மேலும் அறிய

PET Bottles : ரயில் நிலையங்களிலும் வருகிறது கட்டுப்பாடு...பிளாஸ்டிக் பாட்டில்களுக்கு தடையா? உயர்நீதிமன்றம் அதிரடி..

ரயில் நிலையங்கள் மற்றும் ரயில்களில் பிளாஸ்டிக் பாட்டில்களின் பயன்பாட்டிற்கு தடை வதிக்கும் வகையில் அதற்கான சாத்தியக்கூறுகளை ஆராயும்படி ரயில்வேவை சென்னை உயர் நீதிமன்றம் கேட்டு கொண்டுள்ளது. 

ரயில் நிலையங்கள் மற்றும் ரயில்களில் பிளாஸ்டிக் பாட்டில்களின் பயன்பாட்டிற்கு தடை வதிக்கும் வகையில் அதற்கான சாத்தியக்கூறுகளை ஆராயும்படி ரயில்வேவை சென்னை உயர் நீதிமன்றத்தின் சிறப்பு அமர்வு கேட்டு கொண்டுள்ளது. 

இதுகுறித்து நீதிபதிகள் வைத்தியநாதன், பி.டி. ஆஷா ஆகியோர் கொண்ட அமர்வு, "ரயில் நிலையங்களிலும் ரயில்களிலும் பிளாஸ்டிக் பாட்டில்களின் பயன்பாட்டை முற்றிலும் ஒழிக்கும் வகையில் என்னென்ன தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளது என்பது குறித்து மத்திய அரசின் அறிவார்ந்த வழக்கறிஞரிடம் கேட்கப்பட்டது" என தெரிவித்தது.

இதற்கு பதிலளித்த மத்திய அரசின் வழக்கறிஞர், "ரயில்வேஸின் நிலைபாடு என்ன என்பது குறித்து கேட்கபட்டுள்ளது" என்றார். தொடர்ந்து பேசிய நீதிபதிகள், இதே திசையில் ரயில்வேயின் செயல்திறன் மிக்க நடவடிக்கை மற்ற துறைகள் பின்பற்றுவதற்கு முன்மாதிரியாக இருக்கும் என கருத்து தெரிவித்தது. 

இதையடுத்து, மத்திய அரசின் வழக்கறிஞர் வி சந்திரசேகரன், பிளாஸ்டிக் ஒழிப்பு நோக்கத்தை அடைவதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து தெற்கு ரயில்வேயின் (எஸ்ஆர்) மூத்த சட்ட அலுவலர் எழுதிய கடிதத்தை சமர்ப்பித்தார். பிளாஸ்டிக் பொருட்கள் மீதான தடை தொடர்பான மனுக்களை விசாரித்த நீதிபதிகள், சமீபத்தில் தெற்கு ரயில்வே சிறப்பான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக தெரிவித்தனர்.

பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை கொள்கையின் நகலை அடுத்த விசாரணைக்கு முன் சமர்ப்பிக்குமாறு சிறப்பு அரசு வழக்கறிஞர் மற்றும் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் (ஏஎஸ்ஜி) அலுவலகத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிடப்பட்டது.

ஜூலை 1ஆம் தேதி முதல் ஒரு முறை பயன்படும் பிளாஸ்டிக்கை உற்பத்தி செய்யவும், இறக்குமதி செய்யவும், விற்பனை செய்யவும், பயன்படுத்தவும் மத்திய அரசு தடை விதித்தது. இந்த அறிவிப்பை மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம் வெளியிட்டது. இதைக் கண்காணிக்க மத்திய, மாநில அளவில் கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

முன்னதாகக் கடந்த 2019ஆம் ஆண்டு சுதந்திர தின விழாவில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி பிளாஸ்டிக் பொருட்களைத் தவிர்க்குமாறு நாட்டு மக்களிடம் வேண்டுகோள் விடுத்தார். 

அதைத் தொடர்ந்து சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு மத்திய அரசு தடை விதித்தது. இந்த தடை, ஜூலை 1ஆம் தேதி முதல் அமலுக்கு வந்தது.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Patanjali : பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Voting 8 times to BJP | பாஜகவுக்கு 8 முறை ஓட்டு! இளைஞரின் பகீர் வீடியோ! கொந்தளித்த அகிலேஷ் யாதவ்Chennais Amirta | சிங்கப்பூர் அகாடமியுடன் சென்னைஸ் அமிர்தா ஒப்பந்தம்! வேலையுடன் படிக்கும் வசதிMallikarjun Kharge | ”நாங்கதான் முடிவு எடுப்போம்! I.N.D.I.A கூட்டணியில் மம்தா” எகிறி அடித்த கார்கேPadayappa elephant Viral Video | ஆட்டம் காட்டிய படையப்பா தூக்கிய வனத்துறையினர் யானையின் அட்ராசிட்டி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Patanjali : பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Fact Check : காலி பாத்திரத்தில் இருந்து உணவு பரிமாறினாரா பிரதமர்? வைரல் புகைப்படம் உண்மையானதா?
காலி பாத்திரத்தில் இருந்து உணவு பரிமாறினாரா பிரதமர்? வைரல் புகைப்படம் உண்மையானதா?
"ஆம் ஆத்மியை ஒழிக்க ஆபரேஷன் ஜாது.. பாஜகவின் சதி திட்டம் இதுதான்" கெஜ்ரிவால் பகீர்!
Rohit Sharma: எல்லாமே வியூஸுக்காகவா? : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மீது ரோஹித் ஷர்மா ஆவேசம்
Rohit Sharma: எல்லாமே வியூஸுக்காகவா? : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மீது ரோஹித் ஷர்மா ஆவேசம்
பட்டப்பகலில் வழிப்பறியில் ஈடுபட்ட பா.ஜ.க இளைஞர் அணி தலைவர் கிளி, உட்பட 3 பேர்  கைது
பட்டப்பகலில் வழிப்பறியில் ஈடுபட்ட பா.ஜ.க இளைஞர் அணி தலைவர் உட்பட 3 பேர் கைது
Embed widget