மேலும் அறிய

Demonetisation: 500 ரூபாய் நோட்டுக்களை ஒழிக்க வேண்டும்.. முதலமைச்சர் வைத்த கோரிக்கை - மீண்டும் மீண்டுமா?

ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு நாட்டில் 500 ரூபாய் நோட்டுக்களை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர முதலமைச்சராக பதவி வகிப்பவர் சந்திரபாபு நாயுடு. இவரது தெலுங்கு தேசம் கட்சியின் ஆதரவுடனே தற்போது மத்தியில் உள்ள பா.ஜ.க. ஆட்சி நடந்து வருகிறது. இந்த நிலையில், ஆந்திர மாநிலம் கடப்பாவில் சந்திரபாபு நாயுடு தலைமையில் தெலுங்கு தேசம் கட்சியின் 3 நாள் மகாநாடு நடந்து வருகிறது. 

500 ரூபாய் நோட்டுக்களை ஒழிக்க வேண்டும்:

நிகழ்ச்சியின் முதல் நாள் இன்று பங்கேற்ற முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு  மத்திய அரசு 500 ரூபாய் நோட்டுகளை ஒழிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். கடந்த காலத்தில் அவர் நாட்டில் 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை ஒழிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு வலியுறுத்தியிருந்தார். 

இந்த நிலையில், தற்போது அவர் மத்திய அரசுக்கு 500 ரூபாய் நோட்டுக்களை ஒழிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். அவ்வாறு பெரிய மதிப்புள்ள நோட்டுக்களை அழித்தால் மட்டுமே  கருப்பு பணப்புழக்கத்தை தடுக்க முடியும் என்று சந்திரபாபு நாயுடு நம்பிக்கை தெரிவித்துள்ளார். 

கருப்பு பணம்:

இது அரசியலுக்கும் பயன் அளிக்கும். அரசியல் கட்சிகளுக்கு டிஜிட்டல் வழிமுறைகள் மூலம் நிதியை வழங்க முடியும். புழக்கத்தில் உள்ள பெரிய மதிப்புள்ள ரூபாய் நோட்டுக்களை நீக்குவது ஏராளமான நன்மைகளைத் தரும். தெலுங்கு தேசம்  கட்சி எப்போதும் தூய்மையான அரசியலையே செய்கிறது. கருப்பு பணத்தை பயன்படுத்தியதே இல்லை என்றும் அவர் கூறியுள்ளார். 

நீண்ட அனுபவம் கொண்ட அரசியல் தலைவரும், முதலமைச்சருமான சந்திரபாபு நாயுடு 500 ரூபாய் நோட்டுக்களை ஒழிக்க வேண்டும் என்று கூறியிருப்பதற்கு பலரும் அதிருப்தியையும், கண்டனத்தையும் தெரிவித்து வருகின்றனர். நாடு முழுவதும் டிஜிட்டல் மயமாக்கும் வகையில் அவர் இந்த கருத்தை தெரிவித்தாலும் நாட்டில் உள்ள அனைத்து மக்களும் முழுமையாக டிஜிட்டல் தொழில்நுட்பத்திற்கு தங்களை தயார்படுத்திக்கொள்ளவில்லை என்றும் பலரும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். 

மக்கள் அதிருப்தி:

மேலும், சந்திரபாபு நாயுடு இந்த கூட்டத்தில் இன்று ஆந்திரா என்ன நினைக்கிறதோ, அதையே நாளை நாடே நினைக்கும் என்றும் நம்பிக்கையுடன் பேசினார். இந்தியாவில் கடந்த 2018ம் ஆண்டு பிரதமர் மோடி பெரிய மதிப்புள்ள ரூபாய் 1000 மற்று்ம் ரூபாய் 500 நோட்டுக்கள் செல்லாது என்று அறிவித்தார். அவரது அறிவிப்பால் கருப்பு பணம் முற்றிலும் அழியும் என்று அரசு கருத்து தெரிவித்திருந்தாலும், நாடு முழுவதும் இருந்த கோடிக்கணக்கான மக்கள் கடுமையான சிரமத்திற்கு ஆளாகியிருந்தனர். 

சமீபகாலமாக சில ஆண்டுகளில் நாட்டு மக்கள் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைக்கு அதிகளவு மாறியிருந்தாலும், பணமாக பயன்படுத்துவதும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இந்த நிலையில் 500 ரூபாய் நோட்டுக்களை ஒழிக்க வேண்டும் என்று சந்திரபாபு நாயுடு கூறியிருப்பது பெரும் அதிர்ச்சியை மக்களுக்கு ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Ditwah Cyclone: மிரட்டும் டித்வா புயல்.. இன்றும், நாளையும் தமிழ்நாட்டில் ரெட் அலர்ட் - எந்த மாவட்டங்களுக்கு?
Ditwah Cyclone: மிரட்டும் டித்வா புயல்.. இன்றும், நாளையும் தமிழ்நாட்டில் ரெட் அலர்ட் - எந்த மாவட்டங்களுக்கு?
MK STALIN: குட்ட குட்ட குனிய மாட்டோம்....மோடி அரசுக்கு எதிராக சீறிய ஸ்டாலின்
குட்ட குட்ட குனிய மாட்டோம்....மோடி அரசுக்கு எதிராக சீறிய ஸ்டாலின்
Ditwah Cyclone:: சுழற்றி அடிக்கும் சூறைக்காற்று... கர்ஜிக்கும் கடல்; தாக்குபிடிக்குமா மரக்காணம்?
Ditwah Cyclone:: சுழற்றி அடிக்கும் சூறைக்காற்று... கர்ஜிக்கும் கடல்; தாக்குபிடிக்குமா மரக்காணம்?
கோலி மீண்டும் களத்தில்! தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 'கிங்'கின் மிரட்டல் சாதனை
கோலி மீண்டும் களத்தில்! தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 'கிங்'கின் மிரட்டல் சாதனை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”50 வருஷம் போனதே தெரியல அடுத்த ஜென்மத்தில் நான்...” உணர்ச்சிவசப்பட்ட ரஜினி | Rajini Goa Speech
புரட்டிப்போட்ட டிட்வா புயல் மரத்தில் மாட்டிக்கொண்ட நபர் மூழ்கிய இலங்கை | Sri Lanka Ditwah Cyclone
Hindu Muslim | இதாண்டா தமிழ்நாடு! இந்து-முஸ்லீம் கூட்டு பிரார்த்தனை! கடலூரில் மத நல்லிணக்கம்!
Puducherry CM vs People | ’’ஒரு வாரத்துல நடக்கல..’’முதல்வரை மிரட்டிய நபர்புதுச்சேரியில் பரபரப்பு
Cyclone Ditwah | ’’நெருங்கும் டிட்வா புயல்நவம்பர் 30 சம்பவம் இருக்கு!’’பிரதீப் ஜான் எச்சரிக்கை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Ditwah Cyclone: மிரட்டும் டித்வா புயல்.. இன்றும், நாளையும் தமிழ்நாட்டில் ரெட் அலர்ட் - எந்த மாவட்டங்களுக்கு?
Ditwah Cyclone: மிரட்டும் டித்வா புயல்.. இன்றும், நாளையும் தமிழ்நாட்டில் ரெட் அலர்ட் - எந்த மாவட்டங்களுக்கு?
MK STALIN: குட்ட குட்ட குனிய மாட்டோம்....மோடி அரசுக்கு எதிராக சீறிய ஸ்டாலின்
குட்ட குட்ட குனிய மாட்டோம்....மோடி அரசுக்கு எதிராக சீறிய ஸ்டாலின்
Ditwah Cyclone:: சுழற்றி அடிக்கும் சூறைக்காற்று... கர்ஜிக்கும் கடல்; தாக்குபிடிக்குமா மரக்காணம்?
Ditwah Cyclone:: சுழற்றி அடிக்கும் சூறைக்காற்று... கர்ஜிக்கும் கடல்; தாக்குபிடிக்குமா மரக்காணம்?
கோலி மீண்டும் களத்தில்! தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 'கிங்'கின் மிரட்டல் சாதனை
கோலி மீண்டும் களத்தில்! தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 'கிங்'கின் மிரட்டல் சாதனை
Crop insurance for farmers: விவசாயிகளுக்கு குஷியோ குஷி... பயிர் காப்பீடு செய்ய விலக்கு- தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு
விவசாயிகளுக்கு குஷியோ குஷி... பயிர் காப்பீடு செய்ய விலக்கு- தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு
Toyota Glanza: ரூ.8 லட்சம்தான் ஆரம்ப விலை.. Glanza காரின் விலை, மைலேஜ் எப்படி?
Toyota Glanza: ரூ.8 லட்சம்தான் ஆரம்ப விலை.. Glanza காரின் விலை, மைலேஜ் எப்படி?
சபரிமலை ஐயப்ப பக்தர்கள் கவனத்திற்கு! விமானத்தில் இருமுடி அனுமதி: எதிர்பாராத அறிவிப்பு!
சபரிமலை ஐயப்ப பக்தர்கள் கவனத்திற்கு! விமானத்தில் இருமுடி அனுமதி: எதிர்பாராத அறிவிப்பு!
Ditwah Cyclone: புயல் சென்னையில் கரையை கடக்குதா.?  பொதுமக்களுக்கு அலர்ட் விடுத்த அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர்
புயல் சென்னையில் கரையை கடக்குதா.? பொதுமக்களுக்கு அலர்ட் விடுத்த அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர்
Embed widget