மேலும் அறிய

காவிரியில் தமிழ்நாட்டுக்கு உரிமை இல்லையா? கன்னடர்களுக்கு ஆதரவான நிலைபாட்டை எடுத்த பிரகாஷ் ராஜ்

பிரகாஷ்ராஜ் கன்னடத்தில் போட்ட மற்றோர் பதிவு தற்போது சர்ச்சையை கிளப்பி வருகிறது.

காவிரி விவகாரத்தால் தமிழ்நாடு - கர்நாடக மாநிலங்களுக்கிடையே பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இந்த விவகாரம், பல ஆண்டுகளாக பிரச்னையாக இருந்து வந்த நிலையில், தற்போது மீண்டும் விஸ்வரூபம் எடுக்க தொடங்கியுள்ளது. தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய நீரை கர்நாடக அரசு தராமல் இழுத்து அடித்து வருகிறது. 

விஸ்வரூபம் எடுத்த காவிரி விவகாரம்:

கர்நாடக அணைகளில் இருந்து வரும் அக்டோபர் 15ஆம் தேதி வரை, 3 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்துவிட காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.  ஆனால், தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தருவதற்கு கன்னட அமைப்புகளும், விவசாய அமைப்புகளும் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. 

இதனால் தமிழ்நாடு, கர்நாடக மாநிலங்களுக்கிடையே பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இப்படியான சூழலில் நடிகர் சித்தார்த்திடம் கன்னட அமைப்பை சார்ந்தவர்கள் பிரச்னை செய்த சம்பவம் திரையுலகினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

பெங்களூருவில் சித்தா படத்தின் ப்ரமோஷன் விழா நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, உள்ளே புகுந்த கன்னட அமைப்பினர்  மேடையில் அமர்ந்திருந்த சித்தார்த்தை நோக்கி கன்னடத்தில் ஏதோ கூறினர். நிகழ்ச்சி நடத்த எதிர்ப்பு தெரிவித்தனர். சித்தார்த்தை வெளியே செல்லுமாறும் வலியுறுத்தினர்.

சித்தார்த்தை மிரட்டிய கன்னட அமைப்புகள்:

தொடர்ந்து சித்தார்த்தை மிரட்டும் தொனியில் பேசியதால் அவர்  மேடையில் இருந்து எதுவும் பதில் பேசாமல் சிரித்துக்கொண்டே பாதியிலே இறங்கிச் சென்றார். இப்படியான சூழலில் பிரபல நடிகர் பிரகாஷ்ராஜ், சித்தார்த்திற்கு நடந்த சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்திருந்தார்.

பிரச்னையைத் தீர்க்கத் தவறிய அனைத்து அரசியல் கட்சிகளையும் அதன் தலைவர்களையும் கேள்வி கேட்பதற்குப் பதிலாக, மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்காத பயனற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கேள்வி கேட்பதற்குப் பதிலாக, சாமானியர்களையும் கலைஞர்களையும் இப்படித் தொந்தரவு செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது என எக்ஸ் வலைதளத்தில் பிரகாஷ்ராஜ் பதிவிட்டார்.

பிரகாஷ்ராஜ் கன்னடத்தில் போட்ட பதிவால் சர்ச்சை:

மிரட்டல் விடுத்த கன்னட அமைப்புகளின் சார்பாக, வெளிப்படையாக மன்னிப்பு கேட்ட பிரகாஷ்ராஜ்-க்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். ஆனால், அதே பிரகாஷ்ராஜ் போட்ட மற்றோர் பதிவு தற்போது சர்ச்சையை கிளப்பி வருகிறது. சித்தார்த் விவகாரம் தொடர்பாக, பிரகாஷ்ராஜ் இரண்டு பதிவு போட்டிருந்தார்.

பிரகாஷ்ராஜ், ஆங்கிலத்தில் போட்ட பதிவுக்கும் கன்னடத்தில் போட்ட பதிவுக்கும் ஒரு சிறிய வித்தியாசம் உள்ளது. கன்னடத்தில் போட்ட பதிவில், "காவிரி நம்முடையது" என்ற ஹேஷ்டேக்குடன் பிரகாஷ்ராஜ் பதிவிட்டிருந்தார். ஆனால், ஆங்கிலத்தில் போடும்போது, அந்த ஹேஷ்டேக் இல்லாமல் பதிவிட்டுள்ளார். இதனால், அவர் காவிரி விவகாரத்தில் கன்னடர்களுக்கு ஆதரவான நிலைபாட்டை கொண்டுள்ளாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

About the author சுதர்சன்

Rookie Journalist. Writes on National, International, Politics, Human rights and Judiciary. Covered 2019 General Election, Apex Court Ayodhya judgement, 2021 Five state election, Pegasus etc.  
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Ditwah Cyclone: மிரட்டும் டித்வா புயல்.. இன்றும், நாளையும் தமிழ்நாட்டில் ரெட் அலர்ட் - எந்த மாவட்டங்களுக்கு?
Ditwah Cyclone: மிரட்டும் டித்வா புயல்.. இன்றும், நாளையும் தமிழ்நாட்டில் ரெட் அலர்ட் - எந்த மாவட்டங்களுக்கு?
MK STALIN: குட்ட குட்ட குனிய மாட்டோம்....மோடி அரசுக்கு எதிராக சீறிய ஸ்டாலின்
குட்ட குட்ட குனிய மாட்டோம்....மோடி அரசுக்கு எதிராக சீறிய ஸ்டாலின்
Ditwah Cyclone:: சுழற்றி அடிக்கும் சூறைக்காற்று... கர்ஜிக்கும் கடல்; தாக்குபிடிக்குமா மரக்காணம்?
Ditwah Cyclone:: சுழற்றி அடிக்கும் சூறைக்காற்று... கர்ஜிக்கும் கடல்; தாக்குபிடிக்குமா மரக்காணம்?
கோலி மீண்டும் களத்தில்! தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 'கிங்'கின் மிரட்டல் சாதனை
கோலி மீண்டும் களத்தில்! தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 'கிங்'கின் மிரட்டல் சாதனை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”50 வருஷம் போனதே தெரியல அடுத்த ஜென்மத்தில் நான்...” உணர்ச்சிவசப்பட்ட ரஜினி | Rajini Goa Speech
புரட்டிப்போட்ட டிட்வா புயல் மரத்தில் மாட்டிக்கொண்ட நபர் மூழ்கிய இலங்கை | Sri Lanka Ditwah Cyclone
Hindu Muslim | இதாண்டா தமிழ்நாடு! இந்து-முஸ்லீம் கூட்டு பிரார்த்தனை! கடலூரில் மத நல்லிணக்கம்!
Puducherry CM vs People | ’’ஒரு வாரத்துல நடக்கல..’’முதல்வரை மிரட்டிய நபர்புதுச்சேரியில் பரபரப்பு
Cyclone Ditwah | ’’நெருங்கும் டிட்வா புயல்நவம்பர் 30 சம்பவம் இருக்கு!’’பிரதீப் ஜான் எச்சரிக்கை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Ditwah Cyclone: மிரட்டும் டித்வா புயல்.. இன்றும், நாளையும் தமிழ்நாட்டில் ரெட் அலர்ட் - எந்த மாவட்டங்களுக்கு?
Ditwah Cyclone: மிரட்டும் டித்வா புயல்.. இன்றும், நாளையும் தமிழ்நாட்டில் ரெட் அலர்ட் - எந்த மாவட்டங்களுக்கு?
MK STALIN: குட்ட குட்ட குனிய மாட்டோம்....மோடி அரசுக்கு எதிராக சீறிய ஸ்டாலின்
குட்ட குட்ட குனிய மாட்டோம்....மோடி அரசுக்கு எதிராக சீறிய ஸ்டாலின்
Ditwah Cyclone:: சுழற்றி அடிக்கும் சூறைக்காற்று... கர்ஜிக்கும் கடல்; தாக்குபிடிக்குமா மரக்காணம்?
Ditwah Cyclone:: சுழற்றி அடிக்கும் சூறைக்காற்று... கர்ஜிக்கும் கடல்; தாக்குபிடிக்குமா மரக்காணம்?
கோலி மீண்டும் களத்தில்! தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 'கிங்'கின் மிரட்டல் சாதனை
கோலி மீண்டும் களத்தில்! தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 'கிங்'கின் மிரட்டல் சாதனை
Crop insurance for farmers: விவசாயிகளுக்கு குஷியோ குஷி... பயிர் காப்பீடு செய்ய விலக்கு- தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு
விவசாயிகளுக்கு குஷியோ குஷி... பயிர் காப்பீடு செய்ய விலக்கு- தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு
Toyota Glanza: ரூ.8 லட்சம்தான் ஆரம்ப விலை.. Glanza காரின் விலை, மைலேஜ் எப்படி?
Toyota Glanza: ரூ.8 லட்சம்தான் ஆரம்ப விலை.. Glanza காரின் விலை, மைலேஜ் எப்படி?
சபரிமலை ஐயப்ப பக்தர்கள் கவனத்திற்கு! விமானத்தில் இருமுடி அனுமதி: எதிர்பாராத அறிவிப்பு!
சபரிமலை ஐயப்ப பக்தர்கள் கவனத்திற்கு! விமானத்தில் இருமுடி அனுமதி: எதிர்பாராத அறிவிப்பு!
Ditwah Cyclone: புயல் சென்னையில் கரையை கடக்குதா.?  பொதுமக்களுக்கு அலர்ட் விடுத்த அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர்
புயல் சென்னையில் கரையை கடக்குதா.? பொதுமக்களுக்கு அலர்ட் விடுத்த அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர்
Embed widget