மேலும் அறிய

Hijab Issue : ’ஹிஜாப் தவிர மற்ற மத அடையாளங்களுக்கு இனி அனுமதி இருக்கும்!’ - அசாஸூதின் ஒவைஸி

கர்நாடக உயர்நீதிமன்றம் இது தொடர்பான  ஹிஜாபை அனுமதிக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கில் நேற்று மனுவைத் தள்ளுபடி செய்தது

இனி ஹிஜாபை தவிர அனைத்து மத அடையாளங்களும் கல்வி நிலையங்களில் காணப்படும் என லோக்சபா உறுப்பினர் அசாஸுதீன் ஒவைஸி கருத்து கூறியுள்ளார். கர்நாடக உயர்நீதிமன்றம் இது தொடர்பான  ஹிஜாபை அனுமதிக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கில் நேற்று மனுவைத் தள்ளுபடி செய்து தீர்ப்பளித்ததை அடுத்து அவர் இவ்வாறு கூறியுள்ளார். 

‘ராமர் கோவில் விவகாரத்தில் உச்சநீதிமன்றத்துடன் எவ்வாறு முரண்பட்டேனோ அதேபோலவே இதிலும் நான் முரண்படுகிறேன். நீதிமன்றத்தின் தீர்ப்புடன் முரண்பட எனக்கு உரிமை உள்ளது. தற்போது அனைத்து கல்வி நிலையங்களும் ஹிஜாப் தவிர மற்ற மத அடையாளங்களை அனுமதிக்கும். நேற்றியில் குங்குமம் வைப்பதற்காக பெண்களை கல்வி நிலையங்களுக்குள் அனுமதிப்பதைத் தடுக்கக் கூடாது என பாஜக அமைச்சர் ஒருவர் கூடக் குறிப்பிட்டிருந்தார்’ எனக் கூறியுள்ளார்.

 

முன்னதாக,

அநீதி இழைக்கப்பட்டுள்ளது. சொந்த நாட்டாலேயே வஞ்சிக்கப்பட்டதாக உணர்கிறோம் என்று ஹிஜாப் குறித்த உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு மனுதாரர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

ஹிஜாப் அணிவது இஸ்லாமிய சட்டப்படி அவசியமில்லை என்று தெரிவித்துள்ள கர்நாடக உயர் நீதிமன்றம், ஹிஜாப் தடைக்கு எதிரான வழக்குகளைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. மேலும், கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிய தடைவிதித்தது செல்லும் என்றும் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டது. கர்நாடக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ரிதுராஜ் அவஷ்தி, நீதிபதிகள் ஜே.எம்.காஷி, கிருஷ்ணா தீட்ஷித் ஆகியோர் இந்தத் தீர்ப்பை அளித்தனர்.  

தீர்ப்பின் காரணமாக அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க கர்நாடக மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தட்சிண கன்னடா, உடுப்பி, ஷிவமொகா ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. பாதுகாப்புப் பணியில் 1000-க்கும் மேற்பட்ட போலீஸார் ஈடுபட்டுள்ளனர். பெங்களூருவில் பொது இடங்களில் அனைத்து வகையான போராட்டம் நடத்த, கூட்டம் கூடத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த சூழலில் வழக்கு தொடுத்த உடுப்பியைச் சேர்ந்த 5 மாணவிகள், தீர்ப்பு குறித்து கருத்துத் தெரிவித்துள்ளனர். இதுகுறித்துச் செய்தியாளர்களிடம் பேசிய அவர்கள், ’’எங்களின் அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டுள்ளன. அநீதி இழைக்கப்பட்டுள்ளது. சொந்த நாட்டாலேயே வஞ்சிக்கப்பட்டதாக உணர்கிறோம். இந்தப் பிரச்சினை உள்ளூர் மட்டத்திலேயே தீர்க்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் தற்போது அரசியல் மற்றும் வகுப்புவாத அடையாளத்தைப் பெற்றுவிட்டது. 

உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பால், நாங்கள் கல்லூரிப் படிப்பை நிறுத்தப்போவதில்லை. எங்களுக்கு ஹிஜாப் வேண்டும். ஜிஹாப் இல்லாமல் நாங்கள் கல்லூரி செல்ல மாட்டோம். 

குரானில் ஒரு பெண் தன்னுடைய தலையை மூடிக்கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. குரானில் இல்லையென்றால் நாங்கள் ஹிஜாபை அணிய மாட்டோம்’’ என்று தெரிவித்துள்ளனர்.

முன்னதாக, ஹிஜாப் குறித்து உயர் நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை அனைவரும் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Dhoni wish to indian Team | தட்டி தூக்கிய இந்தியா தோனி கொடுத்த SURPRISE Virat & Rohit Retirement |இடியை இறக்கிய KING - HITMAN.. உச்சக்கட்ட சோகத்தில் ரசிகர்கள்Hardik Pandya | ZERO TO HERO அவசரப்பட்டு திட்டிட்டோம் கொண்டாடிய ஹர்திக் FANSDog Attack Boy | மகனை சுத்துப்போட்ட நாய்கள் நொடியில் காப்பாற்றிய  தந்தை பதற வைக்கும் வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
Embed widget