மேலும் அறிய

Maharashtra Secretariat: தலைமைச் செயலகத்தில் புகுந்த விவசாயிகள்.. ஸ்பைடர் மேனாக மாறிய காவல்துறை.. மகாராஷ்டிராவில் உச்சக்கட்ட பரபரப்பு

மகாராஷ்டிராவில் உள்ள தலைமைச் செயலகத்தில் புகுந்த விவசாயிகள், அம்மாநில அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வது தொடர் கதையாகி வருகிறது. கடந்த 20 ஆண்டுகளாக, விவசாயிகள் மற்றும் கிராமப்புற மக்கள் பொருளாதார ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் சமூக ரீதியாகவும் பல்வேறு விதமான சவால்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

விவசாயிகள் சந்திக்கும் பிரச்னைகள்:

பயிர் விளைச்சல் குறைவாக இருப்பது, விவசாயப் பொருட்களின் விலை நிலையாக இல்லாமல் ஏற்ற இறக்கமாக இருப்பது, பயிர் செய்வதற்கு அதிக செலவாவது, கடன் சுமை, கடன் வாங்குவதற்கு போதுமான வசதி இல்லாதது, போதுமான உள்கட்டமைப்பு வசதி இல்லாதது என எண்ணிடலங்கா பிரச்னைகளை விவசாயிகள் சந்தித்து வருகின்றனர்.

இதை எதிர்கொள்ள முடியாமல் விவசாயிகள் தற்கொலை செய்வது பெரும் பிரச்னையாக மாறியுள்ளது. குறிப்பாக, மகாராஷ்டிராவின் சந்திராபூர் மாவட்டத்தில் கடந்த மாதம் 13 விவசாயிகள் உட்பட இந்த ஆண்டு ஜனவரி முதல் ஜூலை வரையிலான 7 மாதத்தில் மட்டும் 73 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவிக்கின்றன. கடந்த 5 ஆண்டுகளில் 446 விவசாயிகள் உட்பட சந்திராபூர் மாவட்டத்தில் 2001 முதல் 2023 வரை 1,148 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்துள்ளனர்.

இப்படிப்பட்ட சூழலில், மகாராஷ்டிராவில் உள்ள தலைமைச் செயலகத்தில் புகுந்த விவசாயிகள், அம்மாநில அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர். தங்களின் நிலத்திற்கு உரிய இழப்பீடு வழங்கக் கோரி போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களை கட்டுப்படுத்த காவல்துறை முயற்சி செய்து வருகிறது.

தலைமைச் செயலகத்தில் புகுந்த விவசாயிகள்:

தலைமை செயலக கட்டிடத்தின் முதல் தளத்தில் வைக்கப்பட்டிருந்த பாதுகாப்பு வலையில் சில போராட்டக்காரர்கள் குதித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், பாதுகாப்பு வலையில் குதித்த விவசாயிகளை போலீசார் துரத்துவதைக் காண முடிகிறது. அந்த இடத்தில் இருந்து போராட்டக்காரர்களை காவல்துறை அதிகாரிகள் இழுத்துச் செல்வதையும் வீடியோவில் காணலாம்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் சிலர் கைது செய்யப்பட்டு மரைன் டிரைவ் காவல் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். தலைமைச் செயலக கட்டிடத்திற்குள் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளிடம் மாநில அமைச்சர் தாதாஜி பூசே பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். 

இதுகுறித்து மகாராஷ்டிரா முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே கூறுகையில், "நான் இன்று விவசாயிகளை இங்கு அழைத்திருந்தேன். அவர்கள் (மாநில அமைச்சர்) தாதா பூசேவை சந்தித்துப் பேசியுள்ளனர். அவர்களின் பிரச்னைகள் குறித்து 15 நாட்களில் ஆய்வு செய்து தீர்வு காணப்படும்" என்றார்.

 

இது தொடர்பாக தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ரோஹித் பவார் கூறுகையில், "ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அரசு விவசாயிகளின் குரலைக் கேட்டிருந்தால் அவர்கள் தலைமைச் செயலகத்தின் பாதுகாப்பு வலையில் குதித்திருக்க மாட்டார்கள். மகாராஷ்டிரா அரசுக்கு எதிராக விவசாயிகள் போராட்டம் நடத்திய விதத்தை ஆதரிக்கவில்லை. இதுபோன்ற போராட்டம் நடத்துவது சரியல்ல என்ற போதிலும் விவசாயிகள் சந்திக்கும் பிரச்னைகளை அரசு கேட்க வேண்டும்" என்றார்.
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

”பொதுச்செயலாளரிடம்  கேளுங்க.. அவர் வேலையை பார்த்தால் நல்லது!” எடப்பாடிக்கு செங்கோட்டையன் பதிலடி
”பொதுச்செயலாளரிடம் கேளுங்க.. அவர் வேலையை பார்த்தால் நல்லது!” எடப்பாடிக்கு செங்கோட்டையன் பதிலடி
முதலமைச்சர் வெட்கப்படனும்! பொய்யைச் சொல்லி பொழப்பு நடத்துறீங்க! அண்ணாமலை பேசியது ஏன்?
முதலமைச்சர் வெட்கப்படனும்! பொய்யைச் சொல்லி பொழப்பு நடத்துறீங்க! அண்ணாமலை பேசியது ஏன்?
Share Market: சென்செக்ஸ் 3,000 புள்ளிகள் வீழ்ச்சி! இந்திய பங்குச்சந்தை நிலவரம்!
Share Market: சென்செக்ஸ் 3,000 புள்ளிகள் வீழ்ச்சி! இந்திய பங்குச்சந்தை நிலவரம்!
போலீசுக்கே பாலியல் தொல்லை; பழவந்தாங்கல் கொடூரத்திற்கு காரணம் ஒயின்ஷாப்பா? கோபத்தில் மக்கள்
போலீசுக்கே பாலியல் தொல்லை; பழவந்தாங்கல் கொடூரத்திற்கு காரணம் ஒயின்ஷாப்பா? கோபத்தில் மக்கள்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

H Raja vs TVK Vijay |”பாட்டு பாடுனீங்களே விஜய்..உங்க மகனுக்கு ஒரு நியாயமா?”விஜய் மீது H.ராஜா அட்டாக் | New Education PolicyPonmudi Vs MK Stalin | பறிபோன விழுப்புரம்! அப்செட்டில் பொன்முடி! காலரை தூக்கும் மஸ்தான் | DMKEPS Son Politics Entry | அதிமுகவின் மாஸ்டர் மைண்ட் அரசியலுக்கு வரும் EPS மகன்?உதயநிதி, விஜய்க்கு ஸ்கெட்ச்Durai murugan Hospitalized | துரைமுருகனுக்கு தீவிர சிகிச்சை?HOSPITAL  விரையும் உதயநிதி மருத்துவர்கள் சொல்வது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
”பொதுச்செயலாளரிடம்  கேளுங்க.. அவர் வேலையை பார்த்தால் நல்லது!” எடப்பாடிக்கு செங்கோட்டையன் பதிலடி
”பொதுச்செயலாளரிடம் கேளுங்க.. அவர் வேலையை பார்த்தால் நல்லது!” எடப்பாடிக்கு செங்கோட்டையன் பதிலடி
முதலமைச்சர் வெட்கப்படனும்! பொய்யைச் சொல்லி பொழப்பு நடத்துறீங்க! அண்ணாமலை பேசியது ஏன்?
முதலமைச்சர் வெட்கப்படனும்! பொய்யைச் சொல்லி பொழப்பு நடத்துறீங்க! அண்ணாமலை பேசியது ஏன்?
Share Market: சென்செக்ஸ் 3,000 புள்ளிகள் வீழ்ச்சி! இந்திய பங்குச்சந்தை நிலவரம்!
Share Market: சென்செக்ஸ் 3,000 புள்ளிகள் வீழ்ச்சி! இந்திய பங்குச்சந்தை நிலவரம்!
போலீசுக்கே பாலியல் தொல்லை; பழவந்தாங்கல் கொடூரத்திற்கு காரணம் ஒயின்ஷாப்பா? கோபத்தில் மக்கள்
போலீசுக்கே பாலியல் தொல்லை; பழவந்தாங்கல் கொடூரத்திற்கு காரணம் ஒயின்ஷாப்பா? கோபத்தில் மக்கள்
Vellore Multi Super Specialty Hospital: வேலூர் மக்களுக்கு கவலை இல்லை.. சூப்பர் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை ரெடி..!
வேலூர் மக்களுக்கு கவலை இல்லை.. சூப்பர் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை ரெடி..!
Vijay Sethupathi: விஜய் சேதுபதி படத்தை இயக்கப்போகும் பிரபல பெண் இயக்குனர்! யாரு தெரியுமா?
Vijay Sethupathi: விஜய் சேதுபதி படத்தை இயக்கப்போகும் பிரபல பெண் இயக்குனர்! யாரு தெரியுமா?
செங்கோட்டையனை கழற்றிவிட்ட ஈபிஎஸ்?  அதிமுகவில் வெடித்த பூகம்பம்!
செங்கோட்டையனை கழற்றிவிட்ட ஈபிஎஸ்? அதிமுகவில் வெடித்த பூகம்பம்!
BSNL: பி.எஸ்.என்.எல். வெளியிட்டுள்ள புதிய வாய்ஸ் ஒன்லி ரீசார்ஜ் திட்டம் - எவ்வளவு தெரியுமா?
BSNL: பி.எஸ்.என்.எல். வெளியிட்டுள்ள புதிய வாய்ஸ் ஒன்லி ரீசார்ஜ் திட்டம் - எவ்வளவு தெரியுமா?
Embed widget

We use cookies to improve your experience, analyze traffic, and personalize content. By clicking "Allow All Cookies", you agree to our use of cookies.