மேலும் அறிய

Maharashtra Secretariat: தலைமைச் செயலகத்தில் புகுந்த விவசாயிகள்.. ஸ்பைடர் மேனாக மாறிய காவல்துறை.. மகாராஷ்டிராவில் உச்சக்கட்ட பரபரப்பு

மகாராஷ்டிராவில் உள்ள தலைமைச் செயலகத்தில் புகுந்த விவசாயிகள், அம்மாநில அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வது தொடர் கதையாகி வருகிறது. கடந்த 20 ஆண்டுகளாக, விவசாயிகள் மற்றும் கிராமப்புற மக்கள் பொருளாதார ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் சமூக ரீதியாகவும் பல்வேறு விதமான சவால்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

விவசாயிகள் சந்திக்கும் பிரச்னைகள்:

பயிர் விளைச்சல் குறைவாக இருப்பது, விவசாயப் பொருட்களின் விலை நிலையாக இல்லாமல் ஏற்ற இறக்கமாக இருப்பது, பயிர் செய்வதற்கு அதிக செலவாவது, கடன் சுமை, கடன் வாங்குவதற்கு போதுமான வசதி இல்லாதது, போதுமான உள்கட்டமைப்பு வசதி இல்லாதது என எண்ணிடலங்கா பிரச்னைகளை விவசாயிகள் சந்தித்து வருகின்றனர்.

இதை எதிர்கொள்ள முடியாமல் விவசாயிகள் தற்கொலை செய்வது பெரும் பிரச்னையாக மாறியுள்ளது. குறிப்பாக, மகாராஷ்டிராவின் சந்திராபூர் மாவட்டத்தில் கடந்த மாதம் 13 விவசாயிகள் உட்பட இந்த ஆண்டு ஜனவரி முதல் ஜூலை வரையிலான 7 மாதத்தில் மட்டும் 73 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவிக்கின்றன. கடந்த 5 ஆண்டுகளில் 446 விவசாயிகள் உட்பட சந்திராபூர் மாவட்டத்தில் 2001 முதல் 2023 வரை 1,148 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்துள்ளனர்.

இப்படிப்பட்ட சூழலில், மகாராஷ்டிராவில் உள்ள தலைமைச் செயலகத்தில் புகுந்த விவசாயிகள், அம்மாநில அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர். தங்களின் நிலத்திற்கு உரிய இழப்பீடு வழங்கக் கோரி போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களை கட்டுப்படுத்த காவல்துறை முயற்சி செய்து வருகிறது.

தலைமைச் செயலகத்தில் புகுந்த விவசாயிகள்:

தலைமை செயலக கட்டிடத்தின் முதல் தளத்தில் வைக்கப்பட்டிருந்த பாதுகாப்பு வலையில் சில போராட்டக்காரர்கள் குதித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், பாதுகாப்பு வலையில் குதித்த விவசாயிகளை போலீசார் துரத்துவதைக் காண முடிகிறது. அந்த இடத்தில் இருந்து போராட்டக்காரர்களை காவல்துறை அதிகாரிகள் இழுத்துச் செல்வதையும் வீடியோவில் காணலாம்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் சிலர் கைது செய்யப்பட்டு மரைன் டிரைவ் காவல் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். தலைமைச் செயலக கட்டிடத்திற்குள் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளிடம் மாநில அமைச்சர் தாதாஜி பூசே பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். 

இதுகுறித்து மகாராஷ்டிரா முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே கூறுகையில், "நான் இன்று விவசாயிகளை இங்கு அழைத்திருந்தேன். அவர்கள் (மாநில அமைச்சர்) தாதா பூசேவை சந்தித்துப் பேசியுள்ளனர். அவர்களின் பிரச்னைகள் குறித்து 15 நாட்களில் ஆய்வு செய்து தீர்வு காணப்படும்" என்றார்.

 

இது தொடர்பாக தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ரோஹித் பவார் கூறுகையில், "ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அரசு விவசாயிகளின் குரலைக் கேட்டிருந்தால் அவர்கள் தலைமைச் செயலகத்தின் பாதுகாப்பு வலையில் குதித்திருக்க மாட்டார்கள். மகாராஷ்டிரா அரசுக்கு எதிராக விவசாயிகள் போராட்டம் நடத்திய விதத்தை ஆதரிக்கவில்லை. இதுபோன்ற போராட்டம் நடத்துவது சரியல்ல என்ற போதிலும் விவசாயிகள் சந்திக்கும் பிரச்னைகளை அரசு கேட்க வேண்டும்" என்றார்.

About the author சுதர்சன்

Rookie Journalist. Writes on National, International, Politics, Human rights and Judiciary. Covered 2019 General Election, Apex Court Ayodhya judgement, 2021 Five state election, Pegasus etc.  
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
470
Active
29033
Recovered
165
Deaths
Last Updated: Sat 19 July, 2025 at 10:52 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

Putin India Visit: இந்தியா வரும் ரஷ்ய அதிபர் புதின்; ட்ரம்ப்புடனும் சந்திப்பு - இந்தியாவிற்கு விடிவு கிடைக்குமா.?
இந்தியா வரும் ரஷ்ய அதிபர் புதின்; ட்ரம்ப்புடனும் சந்திப்பு - இந்தியாவிற்கு விடிவு கிடைக்குமா.?
State Education Policy: நாளை வெளியாகும் மாநில கல்விக் கொள்கை; வெளியிடுவது யார்? என்ன சிறப்பம்சங்கள்?
State Education Policy: நாளை வெளியாகும் மாநில கல்விக் கொள்கை; வெளியிடுவது யார்? என்ன சிறப்பம்சங்கள்?
அரசு பள்ளி மாணவிகள் 'ஓவர் கோட்' அணிய வேண்டும் - கல்வித்துறை அதிரடி உத்தரவு!
அரசு பள்ளி மாணவிகள் 'ஓவர் கோட்' அணிய வேண்டும் - கல்வித்துறை அதிரடி உத்தரவு!
Rahul Slams BJP, EC: “தேர்தல் ஆணையத்துடன் இணைந்து பாஜக வாக்குகளை திருடுகிறது“ - புகார்களை அடுக்கிய ராகுல் காந்தி
“தேர்தல் ஆணையத்துடன் இணைந்து பாஜக வாக்குகளை திருடுகிறது“ - புகார்களை அடுக்கிய ராகுல் காந்தி
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kaliyammal In TVK | திமுக - அதிமுகவிற்கு NO.. தவெகவில்  காளியம்மாள்? தேதி குறித்த விஜய்!
சங்கீதா - கிரிஷ் விவாகரத்து? INSTAGRAM-ல் பெயர் மாற்றம்! கோலிவுட்டில் அடுத்த பூகம்பம்  | Sangeetha Kirsh Divorce
”ஏய் என்ன பேசிட்டு இருக்க”மேயருக்கு எதிராக போர்க்கொடி!அடித்துக் கொண்ட கவுன்சிலர்கள்
”ஷாருக்கானுக்கு தேசிய விருது ஒரு நியாயம் வேண்டாமா?”கொந்தளித்த நடிகை ஊர்வசி | Urvashi On  National Awards
காலியாகி கிடக்கும் கிராமம் ஒற்றை ஆளாய் நிற்கும் தாத்தா நாட்டாகுடியின் கண்ணீர் கதை | Sivagangai News

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Putin India Visit: இந்தியா வரும் ரஷ்ய அதிபர் புதின்; ட்ரம்ப்புடனும் சந்திப்பு - இந்தியாவிற்கு விடிவு கிடைக்குமா.?
இந்தியா வரும் ரஷ்ய அதிபர் புதின்; ட்ரம்ப்புடனும் சந்திப்பு - இந்தியாவிற்கு விடிவு கிடைக்குமா.?
State Education Policy: நாளை வெளியாகும் மாநில கல்விக் கொள்கை; வெளியிடுவது யார்? என்ன சிறப்பம்சங்கள்?
State Education Policy: நாளை வெளியாகும் மாநில கல்விக் கொள்கை; வெளியிடுவது யார்? என்ன சிறப்பம்சங்கள்?
அரசு பள்ளி மாணவிகள் 'ஓவர் கோட்' அணிய வேண்டும் - கல்வித்துறை அதிரடி உத்தரவு!
அரசு பள்ளி மாணவிகள் 'ஓவர் கோட்' அணிய வேண்டும் - கல்வித்துறை அதிரடி உத்தரவு!
Rahul Slams BJP, EC: “தேர்தல் ஆணையத்துடன் இணைந்து பாஜக வாக்குகளை திருடுகிறது“ - புகார்களை அடுக்கிய ராகுல் காந்தி
“தேர்தல் ஆணையத்துடன் இணைந்து பாஜக வாக்குகளை திருடுகிறது“ - புகார்களை அடுக்கிய ராகுல் காந்தி
PM Modi On Tariff: நாங்க ரெடி, என்ன வந்தாலும் பாத்துக்கலாம்.. ட்ரம்புக்கு வார்னிங் கொடுத்த பிரதமர் மோடி
PM Modi On Tariff: நாங்க ரெடி, என்ன வந்தாலும் பாத்துக்கலாம்.. ட்ரம்புக்கு வார்னிங் கொடுத்த பிரதமர் மோடி
Chennai Power Cut: சென்னை மக்களே.! ஆகஸ்ட் 8-ம் தேதி வெள்ளிக்கிழமை எங்கெங்க மின் தடை ஏற்படப் போகுது தெரியுமா.?
சென்னை மக்களே.! ஆகஸ்ட் 8-ம் தேதி வெள்ளிக்கிழமை எங்கெங்க மின் தடை ஏற்படப் போகுது தெரியுமா.?
7ஆம் நாளாய் போராட்டம்; தூய்மைப் பணியாளர்கள் வாக்குறுதிகளை முதல்வர் நிறைவேற்றுவாரா?- அன்புமணி கேள்வி
7ஆம் நாளாய் போராட்டம்; தூய்மைப் பணியாளர்கள் வாக்குறுதிகளை முதல்வர் நிறைவேற்றுவாரா?- அன்புமணி கேள்வி
பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களே… இன்று முதல் அசல் மதிப்பெண் சான்றிதழ்- வாங்கிட்டீங்களா? எப்படி?
பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களே… இன்று முதல் அசல் மதிப்பெண் சான்றிதழ்- வாங்கிட்டீங்களா? எப்படி?
Embed widget