ போன்ற விசாரணை அமைப்புகளை கொண்டு, கார்ப்ரேட் நிறுவனங்களை மிரட்டி பாஜக தேர்தல் பத்திரங்கள் மூலம் பாஜக நிதி வசூலித்துள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. அதோடு, தேர்தல் பத்திரங்கள் மூலம் பெற்ற நிதியை கொண்டு, எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்கி ஆட்சியை கவிழ்க்கும் சதிகளை பாஜக நிகழ்த்துவதாகவும் எதிர்க்கட்சிகள் சாடி வருகின்றன.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ரூ. 1 கோடி நஷ்ட ஈடு கோரி ஆர்.எஸ். பாரதிக்கு அண்ணாமலை நோட்டீஸ்!
ரூ. 1 கோடி நஷ்ட ஈடு கோரி ஆர்.எஸ். பாரதிக்கு அண்ணாமலை நோட்டீஸ்!
”சாதிவாரி கணக்கெடுப்பை உடனடியாக தொடங்குக”- பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்!
”சாதிவாரி கணக்கெடுப்பை உடனடியாக தொடங்குக”- பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்!
Breaking News LIVE: 10.5 % ஒதுக்கீடு - மக்களை ஏமாற்றுகிறது பாமக - சட்டத்துறை அமைச்சர் ரகுபதி 
Breaking News LIVE: 10.5 % ஒதுக்கீடு - மக்களை ஏமாற்றுகிறது பாமக - சட்டத்துறை அமைச்சர் ரகுபதி 
விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: சுயேட்சை வேட்பாளர் கேட்ட சின்னத்தால் ஆடிப்போன திமுக வட்டாரம்!
விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: சுயேட்சை வேட்பாளர் கேட்ட சின்னத்தால் ஆடிப்போன திமுக வட்டாரம்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சிEB Office Alcohol | அலுவலகத்தில் மது அருந்திய மின்சார வாரிய ஊழியர்கள்!’’ஏய்..டம்ளர் எடுத்துட்டு வா’’Rahul Gandhi | BJP-க்கு செக் வைத்த ராகுல்..எதிர்க்கட்சி தலைவரின் POWER! எகிறும் எதிர்பார்ப்புMR Vijayabaskar  : MR விஜயபாஸ்கர் தலைமறைவு? தேடுதல் வேட்டையில் தனிப்படை! கரூரில் பரபரப்பு!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ரூ. 1 கோடி நஷ்ட ஈடு கோரி ஆர்.எஸ். பாரதிக்கு அண்ணாமலை நோட்டீஸ்!
ரூ. 1 கோடி நஷ்ட ஈடு கோரி ஆர்.எஸ். பாரதிக்கு அண்ணாமலை நோட்டீஸ்!
”சாதிவாரி கணக்கெடுப்பை உடனடியாக தொடங்குக”- பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்!
”சாதிவாரி கணக்கெடுப்பை உடனடியாக தொடங்குக”- பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்!
Breaking News LIVE: 10.5 % ஒதுக்கீடு - மக்களை ஏமாற்றுகிறது பாமக - சட்டத்துறை அமைச்சர் ரகுபதி 
Breaking News LIVE: 10.5 % ஒதுக்கீடு - மக்களை ஏமாற்றுகிறது பாமக - சட்டத்துறை அமைச்சர் ரகுபதி 
விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: சுயேட்சை வேட்பாளர் கேட்ட சின்னத்தால் ஆடிப்போன திமுக வட்டாரம்!
விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: சுயேட்சை வேட்பாளர் கேட்ட சின்னத்தால் ஆடிப்போன திமுக வட்டாரம்!
Watch Video: அடேங்கப்பா.. ஒரே ஓவரில் 43 ரன்கள் விளாசிய வீரர்..கிரிக்கெட் வரலாற்றில் இப்படி ஒரு சாதனையா!
Watch Video: அடேங்கப்பா.. ஒரே ஓவரில் 43 ரன்கள் விளாசிய வீரர்..கிரிக்கெட் வரலாற்றில் இப்படி ஒரு சாதனையா!
பெற்றோர் கண்டித்ததால் சிறுவன் எடுத்த விபரீத முடிவு! காஞ்சியில் சோகம்
பெற்றோர் கண்டித்ததால் சிறுவன் எடுத்த விபரீத முடிவு! காஞ்சியில் சோகம்
Viral Video: அரையிறுதிக்கு ரெடியான இந்திய அணி.. வெளியான வைரல் வீடியோ! ஹிட்மேன் ரோஹித் ஷர்மா குஷி!
Viral Video: அரையிறுதிக்கு ரெடியான இந்திய அணி.. வெளியான வைரல் வீடியோ! ஹிட்மேன் ரோஹித் ஷர்மா குஷி!
AIADMK: கள்ளச்சாராய விவகாரம்: சிபிஐ விசாரணை கோரி அதிமுக எம்.எல்.ஏ-க்கள் நாளை உண்ணாவிரத போராட்டம்?
AIADMK: கள்ளச்சாராய விவகாரம்: சிபிஐ விசாரணை கோரி அதிமுக எம்.எல்.ஏ-க்கள் நாளை உண்ணாவிரத போராட்டம்?
Embed widget