மேலும் அறிய

Maharashtra Secretariat: தலைமைச் செயலகத்தில் புகுந்த விவசாயிகள்.. ஸ்பைடர் மேனாக மாறிய காவல்துறை.. மகாராஷ்டிராவில் உச்சக்கட்ட பரபரப்பு

மகாராஷ்டிராவில் உள்ள தலைமைச் செயலகத்தில் புகுந்த விவசாயிகள், அம்மாநில அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வது தொடர் கதையாகி வருகிறது. கடந்த 20 ஆண்டுகளாக, விவசாயிகள் மற்றும் கிராமப்புற மக்கள் பொருளாதார ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் சமூக ரீதியாகவும் பல்வேறு விதமான சவால்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

விவசாயிகள் சந்திக்கும் பிரச்னைகள்:

பயிர் விளைச்சல் குறைவாக இருப்பது, விவசாயப் பொருட்களின் விலை நிலையாக இல்லாமல் ஏற்ற இறக்கமாக இருப்பது, பயிர் செய்வதற்கு அதிக செலவாவது, கடன் சுமை, கடன் வாங்குவதற்கு போதுமான வசதி இல்லாதது, போதுமான உள்கட்டமைப்பு வசதி இல்லாதது என எண்ணிடலங்கா பிரச்னைகளை விவசாயிகள் சந்தித்து வருகின்றனர்.

இதை எதிர்கொள்ள முடியாமல் விவசாயிகள் தற்கொலை செய்வது பெரும் பிரச்னையாக மாறியுள்ளது. குறிப்பாக, மகாராஷ்டிராவின் சந்திராபூர் மாவட்டத்தில் கடந்த மாதம் 13 விவசாயிகள் உட்பட இந்த ஆண்டு ஜனவரி முதல் ஜூலை வரையிலான 7 மாதத்தில் மட்டும் 73 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவிக்கின்றன. கடந்த 5 ஆண்டுகளில் 446 விவசாயிகள் உட்பட சந்திராபூர் மாவட்டத்தில் 2001 முதல் 2023 வரை 1,148 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்துள்ளனர்.

இப்படிப்பட்ட சூழலில், மகாராஷ்டிராவில் உள்ள தலைமைச் செயலகத்தில் புகுந்த விவசாயிகள், அம்மாநில அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர். தங்களின் நிலத்திற்கு உரிய இழப்பீடு வழங்கக் கோரி போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களை கட்டுப்படுத்த காவல்துறை முயற்சி செய்து வருகிறது.

தலைமைச் செயலகத்தில் புகுந்த விவசாயிகள்:

தலைமை செயலக கட்டிடத்தின் முதல் தளத்தில் வைக்கப்பட்டிருந்த பாதுகாப்பு வலையில் சில போராட்டக்காரர்கள் குதித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், பாதுகாப்பு வலையில் குதித்த விவசாயிகளை போலீசார் துரத்துவதைக் காண முடிகிறது. அந்த இடத்தில் இருந்து போராட்டக்காரர்களை காவல்துறை அதிகாரிகள் இழுத்துச் செல்வதையும் வீடியோவில் காணலாம்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் சிலர் கைது செய்யப்பட்டு மரைன் டிரைவ் காவல் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். தலைமைச் செயலக கட்டிடத்திற்குள் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளிடம் மாநில அமைச்சர் தாதாஜி பூசே பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். 

இதுகுறித்து மகாராஷ்டிரா முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே கூறுகையில், "நான் இன்று விவசாயிகளை இங்கு அழைத்திருந்தேன். அவர்கள் (மாநில அமைச்சர்) தாதா பூசேவை சந்தித்துப் பேசியுள்ளனர். அவர்களின் பிரச்னைகள் குறித்து 15 நாட்களில் ஆய்வு செய்து தீர்வு காணப்படும்" என்றார்.

 

இது தொடர்பாக தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ரோஹித் பவார் கூறுகையில், "ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அரசு விவசாயிகளின் குரலைக் கேட்டிருந்தால் அவர்கள் தலைமைச் செயலகத்தின் பாதுகாப்பு வலையில் குதித்திருக்க மாட்டார்கள். மகாராஷ்டிரா அரசுக்கு எதிராக விவசாயிகள் போராட்டம் நடத்திய விதத்தை ஆதரிக்கவில்லை. இதுபோன்ற போராட்டம் நடத்துவது சரியல்ல என்ற போதிலும் விவசாயிகள் சந்திக்கும் பிரச்னைகளை அரசு கேட்க வேண்டும்" என்றார்.

About the author சுதர்சன்

Rookie Journalist. Writes on National, International, Politics, Human rights and Judiciary. Covered 2019 General Election, Apex Court Ayodhya judgement, 2021 Five state election, Pegasus etc.  
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Magalir Urimai Thogai: இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
ADMK BJP: அதிமுக கூட்டணி.. அமித்ஷாவிற்கு தலைவலி - இதுதான் சங்கதி!
ADMK BJP: அதிமுக கூட்டணி.. அமித்ஷாவிற்கு தலைவலி - இதுதான் சங்கதி!
Chennai Metro Rail Work: சென்னை மெட்ரோ பணியில் கலக்கும்
சென்னை மெட்ரோ பணியில் கலக்கும் "மயில்"; எந்த மயில்னு யோசிக்கிறீங்களா.? இத படிங்க தெரியும்
PM Kisan 22nd Installment: பிரதம மந்திரி கிசான் நிதியின் 22-வது தவணை எப்போ வரும்.? அதுக்குள்ள விவசாயிகள் இத செஞ்சுடுங்க
பிரதம மந்திரி கிசான் நிதியின் 22-வது தவணை எப்போ வரும்.? அதுக்குள்ள விவசாயிகள் இத செஞ்சுடுங்க
ABP Premium

வீடியோ

Magalir Urimai Thogai | ''மகளிருக்கு இன்னொரு CHANCE..!''கலைஞர் மகளிர் உரிமைத்தொகை
Rajinikanth 75th Birthday Celebration|’’ரஜினி என் குலசாமி!’’வீடு முழுக்க RAJINISMவியக்க வைத்த ரசிகர்
Tindivanam Bus Accident - டயர் வெடித்து விபத்து ஒருவர் பலி, 15 பேர் படுகாயம்; உதவிய விழுப்புரம் கலெக்டர்
Nainar Nagendran Meet EPS | டெல்லிக்கு அழைத்த அமித் ஷா; ஈபிஎஸ்-நயினார் திடீர் சந்திப்பு; அண்ணாமலை பலே ப்ளான்!
LAW & ORDER இனிமே இவர் கையில் தமிழகத்தின் புதிய பொறுப்பு DGPயார் இந்த அபய் குமார் சிங் IPS? | Abhay Kumar Singh | MK Stalin | TN New DGP

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Magalir Urimai Thogai: இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
ADMK BJP: அதிமுக கூட்டணி.. அமித்ஷாவிற்கு தலைவலி - இதுதான் சங்கதி!
ADMK BJP: அதிமுக கூட்டணி.. அமித்ஷாவிற்கு தலைவலி - இதுதான் சங்கதி!
Chennai Metro Rail Work: சென்னை மெட்ரோ பணியில் கலக்கும்
சென்னை மெட்ரோ பணியில் கலக்கும் "மயில்"; எந்த மயில்னு யோசிக்கிறீங்களா.? இத படிங்க தெரியும்
PM Kisan 22nd Installment: பிரதம மந்திரி கிசான் நிதியின் 22-வது தவணை எப்போ வரும்.? அதுக்குள்ள விவசாயிகள் இத செஞ்சுடுங்க
பிரதம மந்திரி கிசான் நிதியின் 22-வது தவணை எப்போ வரும்.? அதுக்குள்ள விவசாயிகள் இத செஞ்சுடுங்க
Trump's C5 Plan.?: ஐரோப்பாவிற்கு G7; ஆசியாவிற்கு C5; ட்ரம்ப்பின் பலே பிளான்.? எந்தெந்த நாடுகள் தெரியுமா.?
ஐரோப்பாவிற்கு G7; ஆசியாவிற்கு C5; ட்ரம்ப்பின் பலே பிளான்.? எந்தெந்த நாடுகள் தெரியுமா.?
Gold Rate Dec.13th: அய்யய்யோ.! தங்கம் விலை ரூ.99,000-த்தை நெருங்கியது; ஒரே நாளில் ரூ.2560 உயர்வு - இன்று விலை என்ன.?
அய்யய்யோ.! தங்கம் விலை ரூ.99,000-த்தை நெருங்கியது; ஒரே நாளில் ரூ.2560 உயர்வு - இன்று விலை என்ன.?
Magalir Urimai Thogai: மகளிர் உரிமை தொகை ரூ. 1000 கிடைக்கவில்லையா.! மீண்டும் ஒரு வாய்ப்பு- எப்போ தெரியுமா.?
மகளிர் உரிமை தொகை ரூ. 1000 கிடைக்கவில்லையா.! மீண்டும் ஒரு வாய்ப்பு- எப்போ தெரியுமா.?
Hyundai Verna: ரூ.13 லட்சம்தான் ஆரம்பம்.. ஹுண்டாய் Verna காரை வாங்கலாமா? வேண்டாமா?
Hyundai Verna: ரூ.13 லட்சம்தான் ஆரம்பம்.. ஹுண்டாய் Verna காரை வாங்கலாமா? வேண்டாமா?
Embed widget